நஜிராஅமான்
639 views • 25 days ago
முருகன் என்றாலே கையில் வேலும் வாங்கிய அழகிய திருவுருவம் நினைவுக்கு வரும் ஆனால் மதுரையில் ஒரு அபூர்வ கோலத்தில் முருகப்பெருமான் சுயம்புலிங்கமாக அருள் புரிகிறார் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை ஜமினை சேர்ந்த ஆத்தங்கரைபட்டி கிராமத்தில் சுப்பிரமணிய ஞானியார் என்ற தீவிர முருக பக்தர் வாழ்ந்து வந்தார் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்றே சுமார் 80 மயில் தொலைவில் உள்ள நெல்லை மாவட்டம் கழுகுமலை கந்தனை தர்சிக்க கால்நடையாகவே சென்று வருவதை தன் வாழ்நாள் முழுவதும் விரதமாக கொண்டிருந்தார்
தனது பிரயோதிக காலத்திலும் கழுகு மலைக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்று ஞானியர் வருந்தும்போது முருகர் அவரது கனவில் தோன்றி தான் அருகிலுள்ள கவுண்டியநதியில் சுயமபுலிங்கமாக எழுந்தருளி இருப்பதாக கூறி மறைந்தார்
இந்தச் செய்தி அறிந்த அன்றைய ஏழுமலை ஜமீன்தார் திரு நல்தாது நாயக்கர் அங்கே
கற்பக கிரகம் மற்றும் மயில் மண்டபம் ஆகியவற்றை கட்டினார் ஞானியார் மாதந்தோறும் கழுகு மலைக்கு சென்று வந்ததை நினைவு படுத்தும் வகையில் இத்தளத்திற்கு மாதங்கம் என பெயரிட்டார் இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உருவானவர் என்பது சிறப்புடையது
காலை ஆறு மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும்
அருள்மிகு மாதாந்த
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
ஏழுமலை
பேரையூர் வட்டம்
சேடப்பட்டி ஒன்றியம்
மதுரை மாவட்டம் #ஆன்மீக தகவல்கள்
12 shares