Nethaji
582 views • 10 days ago
#ஆன்மிகம் #👏Inspirational videos 27, 2026
*திருச்சிற்றம்பலம்*
*திருநாவுக்கரசர் அருளிய ஐந்தாம் திருமுறை - தேவாரம்*
*திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்*
*பாடல்*:
*கரும்பு ஒப்பானைக்*
*கரும்பினில் கட்டியை*
*விரும்பு ஒப்பானை*
*விண்ணோரும் அறிகிலா*
*அரும்பு ஒப்பானை*
*அரத்துறை மேவிய*
*சுரும்பு ஒப்பானைக்*
*கண்டீர்நாம் தொழுவதே*. - 5.002.02
*பொருள்* :
*இறைவன் கரும்பு போன்று இனியவன்; அதனிலும் இனிய சர்க்கரைக் கட்டி போன்றவன். அடியார்கள் தன் மீது வைக்கும் அன்பிற்கு ஏற்ப அருள்புரிபவன். தேவர்களாலும் முழுமையாக அறிய முடியாத அந்தப் பெருமான், திருநெல்வாயில் அரத்துறை என்னும் தலத்தில் கோயில் கொண்டு, வண்டு போல அடியார்களின் உள்ளத்தில் புகுந்து இனிக்கும் தேனாகத் திகழ்கிறான். அத்தகைய பெருமையுடைய இறைவனை நாம் தினமும் தொழுவோம்*
*திருச்சிற்றம்பலம்*
*அருள்தரும் ஆனந்தநாயகியம்மை உடனாகிய அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி! போற்றி!!*
15 likes
12 shares