#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 பிறந்த ஒருவன் ஒரு துறவியை சந்தித்தான். அவர் பேச்சுக்கு பேச்சு ராமா ராமா என்று சொல்லிக் கொண்டிருந்தார். "சுவாமி ராமா ராமா என்கிறீர்களே அவர் யார் என்று கேட்டான். துறவி அவனுக்கு ராமனை பற்றி சுருக்கமாக சொல்லி ராம நாமம் எப்போதும் சொல். ஆனால் இதை யாருக்கும் விற்று விடாதே. ஏனெனில் இதற்கு விலை மதிப்பே கிடையாது"என்று மட்டும் சொல்லிவிட்டார். "இதை யார் விலைக்கு வாங்குவார்கள்? சாமியார் ஏதோ உளறுகிறார்.."என நினைத்துக் கொண்டான், அந்த மனிதன். ஒரே ஒரு முறை மட்டும் ராம என்று சொல்லிப் பார்த்தான். ஒரு நாள் அவன் இறந்து போனான். அவன் எமலோகத்துக்கு சென்றதும் சித்ரகுப்தர் எமதர்ம ராஜாவிடம்,"ஐயனே! இவன் ஒரே ஒருமுறை ராம நாமம் உச்சரித்து இருக்கிறான். மற்றபடி இவன் எதுவும் செய்ததில்லை. ராம நாமம் ஒருமுறை சொன்னதற்காக இவனுக்குரிய புண்ணிய பலனை கொடுங்கள்" என்றார். அந்த மனிதனிடம், "ஒருமுறை ராம நாமம் சொன்னதற்காக உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறோம்"என்றார் எமதர்மன். "ஐயா! இதை எனக்கு போதித்த துறவி இதற்கு விலை மதிப்பே கிடையாது என சொல்லி இருக்கிறார் . நீங்களோ இதற்கு ஏதோ புண்ணியத்தை தருவதாக சொல்லி விலை பேசுகிறீர்கள். வேண்டுமானால் அந்த ராமனிடமே என்னை அழைத்துச் செல்லுங்கள் அவரிடமே அதற்குரிய விலையை கேட்டு விடுவோம். ஆனால் நான் நடந்து வர மாட்டேன். என்னை பல்லக்கில் தான் தூக்கிச் செல்ல வேண்டும் அதை சுமப்பவர்களில் நீரும் ஒருவராக இருக்க வேண்டும்"என எமதர்மனுக்கே கண்டிஷன் போட்டான் அந்த மனிதன். "மானிடனே! ராம அவதாரம் முடிந்து விட்டது. திருமால்தான் ராமனாக வந்தார். அவரை சந்திப்பது அரிது. எனவே எங்கள் தலைவர் ஆன இந்திரனை முதலில் சந்திப்போம். அவர் சொல்லும் விலையை தருகிறோம்"என்றார் எமதர்மன். பிறகு எமதர்மனும் பல்லக்கை தூக்கிக்கொண்டு இந்திரலோகம் சென்றார். இந்திரனுக்கும் ராம நாமத்தின் விலையை சொல்ல இயலவில்லை. வேண்டுமானாலும் பிரம்மாவிடம் கேட்போம் என தப்பிக்க பார்த்தார். அந்த மனிதன் விடவில்லை. "அப்படியானால் நீரும் இந்த பல்லக்கு சுமப்பவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். பிரம்மாவிடம் போகலாம். வாருங்கள் " என்றான். வேறு வழியின்றி இந்திரனும் பல்லக்கை சுமந்தான். பிரம்மாவுக்கும் பதில் தெரியாததால், திருமாலையே பார்த்து விடுவோம் என்று அவரும் பல்லக்கு தூக்கியாக மாறி வைகுண்டம் சென்றனர். பெருமாளிடம் ராம நாமத்தின் விலையை கேட்டனர். "இதோ! தெய்வ அந்தஸ்து பெற்ற நீங்கள் மூவரும் ஒரு சாதாரண மனிதனை சுமந்து கொண்டு வந்திருக்கிறீர்களே! இதைவிட பெரிய விலை என்ன வேண்டும்? அது மட்டுமா நீங்கள் அவனை வைகுண்டத்துக்கே கொண்டு வந்து விட்டீர்கள். அவன் இப்போது வைகுண்ட பதவி அடைந்து விட்டான். இனி என்னோடு கலந்து விடுவான். அவனுக்கு இனி பிறப்பே கிடையாது" என்றார். பாருங்களேன்! ஒரு தடவை ராமா என்றதற்கே இவ்வளவு பெரிய பலன் என்றால் கோடி முறை சொன்னால், முப்பத்து முக்கோடி தேவர்களும் நம்மை பல்லக்கில் சுமந்து செல்வார்கள் என்பதில் ஐயமே இல்லை.
6 likes
9 shares

More like this