இனிய வணக்கம்!* 🧡 *ஒரு பெண்ணிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம்* ஒவ்வொரு காலையிலும், ஒரு பெண் சந்தையில் புதிய வாட்டர் லீஃப் கூடைகளுடன் உட்கார்ந்திருப்பார். வாடிக்கையாளர்கள் அவரது கடையை சுற்றி கூடி, இலைகளை பார்து அதே கேள்வியை கேட்பார்கள்: "அம்மா, உங்க கடைசி விலை என்ன?" சிலர் அவர் சொன்ன விலையை விட குறைவாக சொல்வார்கள். வேறு சிலர் காய்கறிகள் அந்த விலைக்கு தகுதியானவை அல்ல என்று சொல்வார்கள். சிலர் நாம் காத்திருந்தால் விலையை குறைப்பார் என்ற நம்பிக்கையில் போய்விடுவார்கள். அதிலிருந்து சில தெருக்கள் தள்ளி ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தது. உள்ளே, காய்கறிகள் நேர்தியாக விலை டேக்குகளுடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. யாரும் அந்த டேக்குடன் வாதிடவில்லை. யாரும் தள்ளுபடி கேட்கவில்லை. வாடிக்கையாளர்கள் வெறுமனே விலையை பார்துவிட்டு முடிவெடுத்தார்கள்: வாங்குவது அல்லது விட்டுவிடுவது. இங்கே வித்தியாசம் பொருள் இல்லை, அது *மதிப்பு பற்றிய பார்வை* தான். வாழ்கையும் அப்படித்தான் வேலை செய்கிறது. நீங்கள் உங்கள் மதிப்பை உணரவில்லை என்றால், மக்கள் தொடர்ந்து அதை பேரம் பேச முயற்சிப்பார்கள். உங்கள் நேரம், உங்கள் திறமை, உங்கள் முயற்சி, உங்கள் கனவுகள், உங்கள் சுயமரியாதை கூட பேரம் பேசப்படும். நீங்கள் கொடுப்பதை விட குறைவானதற்கே நீங்கள் தகுதியானவர் என்று சொல்வார்கள். *உங்கள் மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் தரங்களை நிர்ணயியுங்கள். உங்கள் திறமைக்கு, உங்கள் நேரத்திற்கு, உங்கள் திறனுக்கு ஒரு விலை டேக்கை ஒட்டுங்கள்.* நாளின் முடிவில், உங்கள் விலை என்பது நீங்கள் அதற்கு போடும் டேக் தான். #⏱ஒரு நிமிட கதை📜 #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #பொழுது போக்கு #உற்சாக பானம்#
6 likes
16 shares

More like this