365 நாட்களும் தண்ணீருக்குள் இருக்கும் அதிசயம்! ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் ரகசியங்கள் இக்கோவிலின் மூலவர் சுயம்பு லிங்கம், நமஸ்கார மண்டபம் மற்றும் பிரகாரப் பாதைகள் வருடம் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும். மலைக்கோயில், குகை கோயில் ,பாதாள கோயில், குடைவரைக்கோயில் என இப்படி இந்து மதத்தில் மக்கள் வழிபாடு செய்யும் கோயில் திருத்தலங்கள் பல அமைந்திருக்கும். ஆனால் நாம் பார்க்க இருக்கும் இந்தக் கோவிலில் தண்ணீர் சூழ்ந்திருக்கும் கோவில்., சிவனும் சக்தியும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரராக இங்கு காட்சி தருகிறார்கள். 365 நாட்களும் முழுவதும், கோவில் பிரகாரம் முதல் கோவில் கருவறை வரை" தண்ணீர் சூழ்ந்து இருக்கும். . மேலும் இந்தக் கோயிலில் இருக்கும் பிரதான தெய்வத்தின் சிலை இங்கேயே சுயம்புவாக தோன்றியதாக நம்பப்படுகிறது. கோயிலின் தெற்குப் பகுதியில் 'நைவேத்தியம்' மற்றும் பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. சிவராத்திரி விழாவின் போது, ​​தண்ணீர் வெளியேற்றப்பட்டு, நள்ளிரவில் சிலைக்கு 'அபிஷேகம்' செய்யப்படுகிறது.வழிபாடு: பக்தர்கள் நீரில் நடந்து சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டும்; அப்போது மீன்களும் உடன் வருவது தனித்துவமான அனுபவமாகும். இந்த தனித்துவமான அர்த்தநாரீஸ்வர கோயில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரேரிந்தல்மன்னா தாலுகாவில், அரக்குபரம்பா கிராமத்தில் உள்ள வெளிகொண்டுவில் அமைந்துள்ளது. கருவறை, 'நமஸ்கார மண்டபம்' மற்றும் வழிபாட்டுத் தலத்தைச் சுற்றி தண்ணீரில் உள்ளன என்பதே இந்த கோயிலின் தனித்துவம். சரியான மணமகன் அல்லது மணமகளைக் கண்டுபிடிப்பதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு கோவிலில் உமாமஹேஸ்வர பூஜை நடத்தப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பச்சை போர்வை போர்த்தியதுபோல் காட்சி தரும் இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள கருவறை, 'நமஸ்கார மண்டபம்', 'அஷ்டதிக்பாலகர்கள்', சுற்றி வருவதற்கான பாதை மற்றும் கேரளாவின் கட்டிடக்கலை, சுற்றுச்சுவர் ஆகியவை என மொத்த கோவிலும் தண்ணீரில் இருப்பதாலும் இங்கு நிலவும் அமைதியான மற்றும் அற்புதமான சூழல் கண்களுக்குக் குளிர்ச்சியளித்து பக்தி வெள்ளத்தில் பக்தர்கள் மயங்கிப் போவார்கள். நேரம்: தினமும் காலை 06:00 மணி முதல் 09:30 மணி வரையிலும், மாலை 04:00 மணி முதல் 07:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.அமைவிடம்: பாலக்காட்டிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், பெரிந்தல்மண்ணைக்கு அருகிலும் அமைந்துள்ளது. #உண்மையை அறிவோம் #god
13 shares

More like this