இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 10/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 319 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XIII (1) “தேவனுடைய கற்பனைகளையும், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.'' (வெளி 14:12) அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, கீழ்க்காணும் கர்த்தருடைய திருவசனங்களை வாசிப்போம். “சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப் போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன். பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்." (வெளி 13:10) “உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும் உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாக கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." (2 தெசலோனிக்கேயர் 1:6) "அவள் உங்களுக்குப் பலனளித்தது போல நீங்களும் அவளுக்கு பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்து கொடுங்கள்." (வெளி 18:6) "யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலன்களுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின் மேலும் நோக்கமாயிருக்கின்றன." (எரே 32:19) "பழி வாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."(எபி 10:30) "அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." (யாத் 14:13,14). மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் யாவும், தன்னுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக போராடி பாடுகளுக்கு உட்படுத்துகிறவர்களோடு தேவாதி தேவனாகிய கர்த்தர் யுத்தம் செய்து அழிப்பார். தமது ஜனங்களையும் பாதுகாப்பார் என்பதை அறிவிக்கிறதைக் காண்கிறோம். வெளி 13:10-ம் வசனத்தில் “பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்" என்று வாசித்தோம். துன்மார்க்கர்களுடைய இறுதி முடிவு நித்திய அக்கினிக்கடல் தான் என்றும், அவர்கள் உலகத்தில் அனுபவிக்கும் சுகபோக வாழ்க்கையின் மேன்மைகளும், மகத்துவங்களும், செழிப்பும், செல்வாக்கும் தேவனுடைய பரிசுத்தவான்களை வேதனையடையச் செய்கிறது. சங்கீதம் 73:3-7 ஆகிய திருவசனங்களில் ஆசாப் சொல்லுகிறான். "துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமை கொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை." "அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது." என்பதைப் பார்க்கிறோம். சங் 73:12-14 திருவசனங்களில் சொல்லுகிறார். “இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுக ஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம் பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்." என்று பார்க்கின்றோம். நம்முடைய தேவன் யார் என்பதை கீழ்க்காணும் வசனங்கள் அறிவிக்கின்றது. “கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியை சரிக்கட்டுகிறவர், உக்கர கோபமுள்ளவர். கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்து வைக்கிறவர்." (நாகூ 1:2). "எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.” (லூக் 21:23) “இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங் குறித்துக் கர்த்தர் நீதியை சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்." (1 தெச 4:6) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் மூலம் நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டுகிறவராய் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறோம். ஆகையால் உபத்திரவ காலத்துப் பரிசுத்தவான்கள் ஆசாவைப் போல் மனக்கிலேசத்தினால் புலம்பி சோர்வடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே மூன்றாவது தூதன் தேவ கற்பனைகளையும், இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்பவர்கள் மிகுந்த பொறுமையோடு கர்த்தருக்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார். தேவனாகிய இயேசுவின் இரகசிய வருகையை எதிர்நோக்கி இருக்கும் தேவ ஜனங்களாகிய நாமும், நமக்கு உண்டாகிற பலவிதமான எதிர்ப்புகள், போராட்டங்கள், நிந்தைகள், அவமானங்கள். தோல்விகள் வழியாக கடந்து போகும் வாழ்க்கையில் பொறுமையைக் காத்துக் கொண்டவர்களாய் காணப்பட வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள்
9 likes
2 comments 10 shares

More like this