Makkal Mugam
599 views 3 months ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் மற்றும் களியக்காவிளை பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு கன்னியாகுமரி, மே.12 - கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் மற்றும் களியக்காவிளை பேரூராட்சிக்குட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25- ன் கீழ் கருங்கல் பேருந்து நிலையம் மேம்பாடு செய்ய ரூ.5.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கருங்கல் பேருந்து நிலைய A பிளாக் கட்டிடத்திற்கான பூச்சு வேலை முடிவடையும் நிலையில் இருக்கிறது. B பிளாக் கட்டிடத்திற்கான கட்டுமான பணி முடிவடைந்து பூச்சு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிழலகத்திற்கான கட்டுமான பணி கிரேடு பீம் வேலை முடிந்து காளம் அமைக்கும் பணிக்கான கம்பி வேலை நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பேருந்துநிலையத்திற்குள் பேருந்துகள் வரும் தோரணவாயில் மற்றும் பேருந்துகள் வெளியேறும் தோரணவாயில் ஆகியவற்றிற்கு தனித்தனியாக பணியாளர்களை வைத்து வேலை செய்ய வைக்க வேண்டும். 24x7 என்ற அடிப்படையில் பணியாளர்களை பயன்படுத்தி தொடர்ந்து வேலை செய்ய வைக்க வேண்டும். அதற்கு தேவையான பணியாளர்களை கூடுதலாக ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டிட வேலைகள் தனித்தனியாக நடைபெறுவதாலும், பயணிகள் நிழலகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாலும், அதனை தவிர்த்து மீதமுள்ள பகுதியில் தரைகாங்கிரீட் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். கட்டுமான பொருட்களின் தரம் ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட வேண்டும். பயணிகள் நிழலகத்திற்கான கூரைப்பணிகள் உடனடியாக அமைப்பதுடன் அதன் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் அமைக் வேண்டும். பக்கசுவர் யாவும் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட வேண்டும். கருங்கல் பேருந்து நிலைய மேம்பாடு பணியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி மற்றும் பயணிகள் அசவுகரியங்களை தவிர்க்கும் பொருட்டு மேற்கண்ட பணிகள் யாவும் இன்றைய தினத்திலிருந்து 30 தினங்களுக்குள் செய்து முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் அருகாமையில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 7000 மக்கள் தினசரி பயனடைவார்கள். எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதோடு, கட்டுமான பணிகள் தரமானதாகவும், உறுதிதன்மையினை உறுதி செய்திட ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 2024-2025 ம் வருடம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9.20 கோடி மதிப்பீட்டில் வார்டு எண் 03- ல் களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுதல் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கூரை பணிக்கான தூண்கள் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், சுவர்களில் பூச்சு பணி செய்யவும், களியக்காவிளை மீன்சந்தையிலிருந்து வரும் கழிவுநீர் வடிகாலை சீரமைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கட்டுமான பொருட்களுக்கான பற்றாக்குறை சரி செய்து கொடுக்க உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி இயக்குநர் ஆகியோர்கள் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், விரைந்து பேருந்து நிலைய பணிகள் முடித்து களியக்காவிளை பேருந்து நிலையம் திறப்புவிழாவிற்கு ஆயத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். நடைபெற்ற ஆய்வுகளில் உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) பாண்டியராஜன், செயல் அலுவலர்கள் திரசத்யதாஸ், (கருங்கல்), திருமதி.சந்திரகலா (களியக்காவிளை), கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சிவராஜ், இளநிலை பொறியாளர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
11 likes
15 shares

More like this