பொறுமையே உருவானவர் பூமிபிராட்டி. நாம் எவ்வளவுதான் தப்பு பண்ணினாலும் அதை பகவானிடத்திலே சொல்ல மாட்டாளாம்! நாம் ஒரு துளி நல்லது செய்தால் கூட அதைப் பெரிசுபடுத்தி அவனிடத்திலே சொல்வாளாம்! அவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு. எம்பெருமான் அந்த பூமாதாவைத் திரும்பி பார்த்தான். "இந்த மகாலட்சுமி சொன்னதை எல்லாம் நீயும் கேட்டாய். இப்போது நீ போய் கீதைசாரத்தை எடுத்துச் சொல்லி, உலகத்திலே உள்ளவர்களைத் திருத்துவாயா?" என்று கேட்டான். "அதற்குத்தானே காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் சுவாமி" என்றாளாம் பூமாதா! மகாலட்சுமி முடியாது என்று சொன்ன பொறுப்பை பூமாத உடனே ஏற்றுக்கொண்டு விட்டாள் . "நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கேன்" என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்!. எப்போது போட்ட முடிச்சு அது? வராஹ அவதாரத்திலே வராஹத்தின் மூக்கின் மேலே உட்கார்ந்திருந்தபோது, பகவான் சொன்ன மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்... அவன் திருவடியிலே புஷ்பத்தை இட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும். அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும். என்ற மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள். "இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக்கிறேன்" என்றால் பூமாதேவி. எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்? என்றான் பகவான். "உங்களுடைய அனுக்கிரஹம் உதவும்" என்று புறப்பட்டு விட்டாள் தேவி. விஷ்ணுசித்தரின் மகளாய் வந்து அவதரித்தாள். நம் திராவிட தேசத்துக்கே அந்த அவதாரம் பெருமை சேர்த்தது. கல்பத்தின் ஆதியிலே கேட்ட வராஹ மூர்த்தியினுடைய வாக்கைத் தானே எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக துளசி கானகத்திலே அவதரித்தாள் பூதேவி. பிறக்கும்போதே மேன்மையுடையவளாய், சுவாசனையுடன் ஆவிர்பவித்தாள். இரு மாலை கட்டினாள் - ஒரு மாலை பாமாலை; ஒரு மாலை பூமாலை. ஒன்றை பாடிச் சமர்பித்தாள், மற்றதைச் சூடிச் சமர்ப்பித்தாள். சூடிக் கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள். திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள். அவற்றில் முதல் பத்து, "அவன் திருநாமத்தைச் சொல்லு" என்று உணர்த்துகின்றன. இரண்டாவது பத்து, "உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு" என்கிற பாசுரங்கள். மூன்றாவது பத்தோ "அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணு" என்று சொல்கின்றன. ஆக வராஹ மூர்த்தியினிடத்திலே அன்று கேட்ட மூன்று விஷயங்களை முப்பது பாசுரங்களாய்ப் பாடி, ஆண்டாள் அவதாரத்திலே எடுத்துக் காட்டினாள். திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யாகம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது. வராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள். வேள்வி செய்வதற்கு கபாலம் என்றொரு பாத்திர சாதனம் உண்டு. அதிலே புரோடாசத்தை வைத்து நெய்யைத் தடவி சமர்ப்பிப்பார்கள். ஆண்டாள் பண்ணிய திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம். ஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள். வேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு. திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா? ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும். "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள். "அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த" என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்கிரம அவதாரத்தைப் பாடுகிறாள். "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்று மறுபடியும், இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள். ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, "நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா" என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள். ஆண்டாள் அழைத்தாள் என்று வந்து குதித்த பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலே மடிந்த திருவடியோடு காட்சி தருகிறான்! பெரியாழ்வாரோ கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட்டு அழுகிறார்! "ஒரு பெண்ணைப் பெற்றேன், அவளைச் செங்கண்மால் கொண்டு போனான், நான் என்ன பண்ணுவேன்" என்று அவருக்கு வேதனை. ஆனால் ஆண்டாள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாள். குறையொன்றுமில்லை பொறுமையே உருவானவர் பூமிபிராட்டி. நாம் எவ்வளவுதான் தப்பு பண்ணினாலும் அதை பகவானிடத்திலே சொல்ல மாட்டாளாம்! நாம் ஒரு துளி நல்லது செய்தால் கூட அதைப் பெரிசுபடுத்தி அவனிடத்திலே சொல்வாளாம்! அவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு. எம்பெருமான் அந்த பூமாதாவைத் திரும்பி பார்த்தான். "இந்த மகாலட்சுமி சொன்னதை எல்லாம் நீயும் கேட்டாய். இப்போது நீ போய் கீதைசாரத்தை எடுத்துச் சொல்லி, உலகத்திலே உள்ளவர்களைத் திருத்துவாயா?" என்று கேட்டான். "அதற்குத்தானே காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் சுவாமி" என்றாளாம் பூமாதா! மகாலட்சுமி முடியாது என்று சொன்ன பொறுப்பை பூமாத உடனே ஏற்றுக்கொண்டு விட்டாள் . "நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கேன்" என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்!. எப்போது போட்ட முடிச்சு அது? வராஹ அவதாரத்திலே வராஹத்தின் மூக்கின் மேலே உட்கார்ந்திருந்தபோது, பகவான் சொன்ன மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌸 ஆடி மாத ஸ்டேட்டஸ்🙏 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
42 likes
42 shares

More like this