திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 77வது  திருத்தலம் திருஅச்சிறுபாக்கம் அருள்மிகு பூங்குழல்நாயகி உடனுறை பிரமபுரிநாதர் புன்னை பிரம தீர்த்தம் பாடல் 7 ஏறும் ஒன்று ஏறி நீறுமெய்பூசி இளங்கிள அரிவையொடு ஒருங்கு உடனாகி கூறும் ஒன்று அருளி கொன்றை அயந்தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் நாறு மல்லிகையும் எருக்கொடு முருக்கு மகிழ இளவன்னியும் இவை நலம் பகர ஆறுமோர் சடைமேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் ஆட்சி கொண்டாரே பொழிப்புரை: அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர், ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளையகிளி போன்ற அழகிய பார்வதிதேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை, குளிர்ந்த இளமதி, வில்வம், பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழ், இளவன்னி இலை ஆகியஇவை மணம் பரப்ப, கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார் குறிப்புரை: அவர் எருதேறி, நீறுபூசி, பசுங்கிளி ஏந்திய பாவையோடு, கொன்றை, மதியம், வில்வம், மல்லிகை முதலியவற்றைப் புனைந்தவர் என்கின்றது. இளங்கிளை அரிவை - இளைய கிளியை ஏந்திய உமாதேவி. கூவிள மலர் - வில்வப்பூ. பத்திரமேய அன்றி பூவும் சூடப்பெறும் என்பது அறிவிக்கப்பட்டது. மகிழ் - மகிழம்பூ #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏கோவில்
17 likes
3 shares

More like this