காதல் கவிதை நீயடி
........
நான் வாசித்த கவிதை உன்விழிதானடி
காதலில் சுவைத்த முதல்கனி இதழ்தானடி
கிள்ளை மொழியில் பேசி மயக்கியவளே
நினைவுகளில் வாழும் கள்வன் நானடி
காயப்பட்ட மனதுக்கு மருந்தளிக்க வருவாயா
அதீத காதல் உன்மீது கொண்டேனடி
என் கோபத்துக்குச் சொந்தக்காரி நீதானடி
நமக்குள் புரிதல் இல்லாமல் சென்றாயடி
உனைத் தேடி நான் வருவேனடி
காதலில் செய்த சத்தியம் நிறைவேறுமா
பிரிந்த உறவு ஒன்று சேருமா
எனை மன்னிப்பாயா எந்தன் கண்மணியே
எம். அமுதா
#என் காதல் கவிதை
தாயின் வலி அறியா பிள்ளை
...........
தாயின் மனதை புரிந்துக் கொள்ளவில்லை
கண்ணீரை சிந்தும்போது வலிகள் அறியவில்லை
புன்னகையோடு கடந்து சென்றேன் அன்று
பிள்ளையாக பிறந்து என்ன பயன்
எனக்கோர் துணை வந்தபோது அறிந்தேனம்மா
பெண்ணாய் நீபட்ட துன்பங்கள் பெரிதென்று
தாயே நீயில்லாத வாழ்க்கையில் இன்பங்களேது
உயிருடன் இருக்கையில் துச்சமாய் நினைத்தேன்
தெய்வமாய் நிற்கிறாய் உயிரில்லாத சுவற்றின்மேல்
இன்று உணர்கிறேன் தனிமையின் கொடுமையை
நான் பெற்றது எனக்குச் சொந்தமில்லை
புதியதாய் வந்த உறவுக்கு சொந்தமென்று
எம். அமுதா
#என் காதல் கவிதை
பேசும் நினைவுகள்
********
முதலும் நீயே முடிவும் நீதானே
உன்னுடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும்
அழகான நிமிடங்கள் இன்றும் இனிக்கிறது
உந்தன் மடியில் நான் சாய்ந்திட
தலைகோதி முத்தத்தால் எனைக் கொஞ்சினாய்
விழி பார்த்து நான் பேச
மொழியால் பேசி தாலாட்டுப் பாடினாய்
இரவில் இருவரும் விளையாடிட மகிழ்ந்திட
நிலவும் கண் விழித்து பார்க்கையில்
என்னவளே வெக்கத்தால் விழிகளை முடிக்கொண்டாயே
இணைந்த தருணம் இனிமையான நிமிடங்கள்
பேசும் நினைவுகள் இன்றும் சுகமோ
எம். அமுதா
#என் காதல் கவிதை
ஆற்றங்கரை அருகினிலே
❤️❤️❤️❤️
ஆற்றங்கரை அருகினிலே உன்னைச் சந்தித்த வேளையிலே
தனிமையின் இனிமையிலே நிலவினை ரசித்துக் கொண்டிருப்பவளே
உன்னை ரசிப்பதில் நான் கொள்ளும் இன்பமே
பலநூறு கவிதைகள் மனதுக்குள் சிறகடித்து பறக்குதே
அருகினில் அமர்ந்திடவா நான் உனை ரசிக்க
#என் காதல் கவிதை
இவ் உலகில் யாரையும் நாம் உயர்வாக நினைக்கக் கூடாது
அவர்களின் மனதில் நமக்கான இடம் என்னவென்று தெரியாமல்
#என் காதல் கவிதை
விடியலைத் தேடும் வெண்ணிலவே
❤️❤️❤️❤️❤️
நிலவின் மடியில் உறக்கம் இல்லையடி
வாழ்வதற்கு அர்த்தம் தந்தவள் நீயடி
உன்னில் எனைத் தேடுகிறாய் காதலுக்காக
என்னில் நீயிருப்பதால்
தினந்தோறும் விடியலே
#என் காதல் கவிதை
பாசப்பிணைப்புகள்
❤️❤️❤️❤️❤️
பாசத்தின் பிடியில் சிக்கிய பறவைகள்
அன்புக்கு ஏங்கும் உறவுகள் இங்கே
ஒற்றுமையில் நிம்மதி கிடைக்குமே சன்னதியில்
சொந்த பந்தங்கள் ஒன்று கூடிட
வாழ்வில் இன்பங்கள் என்றுமே நிலைத்திடுமே
நம் சிந்தனையை நழுவ விடாமல்
வாழ்வில் ஒன்று கூடி வாழ்ந்திடுவோம்
என்றும் இன்பம் பொங்க மகிழ்ந்திடுவோம்
#என் காதல் கவிதை
இளையோர் எழுச்சி
👇👇👇
இளமைப் போனால் திரும்பாது
வயதிற்கு முன்னேறப் போராடு
வீரியத்தோடு முன்னேறிச் சென்றிடு
வயது என்றும் தடையில்லை
ஜெயித்துக் காட்டிடு நீயாரென்று
#👉வாழ்க்கை பாடங்கள்
நட்பூக்களின் நந்தவனம்
🤝🤝🤝🤝
எங்களின் அழகான மலர் வனம்
நட்புயெனும் உறவுகளின் பசுமை வனம்
பாசப் பிணைப்பின் ஒற்றுமையான பூங்காவனம்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் குணம்
எங்களின் நட்பூக்களின் நந்தவனம் இது
#என் காதல் கவிதை
எனையாளும் உறவே
❤️❤️❤️❤️
இருக் கரம் கோர்த்து உனதானேன்
மனதில் இடம் பிடித்த மன்மதனே
இதயத்தைப் பறித்துக் கொண்டாய் என்னவனே
என் மூச்சுக் காற்றாய் இருப்பவனே
இருமனம் பரிமாறிக் கொண்டோம் காதலிலே
எனக்குள் இனைந்த எனையாளும் உறவே
#என் காதல் கவிதை














