
A Mohan Raj
@19106433
SM Money Flow
(Money Makes Money)
MF Distributor
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
*திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*.
*எட்டாம் தந்திரத்தில் உள்ள 6-வது பகுதி "சுத்த நனவாதி பருவம்" ஆகும். இது சகல நிலையில் (கருவிகளுடன் கூடிய நிலையில்) ஆன்மா பெறும் சுத்த சாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, சுத்த துரியம், மற்றும் சுத்த துரியாதிதம் எனும் ஐந்து சுத்த அவத்தைகளை (நிலை) விளக்குகிறது*.
பாடல் வரிகள் :
*6. சுத்த நனவாதி பருவம்*
2187 நானவாதி தூலமே சூக்கப் பகுதி
அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே. 1
2188 நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவுஓட நன்செய்தி யானதே. 2
2189 செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம்பல வாகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே. 3
2190 ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்
போதம் கலைகாலம் நியதிமா மாயை
நீதிஈ றாக நிறுத்தினன் என்னே. 4
2191 தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே. 5
2192 ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 6
2193 பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 7
2194 உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே. 8
2195 தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்
சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்
பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்
மற்றது உண்டிக் கனவுநன வாதலே. 9
2196 நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே. 10
2197 ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே. 11
2198 மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்
சேயதே வலவித் துடன் செல்லச் சென்றக்கால்
ஆய தனுவின் பயனில்லை யாமே. 12
2199 அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே. 13
2200 ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்
மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே. 14
2201 புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு கழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே. 15
2202 நனவில் நனவு புனலில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே. 16
2203 கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அனுமாதி செய்தலில் ஆன துரியமே. 17
2204 சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே. 18
2205 துரிய நனவாம் இதமுணர் போதம்
துரியக் கனவாம் அகமுணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமெனத் கோன்றிடும் தானே. 19
2206 அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்
அறிவுஅறி யாமை அடையக் கனவாம்
அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி
அறிவுஅறி வாகும் ஆன துரியமே. 20
2207 தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்தபின்
தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே. 21
2208 ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே. 22
2209 ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈதென்று அறியும் இயல்புடை யோனே. 23
2210 உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்
அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே. 24
2211 சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே. 25
2212 சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே. 26
2213 மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே. 27
2214 திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. 28
2215 கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே. 29
2216 நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
கனவகத் தேஉள் கரணங்க ளோடு
முனவகத் தேநின்று உதறியுட் புக்கு
நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே. 30
2217 நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்
சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
நின்று பரனாய் நின்மல னாமே. 31
2218 ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஐந்தும்போல் விட்டுச் சிவமாகி
மோனம் அடைந்தொளி மூலத் னாமே. 32
2219 மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்
கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற
விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக
அண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே. 33
2220 போதறி யாது புலம்பின புள்ளினம்
மாது அறி யாவகை நின்று மயங்கின
வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை
சூதறி வாருச்சி சூடிநின் றாரே. 34
2221 கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே. 35
2222 ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்து
ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு
ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே. 36
2223 உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய
விண்நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்
கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே. 37
2224 அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்
அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
அறியாது அறிவானை யார்அறிவாரே. 38
2225 துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந்தண வாதி
பெரியன கால பரம்பின் துரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே. 39
2226 மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே. 40
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#💪 தன்னம்பிக்கை #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️
Good Morning🌞🙏
May Lord Shiva bless you with peace, strength, and happiness...
*Happy Maha Shivratri*.
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
*திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*.
*எட்டாம் தந்திரத்தில் உள்ள 5-வது பகுதி "அத்துவாக்கள்" (வழி) ஆகும். இது ஆன்மாக்கள் முக்தி அடையக் கடக்க வேண்டிய 6 அத்துவாக்களை (தத்துவம், புவனம், வன்னம், பதம், மந்திரம், கலை) விளக்குகிறது. இந்த ஆறு வகை வழிகளும் சிவபெருமானின் அருளால் ஆன்மாவை தூய்மைப்படுத்தி, இறுதியில் சிவனடியைச் சேர்க்கும் நெறிகளாக திருமந்திரம் 2184-2188 பாடல்களில் கூறப்பட்டுள்ளன*.
அத்துவாக்கள் - முக்கிய குறிப்புகள் :
அத்துவா என்றால் என்ன?: அத்துவா (Adhva) என்பது வழி அல்லது நெறி என்று பொருள்படும். இவை ஆன்மா சிவனோடு கலப்பதற்கான ஆன்மீகப் படிகள்.
ஆறு அத்துவாக்கள் :
தத்துவம் : ஆன்ம தத்துவம் (24), வித்தியா தத்துவம் (7), சிவதத்துவம் (5) என மொத்தம் 36 தத்துவங்கள்.
புவனம் : தத்துவங்களுக்கு உட்பட்ட உலகம் - 224 புவனங்கள்.
வன்னம் : எழுத்துக்கள் (அட்சரங்கள்) - 51.
பதம் : மந்திரப் பகுதிகள் (பதங்கள்) - 81
மந்திரம் : தூல/சூட்சும மந்திரங்கள் (நமசிவாய).
கலை (Kalai) : சாந்தி கலை முதலான 5 கலைகள்.
பயன் : இந்த ஆறு அத்துவாக்களையும் கடந்து, தத்துவங்கள் நீங்கி (தத்துவ ஆறாறு நீக்கி), தூய அறிவாக நின்று சிவனை அடைவதே இந்த அதிகாரத்தின் சாராம்சம்.
இப்பாடல்கள் அத்துவாக்களின் எண்ணிக்கை மற்றும் சிறப்பை விளக்குகின்றன (எ.கா: பாடல்கள் 2184)
பாடல் வரிகள் :
*5. அத்துவாக்கள்*
2184 தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
மெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி
ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று
வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 1
2185 நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து
ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. 2
2186 சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே. 3
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#💪 தன்னம்பிக்கை
Good Morning🌞🙏
Good decisions come from experience, and experience comes from bad decisions.
Have a Great Day👍💐
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 4.மத்திய சாக்கிர அவத்தை*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
*திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*.
*எட்டாம் தந்திரத்தின் 4-வது பகுதி "மத்திய சாக்கிர அவத்தை" ஆகும். இது உயிர் விழிப்பு நிலையில் (சாக்கிரம்) இருக்கும்போதே புருவ நடுவில் (மத்தியில்) அடையும் ஐந்து உள்நிலைகளைப் பற்றி விளக்குகிறது*.
*இதன் முக்கியக் கருத்துக்கள் இதோ : ஐந்து நிலைகள்: விழிப்பு நிலையிலேயே (சாக்கிரத்திலேயே) சீவன் ஐந்து விதமான அவத்தைகளை அடைகிறது* :
1 சாக்கிரத்தில் சாக்கிரம் (திரோதாயி சக்தி ஆதிக்கம்)
2 சாக்கிரத்தில் சொப்பனம் (மாமாயை ஆதிக்கம்)
3 சாக்கிரத்தில் சுழுத்தி (காமியம்/வினைகள் ஆதிக்கம்)
4சாக்கிரத்தில் துரியம் (மாயை ஆதிக்கம்)
5 சாக்கிரத்தில் துரியாதிதம் (ஆணவ மலம் ஆதிக்கம்)
*மலம் நீங்குதல் : இந்த ஐந்து நிலைகளையும், அவற்றுக்குக் காரணமான ஆணவம் முதலான ஐந்து மலங்களையும் (மலம், மாயை, மாமாயை, திரோதாயி, காமியம்) நேருக்கு நேராகத் தரிசித்து அவற்றை நீக்க வேண்டும்*.
*பரம்பொருளுடன் கூடுதல் : இவ்வாறான மலங்களை நீக்கி, விழிப்பு நிலையிலேயே இறைவனைத் தரிசிப்பதே "நித்தமும் பரத்துடன் நிற்பது" எனப்படும்*.
பாடல் வரிகள் :
*4.மத்திய சாக்கிர அவத்தை*
2167 சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை
சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. 1
2168 மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னி
ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே. 2
2169 மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே. 3
2170 மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று
சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே. 4
2171 வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்
உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே. 5
2172 நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்
கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே. 6
2173 ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டான்அடி காணலும் ஆமே. 7
2174 நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே. 8
2175 ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே. 9
2176 பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே. 10
2177 விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே. 11
2178 நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்
மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. 12
2179 ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே. 13
2180 தத்துவ மானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே. 14
2181 அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே. 15
2182 சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு
நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே. 16
2183 ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு
ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே. 17
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#💪 தன்னம்பிக்கை
Good Morning🌞🙏
IF sum one says bad about us, We feel bad...
If some one says good about us, We feel good...
Ask urself -
Have we given our Remote Control to
others..?
Have a Great Day👍💐
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
*திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*.
*எட்டாம் தந்திரத்தில், மூன்றாம் பகுதியாக அமையும் "அவத்தை பேதம் - கீழால் அவத்தை" என்பது ஆன்மா உடலில் தங்கியிருக்கும் போது அடையும் உணர்வு நிலைகளை விளக்குகிறது.
கீழாலவத்தை என்பது ஆன்மா நனவு நிலையிலிருந்து (சாக்கிரம்) படிப்படியாக உணர்வு குறைந்து, ஆழ்ந்த நிலைக்குச் செல்லும் ஐந்து நிலைகளைக் குறிக்கும்*.
*ஐந்து அவத்தைகளும் அவை நிகழும் இடங்களும்* :
*இப்பகுதியில் உள்ள முதல் பாடலின் (பாடல் 2142) படி, இந்த நிலைகள் உடலில் பின்வரும் இடங்களில் நிகழ்கின்றன* :
சாக்கிரம் (நனவு) *: புருவ மத்தி (மத்திமை) - இதில் 35 கருவிகள் (தத்துவங்கள்) செயல்படுகின்றன".
*சொப்பனம் (கனவு) : கண்டம் (கழுத்து) - இதில் 25 கருவிகள் செயல்படுகின்றன*.
*சுழுத்தி (உறக்கம்) : இதயம் - இதில் 3 கருவிகள் (சித்தம், பிராணன், ஆன்மா) மட்டுமே செயல்படுகின்றன*.
*துரியம் (பேருறக்கம்) : உந்தி (நாபி) - இதில் ஆன்மாவும் பிராணனும் மட்டுமே இருக்கும்*.
*துரியாதீதம் (உயிர்ப்பு அடங்கல்) : மூலாதாரம் - இதில் ஆன்மா மட்டும் தனித்து, கருவிகள் இன்றி நிற்கும் நிலை*.
*முக்கியக் கருத்துக்கள்
கருவிகளின் குறைப்பு : சாக்கிரத்தில் தொடங்கி துரியாதீதம் வரை செல்லச் செல்ல, ஆன்மாவோடு தொடர்பு கொள்ளும் கருவிகளின் (இந்திரியங்கள், கரணங்கள்) எண்ணிக்கை குறைந்துகொண்டே போகும்.
பயன்: இந்த நிலைகளை அறிவதன் மூலம், ஆன்மா எவ்வாறு கருவிகளால் கட்டப்பட்டுள்ளது என்பதையும், அதிலிருந்து விடுபட்டுச் சிவத்துடன் ஒன்றும் முறையையும் உணர முடியும்*.
*கீழாலவத்தை : சாக்கிரத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்வதால் இது 'கீழால் அவத்தை' எனப்படுகிறது*.
பாடல் வரிகள் :
*3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை*
2142 ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை
மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே. 1
2143 முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்
செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே. 2
2144 இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்
கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே. 3
2145 பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே. 4
2146 பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே. 5
2147 இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 6
2148 உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. 7
2149 இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
மருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே. 8
2150 ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே. 9
2151 மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே. 10
2152 முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே. 11
2153 கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே. 12
2154 நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து
ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே. 13
2155 தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில்
மேனி அழிந்து கழுத்தியது ஆமே. 14
2156 கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. 15
2157 தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே. 16
2158 Yஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே. 17
2159 துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே. 18
2160 மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே. 19
2161 உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து
எண்னுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே. 20
2162 அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
நிதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாகா ஐஅவத் தைப்படு வானே. 21
2163 ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே. 22
2164 மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே. 23
2165 படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே. 24
2166 நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. 25
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#💪 தன்னம்பிக்கை
Good Morning🌞🙏
Derive inspiration from everything around.There is no limit to the things you can learn from everything that happens around you.
Have a Great Day👍💐
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 2. உடல்விடல்*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
*திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*.
*எட்டாம் தந்திரத்தின் முக்கியக் கருத்துக்கள்* :
*உடலின் தத்துவம் : உடலின் பஞ்ச பேதங்கள், சூக்கும உடல் (புரியட்ட காயம்) மற்றும் இந்திரியங்களின் செயல்பாடு பற்றி விளக்கப்பட்டுள்ளது.
அவத்தை பேதங்கள்: ஆன்மா சந்திக்கும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் மற்றும் துரியாதீதம் போன்ற பல்வேறு நிலைகள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன*.
*பஞ்ச கலைகள் & ஆறு அந்தங்கள் : நிவிர்த்தி, பிரதிஷ்டை போன்ற கலைகளையும்; வேதாந்தம், சித்தாந்தம் உள்ளிட்ட ஆறந்தங்களின் (Six ends) சிறப்புகளையும் இது விளக்குகிறது*.
*பதி, பசு, பாசம் : இறைவனுக்கும் (பதி), ஆன்மாவுக்கும் (பசு), உலகப் பற்றுகளுக்கும் (பாசம்) இடையே உள்ள தொடர்பு மற்றும் ஆன்மா மலங்களை நீக்கிச் சிவமாக மாறும் முறையை இது எடுத்துரைக்கிறது*.
*முக்தி நிலை : மும்மலங்கள் நீங்கி, ஆன்மா சிவத்தோடு சேரும் 'நிர்வாண' மற்றும் 'முக்தி' நிலைகள் குறித்துப் பேசுகிறது*.
*இத்தந்திரத்தில் உள்ள "காயப்பை ஒன்று சரக்குப் பலவுள" என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது, இது உடலின் நிலையாமையையும் உள்ளே இருக்கும் ஆன்மாவையும் குறிக்கிறது*.
*எட்டாம் தந்திரத்தில் இரண்டாவது அதிகாரமாக "உடல்விடல்" (பாடல் 2139 - 2141) அமைந்துள்ளது. இந்த அதிகாரம் உடலின் நிலையாமையையும், உயிரானது உடலை விட்டு நீங்கும் தன்மையையும் விளக்குகிறது*.
பாடல் வரிகள் :
*2. உடல்விடல்*
2139 பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே. 1
2140 அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே. 2
2141 இலையாம் இடையில் எழுகின்ற காமம்
முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே. 3
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#💪 தன்னம்பிக்கை
Good Morning🌞🙏
Confidence is not achieved overnight. It can be achieved by learning from mistakes, it can be achieved by learning from experience.
Have a Great Day👍💐
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_






