
சேகர்
@2593507698
தேவைகளின் தேடல் களில்
ஓடிக் கொண்டிருப்பவன்..,
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#அன்னையர்_தினம்
கொஞ்ச தூரம் நடந்து போக
வழியில் சிறிய
கல் என் கட்டைவிரல் நகத்தை
பெயர்த்தது
கண்களில் நீர் கோர்க்க
"அம்மா" என்று அலறினேன்
ஒருநாள் இரவில் திடீரென
குளிர் காய்ச்சல்
"அம்மா" "அம்மா" என்று
முனகினேன் போர்வைக்குள்
சுடச்சுட தோசையை தட்டில்
தொட்டதும் என்
"அம்மா" என் நினைவுக்கு வந்தாள்
இப்படி எங்கும் நிறைந்து
எனக்குள் பதிந்து போன
"அம்மா" வின்
பிள்ளையான எனக்கு இன்று
இரண்டு பிள்ளைகள்
அவர்களின் தகப்பன் நான்
#அன்னையர்_தின_வாழ்த்துகள்
அன்னையர்களுக்கு
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
நம்பினேன் கண்மூடித்தனமாக
உன் சொற்கள் வேதவாக்காகின
மறுப்பின்றி ஏற்றுக் கொண்டு
உன்னைத் தொடர்கிறேன் எப்படி வந்தது
நம்பிக்கை தெரியவில்லை என்னை
நானே கேட்டுக் கொள்கிறேன்
நீயோ அமைதியாக அரவணைத்து
கொள்கிறாய்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
எனக்குள் எப்படி வந்தாள்
என்னவெல்லாம் என்னிடம்
பேசினாள்
எங்கெல்லாம் என்னோடு
சுற்றினாள்
எல்லாமும் என் நினைவில்
இருப்பினும்
என்னை விட்டு ஏன் விலகினாள்
என்ற
காரணம் மட்டும் தெரியவில்லை
சரி போகட்டும் என கடந்து
போக முடியவில்லை
காரணம் அவளைத் தவிர
என் நினைவில் வேறெதுவும்
இல்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
அதோ ஒரு மேகம் அவசரமாக எங்கோ வேகமாக செல்கிறது
இரு இரு வருகிறேன் என பின் துரத்தும் மேகத்தை
திரும்பி கூட பாராமல் எங்கேப்போகிறது
சரி என்ன அவசரமோ அவசியமோ
தெரியவில்லை
நான் சொல்ல வந்ததை சொல்லாமல்
நின்று விட்டேன்
நான் சொல்லும் சேதி போய் சேருமா
என்ற சந்தேகத்தில்
என் சேதிக்காக காத்திருக்கும் கவிதை
ஏமாற்றத்துடன் நின்றிருப்பாள்
நான் என்ன செய்ய நிற்காமல் போகும் மேகக் கூட்டம்
எனக்கு உதவும் என்று நினைத்தேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
என்ன தேடுகிறாய் என் முகத்தில்
பாவங்களை சட்டென கிரகிக்கும்
உனக்கு
புரியவில்லையா இன்றைய என்
மனநிலை
திகையாதே உன்னிடம் கற்றதுதான்
விட்டுத்தள்ளு
நான் எப்பவும் போல சாதாரணமா கத்தான் இருக்கிறேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
வண்ண வண்ண உடை அணிந்து
பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி வலம் வந்தாலும்
மணக்கும் மலர்கள் இடம்பெயர்வது இல்லை ஆனாலும்
மலர்கள் மலடாவதில்லை பாட்டாம் பூச்சிகள்
உண்மையாய் காதலிப்பதால்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை
மணக்கும் பூக்கள் மட்டுமே
இருக்கும் இடம் காட்டுமென
யார் சொன்னது
காட்டுப்பூக்களும் காய்க்கத்
தான் செய்கிறது
கவிதையாய் மௌனமாக
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
ஏதோ ஒரு ஈர்ப்பு அவளிடம்
நிச்சயம் நான் அதை உணர்கிறேன்
ஒவ்வொரு முறை காணும்போதும்
சந்திரனைத் கண்ட பூமியாய் மனம்
பிரகாசமாகிறது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
எனக்குத் தெரியாது தந்திரமாக
பேச
நான் முயற்சிப்பதில்லை நல்லவன்
என் நிருபிக்க நான்
இயல்பாக இருப்பது தான் உனக்கு
இடையூறு என்றால்
என் இயல்பு மாறப்போவதில்லை
உனக்காக
இனி முடிவு என்பது நீ எடுப்பதுதான்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
எங்கோ மழைக்கான அறிகுறிகள்
காற்றில் கொஞ்சம் குளுமை
தோகை விரித்து மயிலின் நடனம்
மழைக்கா இல்லை இணைக்கா
தோகை யின் கண்கள் எல்லாம்
வா வா வென கவிதையாய் ரகசிய அழைப்பை விடுக்கிறதே












