
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
#💖என்னை கவர்ந்த பெண்மணிகள் 👑 மனதினில் உறுதியும், துணிவு இருந்தால்
நீரின் மேல் கூட நடக்கலாம்
நெருப்பில் கூட நீச்சல் அடிக்கலாம்
பூக்களைக் கூட பொறாமை படச் செய்யலாம்
புரட்சியைக் கூட புத்தாடையாய் அணியலாம்
பனித்துளிகளைக் கூட பரவசமாய் சேமிக்கலாம்
நண்பர்களை உயிராக உணரலாம்
விஷமிகளை வீசி ஏறியலாம்
பாசத்தை கல்வெட்டுகளாக பதிய வைக்கலாம்
நேசத்தையே நெகிழ வைக்கலாம்
வேஷத்தை தோல் உரித்து தூர எறியச் செய்யலாம்
வேகத்தை விவேகமாக்கலாம்
விவேகத்தை வீரமாக்கலாம்
வீரத்தை வெற்றியாக்கலாம்
வெற்றியை தக்க வைக்கலாம்
கொஞ்சம் முயற்சி பண்ணிதான் பார்ப்போமே........!!!
என்ன ஆகிவிடப் போகிறது....???
எவ்வளோ பண்ணிட்டோம்
இதைப் பண்ண மாட்டோமா என்ன........!!!???!!!
பண்ணிடுவோமா......???
துணிந்தவர்களுக்கு துக்கங்கள் தலை தெரிக்க ஓடிவிடும்
துக்கத்தை தூக்கி எறிந்து
துணிவோடு செயல் படுவோம்
சதியை சின்னாபின்னம் ஆக்கி
கதியை கலைத்தெறிந்து
மதியுடனே செயல்பட்டால்
விதியும் விலகி நின்று வழி கொடுக்கும்
வாருங்கள்......
கை கோர்த்து ஒன்றிணைந்து
சாதனைகளில் சந்திப்போம் 💗
💓 உற்சாக துள்ளலுடன்💓
கண்ணாடியை
போல்தான் உடையும்வரை
யாரையும் காயப்படுத்துவதில்லை...!!!
நான் என்னை மாற்றிக்கொள்ள
நினைக்கும் போதெல்லாம்
என் முகம் பழகி வைத்தவர்கள்
என்னை பழைய முகமாகவே
பார்க்கிறார்கள்...!!!
#கோவக்காரன் 😡
அன்பு அனைத்தையும்
அழகாக காட்டும்...!!
நம்பிக்கை அனைத்தையும்
நல்லதாக காட்டும்...!!
உழைப்பு அனைத்தையும்
உயர்வாக காட்டும்...!!
இயற்கை அனைத்தையும்
இறைவனாக காட்டும்...!!
வாழ்க்கை அனைத்தையும்
வாய்ப்பாக காட்டும்...!!
எண்ணம் போல் வாழ்க்கை...!!
மாற்றம் ஒன்றே
மாறாதது...!!
மாற்றம் மட்டும்தான் நிரந்தரம்...!!
மாற்றத்தை நோக்கி பயணிப்போம்...!! 🙏
சாக்கடை மனம். அதை தெள்ளத்
தெளிவாக்குவதே ஞானம்.
சாக்கடை - மனம் - ஞானம்
சாக்கடை - புழு, பூச்சி, விஷ ஜந்துக்கள் வாழுமிடம். இங்கே நல்லவர்களுக்கு வேலையில்லை
மனம் - இது ஒரு குரங்கு. பந்தயக் குதிரையை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. இது பறக்க ஆரம்பித்தால் அதை அடக்க முடியாது. ஆனால் இதை அடக்கி கட்டுக்குள் கொணர்ந்தால்
ஞானம் - அங்கே பிறக்கும். ஞானம் பிறந்தால் அங்கே எல்லாமே பரவசமே.
பரவசம் - அந்த பரமசிவனின் பாதம்.
பரமசிவனின் பாதமடைந்தால் பிறப்பில்லா நிலை பெற்று பெருவாழ்வு வாழலாம் அவன் பாதக்கமலத்தடியில்.
மாற்றம் ஒன்றே
மாறாதது...!!
மாற்றம் மட்டும்தான் நிரந்தரம்...!!
மாற்றத்தை நோக்கி பயணிப்போம்...!! 🙏
வாழ்க்கையில் வீணாக கடந்ததையும் நடந்ததையும் மறந்து விடுங்கள் இனி கடப்பதையும் நடப்பதையும் கவனமாக கையாளுங்கள் 😊😊😊 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்# #உற்சாக பானம்
#உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு
#பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (03.03.2026)*
..........................................................
*''இலக்குகள் அடைவதற்கு...!"*
................................................................
உங்கள் இலக்குகளின் மீது முழுதாக நம்பிக்கை வையுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கு மேல் உங்களுக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கைதான் அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்திச் செல்லும்...
அதே நேரத்தில் இலக்கு குறித்த தெளிவும் வேண்டும். இலக்குகள் இல்லாத யாரும் சாதனையாளர்களாக மாறிய வரலாறு இல்லை என்பதை அழுத்திச் சொல்லலாம்...
இலக்குகளை தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் அதேநேரம், அதை அடைவதற்கான முயற்சிகளை சோர்வில்லாமல் முன்னெடுக்க வேண்டும்...
இரண்டு பேர் ஒரு பெரிய மலைமுகட்டின் முன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவரில் முதலில் மலையின் உச்சியைத் தொடுபவருக்கு மிகப் பெரிய தொகை பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது...
இரண்டு பேருக்குமே மலையேற்றம் குறித்து அனுபவம் துளியும் கிடையாது. ஆனால்!, கண்முன்னே பணமுடிப்பு மின்ன, உற்சாகம் பொங்கி வழிகிறது...
இருவரில் ஒருவர் வேகவேகமாக ஓடி மலையில் ஏறத் தொடங்குகிறார். இன்னொருவரோ அமைதியாக அவர் மலை ஏறுவதை கவனித்துக் கொண்டிருக்கிறார்...
சுற்றியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரித்துக் கத்துகிறது. அதுவோ பாறைகள் நிறைந்த செங்குத்தான மலை முகடு. சில அடிகள் வேகமாக முன்னேறுகிறார்...
தடுமாறி கீழே விழ, சுற்றியிருப்பவர்கள் அவரை ஆசுவாசப்படுத்துகிறார்கள். போட்டியில் கலந்து கொண்ட இன்னொருவரைக் காணவில்லை...
அவரோ!, நிதானமாக ஒரு கயிறும், சில ஆணிகளும் எடுத்துக் கொண்டு வந்து பாதுகாப்பாக மலையை ஏற ஆரம்பிக்கிறார்.
பிறகென்ன!, வெற்றி அவருக்குத்தான். இருவருக்கும் சமமான ஒரே களம்தான். கயிறுகளையோ பாதுகாப்பு உபகரணங்களையோ பயன்படுத்தக் கூடாது என யாரும் கூறவில்லை...
ஆனால்!, அவ்வளவு பெரிய மலையை ஏறுவதற்கு அவை மட்டும் போதுமா என்ன...? முதலில் அந்த மலையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா...?!
அதோடு பாதுகாப்பாக உச்சியை அடையத் தேவையான முன்னேற்பாடுகளை கவனிக்கவும் வேண்டும். இதைத்தான் செய்தார் அந்த இரண்டாம் நபர்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *மலை ஏறும் பந்தயத்தைப் போலத்தான் நம் வாழ்வும் அதில் இணைந்திருக்கும். செய்வதைத் துணிந்து செய்யுங்கள். நீங்கள் செய்யும் செயலில் முழுமையான நம்பிக்கை உங்களுக்கே இல்லாத பொழுது அது எந்த தருணத்திலும் வெற்றியைத் தந்து விடாது...!*
🔴 *வெற்றிதான் இலக்கு. அதை நோக்கித்தான் இந்த ஒட்டு மொத்த பயணமும். எந்த வேலையைத் தொடங்கும் போதும் வெற்றி பெறுவதற்காகத் தான் செய்கிறோம் என்பதை ஆழமாக நம்புங்கள்...!!*
⚫ *சிறுசிறு தோல்விகளில் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா எனப் பாருங்கள். தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடத்தை மீறி யாருடைய வெற்றிக் கதையும் அந்த அனுபவத்தைத் தந்துவிடாது...!!!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
#👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு #உற்சாக பானம்# 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை* (01.03.2026)
........................................................................
*"அகம்பாவம் நம்மையே அழிக்கும்...!"*
.................................................................................
“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்...
அறிவு அதிகமாக உள்ள ஒரு சிலருக்குத் தான் ஆணவம் வருகிறது. ஆனால்!, பெரும்பாலான நிறைகுடங்களுக்கு அது வருவதில்லை...
வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள்தனமான தைரியம் தோன்றி, ‘எல்லாம் நாமே’ என்ற எண்ணம் ஒரு சிலருக்குப் பிறந்து, தடுமாறி ஒரு செயலை செய்யத் தொடங்கியதும், ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, அவர்களை கூனிக் குறுகச் செய்கின்றது...
ஆணவத்தின் மூலம் வெற்றியோ, லாபமோ கிடைப்பது இல்லை; அடி தான் பலமாக விழுகிறது
தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;
தான் அமைச்சராகி விட்ட போதையில் மக்களை அலட்சியப்படுத்தும் அரசியல்வாதிகள்,
தான் சொன்ன ஏதோ ஒன்றைப் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாளும் எதையாவது உளறிக் கொண்டிருக்கும் தலைவர்கள்;
இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய் விடுகின்றார்கள்...
‘எதற்கும் தான் காரணமல்ல'; என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை. ‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், பொது இடங்களில் அவமானப்படாமல் தப்பியது இல்லை.
ஆணவத்தால் அழிந்து போன அரசியல் தலைவர்கள் உண்டு; திரைப்பட நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு. ஆனால்!, அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு...
ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயல் காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பி விடுகிறது...
*ஆம் நண்பர்களே...!*
🟡 'நம்மிடம் ஏதும் இல்லை' என்பது ஞானம். நம்மைத் தவிர ஏதும் இல்லை' என்பது ஆணவம்...!
🔴 ஞானம் , பணிந்து பணிந்து வெற்றி பெறுகிறது. ஆனால்!, ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது...!!
⚫ ஆணவம் அறிவை அழிக்கும். அகம்பாவம் நம்மையே அழிக்கும்...!!!
- உடுமலை சு. தண்டபாணி✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
#உற்சாக பானம்# #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪
#👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம் #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
நல்லகண்ணு அவரது மனைவியை பற்றி கூறியது.*
என் மனைவிக்கு உடல்
சொகமில்லாம போச்சு.
ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம்
பாத்தோம். ஆனாலும் காப்பாத்த
முடியல. மாசங்கள்
உருண்டோடுனாலும் அவளோட
இழப்பை என்னால ஜீரணிக்க முடியல.
போராட்டம், பொதுக்கூட்டம்னு என்
உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு
இருந்தாலும், மனசு அவளை
நினைச்சுட்டேதான் இருக்கு.
அந்த
வேதனையைச் சுமந்துட்டேதான்
திரியுறேன்.
என்னை, என்னைவிட முழுசா
புரிஞ்சிகிட்டவ என் மனைவி.
என்
வாழ்க்கையில எல்லா வகையிலும்
அவளோட பங்களிப்பு இருந்துச்சு.
அவ அப்பாவும் கம்யூனிஸ்ட்
கட்சிகாரர்தான்.
அதனால என்னை
ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா
இருந்திச்சி.
டீச்சரா வேலை பாத்தா.
காசி பாரதி, ஆண்டாள்னு
எங்களோட ரெண்டு பொம்பளப்
புள்ளைகள வளர்த்து படிக்க
வெச்சது, ஆளாக்குனது
அவங்களோட எல்லா
தேவைகளையும் என்னை
எதிர்பார்க்காம அவளே
செஞ்சிருவா.
அரசியல் வாழ்க்கை, போராட்டம்,
காசு பணம் சேர்க்கத் துடிக்காத
மனசுனு என் போக்குக்கு என்னை
விட்டவ என் மனைவி.
கட்சி
வேலைகள்ல திரிஞ்சிட்டு
வீட்டுக்குப் போகும்போது,
கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற
விதமா அந்த வீட்டை எனக்கானதா
வெச்சிருப்பா.
இப்போ வீட்டுக்குப்
போனா, அவ இல்லாத அந்த
வெறுமையும் தனிமையும் ரொம்ப
கொல்லுது.
தாங்கவே முடியாம
வருது. சுத்தி எத்தனையோ பேர்
இருந்தாலும், எனக்குனு யாரும்
இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே
இருக்கு அவளோட பிரிவு.
எந்த ராத்திரி வீட்டைக் விட்டுக்
கிளம்புவேன், எந்த ராத்திரி வீடு
திரும்புவேன்னு தெரியாத ஒரு
வாழ்க்கை என்னோடது.
உண்ணாவிரதம் இருக்கக்
கெளம்புனாலும், ஜெயில்ல இருக்க
வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை
வருத்தமாவோ, மறுப்பாவோ
சொல்லாம அனுப்பிவைப்பா.
என்
புள்ளைங்க, 'அப்பா உங்களுக்கு
வயசாயிருச்சு... அரசியல்
வேலைகளையெல்லாம் கொஞ்சம்
குறைச்சுக்கோங்கங்க'னு
சொன்னப்போகூட, என் மனைவி
அப்படி ஒருநாளும் எங்கிட்ட
சொன்னதே கிடையாது.
ஏன்னா,
கட்சிப் பணிகள் இல்லாம என்னால
இருக்க முடியாதுனு அவளுக்குத்
தெரியும்.
ஆனா, 'நான்
இல்லாமயும் உங்களால இருக்க
முடியாது'ங்கிறதை இப்படிப்
பிரிவுல உணர்த்திட்டுப்
போயிட்டா.
எங்க கிளம்பினாலும், 'போய்
சேந்துட்டீங்களா?'னு ஒரு போன்
பண்ணுவா.
'சாப்புட்டீங்களா?'னு
கேட்பா.
'எங்க இருக்கீங்க?'னு ஒரு
போன் வரும்.
இப்போ எதுவுமே
இல்ல. கண்ண மூடுனா முழுக்க
ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு.
முன்னாடி நான் அசைவம்
சாப்பிடுவேன்.
இப்ப அஞ்சு வருசமா
சைவம்தான்.
அவ வைக்கிற மீன்
குழம்புல சோத்தை ஒரு பிடி
பிடிப்பேன்.
அவ வைக்கிற ரசம்
ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப்
பிடிக்கும்னு அடிக்கடி ரவா லட்டு
செய்வா.
'என்னை நீ எதிர்பார்த்து
இருக்கக் கூடாது, உனக்கு பசிச்சா
சாப்பிடு'னு என் கல்யாணத்தை
ஒட்டியே சொல்லிட்டேன்.
அதனால
நாங்க சேர்ந்து சாப்பிடுவதே
குறைவுதான். ஆனாலும் நான்
சாப்பிடும்போது கூட உட்கார்ந்து
பேசிட்டு இருப்பா.
ஒரு சுவாரசியம் என்னனா நான்
ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான்
எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி.
புதுமணத் தம்பதியா நாங்க
பேசிக்கிட்ட விஷயங்கள்லாம்,
என்னோட ஜெயில்
அனுபவங்களாதான் இருந்துச்சு.
நிறைய கல்யாணத்தை தலைமை
தாங்கி நடத்திருக்கேன்.
அப்போவெல்லாம், 'மனைவியை
அதிகாரமா மிரட்டக் கூடாது.
அன்பா இருக்கணும், சமமா
நடத்தணும்'னு சொல்லித்தான்
ஆசிர்வதிப்பேன்.
என் வாழ்க்கையில
ரஞ்சிதத்துக்கு அப்படி ஒரு
சமத்துவத்தை நான் கொடுத்தாலும்,
அவ எனக்காக ரொம்ப
விட்டுக்கொடுத்து போயிருக்கா.
என்னைத் தேடி வர்றவங்களைப் பத்தி
அவளுக்குத் தெரியும்.
என் மனசு
நினைக்கிற மாதிரியே அவங்களை
உபசரிப்பா.
ரஞ்சிதம் நிறைய புத்தகங்க படிப்பா,
பேப்பர் படிப்பா. ஜெயகாந்தன்
சிறுகதைகள் பத்தி பேசுவா.
நான்
எதையாவது படிக்காம
விட்டுட்டாலும், 'இதப் படிக்கலையா
நீங்க?'னு கேட்பா. திடீர்னு எதாவது
செய்தியைக் காட்டி, 'இதப்
பாத்தியளா?'னு கேட்பா.
'இல்லையே...'னு சொன்னா,
'இதக்கூடப் பாக்காம என்ன
படிக்கிய?'னு கேட்பா.
இப்போவெல்லாம் பேப்பர், புத்தகம்
படிக்கும்போது, 'எதையாச்சும்
படிக்காம விட்டுட்டா அதை
எடுத்துக்காட்ட அவ இல்லையே'னு
ரஞ்சிதத்தோட நினைவுகள் நான்
படிக்கிற ஒவ்வொரு எழுத்துலயும்
பின்னிக்குது.
நான் சம்பாதிச்சுது என்னனு
எல்லாருக்கும் தெரியும்.
வெளியே போகும்போது
செலவுக்கு அவகிட்டதான் காசு
வாங்கிட்டுப் போவேன்.
கொஞ்சம்
நிலம் இருந்து அதுல அரிசி வரும்.
மத்தபடி 'அது இல்ல இது இல்ல'னு
எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே
சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு
போனா.
என் பிறந்தநாளுக்கு
துணிமணி எடுத்துக் கொடுப்பா.
அவளுக்கு, நான் வீட்டுல
இருந்தாலே பரிசுதான்னு
சொல்லுவா.
எப்பவாச்சும்
டெல்லிக்குப் போனா அவளுக்கு
சேலை எடுத்துட்டு வருவேன்.
ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய
போயிட்டு நேரடியா வீட்டுக்கு
வர்றதா இருந்தா எதாவது பண்டம்
வாங்கிட்டு வந்து கொடுப்பேன்.
எங்க அப்பா, என் கூடப்
பொறந்தவங்களுக்கு எல்லாம்
அவங்கவங்க பேருல வீட்டை
எழுதிவெச்சாரு.
என் பங்கு வீட்டை
மட்டும் என் மனைவி பேருலதான்
எழுதி வெச்சிருக்காரு.
பொது
வாழ்க்கையில இருக்கேன்,
வீட்டையும் வித்து செலவு
பண்ணிடுவேனோனு பயம்
அவருக்கு என்கிறார் நல்லக்கண்ணு.
சிறிது நேரம் மெளனமாக
இருந்துவிட்டு தொடர்ந்தார்.
ரஞ்சிதம் கிறிஸ்டியன்.
அதனால
பைபிள் கதைகளை அடிக்கடி
சொல்லுவா.
எல்லார்கிட்டயும்
அன்பா இருக்கணும், எல்லாரையும்
சமமா நடத்தணும்னு சொல்லுவா.
'நான் செத்துப் போயிட்டேன்னா,
நம்ம சொந்த ஊருலதான் அடக்கம்
பண்ணனும்னு'னு சொன்னா.
அவ
ஆசைப்படியே செய்தேன்.
அவ
இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு
முன்னாடியே, அவ இனி
நாள்கணக்குலதான் என்கூட
இருக்கப்போறானு
தெரிஞ்சுபோச்சு.
அந்த நாட்கள்ல
ஆஸ்பத்திரியும் வீடுமாதான்
இருந்தேன்.
அவ இறந்த அன்னைக்கு,
என்னுல இருந்து பாதி உசுரு
கழண்டுபோன மாதிரி இருந்துச்சு.
இப்பக்கூட அப்படியேதான்
இருக்கேன்.
வயசான காலத்துல, பொண்டாட்டி
போனதுக்கு அப்புறம் புருஷன்
இருக்குறது கொடுமையினு
சொல்லுவாங்க.
இப்பதான் எனக்கும்
புரியுது இந்தப் பிரிவு எவ்வளவு
துயரமானதுனு. என் மனசு
அவளுக்குத் தெரியும்னாலும்,
'எனக்கு எல்லாமே நீதான்'ங்கிறதை
இருக்கும்போது அவகிட்ட எத்தனை
தடவை வார்த்தையில
சொல்லியிருக்கேன்னு தெரியல.
வருசா வருசம் காதலர் தினக்
கொண்டாட்டங்களை செய்தியாதான்
பேப்பர்ல படிப்பேன். இந்த வருஷம்
படிக்கும்போது, ரஞ்சிதம்
முகம்தான் வந்துபோகுது.
அவ நெனப்பை என்ன செய்ய?""
*அவரின் நினைவுகளை போற்றுவோம்.✍🏼🌹* #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம்









