🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
ShareChat
click to see wallet page
@3454dsm
3454dsm
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
பெறுவது மகிழ்ச்சி அல்ல மாறாக மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி வெற்றி என்பது மற்றவருடைய தோல்வியில் மறைந்து இருக்கிறது எல்லோரும் முதன்மையானர்களே எது முதன்மை....??? எப்போது முதன்மை....??? யார் முதன்மை....??? சிந்திப்போமா.....??? எது ஆதியில் சுத்தவெளியாக இருந்தததோ அதுவே முதன்மை அது கண்ணுக்குப் புலப்படாததால் சுத்தவெளியில் இருந்து தோன்றிய அனைத்தும் முதன்மையே...!!! எப்போது ஆதி பிறந்ததோ அதுவே முதன்மை அந்த முதன்மையே முழுமை அந்த முழுமையை உணர்தலே ஞானம் இதில் யாரும் முத்னமைக்கோ, முழுமைக்கோ போட்டி போட வேண்டிய அவசியல் இல்லை எல்லோரும் முழுமை என்று உணர்ந்தால் போட்டி எதற்கு....??? பொறாமை எதற்கு...??? வம்பு எதற்கு....??? வழக்கு தான் எதற்கு.....??? சிந்தனை செய் மனமே முழுமையை உணராது முதன்மையை மட்டுமே மனிதன் கருத்தில் கொண்டதால் தான் இவ்வளவு பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், போட்டிகள், பொறாமைகள். If there is no competition there won’t be any politics Competition arises from comparison So, no more comparison, No more competition . 😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - d அடைவதற்கு ஆசை படுகிறவன், இழப்பதற்கு தயாராக ுக்க வேண்டும் !!! d அடைவதற்கு ஆசை படுகிறவன், இழப்பதற்கு தயாராக ுக்க வேண்டும் !!! - ShareChat
🙏🏻 💐💐🌹🌹 இன்றைய சிந்தனை (24.02.2026) ...................................................................... *'' சிந்தனை தான் அறிவை வளர்க்கும்...!"* ................................................................... தெளிவான சிந்தனை இல்லாதவர், தன் ஆற்றலை உணர முடியாது.வாழ்வில் வெற்றி பெற முடியாது... மற்றவர் முன்னேற்றத்தைக் காணும் போது பொறாமை அவரிடம் உருவாகும். அவர்கள் தவறான வழியில் பதவியைப் பிடித்து விட்டதாகவும், பணத்தைச் சேர்த்து விட்டதாகவும் பேசிக் கொண்டு இருப்பார்கள்... ஒருவரிடம் பொறாமை சேரும் போது வெறுப்புணர்வு பகையுணர்வு ஆகியவை அவரை அண்டிக் கொள்ளும். பிறரை விமர்சனம் செய்வதில் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்... தன் முன்னேற்றத்தைத் தானே தடுத்து நிறுத்தி விடுவார், மூடிய மனமுடையவர், காரியங்களை பிறர் கோணத்திலிருந்து பரிசீலிப்பதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சாதிக்கின்றார்... நீங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க விரும்பினால் மனதைத் திறந்து விட்டு புதிய கருத்துக்களையும் புதிய வாய்ப்புக்களையும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பரிசிலிக்க வேண்டும்... நமக்கு முன்னர் வாழ்ந்த மேதைகள் புதிய கருத்துக்களைச் சொல்லி விட்டு மூடிய மனம் பெற்றவர்களால் பட்ட துன்பம் கொஞ்சமல்ல. மாபெரும் வெற்றி பெற விரும்பும் நீங்கள் திறந்த மனதுடன் புதிய கருத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும்... "குதிரையோ, மாடோ இழுக்காமல் தானே நகரும் வாகனத்தைச் செய்வேன்" என்று ஹென்றி போர்டு முதன் முதலில் சொன்ன போது கேலி பேசப்பட்டார். காற்றில் உள்ள ஈதர் ஒலி அலைகளைத் தாங்கிச் செல்லக் கூடியது. அதன் உதவியால் ஓரிடத்தில் பேசுவதை ஒலி அலைகளாக மாற்றி பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மீண்டும் பேச்சாக மாற்றிக் கேட்க முடியும் என்று மார்க்கோணி சொன்ன போது அவரைப் பைத்தியம் என்று முடிவு கட்டினார்கள். ராக்கெட் விண்கலங்களை உருவாக்கி மனிதனைச் சந்திரனில் கொண்டு போய் இறக்க முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் முதன் முதலில் சொன்ன போது சாத்தியமே இல்லாத அதீத ஆசை என்று கடிந்து கொள்ளப்பட்டார்கள்... ஆகவே!, திறந்த மனம் உங்களிடம் இல்லை என்றால் தெளிவான சிந்தனையை நீங்கள் பெற முடியாது. தெளிவான சிந்தனை இல்லாதவர் தன் ஆற்றலை உணர முடியாது. ஊக்கம் கொள்ள முடியாது. வாழ்வில் வெற்றி பெற முடியாது... *ஆம் நண்பர்களே...!* 🟡 தெளிந்த சிந்தனையோடு செயற்படுபவர்க்கு மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதால் அவ்வெற்றிக்கு வழி வகுக்கும் மிகமுக்கியமான சில செய்திகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள்...! 🔴 திறந்த மனம் இல்லாதவரிடம் தெளிந்த சிந்தனை பிறப்பதில்லை. விருப்பு வெறுப்புடன் மதிப்பீடுகளைச் செய்வதனால் சரியான முடிவுகளுக்கு வர முடிவதில்லை...!! ⚫ அனுபவங்களைத் திறந்த மனதுடன் ஆராயுங்கள். தெளிந்த சிந்தனை அமையும். வெற்றிக்கு இதுவும் ஒரு மறைபொருள்...!!! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
👪 cute family members 👪 - statusDo 9 மவெறும் வளர்ச்சி எவரையும் மனிதாக்குவதில்லை. அறிப்பூர்வமான சிந்தனைதான் ருவனை மனிதனாக உருவாக்கிறது " statusDo 9 மவெறும் வளர்ச்சி எவரையும் மனிதாக்குவதில்லை. அறிப்பூர்வமான சிந்தனைதான் ருவனை மனிதனாக உருவாக்கிறது " - ShareChat
ஏழை ஆக்காமல், பெறுபவரை செல்வந்தன் ஆக்கும் ஒரே செயல் புன்னகை! #உற்சாக பானம் #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு
உற்சாக பானம் - /' கொடுப்பவரை ஏழை ஆக்காமல் பெறுபவரை செல்வந்தன் ஆக்கும் ஒரே செயல் புன்னகை! /' கொடுப்பவரை ஏழை ஆக்காமல் பெறுபவரை செல்வந்தன் ஆக்கும் ஒரே செயல் புன்னகை! - ShareChat
#பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #உற்சாக பானம்#
பொழுது போக்கு - உனக்கானஇடத்தை யாரும் பிடிப்பதில்லை! நீதான்தவற விடுகிறாய் உனக்கானஇடத்தை யாரும் பிடிப்பதில்லை! நீதான்தவற விடுகிறாய் - ShareChat
எல்லாம் மாறிவிடும் என்பது நம்பிக்கை; மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை! #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
உற்சாக பானம்# - ( நாளை எல்லாம் மாறிலிடும் என்பது நம்பிக்கை; மாறவில்லை என்றாலும் } 1[ 1 { சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை ( நாளை எல்லாம் மாறிலிடும் என்பது நம்பிக்கை; மாறவில்லை என்றாலும் } 1[ 1 { சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை - ShareChat
செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர். #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்
கதை சொள்ளரோம் - பொன்மொழிகள் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர் -பெர்னாட்ஷா பொன்மொழிகள் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர் -பெர்னாட்ஷா - ShareChat
.பத்து நிமிடங்கள் முன்னதாக.. காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள். 2.பத்து நிமிடங்கள் மௌனமாக நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்.. 3.முப்பது நிமிடங்கள்... ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக முப்பது நிமிடங்கள் புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள். 4.உணவில் ஒழுங்கு.. வேலைச் சுமையைக் காரணம் காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். முறைப்படி சாப்பிடுவதற்க்குப் பழகுங்கள். 5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்.. Day Task. உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்தப் பழக்கம் உதவும். நினைத்த அனைத்தும் நடப்பதை விரைவில் உணர்வீர்கள். 6.அடைசல்கள் அகற்றுங்கள்.. அடைசல்கள், குப்பைகள், குவிந்து கிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கி விடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கி விடுகிறது. போகி பண்டிகை வரை காத்திருக்காது அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள். 7.மனிதர்களை நெருங்குங்கள்.. இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும் போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக் கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது. 8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்.. வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போது தான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்து விட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப் போட வேண்டியது தான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது. 9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. ஒவ்வொரு நாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள். 11.பணத்துக்கு வேலை கொடுங்கள்.. உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத் தானே பலமடங்கு பெருக்கிக் கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும். 12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்.. உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை அவதூறு அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள். 13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.. இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்து விடும்.. 14.மனிதத்தன்மையே கடவுள் தன்மையின் ஆரம்பம்.. மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்து கொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதி நேர வேலை. கடவுளுக்கோ, முழு நேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழு மனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் மகிழ்ச்சியாய் வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.. புதிய சிந்தனை அல்ல இது. புத்துணர்சியூட்டும் சிந்தனை... 🌹🌹🌹 #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்#
உற்சாக பானம் - அடுத்தவர்கள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது . நம்முடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதே புத்திசாலிதனம் ! கார்த்திகேயன் அடுத்தவர்கள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது . நம்முடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதே புத்திசாலிதனம் ! கார்த்திகேயன் - ShareChat
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* (22.02.2026) ..................................................................... *"ஆத்திரம் அழிவைத் தரும்...!"* .................................................................... 'ஆத்திரம்' என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரம் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ, அல்லது கோபமுடையவனாக இருப்பான்.. அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில் தான் முடியும். மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு ஆலோசிக்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான், அதனால் அவ்வேளையில் அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் தவறாகவே போகும்... மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார். செங்கிஸ்கான் தனது கரத்தில் ஒரு ராஜாளியை ஏந்தி இருந்தார். அதிக தூரம் நடந்து சென்றதால் களைப்பு ஏற்பட்டது. தாகம் எடுத்தது. அப்போது ஒரு பாறையிலிருந்து நூல் இழை போல் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது... ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்கு சென்று நீரைப் பருகச் சென்றார். ராஜாளி வேகமாகப் பாய்ந்து சென்று குவளையைத் தட்டி விட்டது. மீண்டும் மீண்டும் வௌ்ளிக் குவளையை ராஜாளி தட்டி விட்டது... ராஜாளியின் அடாவடி. இந்த இரண்டாலும் செங்கிஸ்கானுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது. வாளால் ராஜாளியை வெட்டினார். ராஜாளி துடி துடித்துக் கொண்டிருந்தது... மீண்டும் செங்கிஸ்கான் தண்ணீரைச் சேகரித்து அதை அருந்த முற்பட்டார். துடிதுடித்துக் கொண்டிருந்த ராஜாளி மறுபடியும் பாயந்து வந்து குவளையை தட்டி விட்டது. செங்கிஸ்கானுக்கு அடக்க முடியாத ஆத்திரம் பீறிட்டெழுந்தது... ராஜாளியின் நெஞ்சை வாளால் குத்திக் கிழித்தார். இப்போது மேலிருந்து தண்ணீர் கசிவது நின்று விட்டது. கீழே தண்ணீர் கசிவு வறண்டு விட்டாலும் மேலே ஒரளவு தண்ணீர் இருக்கக் கூடும் என்று செங்கிஸ்கான் அனுமானித்தார்... குன்றின் வழியே அவர் மேலே ஏறினார். அங்கே ஒரு சிறிய தடாகம் தென்பட்டது. ஆனால்!, அந்தத் தடாகத்தின் மத்தியில் கொடிய நாகப் பாம்புகள் செத்துக் கிடந்தது. அந்தத் தண்ணீரை அருந்தியிருந்தால் தனது உயிர் பிரிந்திருக்கும் என்பதை செங்கிஸ்கான் உணர்ந்து கொண்டார்... கீழே இறங்கி வந்த செங்கிஸ்கான், இறந்துக் கிடந்த ராஜாளியை இறுகத் தழுவிக் கொண்டார். இந்த ராஜாளிக்குத் தங்கச் சிலை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்... செங்கிஸ்கான் விருப்பதிற்கு ஏற்ப தங்க ராஜாளி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் ஒரு சிறகில் ஒரு நண்பன் உனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தாலும் கூட, அவன் தொடர்ந்து உனது நண்பனாகவே இருக்கிறான் என்று பொறிக்கப்பட்டது... மற்றொரு சிறகில், கோபம், ஆத்திரத்தோடு செய்கிற செயல் அழிவையே தரும் என்றும் பொறிக்கப்பட்டது... *ஆம் நண்பர்களே...!* 🟡 நம்மில் பலருக்கு கோபம். ஆத்திரத்தில் அறிவும் வேலை செய்வதில்லை. ஆத்திரம் பெரும்பாலும் அழிவைத் தருகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டம் என்று சொல்வார்கள். எதிலும் ஆத்திரமோ, அவசரமோ இல்லாமல் அறிவாக செயல்பட்டால் எதிலும் வெற்றி தான்...! 🟡 அதேநேரம் அழிவிற்குக் காரணம் கோபமும், ஆத்திரப்படுதலே ஆகும், கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டியரின் சூழ்நிலையை சிந்தியுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்...! 🔴 உடனே உங்கள் மனதை வேறு செயல்களில் திருப்புங்கள். அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள், நேரம் மேம்பாடு மற்றும் தன்னடக்கத்தை கடைப்பிடியுங்கள்...!! 🔴 செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள். கோபம், ஆத்திரம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்...!! ⚫ நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண்டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத்தாக வேண்டும். ஆத்திரம் , கோபம் தவிர்த்து அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திட வேண்டும்..!!! - உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம்
உற்சாக பானம்# - சில நிமிடக் கோபமும் ஆத்திரமும் பல இன்னல்களை கொண்டு வருவதோடு உடல்நலத்தை வெகுவாக பாதிப்படைய செய்யும் ஆம் கோபப்படாமல் வாழக் கற்றுக் கொள்வோம்அன்பு கொண்டு ஆள்வோம் . 9_6060)8 சில நிமிடக் கோபமும் ஆத்திரமும் பல இன்னல்களை கொண்டு வருவதோடு உடல்நலத்தை வெகுவாக பாதிப்படைய செய்யும் ஆம் கோபப்படாமல் வாழக் கற்றுக் கொள்வோம்அன்பு கொண்டு ஆள்வோம் . 9_6060)8 - ShareChat
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - ShareChat
00:14
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
பொழுது போக்கு - ShareChat
00:12