🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
ShareChat
click to see wallet page
@3454dsm
3454dsm
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
அறிவு என்பது புதையல் பெட்டகம் என்றால்… பயிற்சியே அதன் திறவுகோல்..!! அறிவு எல்லோரிடமும் இருக்கலாம். புத்தகங்களில் இருக்கலாம். பாடங்களில் இருக்கலாம். அனுபவங்களில் இருக்கலாம். ஆனால் அந்த அறிவு வாழ்க்கையை மாற்ற வேண்டுமெனில் அதை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். புதையல் பெட்டகம் இருக்கலாம். ஆனால் திறவுகோல் இல்லையெனில் அது பயனற்றது. அறிவு ஒரு சக்தி. பயிற்சி தான் அந்த சக்தியை வெளிக்கொணரும் திறவுகோல். --- 🔟 10 விரிவான விளக்கங்கள் --- 1️⃣ அறிவு சேமிப்பு; பயிற்சி செயலாக்கம் அறிவு மனதில் சேமிக்கப்படுகிறது. ஆனால் பயிற்சி அதை செயலில் மாற்றுகிறது. தெரிந்தது மட்டுமே போதாது; செய்தது தான் பலன் தரும். --- 2️⃣ பயிற்சி திறமையை உருவாக்கும் ஒரு விஷயத்தை ஒருமுறை தெரிந்தால் அது அறிவு. அதே விஷயத்தை பலமுறை செய்தால் அது திறமை. திறமை தான் வெற்றியை உருவாக்கும். --- 3️⃣ தவறுகள் பயிற்சியின் பகுதி பயிற்சி செய்யும் போது தவறுகள் வரும். ஆனால் அந்த தவறுகளே மேம்பாட்டின் அடித்தளம். முயற்சி இல்லாத இடத்தில் முன்னேற்றம் இல்லை. --- 4️⃣ தொடர்ச்சி தான் மாற்றத்தை தரும் ஒரு நாள் பயிற்சி போதாது. தினசரி சிறிய முயற்சி தான் பெரிய திறனை உருவாக்கும். --- 5️⃣ பயிற்சி தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்யும் போது பயம் குறையும். நம்பிக்கை உயரும். அந்த நம்பிக்கை தான் மேடையில் நிற்கும் தைரியம் தரும். --- 6️⃣ அறிவு பயன்பாட்டில் தான் மதிப்பு புத்தகத்தில் இருக்கும் அறிவு யாருக்கும் உதவாது. அதை பயன்படுத்தும் போது தான் அது வாழ்க்கையை மாற்றும். --- 7️⃣ ஒழுக்கம் பயிற்சியின் அடிப்படை பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாமல் பயிற்சி தொடராது. ஒழுக்கம் தான் திறமையை நிலைநிறுத்தும். --- 8️⃣ சிறிய பயிற்சி பெரிய பலன் ஒவ்வொரு நாளும் சிறிய முன்னேற்றம் செய்தால் அது வருடங்களுக்குப் பிறகு பெரிய வெற்றியாக மாறும். --- 9️⃣ பயிற்சி திறனை ஆழப்படுத்தும் அறிவு மேற்பரப்பு. பயிற்சி ஆழம். ஆழமான திறன் கொண்ட மனிதன் எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்பான். --- 🔟 திறவுகோல் உன் கையில் அறிவு அனைவருக்கும் கிடைக்கலாம். ஆனால் பயிற்சி செய்வது உன் தேர்வு. திறவுகோல் உன் கையில் உள்ளது. திறந்தால் புதையல் உன்னுடையது. --- 🌄 முடிவுரை அறிவு இருந்தால் பெருமை இல்லை. அதை பயன்படுத்தினால் தான் மதிப்பு. அறிவு என்பது புதையல் பெட்டகம் என்றால், பயிற்சியே அதன் திறவுகோல். இன்று கற்றதை இன்று பயிற்சி செய். தொடர்ந்து செய். ஒருநாள் உன் திறமை உன் வாழ்க்கையின் புதையலை திறக்கும். 🔐✨🔥 🌹🌹🌹 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு #உற்சாக பானம்#
👪 cute family members 👪 - H60gul6u அறிவு என்பது OLILLBLD 66TT6, பயிற்சியே  9ర6T திறவுகோல் Hareesh Quotes H60gul6u அறிவு என்பது OLILLBLD 66TT6, பயிற்சியே  9ర6T திறவுகோல் Hareesh Quotes - ShareChat
#உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
உற்சாக பானம்# - ShareChat
00:58
#பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம் நேர சிந்தனை* (04.03.26) *உயர்வே லட்சியம்.*    அநேகம் பேர் சொல்வது ண்டு, நான் போன பிறவியில் பண்ணின பாவத்திற்கு இந்த பிறவியில் தண்டனை அனுபவிக்கிறேன் என்று. இந்த பிறவியில் நான் யாருக்காவது நல்லது செய்தால் அடுத்த பிறவியில் எனக்கு நல்லது நடக்கும்.   அப்படி நாம் செய்யும் நன்மைகளுக்கு புண்ணியம் என்று பெயர். இந்தப் பிறவி யில்  நாம்  நிறைய புண்ணியம் சேர்க்க வேண்டும்.அதற்கு நிறைய தான தர்மம் பண்ண வேண் டும்.கோவில்களுக்கு நல்லது செய்ய வேண்டும்......... இப்படி ஏகப்பட்ட லிஸ்ட் போட்டு வைத்திருப்பார்கள்.    நீங்கள் செய்யும் செயலின் நோக்கமே சுய நலத்தை அடிப்படையாக கொண்டது. எனக்கு அடுத்த பிறவியில் நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் செய்யும் எதுவு மே சுயநலத்தை தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.   பலனை எதிர்பார்த்து செய்யும் எந்த செயலுமே தவறானதே.எந்த எதிர் பார்ப்பும் இல்லாது சுயநலன் பாராது பிறருக்கு செய்யும் உதவியே உங்கள் இயல்பினை மேம்படுத்த உதவும்.    இது செஞ்சா இப்படி நடக்கும்.அந்த கோவிலுக்கு இது பண்ணினா அப்படி  நடக்கும் என்று பலவிதமான கதைகள் நமக்கு சொல்லப் பட்டு இருக்கின்றன.    நீங்க யாருக்கு என்ன வேணுமானுலும் பண்ணுங்க. ஆனால் உங்களுக்கு எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும்.அது இந்த பிறவி யில் என்றாலும் சரி.இனி வரப் போகும் ஏழேழு பிறவி க்கும் சரி.எது நடக்க வேண்டு மோ அதுவே நடக்கும்.    நடந்து முடிந்ததை நம்மால் எப்படி மாற்ற முடியாதோ அப்படியே நடக்கப் போவதை யும் நம்மால் மாற்ற முடியாது.    நடந்ததும்,நடப்பதும்,நடக்கப் போவதுவும் அனைத்துமே அவனது ஆணையின் படியே நடக்கிறது.அதை மாற்ற நம்மால் இயலாது.    நம் வளர்ச்சிக்காக நம்மை நாம் சரிப் படுத்தி சீர் செய்வதற்காக சில அனுபவங்க ளை நமக்கு இறைவன் தருகிறான்.அந்த அனுபவங்களை அனுபவிப் பதன் மூலம் நம் தவறுகளை நாம் கண்டுகொண்டு நம்மை நேர்படுத்திக் கொள்ள வேண்டும்.அதுவே நம் பிறவியின் அடிப்படை நோக்கம்.     நல்லது கெட்டது என்று எதுவுமே இல்லை.நடப்பது அனைத்துமே முன்பே நிர்ண யிக்கப் பட்ட ஒன்றே. எல்லாம் நன்மைக்கே. நீங்கள் எப்படி திட்டங்கள் தீட்டி உங்கள் ராஜ தந்திரங்களை பயன் படுத்தி செயல் செய்தாலும் நடக்க கூடியது நடந்தே தீரும்.     கிரிக்கெட் மேட்ச் களில் பார்க்கலாம். ஈஸியா பிடிக்க வேண்டிய கேட்சை மிஸ் பண்ணி விடுவான். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும்.அத்தனை பேரும் அவனை திட்டி தீர்ப்பார்கள்.     மிஸ் பண்ணி யவனும் தன்னால் தான் நம் டீம் தோற்று விட்டது என்று ஃபீல் பண்ணி புலம்புவான். உண்மையில் அப்படி நடக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்க பட்ட ஒன்று அது. இவன் வெறும் கருவி அவ்வளவு தான்.    நடைபெறும் நன்மை தீமைகளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை தான்.காக்கா வராவிட்டாலும் விழ வேண்டிய நேரத்தில் காற்றடித்தே கூட பனம் பழம் விழுந்து விடும்.     எதுவும் நடக்க வேண்டிய வேளையில் நடந்தே தீரும். எனவே என்னால் தான் நடந்தது என்று பெருமை படவோ புலம்பவோ தேவையில்லை. எல்லாமே தானே நிகழ்கிறது.   சூரியன் சந்திரன் நம்மாலய வருது. மழையும் வெயிலும் யாராலே!.இயற்கை அதன் இயல்பு படி தானே செயல் படுகிறது. நம் வாழ்க்கையும் அப்படியே.   அப்படியானால் நான் எதுவுமே செய்வதில்லையா! .நான் நல்லது ஏதும் செய்யவில் லையா! என்னால் யாருக்கும் கெடுதல் ஏதும் நடப்பதில்லையா!.அப்படியானால் எனக்கு ஏன் இப்படி துன்பங்கள் நடைபெறுகிறது?என்று பலவிதமான கேள்விகள்.   இங்கு எதுவுமே உங்களால் நடைபெறுவதில்லை. நல்லது கெட்டது என்பது எல்லாம் நாம் பார்க்கும் விதம் தான்.நமது மனோநிலையை (attitude)பொறுத்ததே அனைத்தும்.   அப்படியானால் எனது பணி என்ன? நான் செய்யவேண்டியது தான் என்ன?என்கின்ற கேள்வி எழுகிறது.   உண்மையில்  நாம செய்யவேண்டியது எதுவுமே இல்லை.இங்கு நாம் எப்படி செயல் படுகிறோம் என்று நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.   நாம் இரு விதமான நிலைகளில் இயங்குகிறோம். ஒன்று நான் என்கின்ற ஈகோவில் இயங்குகிறோம்.     நான் என்கின்ற எண்ணத்தில் நாம் செய்கின்ற எந்த செயலும் சுயநலம் மிக்கதாக வே இருக்கும்.எனக்கு என்னுடைய என்கின்ற எண்ணமே சுயநலத்தை ஏற்படுத்தி விடும்.    அந்த நேரத்தில் நாம் செய்வது அனைத்துமே விருப்பு வெறுப்பு மிக்கதாகவே இருக்கும்.நமது செயலின் நோக்கம் நிச்சயம் லாபநோக்கம் கருத்தியதாகவே இருக்கும்.இது அறியாமை.    இந்த அறியாமையில் இருந்து விடுபட்டு அனைத்தும் இறைவனே. இறைவனின் அனுமதி இன்றி எதுவும் நடை பெற முடியாது என்பதை ஏற்றுக் கொண்டு இந்த கணத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்வதே நமது வேலை.   அப்படி செயல்படும் போது நான் என்பது மறைந்து விடும்.எதிர்பார்ப்பு ஏதும் இருக்காது.நம்மில் இறை தன்மை இருக்கும்.அப்போது எது நடந்தாலும் ஆனந்தமே. எந்த வித துன்பமும் இல்லை. இதுவே நம்மை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.நமது இயல்பு உயர்நிலைக்கு மாறத் தொடங்கும்.    நான் என்கின்ற நிலையில் இயங்கும் போது நாம் அறியாமையில் இருக்கிறோம் . இந்த அறியாமை நமது வளர்ச்சியை கெடுப்பதுடன் நம்மை மேலும் கீழ் நிலைக்கு கொண்டு சென்று விடும்.     நாம் பிறப்பதற்கு முன்பே நமக்கு எந்த விதமான வளர்ச்சி தேவை படுகிறது என்று நமக்கு உயர்நிலையில் இருப்பவர்களுடன் ஆலோசனை நடத்தி அந்த வளர்ச்சிக்கு தேவையான அனுபவங்கள் நமக்கு தரப் படுகின்றன.   அந்த அனுபவங்களை நாம் எப்படி எதிர் கொண்டு அதன் மூலம் நம்மை உயர்நிலை க்கு உயர்த்தப் போகிறோம் என்பது நம் கையிலேயே இருக்கிறது.    இந்த உலகம் நிச்சயம் உங்களின் கடந்த கால தவறுகளுக்கு  தண்டனை வழங்கும் சிறைச்சாலை அல்ல.   உங்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் கல்விக் கூடமே இந்த உலகு. பள்ளியில் நன்கு படித்து புரிந்து கொண்டு தேர்வுகளில் நன்கு  தேர்வெழுதி அடுத்த நிலைக்கு செல்லலாம். சிலரோ பள்ளிக்கு சென்றால் படிப்பதே இல்லை.வாத்தியார் சரியில்லை. மெஸ்ஸில் சாப்பாடு சரியில்லை.கூட படிக்கும் மாணவன் சரியில்லை என்று ஏகப்பட்ட கம்ப்ளெய்ண்ட்.    இறுதி தேர்வில் காபி அடித்து வெற்றி பெற முயல்பவர்களும் உண்டு. மாட்டிக் கொண்டு வாழ்கையை தொலைப்பவர்களும் உண்டு.     எது சரி என்பது நமக்கே தெரியும். தெரிந்தே தவறு செய்பவர்களே அநேகம். பின்னர் தவறுகளை உணர்ந்து வருந்துவதில் என்ன பயன்.     நாமும் இந்த வாழ்க்கை என்கின்ற வாய்பை சிறந்த முறையில் உபயோகித்து நம்மை மேம்படுத்தும் வகையில் வாழ்ந்தால் சிறிது சிறிதாக நாமும் உயர் நிலையை எய்தலாம். நன்றி கா. கணேஷ். 🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋 முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்... இந்த நாள் இனிய நாளாகட்டும்ய் வாழ்க 🙌 வளமுடன்🎋🌴 *அன்பே🔥சிவம்*🌴🎋 🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
பொழுது போக்கு - ShareChat RajaShree இனிய காலை வணக்கம் ShareChat RajaShree இனிய காலை வணக்கம் - ShareChat
#உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 போராடும் அழுக்கான வேர்கள் தந்ததுதான்... பல வண்ணங்கள் காட்டும் இந்த மரங்களின் அழகு.! *இனிய காலை வணக்கம்.*
உற்சாக பானம் - ShareChat
#👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம் #உற்சாக பானம்#
👪 cute family members 👪 - ೨_6007606 தட்டிப்பறித்தவனை விட்டுவிட்டு. தனக்கான தேடியலைந்தவனை. உணவை கேடுகெட்டநாய் என்கிறது ஈநன்றி கெட்டஉலகம் ೨_6007606 தட்டிப்பறித்தவனை விட்டுவிட்டு. தனக்கான தேடியலைந்தவனை. உணவை கேடுகெட்டநாய் என்கிறது ஈநன்றி கெட்டஉலகம் - ShareChat
#பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்
பொழுது போக்கு - 5="5' R Amoxycillin Capsules IP 25Omg AMOXIK-250 GAPSULES १० X १० Capsules 5="5' R Amoxycillin Capsules IP 25Omg AMOXIK-250 GAPSULES १० X १० Capsules - ShareChat
உணர்வு நிலை (Consciousness) என்பது எப்போதும் நேர்க்கோட்டில் பயணிப்பது கிடையாது என்றும், அது காலத்தைக் கடந்து முன்னும் பின்னும் தாவும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் புதிய கருதுகோளை முன்வைத்துள்ளனர். நமது ஆழ்மனதில் தோன்றும் 'உள்மன உணர்வுகள்' அல்லது 'முன்கூட்டியே தோன்றும் உணர்வுகள்' (Gut feelings) என்பவை உண்மையில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே நமக்குக் கிடைப்பதுதான் என்று அவர்கள் விளக்குகின்றனர். குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளின் அடிப்படையில், தகவல்கள் காலவெளியில் பின்னோக்கிப் பயணிக்கக்கூடும் என்றும், அவ்வாறு வருங்காலத்தில் இருந்து வரும் சமிக்ஞைகளை நமது மூளை உள்வாங்கிக் கொள்வதையே நாம் உள்ளுணர்வு என்கிறோம் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், காலம் குறித்த நமது தற்போதைய புரிதல் முற்றிலும் மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்
உற்சாக பானம்# - ShareChat
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - ShareChat
00:14
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
பொழுது போக்கு - ShareChat
00:12