2026-ல் 220 +தொகுதிகளில் வெற்றி: கோட்டையை நோக்கி எடப்பாடியார்!
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் பால்குடம் ஊர்வலம்..!
இன்றைய "நமது அம்மா" (09-02-26) நாளேட்டு செய்தியில் @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம் #💪தி.மு.க
காசிமேடு திருகைலாயநாதர் கோவில் கும்பாபிஷேகம்:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பங்கேற்பு!
https://dhunt.in/13ocXU @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #✍️தமிழ் மன்றம் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ் #திமுக
ஆர்.கே.நகரில் புரட்சித்தலைவி அம்மாவின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 கிறிஸ்துவ சபை ஊழியர்களுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!
சென்னை, பிப். 08:
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆர்.கே.நகர் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, ஆர்.கே.நகர் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை மற்றும் புதுவண்ணாரப்பேட்டை பிரஸ் குவாட்டர்ஸ் பகுதியில் உள்ள கிறிஸ்துவ திருச்சபைகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழகம் செழிக்கவும், கழகம் மேலோங்கவும் வேண்டி சபையினருடன் இணைந்து பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, திருச்சபையைச் சேர்ந்த 350 ஊழிய குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ‘அன்பு பெட்டகத்தை’ மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்.எஸ். ராஜேஷ், "ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே வாழ்ந்தவர் அம்மா அவர்கள். அவரது வழியில் மக்கள் பணியாற்றும் அண்ணா தி.மு.க-வுக்கு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் ஆதரவளித்து, மீண்டும் ஒரு நல்லாட்சி அமைய ஒத்துழைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் எம்.என். சீனிவாசபாலாஜி, சந்தனசிவா, எல்.எஸ். மகேஷ்குமார், வி.எஸ்.புருஷோத்தமன், சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி, கே.பி.கர்ணன், லிங்கேசன், எல்.விஜி, எம். ஜெய்சங்கர், மதிசீனிவாசன், வினோத், வீரா, சதீஷ் பரணி, நிர்மல், இளவரசன், டி.பிரபாகரன், நிர்மல்குமார், வக்கீல் சரவணகுமார், புலிமுருகன், பி.எம். குட்டி, மெக்கானிக் செல்வம், ஜீவிதா, உமாதேவி, பலர் இருந்தனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #✍️தமிழ் மன்றம்
"2026-ல் 220+ தொகுதிகளில் வெற்றி: கோட்டையை நோக்கி எடப்பாடியார்!" "தண்டையார்பேட்டையில் மகளிர் அணி சார்பில் 210 பெண்கள் பால்குடம் ஏந்தி பிரார்த்தனை ஊர்வலம்:" மற்றும் 500 பேருக்கு அன்னதானம்"
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது..!
சென்னை, பிப். 06: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி 220-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அசாத்திய வெற்றி பெற்று, எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏற வேண்டி, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் மற்றும் மாவட்ட மகளிரணி சார்பில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
அரசியல் இலக்கும் ஆன்மீக பலமும் தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், மக்களின் நலன் காக்கும் "தன்னிறைவான ஆட்சி" மீண்டும் மலர வேண்டும் என்பதே தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதனை முன்னிறுத்தி, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் பக்தி உணர்வுடன் கூடிய இந்த அரசியல் வெற்றிக்கான பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.
கழக மகளிர் அணி செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான நாகரத்தினம் ரவிராஜன் ஏற்பாட்டில், 210-க்கும் மேற்பட்ட மகளிர் மஞ்சள் மற்றும் நீல நிற உடைகளில் அணிவகுத்தனர். பூ மாலையுடன் பால்குடம் ஏந்தி அவர்கள் ஊர்வலமாக வந்த காட்சி, தண்டையார்பேட்டை பகுதியை அ.தி.மு.க-வின் கோட்டையாக மாற்றிக் காட்டியது.
சேனியம்மன் முதல் அங்காளம்மன் வரை பழமை வாய்ந்த சேனியம்மன் திருக்கோவிலில் வழிபாடு தொடங்கி, தண்டையார்பேட்டை மணிகூண்டு வழியாகச் சென்ற ஊர்வலம், அங்காளம்மன் திருக்கோவிலைச் சென்றடைந்தது. அங்கு அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்யப்பட்டு, "எடப்பாடியார் தலைமையில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைய வேண்டும்" என உருக்கமாக நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு 500-பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைப் பகுதி செயலாளர்கள் எம்.என்.சீனிவாசபாலாஜி, ஆர்.நித்தியானந்தம், சந்தனசிவா ஆகியோர் முன்னின்று திறம்பட ஒருங்கிணைத்தனர். நிகழ்வின் போது தொண்டர்கள் எழுப்பிய "வெற்றி நிச்சயம், இது எடப்பாடியார் லட்சியம்" என்ற முழக்கங்கள் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தன.
நிகழ்ச்சியில் நேதாஜி கணேசன், ஸ்டீல் ரவிசந்திரன், டி.டீ.ஜனார்த்தனன், ஐயப்பா எஸ்.வெங்கடேசன், ஜெஸ்டின் பிரேம்குமார், சா. முகேஷ், ஒ.ஏ.ரவிராஜன், இரா.முரளிமுருகன், லயன் ஈ.சண்முகவினாயகம், எஸ்.சுயம்பு, எஸ்.ஆர்.அன்பு, எம். சீனிவாசன், எல்.எஸ். மகேஷ்குமார், வி.எஸ்.புருஷோத்தமன், சிவகுமார், கர்ணன், மக்கள் கே.மகேந்திரன், பி.கோவிந்தராஜ், நரேஷ்குமார், ஏ.கே.சந்திரசேகர், மரக்கடை விஜி, இபி.சேகர், வழக்கறிஞர் ஏ.வினாயகமூர்த்தி, நாகூர்மீரான், ஆர்.வேல்முருகன்,
லிங்கேசன் கே.லோகு, அருண்பிரசாத், கே.எஸ். மூர்த்தி, டி.பிரபாகரன், நிர்மல்குமார், இளவரசன், ஏ.ஆர்.ஏழுமலை, குமார்ஜமுனா,
அ.செல்வராஜ், பெரம்பூர் சேகர் லயன் ஜி.குமார், வி. பொன்முடி, சியான் செந்தில்,
எஸ்.முனுசாமி, செல்வி, எஸ்.எம்.கவிபாரதி, பா.சந்தோஷ், நமசிவாயம், கடல்ராஜன், தாமு (எ) தாமோதரன், உள்ளிட்ட பகுதி வட்ட பிற அணி செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வட்ட நிர்வாகிகள், பாக பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @மேலச்சேரி அதிமுக விஜய் @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #✍️தமிழ் மன்றம் #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க
"சாலையோரப் பூங்காவா, மரணக்குழியா?"
"ரூ.35 லட்சம் ஊழலை அம்பலப்படுத்தினால் என் மீது பொய் வழக்கு பதிவு செய்வது சரியா"
"மக்களின் உயிரை காப்பாதை விட தி.மு.க.வுக்கு கமிஷன் முக்கியமா?"
ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆவேசம்..!
இன்றைய (06-02-2026) "நமது அம்மா" நாளேட்டு செய்தியில்..!! @BABU AIADMK @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக @அதிமுக தொண்டன் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #✍️தமிழ் மன்றம்
"மின்கட்டணம் முதல் மளிகைப் பொருட்கள் வரை எவ்வளவு?" புள்ளி விவரங்களுடன் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பிரச்சாரம்!"
"விடியா ஆட்சியில் இவ்வளவு நஷ்டமா?"
"அதிர்ச்சியடைந்த மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என உறுதி..!"
இன்றைய (05-02-2026) "நமது அம்மா" நாளேட்டு செய்தியில்..!! @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #✍️தமிழ் மன்றம் #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ்
"சாலையோரப் பூங்காவா? மரணக் குழியா? - பக்கிங்காம் கால்வாய் ஓரம் 35 லட்ச ரூபாய் ஊழல்!" –
ஆதாரங்களுடன் திமுக அரசை அதிரவைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு!
சென்னை, பிப். 04:
சென்னை ஆர்.கே.நகர், கொடுங்கையூர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி அமைக்கப்பட்ட புதிய சாலையோரப் பூங்கா, திறக்கப்பட்ட சில நாட்களிலேயே சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதை அதிமுக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் இன்று ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.
தன் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர் (FIR) குறித்து, சம்பந்தப்பட்ட சாலையோரப் பூங்கா வளாகத்திலேயே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.ராஜேஷ்..
இந்தப் பூங்கா பக்கிங்காம் கால்வாயை ஒட்டியே மிகக் குறுகிய இடத்தில் அழகுப்படுத்துவதாக கூறும் மாநகராட்சி ஆபத்தான இடத்தில் கட்டி அமைக்கப்பட்டது ஏன்? பூங்காவின் இரும்பு வேலிகள் பலமின்றி ஆடுவதால், பூங்காவிற்கு வரும் முதியவர்களும் குழந்தைகளும் தவறுதலாக கால்வாய்க்குள் விழும் அபாயம் நிலவுகிறது.
"35 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வேலியைத் தொட்டாலே ஆடுகிறது. தரையில் விரிக்கப்பட்ட புற்கள் வேர் பிடிக்காமல் பாய் போலக் கழன்று வருகிறது. இதுதான் திராவிட மாடல் கட்டுமானமா?" என அவர் கேள்வி எழுப்பினார்.
நுழைவாயில் தூண்கள் மற்றும் பூங்காவின் தளம் கைகளால் தட்டினாலே பெயர்ந்து விழுகிறது.
பொய் வழக்கு குறித்து ஆர்.எஸ். ராஜேஷ் ஆவேசம்:
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பக்கிங்காம் கால்வாய் ஓரம் இருப்பதால் கூடுதல் பாதுகாப்புடன் கட்டப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சாலையோரப் பூங்கா, கமிஷன் ஊழலால் இன்று உயிருக்கே ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மெகா ஊழலை நான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால், என் மீது திமுக அரசு பொய் வழக்குப் போட்டுள்ளது. எப்.ஐ.ஆர்-களுக்கு நான் அஞ்சமாட்டேன்; மக்களின் வரிப்பணத்தை சுருட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அதிமுக ஓயாது," எனத் தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கை:
சாலையோரம் மற்றும் கால்வாய் ஒட்டியுள்ள பகுதி என்பதால், உடனடியாக தரமான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். @aiadmk @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக
#RKNagar #BuckinghamCanal #SafetyHazard #ADMK #RSRajesh #DMK_Corruption #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #✍️தமிழ் மன்றம் #💪தி.மு.க
"புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆட்சியயில் கல்வித்தரம் வளர்ச்சி:"
"அ.தி.மு.க. ஆட்சி செய்த கல்விப்பணிகளை மாணவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்:"
வழிகாட்டுதல் முகாமில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேச்சு..!
இன்றைய (04-02-2026) "நமது அம்மா" நாளேட்டு செய்தியில்..!! @BABU AIADMK @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @அதிமுக தொண்டன் #💪தி.மு.க #✍️தமிழ் மன்றம் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ்
"ஆளும் தி.மு.க.வினரின் ஊழல் வெட்டவெளிச்சமானது:"
தரம் குறைந்த பூங்காவைச் சுட்டிக்காட்டிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மீது திமுக அரசு - 'பொய் வழக்கு பதிவு'
வடசென்னை அதிமுக கடும் கண்டனம்!
சென்னை, பிப்ரவரி 03, 2026:
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் மாநகராட்சி பூங்காவின் அவல நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மீது, பொருட்களைச் சேதப்படுத்தியதாகக் கூறி திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூங்காவில் ஆய்வை மேற்கொண்ட ஆர்.எஸ். ராஜேஷ், அங்கிருந்த தரமற்ற கட்டுமானங்களை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் சத்யன் என்பவர் கொடுத்த புகாரில்:
ஆர்.எஸ். ராஜேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த மின் விளக்குகள், இரும்பு நுழைவு வாயில் புற்கள் மற்றும் கதவுகளைச் சேதப்படுத்தினர்.
* அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தனர்.
* என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கொடுங்கையூர் போலீசார் ஆர்.எஸ். ராஜேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக-வின் பதில்: "குற்றத்தை மறைக்க பொய் வழக்கு"
இது குறித்து அதிமுக தரப்பினர் கூறுகையில்:
"35 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டி, தரம் இல்லாத பூங்காவைத் திறந்ததை ஆதாரத்துடன் பிடித்துவிட்டார்கள் என்ற பயத்தில் திமுக அரசு இந்த பொய் வழக்கை ஏவியுள்ளது. வீடியோவில் உள்ளே இருக்கும் சிறுவர்கள் கூட அந்தப் பொருட்கள் எப்படித் தானாகவே உடைகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளனர். தன் தவறை மறைக்க ஒரு அரசு அதிகாரியை விட்டுப் புகார் கொடுக்க வைப்பது ஜனநாயகப் படுகொலை."
சம்பவ இடத்தின் தற்போதைய நிலை:
2026 ஜனவரி 29-ஆம் தேதி திறக்கப்பட்ட இந்தப் பூங்கா, தற்போது பெரும் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது. "பூங்காவைச் சீரமைக்க வேண்டிய மாநகராட்சி, சீரமைக்கச் சொன்னவர்கள் மீது வழக்குப் போடுவது வேடிக்கையாக உள்ளது" எனப் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கை அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது, ஆர்.எஸ். ராஜேஷ் அவர்கள் வெளியிட்ட அந்த "நேரடி வீடியோ ஆதாரம்" (Live Evidence) மிக முக்கியமானது. வீடியோவில் அவர் பொருட்களைச் சேதப்படுத்துவது போன்ற காட்சிகள் இல்லை; மாறாக, தொட்டாலே உடையும் நிலையில் இருக்கும் கட்டுமானங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
#RK Nagar #ADMK #ChennaiCorporation #CorruptionExposure #RS_Rajesh @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #📺அரசியல் 360🔴 #✍️தமிழ் மன்றம் #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க












