*வருகிற 13-ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்*
*காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.*
*கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.*
#அரசியல் #தெரிந்து கொள்வோம் #தேமுதிக
தில்லி கார் வெடிப்பு 10 பேர் பலி #தெரிந்து கொள்வோம் #குற்றம் #பலி #துயரம்
இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்க டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்.
வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில் எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும்.
எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் திடீரென காலமானார்.
"நேற்று, நான் அவருடன் பேசிக்
கொண்டிருந்தேன், நல்லாத்தானே இருந்தார்! அவர் ஏன் திடீரென்று இறந்தார்?"
காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச் செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும்.
நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது.
"மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்?
நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும்,
மேலும் இது ரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது.
மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது,
அவை யாதெனில்?:
1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள்.
2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்;
3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது,
உங்கள் இதயம் பலவீனமடையாது,
இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம்.
#தெரிந்து கொள்வோம் #மருத்துவம்
தோல்வி என்பது
உன்னைத் தூங்க வைக்கும்
தாலாட்டு அல்ல
நீ நிமிர்ந்து நிற்பதற்கான
"தேசிய கீதம்"
#சிந்தனைக்கு #வாழ்க்கை #தெரிந்து கொள்வோம்
உறவுகள்
வார்த்தைகளை
நெய்யத் தெரிந்தால்
உறவுகளை
உடுத்திக் கொள்ளலாம்.
#தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு #வாழ்க்கை
வாழ்க்கை
_*பிடிக்காததை முடிந்தவரை மறக்க முயலுங்கள்*_
_*"நிம்மதி" கிடைக்கும்*_
_*இரண்டுமே வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.*_
_செவி கொடுக்க மனம்_ _இல்லாதவர்களிடம்._
_குரல் கொடுத்து என்ன பயன்._
_*மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல.*_
_*தடைகளை வெற்றி கொள்ளும் வாழ்க்கை.*_
#தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு #வாழ்க்கை #வாழ்க்கை
மகிழ்ச்சி
*ஒவ்வொரு முறை*_
_*நீங்கள் சிரிக்கும்*_ _*போது உங்கள்*_ _*இருதயம் ஒட்டடை அடிக்கப்படுகிறது.*_ _*வாழ்வின் மீது*_ _*இயற்கை தெளித்த வாசனைத் தைலம் தான் சிரிப்பு.*_
_மரணத்தை தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு._
_சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்குச் சமம்._
_*பறவைக்கு அழகு சிறகு,*_
_*மனிதருக்கு அழகு சிரிப்பு,*_
_*பிடித்ததை அடிக்கடி நினைக்கப் பழகுங்கள்*_
_*"மகிழ்ச்சி" கிடைக்கும்.*
#தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு
*வரலாற்றில் இன்று*
அக்டோபர் 31
475 : ரோமுலஸ் அகஸ்டுலஸ் மேற்கு ரோமப் பேரரசராக முடி சூடினார்.
683 : மெக்கா முற்றுகையின் போது காபா தீப்பற்றி அழிந்தது.
802 : பைசண்டைன் பேரரசி ஐரீன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
நிதி அமைச்சர் நிகபோரஸ் பேரரசராக நியமிக்கப்பட்டார்.
1517 : கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கம் :- மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை ஜெர்மனியின் விட்டன்பர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
1754 : நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
1803 : ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியின் படைகள் மீது முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தின.
இதில் பலர் கொல்லப்பட்டனர்.
1837 : மிசிசிப்பியில் இரு படகு மோதிய விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர்.
1863 : நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரிட்டிஷ் படைகள் வைக்காட்டொ என்ற இடத்தில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது.
1864 : நெவாடா அமெரிக்காவின் 36 வது மாநிலமாக இணைந்தது.
1876 : தென்னிந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் இரண்டு லட்சம் பேர்வரை உயிரிழந்தனர்.
1913 : அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1918 : முதலாம் உலகப் போர்:- ஆஸ்திரியா-ஹங்கேரி 1867 -ம் ஆண்டு ஒப்பந்தம் கைவிடப்பட்டு ஹங்கேரி முழுமையான விடுதலை அடைந்தது.
அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 21 ஆயிரம் பேர் வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்தனர்.
1931 : தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் சென்னையில் திரையிடப்பட்டது.
1937 : ஸ்பெயின் அரசாங்கம் வலென்சியாவிலிருந்து பார்சிலோனாவுக்கு இடம்பெயர்ந்தது.
1940 : இரண்டாம் உலகப்போர் :- பிரிட்டன் போர் முடிவுற்றது.
1941: இரண்டாம் உலகப் போர்:- ஐஸ்லாந்து அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனிப் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
இங்கிலாந்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியதில் 49 பேர் உயிரிழந்தனர்.
1954 : அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கு எதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1956 : சூயஸ் நெருக்கடி :- பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சூயஸ் கால்வாயை திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
1963 : இன்டியானாவில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 74 பேர் பலியானார்கள்.
1968 : வியட்நாம் போர் :- பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து வடக்கு வியட்நாம் மீதான அனைத்து தாக்குதல்களையும் நவம்பர் 01 லிருந்து நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் அறிவித்தார்.
1969 : வால்மார்ட் தொடங்கப்பட்டது.
1979 : மெக்ஸிகோ நகரில் வெஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விழுந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.
1984 : இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் டெல்லியில் இடம்பெற்ற கலவரத்தில் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக பதவியேற்றார்.
1991: ஜப்பானில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டு 800 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தபால் தலை வெளியிடப்பட்டது.
பெங்களூரில் நடந்த ரயில் விபத்தில் 36 பேர் இறந்தனர்.
1994 : அமெரிக்கன் ஈகிள் விமானம் இன்டியானாவின்
ரோஸ்லான் அருகே விபத்துக்குள்ளானதில் விமானத்திலிருந்த 68 பேரும் உயிரிழந்தனர்.
1996 : பிரேஸிலின் விமானம் ஒன்று சாவோ பாலோவில் விழுந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
1999 : எகிப்து விமானம் ஒன்று மாசாசூசெட்ஸில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 217 பேரும் உயிரிழந்தனர்.
ஜெசி மார்டின் 11 மாதங்கள் பாய்மரக் கப்பலில் தனியே இடைவிடாது உலகை சுற்றிவந்து மெல்போர்ன் திரும்பினார்.
2000 : சிங்கப்பூர் விமானம் தைவானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு அங்கோலாவில் தனியார் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
2003 : 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதமர் மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.
இவர் 2018 ல் மீண்டும் தனது 92 வயதில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 : உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.
2015 : மெட்ரோஜெட் விமானத்தை வடக்கு சினாயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 224 பேர் கொல்லப்பட்டனர்.
2018 : குஜராத் மாநிலத்தில் வல்லபாய் பட்டேல் சிலை திறந்து வைக்கப்பட்டது.
#தெரிந்து கொள்வோம் #வரலாறு #உலகம் #போர்
*31 அக்டோபர் 1931*
முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியான தினம் இன்று.
இது தமிழின் முதல் பேசும்படம் என்று சொல்லப்பட்டாலும் தமிழில் வெளியான தனித்தமிழ் பேசும் படமல்ல; தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசிய பாடிய படமும் கூட.
இப்படத்தை இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் சார்பாக தயாரித்தவர் இந்தியாவின் முதல் பேசும்படமான 'ஆலம் ஆரா'வைத் தயாரித்திருந்த பூனாவைச் சேர்ந்த அர்தேஷிர் இரானி என்பவராவார்.
'காளிதாஸ்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் அன்றைக்கு தென்னிந்திய நாடக மேடைகளில் புகழ் பெற்றிருந்த டி.பி.ராஜலட்சுமி ஆவார். கதையின் நாயகனாக நடித்திருந்தவர் வெங்கடேசன். இப்படத்தில் துணை நடிகர்களுள் ஒருவராக நடித்திருந்தவர் பின்னாளில் திரையுலக ஜாம்பவனாகக் கருதப்பட்ட L.V.பிரசாத் அவர்கள்.
1931 அக்டோபர் 31 அன்று சென்னை கினிமா சென்ட்ரல் (பின்னாளில் ஸ்ரீமுருகன்) திரையரங்கில் வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், எட்டாயிரம் ரூபாய் செலவில், எட்டு நாளில் தயாரிக்கப்பட்டு, 75000 ரூபாய் வசூலித்ததாக தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் அறந்தை நாராயணன்.
H.M.ரெட்டி இயக்கியிருந்த இவ்வெற்றிப் படத்தின் மூலம் தமிழ்த்திரையின் முதல் நாயகியாக அறிமுகமான T.P.ராஜலெட்சுமி அவர்கள் 'சினிமாராணி', 'டாக்கி ராணி' என்கிற பட்டங்களையெல்லாம் பின்னாளில் பெற்றார் என்பது வரலாறு.
#தெரிந்து கொள்வோம் #சினிமா #வரலாறு
*அக்டோபர் 31, 1962*
வால்மார்ட் அங்காடிகள் நிறுவனமான தினம் இன்று.
1962ல் அர்கான்சாவில் ரோஜெர்ஸ் என்ற இடத்தில் வால்மார்ட்டின் நிறுவனர் சாம் வால்டன் தனது முதலாவது தள்ளுபடி அங்காடியைத் திறந்தார். அதிலிருந்து தொடங்குகிறது வால்மார்ட்டின் வளர்ச்சிக் கதை.
வால்மார்ட் விமான நிறுவனத்தின் முதலாவது முழுநேர விமான ஓட்டி சாம் மற்றும் பட் வால்டனுக்கு உதவிக்கு வந்தார். அவருடைய உதவியுடன் அர்கான்சாசுக்கு வெளியே சிகேஸ்டன், மோ மற்றும் கிலாரிமோர், ஒக்லா ஆகிய இடங்களில் முதலாவது அங்காடிகளைத் திறந்தார்கள்.
1969 அக்டோபர் 31 அன்று அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக வால்மார்ட் அங்காடிகள் என்ற பெயரில் பெருங்குழுமமாக அறிவிக்கப்பட்டது.
#தெரிந்து கொள்வோம் #வணிகம்












