https://www.facebook.com/share/r/18qpx4godz/ #bakthi paravasam
https://www.facebook.com/share/v/1Cvh9vePkE/ #bakthi paadal.
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்) திருக்கோயில்,*
*மூலவர் : மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர்.*
*உற்சவர் : சோபுரநாதர்.*
*அம்மன்/தாயார் : தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி.*
*திருச்சோபுரம்-608 801,*
*தியாகவல்லி,*
*கடலூர் மாவட்டம்.*
*காலை 8.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*
*+91-9245113456, 97905 24054.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*
*★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★*
*சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝*
*!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!*
*சிறப்பு : சிவராத்திரி, திருக் கார்த்திகை, அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர இசை எழுகிறது. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 217 வது தேவாரத்தலம் ஆகும்.*
*பிரகாரத்தில் சுப்பிரமணியர், கஜலட்சுமி வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவனசக்கரவர்த்தி, அவர் மனைவி வழிபட்ட லிங்கம். பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சன்னதிகள் உள்ளன.*
*இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.*
*திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*
*மஞ்சள் குங்கும வழிபாடு : இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. மஞ்சளும், குங்குமமும் அம்பாள் வழிபாட்டிற்கு உரியது. ஆனால், திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.*
*அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதாகவும், அதன் காரணமாக சிவலிங்கத்துக்கு மஞ்சள், குங்கும வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம். இதனால், சுவாமிக்கு "மங்கள புரீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவளை "சத்யாயதாட்சி என்கின்றனர்.*
*தெட்சிணாமூர்த்தி சிறப்பு: சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.*
*இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் ஞானம், அமைதி மற்றும் இசைக்கு அதிபதியாக இருப்பதாலும், மூலவர் சோபுரநாதர் மங்களம் தருபவராக இருப்பதாலும் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.*
*புதைந்த கோயில் : வங்கக்கடலின் கரையில் அமைந்த கோயில் இது கடலே இத்தலத்தின் தீர்த்தம் ஆகும் மூலஸ்தானத்தில் சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.*
*திருஞானசம்பந்தர் சுவாமியை வணங்கி, பதிகம் பாடியுள்ளார். கோஷ்டத்தின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு. பிரம்மா இருவரும் அவரை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது. பிரகாரத்தில் கண்ணப்பநாயனார் காட்சியளிக்கிறார். இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற் காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின் ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர்.*
*கயிலாயத்தில் சிவன், அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி, கடல் மணலால் லிங்கம் அமைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை.*
*சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர், அருகிலிருந்த மூலிகை செடிகளை பறித்து, அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் லிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த லிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.*
*இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர இசை எழுகிறது.*
*🌹★★★அன்புடன்★★★🌹*
*சோழ.அர.வானவரம்பன்*.
*+918072055052*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
#innraya SINTHANAY சிந்தனை.*.( 16.05.2026)..
…………………………………………….........
*''சாதனையாளராகத் திகழுங்கள்...''*
......................................................
நாம் இந்த உலகில் ஒரே ஒருமுறை தான் வாழ்கிறோம் அல்லது வாழப் போகிறோம்.
இந்த உலகில் மூன்று வகைப்பட்ட மனிதர்கள் உள்ளனர்..
முதல் வகை மனிதர்கள் - வாய்ச்சொல் வீரர்கள்..
இரண்டாவது வகை மனிதர்கள் - செயல் வீரர்கள்..
மூன்றாவது வகை மனிதர்கள் - சாதைனையாளர்கள்..
முதல் வகை மனிதர்கள் - வாய்ச்சொல் வீரர்கள்..
...................................................
இந்த முதல் வகையை சேர்ந்த வாய்ச்சொல் வீரர்கள், உலகில் நடந்த மற்றும் நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாதவர்கள்.
இன்றைய உலக மக்கள் தொகையில், 99 சதவீதம் பேர் வாய்ச் சொல் வீரர்கள். இவர்கள் உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டு இருப்பவைகளைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள்.
இத்தகைய நிலையில் உள்ள 99 சதவீத மக்கள் சமுதாயத்தில் சாதாரண மனிதர்களாக வாழ்க்கையைத் தொடங்கி, சாதாரண மனிதர்களாக வாழ்ந்து முடித்து விடுகின்றனர்.
இத்தகைய வாய்ச்சொல் வீரர்கள், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் வேலை அல்லது தொழில் உண்டு என்று மனம் எல்லை கட்டிய நிலையில் மிகக் குறுகிய வட்டத்தில் வாழ்பவர்கள்.
இந்த வாய்ச்சொல் வீரர்கள் தனக்கு என்று மிகச் சிறிய சுயநல உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு,அந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.
இத்தகைய வாய்ச்சொல் வீரர்கள்,கிணற்றுத் தவளையாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.
இரண்டாவது வகை மனிதர்கள் - செயல் வீரர்கள்..
....................................................
இன்றைய சமுதாயத்தில் உள்ள 100 சதவீத மக்களில் வாய்ச்சொல் வீரர்களான 99 சதவீத மக்கள் போக, மீதம் உள்ள ஒரு சதவீத மக்களே செயல் மற்றும் சாதனைகள் செய்ய மிஞ்சுபவர்கள்.
அந்த 1 சதவீத மாறுபட்ட மக்களில்,0.999 சதவீத மக்கள் தான், சமுதாய அமைப்பில் வரும் வாய்ப்புகள் மற்றும் உலக நிகழ்வுகளை மிக உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.
இத்தகைய செயல் வீரர்கள் உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டு இருப்பவைகளைப் பற்றிய விழிப்பு உணர்ச்சி உள்ளவர்கள்.
மூன்றாவது வகை மனிதர்கள்.. சாதனையாளர்கள்
.....................................................
இந்த உலகில் உள்ள வாய்ப்புகளைக் கூர்ந்து நோக்கும் 1 சதவீத மக்களில், 0.999 சதவீத விழிப்புணர்ச்சி உள்ள மக்கள் போக, மீதம் உள்ளவர்கள் 0.0001 சதவீத மக்கள் மட்டுமே. அவர்கள் தான் தங்களது உயரிய வாழ்க்கைக் கனவை தங்களுடைய வாழ்நாளில் நனவாக்குகின்றனர்.
இத்தகைய மூன்றாவது வகை மனிதர்களான சாதனையாளர்கள்இந்த உலகில் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாகப் பார்ப்பதுடன்,
வரும் காலங்களில் நிகழ இருக்கும் மாற்றத்தை தொலை நோக்குப் பார்வை கொண்டு அகக் கண்ணில் பார்ப்பவர்கள்.
இந்த மூன்றாவது வகையை சேர்ந்த சாதனையாளர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர்கள்.
இத்தகைய சாதனையாளர்கள், அடுத்தவர்கள் சிந்திக்கும் முன் வேகமாக சிந்தித்து சமுதாய மறுமலர்ச்சி மற்றும் சாதனைகள் பல நிகழ்த்துபவர்கள்.
இந்த மூன்றாவது வகை மனிதர்கள் தான் இந்த உலகில் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவோ, மற்றும் செயல் வீரர்களாகவோ மட்டும் இருந்து விடாமல், சாதனை வீரர்களாக, உருமாற்றம் அடைந்து சாதனைகள் பல செய்து சமுதாயக் காவலாளராக இருக்கிறார்கள்..
இந்த உலகில் உள்ள மக்களில் 0.0001 சதவீத மக்கள் தான் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள்.
சுருங்கச் சொன்னால் பத்தாயிரத்தில் ஒருவர் தான் சாதனையாளராக இந்த உலகத்தில் உருப்பெறுகிறார்கள்.
கனவு கண்டவர்கள், பகல் கனவு கண்டவர்கள், தங்கள் கனவில் நினைத்ததை, உலகில் மாற்றி அமைத்ததின் மூலம் சாதனையாளர்களாக பரிணமிக்கிறார்கள்.
இத்தகைய மூன்றாவது வகை சாதனை மனிதர்கள் தான், இன்றைய உலகிற்கு மிகுந்த அளவில் தேவைப்படுகின்றார்கள்.
*ஆம்.,நண்பர்களே..,*
தெளிவான முடிவு எடுங்கள். அதை செயல்படுத்துங்கள்.... சாதனை படையுங்கள்..
வாழ்வில் எடுத்த தெளிவான முடிவில் உறுதியைச் சேர்த்து அதன்வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்..
இப்போ.,நீங்கள் சொல்லுங்கள்..,!!!
இந்த கிடைத்த வாய்ப்பைக் கொண்டு வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ளப் போகிறீர்கள்..?
வாய்ச் சொல் வீரராக இருக்கப் போகிறீர்களா..?
செயல்வீரராக இருக்கப் போகிறீர்களா..? ..?
சாதனை வீரராக இருக்கப் போகிறீர்களா.. ?
( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி.....)💐💐💐🙏🏻🌹🌹🌹*
#sinthanay kalam. களம்.
விடாமுயற்சியைப் பற்றி விவாதிக்கும் போது ஒரு கருத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.விடா முயற்சி செய்யும் போது அதற்கு முன்பே நமக்கு ஏற்பட்ட தோல்விகளின் மூலம் பாடம் கற்க வேண்டும் .
ஒரு நண்பர் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப்பகுதியில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார் , அவருடைய வியாபாரம் சரியாக நடைபெறாமல் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது ,
விடா முயற்சி செய்கிறேன் என்று நினைத்த நண்பர் அடுத்த நாள் முதல் அந்த மலையின் உச்சியில் ஐஸ் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது .பிறகு அங்கே மீன் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டமே ஏற்பட்டது .
நண்பர்களே அந்த நண்பர் ஏற்பட்ட தோல்வியில் இருந்து சரியாகப் பாடம் கற்கவில்லை. அவர் செய்ய வேண்டியது என்னவென்றால், முதலில் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வந்து தன்னுடைய தொழிலை துவங்கி இருக்க வேண்டும் .இந்த நண்பரைப் போலவே வாழ்க்கையில் நம்மில் சிலர் ஏற்பட்ட தோல்வியில் சரியாகப் பாடம் கற்காமல் விடா முயற்சி செய்கிறேன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று விரக்தி அடைகிறோம் .
உங்களுடன் படித்த ஒருவர் வெற்றி அடைகிறார் என்றால் உங்களாலும் வெற்றி அடைய முடியும்.உங்களுடன் பணிபுரியும் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் உங்களாலும் முடியும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் துறையில் ஒருவர் பலகோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்றால் உங்களாலும் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான் அவர் தொழில் செய்யும் முறையைக் கற்க வேண்டும். அவரை விட சிறப்பாக செய்யும் முறையை ஆராய்ந்து விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி உங்களுக்கே . 😊😊😊
#paraattuhall kollvom. மனமும் பாராட்டுதலுக்காக ஏங்குகின்றது என்றால் அது முற்றிலும் உண்மையே
சிலர் பணத்திற்காக வேலை செய்வார்கள்
ஆனால் பாராட்டுக்காக உயிரையே விடுவார்கள்
பாராட்டுதல் நல்ல நட்பை ஏற்படுத்தும்
நட்பைத் தொடர வைக்கும்
நட்பை மகிச்சியுற வைக்கும்
நம்மையும் மகிழ்ச்சியுற்று இருக்க வைக்கும்
பாராட்டுதலில் இரு வகை உண்டு
1. போற்றிப் பாராட்டுதல்
2. நன்றி பாராட்டுதல்
இவ்விரெண்டு பாராட்டும் குணமும் நம்மிடம் இருந்தால்
நட்பில் நன்மை மட்டும் நிலவும்
பாராட்டுதலுக்கு ஏதோவொன்றை சாதித்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை
ஒருவருடைய பெயரைக் கேட்டுக் கூட நல்ல அருமையான பெயர் என்று பாராட்டலாமே
மிகவும் எளிய உடை அணிந்திருந்தால் கூட
இது தான் மிகவும் பொறுத்தமாக இருக்கிறது என்று பாராட்டலாமே
ஒவ்வொரு சூழலையும் தந்த இயற்கை அன்னைக்கு நன்றி பாராட்டலாமே
இயற்கையோடு இணையச் செய்த நண்பர்களுக்கு நன்றி பாராட்டி நட்பைப் போற்றிக் காத்துக் கொள்ளலாமே
சின்னச் சின்ன விஷயங்களில் தானே பெரிய பெரிய சந்தோஷம் இருக்கிறது.
இதை உணர்ந்து தெளிந்தால்
எந்நாளும் கொண்டாட்டமும் குதூகலமும் தானே நீடித்து நிலைக்கும்
பாராட்ட அனைவராலும் முடியும்
அதை யாரும் வேண்டாம் என்று கூற மாட்டார்கள்
நட்பென்னும் புனிதத்துவத்தை பாராட்டியே போற்றிக் காப்போம்
எல்லோரையும் பாராட்டுவோம், அன்பைப் பகிர்வோம்
வாழ்கையை ஆனந்தமாகவே அனுபவிப்போம்
வாழ்க வளமுடன்.
#innraya SINTHANAY சிந்தனை*
🌷16.05.2026🌷
வாழ்க்கை என்பது ஒரு வித்தியாசமான தேர்வு...!!!
அதில் ஓவ்வொருவருக்கும் தனித்தனிக் கேள்வித்தாள்!!!
அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், அடுத்தவர்களைப் பார்த்து காப்பியடித்து தங்கள் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள்..!!!
மனக்கசப்புகளின் போது மனம் விட்டுப் பேச மட்டும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் உண்மையான உறவுகள் பல பிரிய வாய்ப்பு இருந்திருக்காது.
ரத்தத்தினால் பிணைக்கப்பட்ட உறவுகளைக் கூட பிரித்தெடுக்கும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் பணம்...
அத்தகையப் பணத்துக்கு பணியாமல் உங்கள் மனதுக்குப் பலம் சேர்க்கும் உறவுகளை சம்பாதியுங்கள்... அதுவே உங்களின் உண்மையான சொத்தாகும்..
புரிதல் இல்லாத வாழ்வும்…
புரிதல் இல்லாத நட்பும்… புரிதல் இல்லாத உறவும்…
புரிதல் இல்லாத அறிவும்…
நிலை பெறுவதில்லை..!புரிதல் நன்று
அறிவை செயல்படுத்தினாலே புரிதலைப் பெற முடியும்..!
கடந்து போன நாட்கள் எப்படியோ... இனி வரும் நாட்கள் நிச்சயம் அழகானவை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து பார்க்கலாமே....
ஒரு மகிழ்வான எதிர்பார்ப்போடு கடக்கும் போது எந்தப் பாதையும் முள்ளாகத் தைப்பதில்லை, பாரத்தைக் கொடுப்பதில்லை...
இன்றோ நாளையோ மாற்றங்கள் வரலாம், சூழ்நிலைகள் மாறலாம்.
இன்றைய வேதனை அப்படியே நம்மோடு கடைசி வரை வந்து விடாது... அது சென்று விடும்... நிச்சயம் யாருக்குமே ஒருநாள் விடியும்... அதனை ஆவலோடு எதிர்கொண்டு அறிந்து கொண்டு அழகாக வாழலாமே....
சிந்தனைகளும், ஆலோசனைகளும் ஆயிரம் வாய்ப்புகளை உருவாக்கக் கூடும்...
ஆனால், நம்பிக்கை ஒன்று தான் அந்த இலக்கு வரை அழைத்துச் செல்லும்...
நமக்கு வாழ்வில் தோன்றும் பிரச்சனைகள் உண்மையில் பிரச்சினைகளே அல்ல...
நாம் அவற்றை எதிர்கொள்ளும் விதம் தான் உண்மையில் பெரிய பிரச்சினையாகி விடுகிறது...
சிந்தித்து செயலாற்றுங்கள்...
வாழ்த்துகள்...
வாழ்க வளமுடன்...
😊😊😊













