சுரேஷ் குமாரா
ShareChat
click to see wallet page
@68475404
68475404
சுரேஷ் குமாரா
@68475404
𝙸 𝚕𝚘𝚟𝚎❤ 𝚂𝚑𝚊𝚛𝚎 𝙲𝚑𝚊𝚝💬
🚙Stunning Topiary Car🚓 #💘Love Quotes & Videos Sculpture!
💘Love Quotes & Videos - ShareChat
00:15
Two days after scoring 264 on the same ground, Delhi Capitals have been dismissed for the lowest total of the season 😬 Follow RCB's chase: http://srkl.in/6180B7ukw6 #🏏 கிரிக்கெட்
🏏 கிரிக்கெட் - ALL SEASONS [nPiinte Hero FINCORP DELHI CAPITALS ७५ ALLOUT ROYAL CHALLENGERS BENGALURU Vs IPL 2026 ALL SEASONS [nPiinte Hero FINCORP DELHI CAPITALS ७५ ALLOUT ROYAL CHALLENGERS BENGALURU Vs IPL 2026 - ShareChat
வீட்டில் #விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம். நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது. சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது. பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர். சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை. ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள். ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம். ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான். அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது. இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார். இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார். குறிப்பு:- மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய். மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம். வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும். விளக்கேற்றிய வீடு லட்சுமி கடாட்சம் #🤔 Unknown Facts
🤔 Unknown Facts - ShareChat
🔥 “ஸ்ட்ரோக் வருவதற்கு முன் உடல் எச்சரிக்கை கொடுக்கும்… அதை புரிஞ்சிக்கிறவர்கள்தான் உயிரை காப்பாத்திக்கிறார்கள்!” 🚨 ஒரு நொடியில் வாழ்க்கையை மாற்றக்கூடிய நோய் தான் ஸ்ட்ரோக் 🧠 ஆனா நல்ல செய்தி என்னனா… சரியான உணவு + வாழ்க்கை முறை இருந்தா இதை பெருமளவில் தடுக்க முடியும்! 💯 --- 🧠 ஸ்ட்ரோக் ஏன் வருகிறது? (சிம்பிளா புரிஞ்சிக்கலாம்) • ரத்தக் குழாய்களில் அடைப்பு • அதிக ரத்த அழுத்தம் (BP) • சர்க்கரை நோய் (Diabetes) • அதிக கொழுப்பு (Cholesterol) 👉 இவை மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும்! --- 🥗 உணவு தான் முதல் மருந்து! ✅ சாப்பிட வேண்டியவை: • கீரைகள் (முருங்கைக்கீரை, பசலை) 🥬 • நிறமுள்ள காய்கறிகள் (கேரட், பீட்ரூட்) 🥕 • பழங்கள் (ஆப்பிள், மாதுளை) 🍎 • முழு தானியங்கள் (ராகி, சோளம், கேழ்வரகு) 🌾 • நல்ல கொழுப்பு (பாதாம், வால்நட், நாட்டு எண்ணெய்) 🥜 • அதிக தண்ணீர் 💧 ❌ குறைப்பது / தவிர்ப்பது: • அதிக உப்பு 🧂 (BP அதிகரிக்கும்) • எண்ணெயில் வறுத்த உணவுகள் 🍟 • பாக்கெட் & ஜங்க் உணவுகள் 🥡 • அதிக சர்க்கரை 🍬 • சோடா / குளிர்பானங்கள் 🥤 --- 🏃‍♀️ வாழ்க்கை முறை தான் பாதுகாப்பு! • தினமும் குறைந்தது 30 நிமிடம் நடை / exercise 🚶‍♀️ • புகைபிடித்தல் & மது — முழுக்க தவிர்க்கவும் 🚫 • உடல் எடை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் ⚖️ • மனஅழுத்தம் குறைக்க யோகா / தியானம் 🧘‍♀️ • தினமும் 7–8 மணி நேரம் நல்ல தூக்கம் 💤 --- 🩺 மூன்று முக்கிய கண்காணிப்புகள்: ✔️ BP (ரத்த அழுத்தம்) சரியா? ✔️ சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கா? ✔️ Cholesterol அதிகமா? 👉 இவை மூன்றையும் கவனிக்காதா… ஸ்ட்ரோக் ஆபத்து அதிகம்! --- ⚠️ எச்சரிக்கை அறிகுறிகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்? • ஒரு பக்கம் கை/கால் பலவீனம் • பேச முடியாமை / சொற்கள் குழப்பம் • திடீர் பார்வை குறைவு • தலைசுற்றல் / சமநிலை இழப்பு 🚑 உடனே மருத்துவமனைக்கு போங்கள் — ஒரு நொடியும் வீணாக்காதீர்கள்! --- ❤️ முடிவில் ஒரு உண்மை: “நீங்க இன்று எடுக்கும் சிறிய நல்ல பழக்கங்கள்… நாளைக்கு ஒரு பெரிய ஆபத்திலிருந்து உங்களை காப்பாற்றும்!” 👇 இந்த post-ஐ உடனே SHARE பண்ணுங்க… ஒரே ஒரு share ஒரு குடும்பத்தை காப்பாற்றலாம்! #StrokeAwareness #HealthyLifeTamil #HealthTips #BPControl #DiabetesCare #TamilHealth #PreventionIsBetter #StayFit #NaturalLiving #Lachuverse #😇Take care Quotes📜
😇Take care Quotes📜 - பக்கவாத அறிகுறிகளை அடையாளம் காணுங்கள் Vanaa Cook ஒரு பக்கந்தில் நிடர் எச்றுஅல்வது இரe 0 கண்களிலுப்  பலலனம் Dllelj Liirjcoe OUuu' பேசுவதில் Flotflootu Quul UlTuu தனலச்சற்றல்  மிவயற்ற முகம் பகை அல்லநு காலில் கட்டுப்பாட்டை @1m ' [bCTL' எற்படுப்திடர் மரத்துப்போதல்  இழத்தல்  பக்கவாத அறிகுறிகளை அடையாளம் காணுங்கள் Vanaa Cook ஒரு பக்கந்தில் நிடர் எச்றுஅல்வது இரe 0 கண்களிலுப்  பலலனம் Dllelj Liirjcoe OUuu' பேசுவதில் Flotflootu Quul UlTuu தனலச்சற்றல்  மிவயற்ற முகம் பகை அல்லநு காலில் கட்டுப்பாட்டை @1m ' [bCTL' எற்படுப்திடர் மரத்துப்போதல்  இழத்தல் - ShareChat
18 வருஷமா ஒரு கப் கூட ஜெயிக்கல.. ஆனா 3000 கோடி லாபம் அள்ளிய ப்ரீத்தி ஜிந்தா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணி பஞ்சாப் கிங்ஸ். ரசிகர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படும் இந்த அணி, அதன் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி பலரையும் வாயடைக்கச் செய்துள்ளது. கோப்பையே ஜெயிக்காத ஒரு அணியால் எப்படி 8471 சதவீத லாபத்தை ஈட்ட முடிந்தது என்ற சுவாரஸ்ய தகவல் கிரிக்கெட் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. கடந்த 2008ல் ஐபிஎல் தொடர் அறிமுகமான போது, பஞ்சாப் அணியின் 23 சதவீத பங்குகளை வெறும் 35 கோடி ரூபாய்க்கு ப்ரீத்தி ஜிந்தா வாங்கினார். அந்த அணி இதுவரை 18 சீசன்களில் விளையாடி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. 2014 மற்றும் 2025 ஆகிய 2 சீசன்களில் மட்டுமே இறுதிப்போட்டி வரை முன்னேறியது. கேப்டன்களை அடிக்கடி மாற்றுவது, நிலையான அணி இல்லாதது போன்ற காரணங்களால் இந்த அணி ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான அணிகளில் ஒன்றாகவே முத்திரை குத்தப்பட்டுள்ளது. அந்த அணியின் வெற்றி சதவீதம் வெறும் 45 மட்டுமே. கடந்த இரு ஆண்டுகளாகவே ஸ்ரேயாஸ் ஐயர் வரவுக்கு பின் அந்த அணி முன்னணி அணியாக மாறி வருகிறது. கடந்த காலங்களில் களத்தில் அந்த அணி எவ்வளவு மோசமாக செயல்பட்டாலும், வியாபார ரீதியாக ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. தற்போது ஐபிஎல் அணிகளின் மதிப்பு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்போதைய ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 15000 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் 23 சதவீத பங்குகளை வைத்துள்ள ப்ரீத்தி ஜிந்தாவின் தற்போதைய சொத்து மதிப்பு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2008ல் அவர் முதலீடு செய்த 35 கோடி ரூபாய், 18 ஆண்டுகளில் சுமார் 8471 சதவீத அபரிமிதமான லாபத்தை கொடுத்துள்ளது. கோப்பையை வெல்லாவிட்டாலும் ஐபிஎல் அணிகள் எப்படி லாபம் சம்பாதிக்கின்றன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஐபிஎல் அணிகளுக்கான பிரதான வருமானம் என்பது அவர்கள் பெறும் வெற்றியை மட்டுமே சார்ந்தது அல்ல. பிசிசிஐ மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்கள், மைதான டிக்கெட் விற்பனை என பல வழிகளில் கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது. குறிப்பாக தற்போதைய ஒளிபரப்பு உரிமம் மட்டுமே 48000 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி உள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அனைத்து அணிகளுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. அணிகள் வீரர்களின் ஏலத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவிடுகின்றன. ஐபிஎல் தொடர் உலகளவில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதால் பிரான்சைஸிகளின் மதிப்பும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் வியாபாரம். கோப்பையை வெல்வதை விட, அணியின் பிராண்ட் மதிப்பும், முதலீடு செய்த பங்குகளுமே உண்மையான சொத்து என்பதை ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த லாபம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது. #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat