
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
@coffeeday
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*தினம் ஒரு குட்டிக்கதை*
புதிதாய் திருமணம் ஆன விவசாயி ஒருவன், தன் மனைவியை வேண்டுமென்றே அவமானப்படுத்தியபடி இருந்தான். அவள் சீதனமாக ஒரு பசு மாடு கொண்டு வந்திருந்தாள். அது தினமும் நிறைய பால் கொடுத்து வந்தது. மிக சுவையான, சத்தான பாலாக அது இருந்தது.
ஒருநாள் அவள் பால் கறந்து கொண்டிருந்தபோது இவன் அவளிடம் சண்டை இழுத்து எட்டி உதைத்தான். அவள் பால் சொம்பு கவிழ்ந்து கொட்ட தரையில் விழுந்தாள். பசு மாடு இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது.
மனைவி அழுது கொண்டே, ‘‘நான் அம்மா வீட்டுக்குப் போகிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனாள். ‘போனால் போ… எனக்கென்ன வந்தது’ என்று இவன் அலட்சியமாக இருந்தான்.
மறுநாள் காலையில் பால் கறக்க பசு மாட்டின் மடி அருகில் சொம்பைக் கொண்டு சென்றான். மடியில் பாலே ஊறவில்லை. அந்தப் பாலைத்தான் அவன் முக்கிய உணவாகக் கொண்டிருந்தான். அவ்வளவு சுவையானது. பசு பால் கொடுக்காத காரணத்தால் அதிர்ச்சியடைந்து போனான்.
அதற்கு அடுத்த நாளும் பால் கறக்க அமர்ந்தான். அப்போது மடியில் பால் ஊறவில்லை. அதிக கவலை கொண்டான்.
மூன்றாம் நாள் விவசாயி ஒரு திட்டத்தோடு வந்தான். அதன்படி தன் மனைவி விட்டு சென்ற சேலையை கட்டிக்கொண்டான். முகம் தெரியாதவாறு முக்காடு போட்டு மூடிக் கொண்டான். சொம்பை எடுத்து பால் கறந்தான். பசு நிறைய பால் கொடுத்தது. விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சி. ‘ஆஹா, பசுவை ஏமாற்றி விட்டோம்’ என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டான். இப்படி இரண்டு நாட்கள் பசுவை ஏமாற்றி பால் கறந்துகொண்டிருந்தான்.
ஒரு நாள் மனைவியின் அண்ணன் வந்தான். தன் தங்கையை வந்து அழைத்துச் செல்லுமாறு மாப்பிள்ளையிடம் கெஞ்சினான். ‘‘முடியாது’’ என்று திமிராக மறுத்தான் இவன்.
மறுநாள் மாமனாரும் மாமியாரும் வந்து கெஞ்சினார்கள். ‘‘முடியாது’’ என்று திமிராக முகம் திருப்பிக் கொண்டான் இவன்.
அதற்கும் அடுத்த நாள் மனைவியின் சேலையை அணிந்துகொண்டு பால் கறக்க பசுவின் மடியருகே அமர்ந்தபோது, பசு அவனை எட்டி ஓர் உதை விட்டது.
‘‘ஏன் இப்படி ஈவு இரக்கமில்லாமல் உதைக்கிறாய்?’’ என்று வலியில் புலம்பினான் இவன்.
‘‘நீ ஈவு இரக்கமாக இருக்கிறாயா என்ன? பின் நான் ஏன் அப்படி இருக்க வேண்டும்?’’ என்று கேட்டது பசு.
பேசும் பசுவை ஆச்சர்யத்தோடு பார்த்தான் இவன். பசு தொடர்ந்து பேசியது.
‘‘நீ முதல் நாள் என் எஜமானியின் புடவையை கட்டிக் கொண்டு வந்தபோதே நீ ஏமாற்றுகிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் நான் ஏன் பால் கொடுத்தேன் தெரியுமா? உன் மனைவியின் புடவையைக் கட்டியதால், கொஞ்சமாவது அவளை நேசிக்கிறாய் என்று நினைத்தேன். அதனால்தான் பால் கொடுத்தேன். வீட்டுக்கு வருபவர்களை எதிரியாய் இருந்தாலும் ‘வாங்க’ என்று அழைப்பது போல, நான் பால் கொடுத்தது ஒரு பண்பாடு. ஆனால் நீ என்ன செய்கிறாய்? உன் மாமனார் வந்து பேசினாலும், மச்சினன் வந்து பேசினாலும், மரியாதையாக நடத்தாமல் விரட்டி விடுகிறாயே? அடிப்படைப் பண்பாடு கூட தெரியவில்லையா உனக்கு? தன் எல்லா பொருளையும் எடுத்துச் சென்ற மனைவி ஏன் ஒரு புடவையை மட்டும் விட்டுச் சென்றாள் என்பதையும் யோசித்துப் பார்’’ என்று கடிந்து கொண்டது பசு.
இவன் திகைத்துப் போய் பார்த்தான். பசு இன்னும் பேசியது.
‘‘நீ உன் மனைவியை விரட்டி விடும்போதுகூட என்னை உனக்கு பால் கொடுக்க சொல்லிவிட்டுத்தான் சென்றாள். பால் கொடுக்காமல் முரண்டு செய்தாலாவது மனைவி நினைவு வந்து அழைத்து வரமாட்டாயா என்றுதான் இரண்டு நாள் கொடுக்காமல் இருந்து பார்த்தேன். ஆனால், நீ என்னை ஏமாற்ற நினைத்தாயே தவிர, திருந்தவில்லை. கவலைப்படாதே! நீ என் எஜமானியை அழைத்து வராவிட்டாலும் கூட நான் உனக்கு சுவையான பாலை அவர் சொல்லுக்காக கொடுப்பேன்’’ என்றது.
விவசாயி உடனே சென்று மனைவியிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு திரும்ப தன் வீட்டுக்கே அழைத்து வந்தான். #story #கதை படிப்போம் #கதை படிப்போம்.... ரசிப்போம்....📒
*புரட்சி கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம் இன்று*
பாரதிதாசன் ( ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல்
21 , 1964 )
பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்)
பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர்.
இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம்.
தமிழாசிரியராக பணியாற்றிய இவர்,
சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால்
பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும்
பாவேந்தர் என்றும் பரவலாக
அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும்
கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி
வந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய
வணிகராயிருந்த கனகசபை முதலியார்,
இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு
பிறந்தார். கவிஞரின் இயற்பெயர்
கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில்
பழநி அம்மையார் என்பாரை மணந்து
கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு
மொழிப் பள்ளியில் பயின்றார்.
ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற
காலமே கூடியது. தமது பதினாறாம்
வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்
மொழிப் பற்றும் முயற்சியால்
தமிழறிவும் நிறைந்தவராதலின்
இரண்டாண்டில் கல்லூரியிலேயே
முதலாவதாகத் தேர்வுற்றார்.
பதினெட்டு வயதிலேயே அவரின்
சிறப்புணர்ந்த அரசியலார் அவரை
அரசினார் கல்லூரித்
தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும்
அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி
அளிக்கத் தலைப்பட்டன.
சிறு வயதிலேயே
சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன்
எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக்
காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப்
பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப்
பாடினார். பாரதியாரும்
அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால்
கவிஞருக்கு அது தெரியாது.
அப்பாடலே அவரை பாரதியாருக்கு
அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று
பாரதி கூற பாரதிதாசன்
"எங்கெங்குக் காணினும் சக்தியடா"
என்று ஆரம்பித்து இரண்டு பாடலை
பாடினார். இவரின் முதற் பாடல்
பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய
கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக
சுப்புரத்தினம் எழுதியது
என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன்
இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ்
ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன்,
கிண்டல்காரன், பாரதிதாசன் என பல
புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத்
தொண்டராகவும் விளங்கினார்.
மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில்
மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
அதன் காரணமாக கடவுள் மறுப்பு,
சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை
தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக்
கதாசிரியரும் பெரும் கவிஞருமான
பாரதிதாசன் அரசியலிலும் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டார்.
புதுச்சேரி
சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா
அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று
பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு
கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற
நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய
அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய
படைப்புகள் தமிழ்நாடு அரசினரால்
1990இல் பொது
உடைமையாக்கப்பட்டன.
மறைவு
பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.
பாரதிதாசன் எழுதிய
புகழ் பெற்ற சில
வரிகள்.
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
பாரதிதாசனின்
ஆக்கங்கள்
பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை,
இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம்,
கட்டுரை ஆகிய வடிவங்களில்
வெளிட்டார். அவற்றுள் சில:
1. அம்மைச்சி (நாடகம்)
2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு
(1948)
3. உரிமைக் கொண்டாட்டமா?,
குயில் (1948)
4. எது பழிப்பு, குயில் (1948)
5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்)
7. கலை மன்றம் (1955)
8. கற்புக் காப்பியம், குயில் (1960)
9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்)
10. நீலவண்ணன் புறப்பாடு
11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி
நிலையம் (1967)
12. பெண்கள் விடுதலை
13. விடுதலை வேட்கை
14. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,
குயில் புதுவை (1959)
15. ரஸ்புடீன் (நாடகம்)
இவை தவிர திருக்குறளின் பெருமையை
விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக்
கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
🌹🌹🌹 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
சிவில் சேவை தினம் (Civil Service Day)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று சிவில் சேவை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாறி வரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
சிவில் சேவையானது நாட்டின் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் முதுகெலும்பாக செயல்படுகிறது. இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மூலம் நிர்வாகத்தை இயக்க வேண்டியுள்ளது. அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இந்திய ஆட்சிப் பணிக்கு (Civil Service) உள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு சேவையானது பிரிட்டிஷ் அரசு கடைபிடித்த ஆட்சிப்பணி முறையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. இது 1947ஆம் ஆண்டிற்குப் பிறகே உருவாக்கப்பட்டது. உள்நாட்டு சேவைகளின் பொறுப்பை இந்திய நிர்வாகம் இயக்கி வருகிறது. 😊😊😊 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*📖✍
~வரலாற்றின்~
~தொகுப்புகள்~
🌍 ஏப்ரல் 21 – உலக வரலாற்று நிகழ்வுகள்
1. 753 கிமு – ரோம நகரம் நிறுவப்பட்டதாக பாரம்பரியமாகக் கருதப்படும் நாள் (ரோமுலஸ் நிறுவினார் என நம்பப்படுகிறது).
2. 1509 – இங்கிலாந்து மன்னர் Henry VIII அரியணை ஏறினார்.
3. 1782 – தாய்லாந்தின் தலைநகராக பாங்காக் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
4. 1836 – San Jacinto போர் நடைபெற்றது; டெக்சாஸ் மெக்சிகோவிடமிருந்து விடுதலை பெற்றது.
5. 1856 – ஆஸ்திரேலியாவில் கற்சிற்ப தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைநேர இயக்கத்தை தொடங்கினர்.
6. 1918 – முதல் உலகப்போரில் ஜெர்மன் தாக்குதல்கள் மேற்குக் களத்தில் தீவிரமானது.
7. 1926 – பிரிட்டனில் Queen Elizabeth II பிறந்தார்.
8. 1934 – புகழ்பெற்ற லோக் நேஸ் மான்ஸ்டர் புகைப்படம் வெளியானது.
9. 1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
10. 1945 – இரண்டாம் உலகப்போரில் சோவியத் படைகள் பெர்லினை நெருங்கின.
11. 1947 – அமெரிக்காவில் முதல் வெற்றிகரமான helicopter mail service தொடங்கியது.
12. 1960 – பிரேசிலின் புதிய தலைநகராக Brasília திறக்கப்பட்டது.
13. 1965 – அமெரிக்காவில் 1965 World's Fair தொடங்கியது.
14. 1967 – கிரீஸில் இராணுவ ஆட்சி (military coup) தொடங்கியது.
15. 1975 – தென் வியட்நாம் தலைநகர் சைகோன் அருகே போர் தீவிரமானது.
16. 1989 – சீனாவில் தியான்மென் போராட்டங்கள் மாணவர்களால் வலுப்பெற்றன.
17. 1994 – ஜப்பானில் முதல் பெரிய பல்கட்சி அரசியல் மாற்றங்கள் நடைபெற்றன.
18. 2000 – பிரேசிலில் பழங்குடியினர் 500ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினர்.
19. 2003 – SARS நோய்க்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டது.
20. 2016 – இசை உலகின் பிரபலர் Prince மரணம் அடைந்தார்.
21. 2019 – இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் நடந்தது.
22. 2021 – NASA இன் Ingenuity Helicopter செவ்வாயில் இரண்டாவது வெற்றிகரமான பறப்பை மேற்கொண்டது.
23. 2022 – ரஷ்யா-உக்ரைன் போரில் டொன்பாஸ் தாக்குதல்கள் தீவிரமானது.
24. 2023 – உலகளவில் காலநிலை மாற்ற போராட்டங்கள் நடைபெற்றன.
`🇮🇳 இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் ஏப்ரல் 21ஆம் நாள் நிகழ்வுகள்`
1. 1526 – பானிபட் முதல் போருக்குப் பிறகு பாபர், டெல்லி மற்றும் ஆக்ராவை கைப்பற்றி முகலாய ஆட்சியை உறுதிப்படுத்தினார்.
2. 1739 – மராத்தியர் சக்தி வடஇந்தியாவில் மேலும் வலுப்பெற்ற காலகட்டம்.
3. 1783 – பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாக மாற்றங்கள் இந்தியாவில் அமலுக்கு வந்தன.
4. 1858 – 1857 கிளர்ச்சிக்குப் பிறகு இந்திய நிர்வாகத்தை நேரடியாக பிரிட்டிஷ் அரசு ஏற்கும் பணிகள் முன்னேறின.
5. 1895 – இந்திய தேசியவாத இயக்கங்கள் பல மாகாணங்களில் வேகமடைந்தன.
6. 1913 – கதிரவன் இயக்கம், சுதேசி சிந்தனைகள் இந்திய இளைஞர்களிடம் பரவின.
7. 1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னர் நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்கள் தொடர்ந்தன.
8. 1920 – மகாத்மா காந்தியின் அஹிம்சை அடிப்படையிலான போராட்டங்கள் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றன.
9. 1930 – உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நாடு முழுவதும் விரிந்தது.
10. 1935 – இந்திய அரசியல் சீர்திருத்தங்களைப் பற்றிய விவாதங்கள் தீவிரமானது.
11. 1942 – இரண்டாம் உலகப்போரின் போது இந்திய சுதந்திரக் கோரிக்கை வலுத்தது.
12. 1946 – இடைக்கால அரசாங்க அமைப்பு குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.
13. 1947 – இந்தியப் பிரிவினை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகள் தீவிரமானது.
14. 1952 – முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசுகள் பல இடங்களில் பதவியேற்றன.
15. 1960 – பசுமைப் புரட்சி நோக்கி வேளாண் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
16. 1972 – இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.
17. 1975 – விண்வெளி மற்றும் அறிவியல் துறைகளில் இந்தியா புதிய திட்டங்களைத் தொடங்கியது.
18. 1980 – இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் தகவல் தொடர்பு வளர்ச்சி வேகமடைந்தது.
19. 1991 – பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முன்பட்ட முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.
20. 1998 – இந்திய பாதுகாப்பு மற்றும் அணு ஆய்வு நடவடிக்கைகள் தீவிரமானது.
21. 2001 – தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா உலக கவனத்தை ஈர்த்தது.
22. 2008 – சந்திரயான் திட்டத் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டின.
23. 2014 – இந்திய பொதுத் தேர்தல் பிரசாரங்கள் உச்ச கட்டத்தை எட்டின.
24. 2020 – கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா பல மாநிலங்களில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டது.
25. 2023 – டிஜிட்டல் இந்தியா மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் புதிய கட்டத்தை எட்டின.
🌷🌷🌷
~ஏப்ரல் 21‑ஆம் தேதி இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய பிறப்புகள், இறப்புகள்~
`### ஏப்ரல் 21 – பிறப்புகள் (இந்தியா)`
1. **வசுமதி இராமசாமி** – தமிழக எழுத்தாளர், 1917‑ல் ஏப்.21‑ல் பிறந்தார். [3]
2. **வி. கிருஷ்ணமூர்த்தி (வாண்டுமாமா)** – தமிழ் சிறுவர் இலக்கிய எழுத்தாளர், **1925 ஏப்.21**‑ல் பிறந்தார். [1][3]
3. **கண்டதேவி எஸ். அழகிரிசாமி** – தமிழக வயலின் இசைக்கலைஞர், **1925 ஏப்.21**‑ல் பிறந்தார். [3]
4. **ஆற்காடு வீராசாமி** – தமிழக அரசியல்வாதி, **1937 ஏப்.21**‑ல் பிறந்தார். [2][3]
5. **சீனிவாசராகவன் வெங்கடராகவன்** – இந்தியத் துடுப்பாட்ட வீரர், **1945 ஏப்.21**‑ல் பிறந்தார். [2][3]
`### ஏப்ரல் 21 – இறப்புகள் (இந்தியா)`
1. **பாரதிதாசன் (பாவேந்தர்)** – தமிழ் புரட்சிக்கவி; **1964 ஏப்.21**‑ல் காலமானார். [3][4]
2. **சகுந்தலா தேவி** – “மனித கணினி” என்று அழைக்கப்பட்ட கணித மேதை; **2013 ஏப்.21**‑ல் பெங்களூரில் மரணம். [1][2][7]
3. **வசுமதி இராமசாமி** – தமிழக எழுத்தாளர்; **2004 திகதி ஏப்.21**‑இல் இறப்பு. [3]
4. **கண்டதேவி எஸ். அழகிரிசாமி** – தமிழக வயலின் இசைக்கலைஞர்; **2000 ஏப்.21**‑ல் இறப்பு. [3]
5. **வி. கிருஷ்ணமூர்த்தி** – சிறுவர் இலக்கிய எழுத்தாளர்; **2014 ஏப்.21**‑ல் இறப்பு. [2][3]
6. **நிகர் சுல்தானா (Bollywood actress)** – இந்தி திரைப்பட நடிகை; **2000 ஏப்.21**‑ல் இறப்பு. [7]
7. **தேவுலபல்லி பிரபாகரராவ்** – தெலுங்கு எழுத்தாளர், பத்திரிகையாளர்; **2022 ஏப்.21**‑ல் இறப்பு. [7]
*📖✍
~வரலாற்றில்~
~தொகுப்புகள்~
~நிறைவு~.🙏 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*📖✍
~வரலாற்றின்~
~தொகுப்புக்கள்~
`🌍 உலக வரலாற்று நிகழ்வுகள் – ஏப்ரல் 20`
1. 1534 – பிரெஞ்சு கடலோடியான ஜாக் கார்டியர் கனடா நோக்கி தனது முதல் பயணத்தைத் தொடங்கினார்.
2. 1653 – இங்கிலாந்தில் ஒலிவர் கிரோம்వெல் பாராளுமன்றத்தை கலைத்தார்.
3. 1770 – பிரிட்டிஷ் கடலோடி ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையை கண்டுபிடித்தார்.
4. 1792 – பிரான்ஸ், ஆஸ்திரியாவுக்கு எதிராக போர் அறிவித்தது.
5. 1808 – ஜெர்மன் இலக்கிய அறிஞர் யோஹான் வோல்ஃப்காங் கோத்தே தனது Faust படைப்பின் முதல் பகுதியை வெளியிட்டார்.
6. 1836 – விஸ்கான்சின் பகுதி (Wisconsin Territory) உருவாக்கப்பட்டது.
7. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது லூசியானாவில் முக்கிய மோதல்கள் நடந்தன.
8. 1889 – அடால்ஃப் ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்தார்.
9. 1902 – மரி மற்றும் பியர் க்யூரி ரேடியம் ஆய்வில் முன்னேற்றம் அறிவித்தனர்.
10. 1912 – உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.
11. 1914 – கொலராடோவில் நடந்த Ludlow Massacre சம்பவத்தில் தொழிலாளர் குடும்பங்கள் கொல்லப்பட்டனர்.
12. 1926 – உலகப் புகழ்பெற்ற நடிகை எலிசபெத் II ராணி (Queen Elizabeth II) பிறந்தார்.
13. 1945 – இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படைகள் பல இடங்களில் சரணடைந்தன.
14. 1949 – அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து NATO அமைப்பை செயல்படுத்தத் தொடங்கின.
15. 1961 – கியூபாவில் Bay of Pigs படையெடுப்பு தோல்வியடைந்தது.
16. 1968 – தென்னாப்பிரிக்காவில் இனவெறி எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்தன.
17. 1972 – அமெரிக்காவின் Apollo 16 விண்கலம் நிலவிற்கு அருகே சென்றது.
18. 1980 – கியூபாவின் Mariel Boatlift தொடங்கியது; ஆயிரக்கணக்கானோர் அமெரிக்கா சென்றனர்.
19. 1999 – அமெரிக்காவின் Columbine High School தாக்குதல் சம்பவம் நடந்தது.
20. 2008 – பராகுவே தேர்தலில் Fernando Lugo வெற்றி பெற்றார்.
21. 2010 – மெக்சிகோ வளைகுடாவில் Deepwater Horizon எண்ணெய் கிணறு வெடிப்பு ஏற்பட்டது.
22. 2013 – சீனாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் (Sichuan) ஏற்பட்டது.
23. 2021 – NASA-வின் Ingenuity Helicopter செவ்வாயில் இரண்டாவது வெற்றிப் பறப்பை நிறைவேற்றியது.
24. 2023 – உலகளவில் AI தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான பல அறிவிப்புகள் வெளியான நாள்.
*🇮🇳 இந்திய வரலாற்றில் ஏப்ரல் 20 ஆம் தேதி முக்கிய நிகழ்வுகள்*
1. 1777 – மைசூர் அரசர் ஹைதர் அலி மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையிலான போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.
2. 1780 – இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் போது தென்னிந்தியாவில் முக்கிய ராணுவ நகர்வுகள் நடைபெற்றன.
3. 1818 – மராத்தா பேரரசின் மீதமுள்ள பகுதிகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
4. 1858 – 1857 கிளர்ச்சிக்குப் பின் இந்திய நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
5. 1889 – இந்தியாவில் பல நகரங்களில் ரயில் பாதை விரிவாக்கத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.
6. 1902 – கல்கத்தா மற்றும் மும்பை துறைமுகங்களில் வர்த்தக வளர்ச்சி அதிகரித்தது.
7. 1916 – சுதந்திர இயக்கக் கூட்டங்கள் பல இடங்களில் நடைபெற்றன.
8. 1919 – ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு நாடு முழுவதும் கண்டனங்கள் தொடர்ந்தன.
9. 1920 – மகாத்மா காந்தியின் அசஹாயோக இயக்கத்திற்கான ஆதரவு கூட்டங்கள் நடந்தன.
10. 1930 – உப்பு சத்தியாகிரக போராட்டம் இந்தியா முழுவதும் பரவியது.
11. 1934 – பீகார் நிலநடுக்க நிவாரணப் பணிகளில் தேசிய தலைவர்கள் ஈடுபட்டனர்.
12. 1942 – க்விட் இந்தியா இயக்கத்திற்கு முன் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்தன.
13. 1946 – பிரிட்டிஷ் அமைச்சரவை மிஷன் இந்திய அரசியல் தலைவர்களுடன் ஆலோசனைகள் தொடங்கியது.
14. 1947 – இந்தியப் பிரிவினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.
15. 1950 – இந்திய அரசியலமைப்புக்குப் பிந்தைய மாநில நிர்வாக சீர்திருத்தங்கள் முன்னேறின.
16. 1960 – இந்தியாவில் பெரிய அணைத் திட்டங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
17. 1972 – இந்திய விண்வெளி மற்றும் அறிவியல் துறையில் புதிய ஆராய்ச்சி முயற்சிகள் தொடங்கப்பட்டன.
18. 1984 – பொதுத் தேர்தலை முன்னிட்டு பல அரசியல் ஆலோசனைகள் நடந்தன.
19. 1992 – இந்திய பங்குச்சந்தை சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
20. 2001 – தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா உலகளவில் வளர்ச்சி பெற்றதாக அறிக்கைகள் வெளியானது.
21. 2008 – இந்தியாவில் கல்வி விரிவாக்கத் திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
22. 2013 – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிய திட்டங்களை அறிவித்தது.
23. 2020 – கொரோனா கால ஊரடங்கு நடவடிக்கைகள் நாடு முழுவதும் கடுமையாக்கப்பட்டன.
24. 2023 – டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் புதிய சேவைகள் அறிமுகமானது.
~🇮🇳 இந்திய வரலாற்றில் ஏப்ரல் 20 ஆம் தேதி பிறப்புகள்& இறப்பு~
`🎂 பிறப்பு`
1. 1889 – அடால்ஃப் ஹிட்லர் (இந்தியர் அல்ல; உலக வரலாற்று நபர் – குறிப்பாக தவிர்க்கலாம்)
2. 1893 – மிர்சா இஸ்மாயில் – மைசூர் மற்றும் ஜெய்ப்பூர் திவான்
3. 1904 – ராமநாத் கோயங்கா – இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர்
4. 1912 – வி. கே. கிருஷ்ண மேனன் அரசியல் தலைவர் (நாள் குறிப்பு பல ஆதாரங்களில் மாறுபடும்)
5. 1918 – கே. எஸ். ஹெக்டே – இந்திய நீதிபதி, அரசியல்வாதி
6. 1920 – நர்லா தாதா ராவ் – அறிஞர்
7. 1924 – டி. என். சேஷன் – முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
8. 1927 – மன்மோகன் தேசாய் – திரைப்பட இயக்குநர்
9. 1930 – மோகன் தாரியா – அரசியல்வாதி
10. 1935 – ஜி. எஸ். கோஹ்லி – ஆராய்ச்சியாளர்
11. 1940 – சாதனா சிவதாசனி – நடிகை
12. 1945 – பிரபாத் குமார் – நிர்வாகி
13. 1950 – எஸ். வேங்கடராமன் – கல்வியாளர்
14. 1952 – நஸீருதீன் ஷா – நடிகர்
15. 1958 – சந்திரகாந்த் பண்டிட் – கிரிக்கெட் வீரர்
16. 1963 – சுபாஷ் காய் – திரைப்படத் துறை தொடர்பாளர் (தேதி சில இடங்களில் மாறுபடும்)
17. 1965 – அஜய் ஜடேஜா – கிரிக்கெட் வீரர்
18. 1972 – மம்தா குல்கர்னி – நடிகை
19. 1978 – முகேஷ் திவாரி – நடிகர்
20. 1987 – விராட் தொடர்புடைய சமகால வீரர்கள் சிலர் இந்த தேதியில் பிறந்தவர்கள் என தவறான பட்டியல்கள் உள்ளன; சரிபார்ப்பு அவசியம்
21. 1990 – பல சமகால விளையாட்டு வீரர்கள் / கலைஞர்கள்
`⚫ இந்திய வரலாற்றில் ஏப்ரல் 20 ஆம் தேதி இறப்புகள்`
மட்டும் ~குறைவு~
~சரியான~ ~தகவல்கள்~
~கிடைக்கவில்லை~ 🙏
1. 1972 – வி. வி. கிரி தொடர்பான தவறான குறிப்பு சில பட்டியல்களில் உள்ளது (உண்மை தேதி வேறு)
2. 1997 – மேஹ்பூப் கான் தொடர்பான சில தவறான குறிப்புகள் உள்ளன
3. 2001 – ஜெயகாந்தன் அல்ல (தேதி வேறு)
4.
*📖✍
~வரலாற்றின்~
நிறைவு~🙏 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*ஏப்ரல் 19,*
*உலக கல்லீரல் தினம்*
(World liver day)
கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், கல்லீரல் நோய்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள் மற்றும் சிகிச்சை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இது மனித உடலின் இரண்டாவது பெரிய உறுப்பான கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
ஆரோக்கியமான கல்லீரலைப் பராமரிக்க மது அருந்துவதைத் தவிர்த்தல், தடுப்பூசி போடுதல் மற்றும் சரியான உணவுகளை உட்கொள்ளுதல் அவசியம்.
கல்லீரல் நோய்கள் தற்போது அதிகரித்து வருவதால், இந்நாள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*ஏப்ரல் 19,*
இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்.
ஆரியபட்டா இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆகும்.
இந்தியாவில் வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் பெயரை இந்த முதல் செயற்கைக் கோளுக்கு சூட்டினர்.
ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.
இதன் எடை 360கிகி ஆகும்.
சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டியன்யார் ஏவுதளத்தில் இருந்து 1975-ல் ஏப்ரல் 19ம் தேதி ஏவப்பட்டது.
பூமியில் இருந்து சுமார் 619 கிமீ உயரத்தில் பறந்து வந்தது இந்த ஆரியபட்டா.
எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது.
செயற்கைக்கோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக் கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.
பிறகு 1979ம் ஆண்டு மீண்டும் ரஷ்யாவின் உதவியுடன் பாஸ்கரா என்ற செயற்கைக் கோளை அனுப்பியது.
அதன்பிறகு 1980-ல் இருந்து இந்தியா சுயமாக செயற்கைக் கோளை ஏவ ஆரம்பித்தது. #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*📖✍
`வரலாற்றின் தொகுப்புகள்`
`🌏உலக வரலாற்றில் இன்று ஏப்ரல் 19ஆம் நாள் நிகழ்வுகள்`
1. 1775 – அமெரிக்க விடுதலைப் போரின் தொடக்கம்: லெக்சிங்டன் மற்றும் கான்கார்ட் போர்கள் நடைபெற்றன.
2. 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை முதன்முதலாக கண்டார்.
3. 1713 – ஆஸ்திரிய அரசர் சார்ல்ஸ் VI, பெண்களும் அரியணையைப் பெறலாம் என Pragmatic Sanction வெளியிட்டார்.
4. 1587 – பிரான்சிஸ் டிரேக், ஸ்பெயின் கடற்படைக்கு எதிராக காடிஸ் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தினார்.
5. 1897 – உலகப் புகழ்பெற்ற முதல் Boston Marathon நடைபெற்றது.
6. 1903 – பிரான்சில் Tour de France சைக்கிள் போட்டி நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
7. 1919 – லெஸ்லி இர்வின் உலகின் முதல் வெற்றிகரமான free-fall parachute jump செய்தார்.
8. 1943 – நாசி ஆட்சிக்கு எதிராக Warsaw Ghetto Uprising தொடங்கியது.
9. 1948 – பர்மா (இன்றைய மியான்மர்) ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
10. 1956 – நடிகை கிரேஸ் கெல்லி, மொனாக்கோ இளவரசர் Rainier III-யை திருமணம் செய்தார்.
11. 1960 – தென் கொரியாவில் மாணவர் போராட்டங்கள் வெடித்து ஜனநாயக இயக்கம் வலுத்தது.
12. 1971 – சோவியத் ஒன்றியம் உலகின் முதல் விண்வெளி நிலையமான Salyut 1-ஐ ஏவியது.
13. 1975 – இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா ஏவத் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது (அதிகாரப்பூர்வ ஏவு ஏப்ரல் 19க்கு அருகிலான வரலாற்று காலம்).
14. 1977 – எழுத்தாளர் Alex Haley, Roots நூலுக்காக சிறப்பு Pulitzer பரிசு பெற்றார்.
15. 1987 – The Simpsons முதன்முறையாக தொலைக்காட்சியில் குறும்பட வடிவில் ஒளிபரப்பானது.
16. 1989 – அமெரிக்க போர்க்கப்பல் USS Iowa-வில் வெடிப்பு ஏற்பட்டு 47 கடற்படையினர் உயிரிழந்தனர்.
17. 1993 – அமெரிக்காவின் Waco Siege முடிவடைந்து பெரும் தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர்.
18. 1995 – Oklahoma City bombing தாக்குதலில் 168 பேர் உயிரிழந்தனர்.
19. 2005 – கார்டினல் ஜோசப் ராட்சிங்கர் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு Pope Benedict XVI ஆனார்.
20. 2011 – கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.
21. 2013 – Boston Marathon குண்டுவெடிப்பு சந்தேகநபர் ஜோகார் சார்னாயேவ் கைது செய்யப்பட்டார்.
22. 2020 – கனடாவின் Nova Scotia பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
23. ஒவ்வொரு ஆண்டும் – ஏப்ரல் 19 World Liver Day ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
24. ஒவ்வொரு ஆண்டும் – ஏப்ரல் 19 Bicycle Day உலகம் முழுவதும் நினைவு கூறப்படுகிறது.
`🇮🇳இந்திய வரலாற்றில் இன்று ஏப்ரல் 19ஆம் நாள் முக்கிய நிகழ்வுகள்`
1. 1526 – முதல் பானிபட் போருக்குப் பிறகு பாபர் வடஇந்தியாவில் தனது ஆட்சியை உறுதிப்படுத்த தொடங்கினார்.
2. 1757 – பிளாசி போருக்கு முன் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி பெங்காலில் இராணுவ தயாரிப்புகளை அதிகரித்தது.
3. 1839 – பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் பல பகுதிகளில் நிர்வாக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
4. 1857 – இந்திய விடுதலைப் போருக்கு முன் வடஇந்தியாவில் கிளர்ச்சி சூழ்நிலை அதிகரித்தது.
5. 1882 – கல்வி வளர்ச்சிக்காக ஹண்டர் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட காலம்.
6. 1890 – இந்திய ரயில்வே வலையமைப்பு வேகமாக விரிவடைந்த காலக்கட்டம்.
7. 1906 – சுவதேச இயக்கம் வலுப்பெற்று இந்திய இளைஞர்கள் தேசிய இயக்கத்தில் இணைந்தனர்.
8. 1910 – புரட்சியாளர் இயக்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தீவிரமடைந்தன.
9. 1919 – ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பிந்தைய போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்தன.
10. 1930 – மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நாட்டெங்கும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது.
11. 1936 – இந்திய தேசிய காங்கிரஸ் சமூக நீதி மற்றும் சுயாட்சி குறித்து தீர்மானங்கள் எடுத்தது.
12. 1942 – இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் சுதந்திர கோரிக்கை தீவிரமடைந்தது.
13. 1945 – இந்திய தேசிய இராணுவ (INA) வீரர்களுக்கான ஆதரவு மக்களிடையே அதிகரித்தது.
14. 1948 – சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் அரசியல் மறுசீரமைப்புகள் வேகமடைந்தன.
15. 1950 – இந்தியக் குடியரசு அமைப்புக்குப் பின் மாநில நிர்வாக மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
16. 1955 – பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் தொழில்துறை வளர்ச்சி திட்டங்கள் விரிவாக்கப்பட்டன.
17. 1975 – இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா சோவியத் உதவியுடன் ஏவப்பட்டது. இது இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய நாள்.
18. 1984 – ராகேஷ் சர்மா விண்வெளிப் பயண வெற்றிக்குப் பிறகு இந்திய அறிவியல் துறையில் பெருமை அதிகரித்த காலம்.
19. 1991 – பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முன் இந்தியாவில் நிதி நெருக்கடி சூழ்நிலை தீவிரமடைந்தது.
20. 2001 – தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா உலகளவில் முக்கிய மையமாக உயர்ந்த காலம்.
21. 2008 – சந்திரயான் திட்டத்திற்கான இறுதிக்கட்ட ஆய்வுகள் நடைபெற்றன.
22. 2013 – இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
23. 2019 – பொதுத்தேர்தல் காலத்தில் இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு கட்டங்கள் நடைபெற்றன.
24. 2023 – டிஜிட்டல் இந்தியா, உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளித் திட்டங்கள் குறித்து புதிய முன்னேற்றங்கள் பேசப்பட்டன.
25. 2024 – உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவில் பொதுத்தேர்தல் தொடர்பான தேசிய அரசியல் நடவடிக்கைகள் கவனம் பெற்றது
~🇮🇳இந்திய வரலாற்றில் ஏப்ரல் 19ஆம் நாள் பிறப்புகள் & இறப்புகள்~
`🎂 ஏப்ரல் 19ஆம் நாள் பிறப்புகள்`
1. 1827 – நாகோஜிராவ் பண்டிட் – சமூக சீர்திருத்த சிந்தனையாளர்.
2. 1887 – ஜெய்சங்கர் பிரசாத் – இந்தி மொழியின் புகழ்பெற்ற கவிஞர், நாடகாசிரியர்.
3. 1903 – பிஷ்ணு தே – வங்காள எழுத்தாளர், கவிஞர்.
4. 1910 – கே. கே. ஹெப்பார் – இந்திய ஓவியர், பத்மபூஷண் விருது பெற்றவர்.
5. 1919 – மகாதேவி வர்மா நினைவு நாள் தொடர்பான இலக்கிய விழாக்கள் நடத்தப்படும் நாள் (பிறப்பு காலச்சூழல் நினைவு).
6. 1927 – சந்திரகாந்த் பக்ஷி – குஜராத்தி எழுத்தாளர்.
7. 1933 – ஜெயந்த் நார்லிகர் – இந்திய வானியலாளர், விஞ்ஞானி.
8. 1938 – பசவராஜ் ராஜகுரு – கர்நாடக சங்கீத கலைஞர்.
9. 1957 – முகேஷ் கண்ணா – இந்திய நடிகர் (மகாபாரதம், சக்திமான் புகழ்).
10. 1970 – அரவிந்த் கெஜ்ரிவால் – இந்திய அரசியல்வாதி, டெல்லி முதல்வர்.
11. 1972 – ரிவா பாபர் – நாடகக் கலைஞர்.
12. 1987 – மரியா கோரெட்டி வகை சமூக சேவை நபர்கள் நினைவு தின நிகழ்வுகள் இந்தியாவில் நடத்தப்படும் நாள்.
`⚫ ஏப்ரல் 19ஆம் நாள் இறப்புகள்`
1. 1881 – லார்டு மேயோ – இந்தியாவின் முன்னாள் வைச்ராய் (சம்பவத்திற்குப் பிந்தைய நினைவு நாள் குறிப்புகள்).
2. 1955 – சி. ராஜகோபாலாச்சாரியின் அரசியல் காலத்தின் நினைவு நிகழ்வுகள் நடைபெற்ற நாள் (வரலாற்று குறிப்புகள்).
3. 1975 – சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலருக்கான நினைவு நாள் நிகழ்வுகள்.
4. 1998 – ஆகா ஹசன் அபேதி – வங்கியியல் துறை நபர்.
5. 2000 – ராஜேந்திர குமார் – இந்திய நடிகர்.
*📖✍
~வரலாற்றின்~ ~தொகுப்புகள்~
~நிறைவு~🙏 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
நாம் எப்படித் தோன்றினோம்?: சார்லஸ் டார்வின் மறைந்த தினம் இன்று...
கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? இந்தக் கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலானது தான், இல்லையா? இதே கேள்வி அந்தக் கால விஞ்ஞானிகள் பலருக்கும் வந்தது.
மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் அப்படீங்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு வந்தது இயல்பு தானே. 19-ம் நூற்றாண்டு வரைக்கும் பலருக்கும் இதுக்குத் துல்லியமான பதில் கிடைக்கல. 19-ம் நூற்றாண்டுல பிரிட்டன்ல உள்ள ஷ்ரூஸ்பரிங்கிற இடத்தைச் சேர்ந்த சார்லஸ் டார்வின் தான் இதுக்குத் திட்டவட்டமான பதிலைக் கண்டு பிடிச்சார்.
டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார்.சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
மனிதர்கள், குரங்கு இனத்தின் வாரிசுகள். வாலில்லா குரங்குக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்று அவர் கூறினார். இதை எப்படி அவர் கண்டு பிடிச்சார்? அது ஒரு சுவாரசியமான கதை. அதிலும் குறிப்பா அவர் இளைஞனா இருந்தப்போ, பீகிள்கிற கப்பல்ல ஐந்து வருஷம் உலகத்தைச் சுத்தினார். அப்போ கிடைச்ச அனுபவ அறிவு, அறிவியல் அறிவு தான் அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம்.
ஆரம்பத்துல டார்வினோட அப்பா, டார்வினை டாக்டருக்குப் படிக்க அனுப்பினார். ஆனால், டார்வினுக்கு அது பிடிக்கலை, இயற்கையை ஆராய்ச்சி பண்றதுல தான் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால, டாக்டருக்குப் படிப்பை விட்டுட்டு வந்துட்டார். டார்வின் மேல அக்கறையா இருந்த கேம்ப்ரிட்ஜ் தாவரவியல் பேராசிரியர் ஹென்ல்ஸோ, 1831-ல் டார்வினுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதுல ‘பீகிள்கிற கப்பல்ல, இயற்கை ஆராய்ச்சியாளரா போறதுக்குத் தயாரா’ன்னு அவர் கேட்டிருந்தார். ஆனா, அந்தக் கப்பல்ல போறதுக்கு எந்தச் சம்பளமும் கிடையாது. டார்வினோட அப்பா, கப்பல்ல போக ஒத்துக்கல. டார்வினோட மாமா ஜோசியா வெட்ஜ்வுட் தான், பீகிள் கப்பல்ல போறதுக்கு டார்வினோட அப்பாவ சம்மதிக்க வச்சார்.
இந்தப் பயணத்தில் தனக்குக் கிடைத்த அனைத்து உயிரினங்களையும் டார்வின் ஆராய்ந்தார். அவற்றைப் பற்றிய வர்ணனையை எழுதியும் வைத்தார். ஆரம்பத்தில் பறவைகளையும் உயிரினங்களையும் சுட்டுப் பிடிப்பதில் ஆர்வம் காட்டிய டார்வின், பின்னர் ஒவ்வொரு பகுதியையும் உற்று நோக்குவதிலும் அப்பகுதி ஏன் அப்படி இருக்கிறது என்பதற்கான காரண, காரியத்தைத் தேடுவதிலும் செலவிட்டார்.
இது அவருடைய அறிவை வளர்த்தது. கப்பல், குதிரை, நடை என்று ஒவ்வொரு பகுதியிலும் வாய்ப்பு கிடைத்த வழிகளில் எல்லாம் பயணம் செய்து இயற்கையை உற்று நோக்கினார்.
இயற்கை அறிவியல் தொடர்பாக நிறைய வாசிச்சார். அது மட்டுமில்லாமல், அவர் செஞ்ச இன்னொரு முக்கியமான விஷயம் தினசரி தனது டைரியை எழுதியது தான். பார்த்த அனைத்து விஷயங்களையும் விட்டுவிடாமலும், விரிவாகவும் எழுதி வைத்தார்.
அவருடைய எழுத்தும் வாசிப்பும் புதிய புரிதல்களை ஏற்படுத்தின. லயல் என்பவரின் புவியியல் பற்றிய எழுதிய புத்தகம், மால்தூஸின் மக்கள்தொகை கொள்கை போன்றவற்றைப் படித்ததால் தான், பரிணாமவியல் கொள்கையை டார்வினால் உருவாக்க முடிந்தது.
காலபகஸ் தீவுகளில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு வகைகள், குறிப்பாக உண்ணும் உணவுக்கு ஏற்ப தினைக் கருவிகளின் அலகில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இயற்கைத் தேர்வு (Natural selection), உயிரினங்களின் தகவமைப்பு (Adaptation), பரிணாமவியல் கொள்கை (Evolution theory) ஆகியவற்றை டார்வின் உருவாக்கினார்.
கப்பலில் இருந்த போதே பேராசிரியர் ஹென்ஸ்லோவுக்கு அவர் எழுதிய கடிதங்கள், கேம்பிரிட்ஜ் தத்துவச் சிந்தனையாளர்கள் பேரவையில் விநியோகிக்கப்பட்டன. டார்வினுடைய கட்டுரை, டார்வின் சேகரித்த எலும்புகள் மீது பண்டையவியல் ஆராய்ச்சியாளர்கள் காட்டிய ஆர்வம் ஆகியவற்றின் காரணமா முன்னணி அறிவியலாளர்கள் மத்தியில் டார்வினுக்கான இடம் உறுதி செய்யப்பட்டது.
ஐந்து ஆண்டு பீகிள் கடற்பயணத்தை முடித்துக் கொண்டு டார்வின் நாடு திரும்பினப்ப, தீவிர கள ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்ட ஒரு விஞ்ஞானியா அவர் மாறியிருந்தார். தன்னுடைய கடற்பயணம் குறித்து அவர் எழுதிய ‘பீகிள் கடற்பயணம்’ என்ற அவருடைய முதல் புத்தகம் உலகப் புகழ் பெற்றது.
இளைஞரா இருந்தாலும் அறிவியலாளர்கள் மத்தியில், தான் மதிக்கப்பட வேண்டும் என்று டார்வின் நினைத்தார். தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் ஆர்வத்துடன் தீவிரமாக உழைத்து, தன் உடலை வருத்திக்கிட்டு வேலை பார்த்தார். தனது கண்டறிதல், கொள்கைகளை ஆதாரப்பூர்வமா முன் வைச்சார்.
‘பரிணாமவியலின் தந்தை’ என்று இன்றைக்கு அவர் போற்றப்படுகிறார். ஆனால், பரிணாமவியல் கொள்கையை முதன்முதலா அவர் சொன்னப்ப, எப்படியெல்லாம் அவருக்கு எதிர்ப்பு வந்துச்சு தெரியுமா? அவர் சொன்னதை விஞ்ஞானிகள் சிலர் ஏத்துக்கிட்டாங்க. ஆனா, பழமையில் ஊறிய பல மத நம்பிக்கையாளர்கள் டார்வினை எதிரியா பார்த்தாங்க. அவரைத் தூற்றினாங்க. அவரைக் குரங்காவே வரைஞ்சு, அவமானப்படுத்த நெனைச்சாங்க.
ஆனா, டார்வின் இதைப் பத்தியெல்லாம் கவலைப்படல. தன்னுடைய கொள்கைக்கு ஆதாரம் இருக்குங்கிற போது, இதையெல்லாம் கண்டு உணர்ச்சிவசப்பட்டுக் கருத்து சொல்லக் கூடாதுன்னு பேசாம விட்டுட்டார்.
சார்லஸ் டார்வின் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது
அன்றிலிருந்து இன்று வரை டார்வினோடப் பரிணாமவியல் கொள்கையைத் தான் உலகம் முழுவதும் உள்ள குழந்தைங்க, ஆராய்ச்சியாளர்கள் படிக்கிறாங்க.
அன்றைக்கு எதிர்ப்பைப் பார்த்து அவர் பேசாம ஒதுங்கியிருந்தா, அவருக்குப் பின்னாடி இன்னைக்கு உலகம் கண்டு பிடிச்சிருக்கிற பல அரிய விஷயங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும், இல்லையா?
😊😊😊 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*💐💐💐🙏🏻🌺🌺🌺❤☘️இன்றைய சிந்தனை.*.( 19.04.2026.)
..................................................................
*மௌனம் ஒரு மகத்தான சக்தி!*
...........................................................
ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ செய்திகளை, ஒரு மௌனம் சொல்லி விடும்.மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார்கள்.
எப்போது பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது...
ஆனால் அதை விட, ,''எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்து இருப்பது மிக அவசியம்..
புத்தர், அரசனுக்கு மூத்த மகனாகப் பிறந்த அரசகுமாரன். மிகவும் அழகாக இருந்தார். உடற்கட்டுடன் இருந்தார். கண்கள் ஒளியுடன் பிரகாசித்தன.
ஆனாலும் அரசன் மிகவும் கலங்கிப் போனான்.
காரணம் வாய் எப்போதும் மௌனத்திலேயே இருந்தது.நாட்டில் உள்ள அத்தனை மருத்துவர்களும் முயன்று பார்த்துத் தோற்றுப் போனார்கள்.
என் மகனின் வாய்ப் பேச்சைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லையா? என்று அரசன் புலம்பித் தீர்த்தான்.
இறுதியில், இளவரசனைப் பேச வைப்பவர்களுக்குப் பரிசு என அறிவித்தான். நாட்கள் ஓடின,
யாராலும் அரசகுமாரனைப் பேச வைக்க முடியவில்லை. அரசன் ஏங்கித் தவித்தபடியே அவனது காலத்தைக் கடத்தினான்.
அரசகுமாரனுக்குத் தனிமை மிகவும் பிடிக்கும். அதுவும் காடுகளில் தன்னந்தனியே நடப்பது மிகவும் பிடிக்கும்.
வழக்கம்போல் அவன் காட்டில் தனியே அமர்ந்து வானத்தையும், பசுமையான மரங்களையும், அருவியின் துள்ளல் நடையையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது வேட்டைக்காரர்கள் சிலர் மிருகங்களைத் தேடி ஒன்றும் கிடைக்காததால், வருத்தத்திலும்,, சோர்விலும் அமர்ந்திருந்தனர்.
அப்பொழுது ஒரு ஜோடிக் குருவிகள் ‘கீச்…கீச்…’எனச் சப்தமெழுப்பியபடி மகிழ்ச்சியுடன் படபடவென அங்கும் இங்குமாகப் பறந்து விளையாடிக் கொண்டு இருந்தன. பார்த்தான் ஒரு வேடன், எய்தான் அம்பை! இரண்டு குருவிகளும் அம்படிபட்டுத் தரையில் விழுந்து துடித்தன.
இதைக் கண்ட புத்தர் ஓடோடிப் போய் அவற்றைத் தமது கைகளில் தூக்கினார், துடித்தன பறவைகள், இளகியது அரசகுமாரனின் மனம்.கண்களில் கண்ணீர்த் துளிகள். அந்தப் பறவைகளைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டார்..
அரசகுமாரன் பேசியதைக் கண்ட வேடர்களுக்கு ஒரே ஆனந்தம். ஓடிச் சென்று இந்தச் செய்தியை மன்னனிடம் கூறினர். மகிழ்ச்சியடைந்த மன்னன், அரசகுமாரன் வருகைக்காகக் காத்திருந்தான்.
வழக்கம் போல பேசியதற்கான அறிகுறியே சிறிதும் இல்லாமல் அரண்மனையினுள் நடந்து, தமது அறைக்கு விரைந்தார் அரசகுமாரன்.
மன்னனுக்கு வந்தது கோபம்! வேடர்கள் பொய் சொல்லி உள்ளார்கள் என்று கருதி, பொய் சொன்ன வேடர்களின் தலையைச் சீவி விடும்படிக் கட்டளை இட்டார்.
அவர்களோ மன்னனிடம் கதறி அழுதார்கள், அங்கு வந்த அரசகுமாரனைப் பார்த்து
நீங்கள் பேசியது உண்மை! இது நமக்கு மட்டும் தான் தெரியும்.நீங்கள் வாயைத் திறந்து ஒப்புக் கொண்டால் தான், எங்கள் தலை தப்பும், எங்கள் பிள்ளைகள் அனாதையாவது தடுக்கப்படும் என்று கூறி அழுதார்கள்.
அவர்கள், மீது கருணை கொண்ட அரசகுமாரன், ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டுவிட்டு உள்ளே சென்றார்.
கதை சொல்லும் நீதியைப் பற்றி எதுவும் கூறத் தேவையில்லை, அது உணர்த்தும் நீதி உங்களுக்கே புரியும்...
*ஆம்.,நண்பர்களே..*
பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது. நம்மால் வாழ்க்கை முழுவதும் பேசாமல் இருக்க இயலாது.
ஆனால் தினமும், சிறிது நேரமாவது பேசாமல், மௌனமாக இருக்க முயற்சி செய்யலாம். அப்போது நமது மனம் மலரும் அதிசயத்தை உணரலாம்..
மௌன மொழி மூலம் நமது சக்தி பெருகும்..
குடும்பத்திலும் பணிபுரியும் இடத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
(Coffee day 💐💐💐🙏🏻🌹🌹*
#good morning












