⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
ShareChat
click to see wallet page
@coffeeday
coffeeday
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
@coffeeday
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*அக்டோபர் 19, 1980* ஸ்டீவ் மெக்பீக் என்ற அமெரிக்கர் 102 அடி உயரமுள்ள ஒற்றைச் சக்கரம்கொண்ட மிதிவண்டியை (யுனிசைக்கிள்) ஓட்டிச் சாதனை புரிந்த நாள். அரை டன்னுக்கும் அதிக எடைகொண்ட அந்தச் சைக்கிளைத் தூக்கி நிறுத்தத் தான் க்ரேன் வேண்டியிருந்தது. கயிற்றின்மீது நடத்தல், ஒற்றைச் சக்கர மிதிவண்டி ஓட்டுதல் ஆகியவற்றால் புகழ்பெற்றவர். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
தெரிந்து கொள்வோம் - THD | 1 IRCUS cus 0860 క్లి PIGSBY RIAES gettyimages Denver Postt 837242816 THD | 1 IRCUS cus 0860 క్లి PIGSBY RIAES gettyimages Denver Postt 837242816 - ShareChat
*அக்டோபர் 19, 1976* சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்ட நாள். சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது. இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளிலும், நடுப் பகுதிகளிலும் வாழ்கின்றன. #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - ShareChat
*அக்டோபர் 19, 1952* தெலுங்கு பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மதராஸ் மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்கவேண்டுமென்ற கோரிக்கைக்காக விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியவாதியுமான பொட்டி ஸ்ரீராமுலு சாகும்வரை உண்ணாவிரதத்தை துவக்கிய நாள். இவரது கோரிக்கையையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நேருவின் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. தனது கோரிக்கையில் உறுதியாக இருந்த ஸ்ரீராமுலு டிசம்பர் மாதம் 15ம் தேதி இரவு மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து ஆந்திரப் பகுதிகளில் கலவரம், வன்முறைகள் வெடிக்க தனி ஆந்திரக் கோரிக்கையை ஏற்பதாக நேரு அறிவித்தார். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
தெரிந்து கொள்வோம் - பாடடர்ரிராமுனு ಆಯಲನಂಸ பாடடர்ரிராமுனு ಆಯಲನಂಸ - ShareChat
*அக்டோபர் 19, 1849* "உலகின் முதல் பெண் மருத்துவர்" என்ற பெருமை படைத்த இங்கிலாந்தைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்வெல் மருத்துவத்துறையில் அடியெடுத்து வைத்த தினம் இன்று. இங்கிலாந்தில் இருந்த பல்கலைக்கழகங்களில் அந்தக் காலத்தில் பெண்களுக்கு மருத்துவம் படிக்க அனுமதி இல்லை. எனவே அமெரிக்காவில் குடியேறி, நியூயார்க் ஜெனீவா கல்லூரியில் உடற்கூறு மருத்துவம் படித்து பட்டம் பெற்றார். 1849ல் இவர் உலகின் முதல் பெண் மருத்துவராக மருத்துவப் பதிவுத்துறையில் பதிவு பெற்றார். #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - ShareChat
விமானத்தின் காக்பிட்டில் இருந்து முழு சூரிய கிரகணத்தின் ஒரு அரிய காட்சி. மேகங்களுக்கு மேலே, பூமி இருளில் மூழ்குவதைப் பாருங்கள். அடிவானத்தில் தெரியும் அந்த ஆரஞ்சு நிறக் கோடு, 360 டிகிரியில் தெரியும் சூரிய அஸ்தமனம்! இது பூமியில் இருந்து கிடைக்காத ஒரு காட்சி. இந்தக் காட்சி, 2024-ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் மீது நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின் போது, அமெரிக்க விமானப்படை விமானிகளால் (USAF pilots) பதிவு செய்யப்பட்டது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
தெரிந்து கொள்வோம் - ShareChat
00:44
*அக்டோபர் 19,* *சுப்பிரமணியன் சந்திரசேகர்* இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தார். ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு 'சந்திரசேகர் லிமிட்' எனப்படுகிறது. இவர் தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து 'நட்சத்திரங்களின் அமைப்பு' என்ற நூலாக வெளியிட்டார். பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 'ஆடம் பரிசு', ராயல் சொசைட்டியின் 'காப்ளே பதக்கம்' உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார். நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம் சந்திரசேகர் 84வது வயதில் (1995) மறைந்தார்.
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - ShareChat
*அக்டோபர் 19,* *நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை* சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார். இவர் 1906-ல் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டு, முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பிறகு காங்கிரஸில் இணைந்தார். இவர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 1932-ல் உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற பாடல். இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்த இவர் மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார். தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 83வது வயதில் (1972) மறைந்தார். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
தெரிந்து கொள்வோம் - 60 भारत INDIA नमक्कल कविग्नर NAMAKKAL KAVIGNAR 1989 60 भारत INDIA नमक्कल कविग्नर NAMAKKAL KAVIGNAR 1989 - ShareChat
*வரலாற்றில் இன்று* *19 அக்டோபர் 2025-ஞாயிறு* *===========================* 1216 : இங்கிலாந்தின் ஜான் மன்னன் இறக்க, அவரது 9 வயது மகன் மூன்றாம் ஹென்றி ஆட்சிக்கு வந்தான். 1453 : பிரெஞ்சு பொர்டோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டு போர் முடிவுக்கு வந்தது. 1596 : சான்பிலிப் என்ற ஸ்பெயின் கப்பல் ஜப்பான் கரையில் மூழ்கியது. 1805 : நெப்போலியப் போர்கள் :- ஊல்ம் நகர போரில் ஆஸ்திரியாவின் தளபதி மாக்கின் ராணுவம் நெப்போலியனிடம் சரணடைந்தது. 30 ஆயிரம் கைதிகள் கைப்பற்றப்பட்டனர். 10 ஆயிரம் பேர் இறந்தனர். 1812 : நெப்போலியன் படை மாஸ்கோவில் இருந்து பின்வாங்கியது. 1813 : ஜெர்மனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பெரும் தோல்வி அடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது. 1864 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- கூட்டமைப்புப் படையினர் கனடாவில் வெர்மான்ட் மாநிலத்தின் செல் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர். 1866 : வெனிடோ, மாந்துவா ஆகியவற்றை பிரான்ஸிடம் ஆஸ்திரியா அளித்தது. பிரான்ஸ் உடனடியாக அவற்றை இத்தாலியிடம் கொடுத்தது. 1912 : இத்தாலி, திரிப்பொலி நகரை உஸ்மானியரிடமிருந்துக் கைப்பற்றியது. 1921 : லிஸ்பன் நகரில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்பட பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர். 1935 : எத்தியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. 1943 : 2,098 இத்தாலி போர்க்கைதிகளுடன் சென்ற சின்பிரா என்ற சரக்கு கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. காசநோய்க்கான ஆன்டிபயாடிக் மருந்து ஸ்ட்ரெப்டோமைசின், ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. 1944 : குவாட்டமாலாவில் 10 ஆண்டுகள் நீடித்த ராணுவப் புரட்சி ஆரம்பமானது. இரண்டாம் உலகப் போர் :- அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸில் தரையிறங்கின. 1950 : சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர். சீனா கொரியப் போரில் இணைந்தது. பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினர் ஐநா படைகளை எதிர்க்க யாலு ஆற்றைத் தாண்டினர். 1954 : நேபாளத்தில் உள்ள சோ யூ மலையின் உச்சி முதன் முதல் முறையாக எட்டப்பட்டது. 1956 : சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 1945 ஆகஸ்ட் முதல் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது. 1960 : அமெரிக்கா, கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. 1970 : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானம் மிக் -2 இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1974 : நியூவே நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்று சுயாட்சி மண்டலமாகியது. 1976 : சிம்பன்சி உலகில் அழிந்து வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. 1977 : தென்னாப்ரிக்காவில் கறுப்பு இனத்தவர்களின் கட்சி, சங்கம், பத்திரிகை ஆகியன தடை செய்யப்பட்டன. 1983 : கிரனாடாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிஷெப் படுகொலை செய்யப்பட்டார். 1986 : மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் உயிரிழந்தனர். 1987 : அமெரிக்க கடற்படை பாரசீக வளைகுடாவில் இரண்டு ஈரானின் எண்ணெய்த் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 1988 : பம்பாயில் புறப்பட்ட விமானம் அகமதாபாத்தில் தரை இறங்கும் போது கடும் மூடுபனி காரணமாக தரையில் மோதி வெடித்து சிதறியதில் 130 பேர் பலியானார்கள். பிரிட்டிஷ் அரசு சின் பெயின் மற்றும் அயர்லாந்து துணை ராணுவக் குழுக்கள் மீது வானொலி, தொலைக்காட்சி தடை விதித்தது. 1991 : வட இத்தாலியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் காரணமாக 2,000 பேர் வரை உயிரிழந்தனர். 1994 : பாகிஸ்தான் பிரதமராக பெனாசிர் பூட்டோ இரண்டாம் முறையாக பதவியேற்றார். 2000 : பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை ராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார். 2001 : 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனேஷியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 146 சிறுவர்கள், 142 பெண்கள் உட்பட 353 பேர் உயிரிழந்தனர். 2005 : மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்கு தொடங்கியது. 2009 : தமிழ் நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத் தளங்கள் நிறுத்தப்பட்டன. 2013 : புவனெஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 105 பேர் உயிரிழந்தனர். #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - 350 10 २० P N 320 330 340  ೦ % 310 8 % ನ n UIIITTIIU &क 02 081 081 021 091 / 350 10 २० P N 320 330 340  ೦ % 310 8 % ನ n UIIITTIIU &क 02 081 081 021 091 / - ShareChat
*அக்டோபர் 18, 1991* நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்ட நாள். ஆங்கிலேயர் ஆட்சிகாலம்வரை, தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பிறகு நிர்வாக வசதிக்காக தற்போது உள்ள திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளையும் உள்ளடக்கி, தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாகையை தலைநகராகக்கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி, நான்கு நகராட்சிகளையும், 11 ஊராட்சி ஒன்றியங்களையும், 10 பேரூராட்சிகளையும், 432 ஊராட்சி மன்றங்களையும், உள்ளடக்கியதுதான் நாகப்பட்டினம். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
தெரிந்து கொள்வோம் - ShareChat
*அக்டோபர் 18, 1954* உலகத் தொலைத்தொடர்பு வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய ட்ரான்சிஸ்டர் ரேடியோ, டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நாள். அதுவரை வாக்குவம் ட்யூப்கள் பொருத்தப்பட்ட ரேடியோக்கள்தான் புழக்கத்திலிருந்தன. இது ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் அளவுக்குப் பெரிதாக இருக்கும் என்பதுடன் சுவிட்சைப் போட்டவுடனே வேலையும் செய்யாது. பல நிமிடங்கள் சூடேற வேண்டும். ட்ரான்சிஸ்டருக்கு முன்பே வாக்குவம் ட்யூப் கொண்ட போர்ட்டபுள் ரேடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை பெரிதாகவும், எடை அதிகமாகவும் இருந்தன. இந்நிலையில், ட்ரான்சிஸ்டர் எனும் செமிக் கண்டக்டரை 1947ல் பெல் ஆய்வகம் உருவாக்கியது. அளவில் மிகச்சிறியதானாலும், ரேடியோ, கால்குலேட்டர், கம்ப்யூட்டர் முதலானவற்றை சிறியதாக உருவாக்க உதவியதன்மூலம், ட்ரான்சிஸ்டர் உருவாக்கிய மாபெரும் அறிவியல் முன்னேற்றங்களுக்காக, இதனை உருவாக்கிய 3 ஆய்வாளர்களுக்கும் 1956ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - 1 05 8 / 1 05 8 / - ShareChat