#🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ்
25.09.2025 THURSDAY
Rabi Al-Aakhir 02, 1447 - INDIA
Rabi Al-Aakhir 03, 1447 - KSA
السلام عليكم و رحمة الله و بركاته
أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ
بسم الله الرحمن الرحيم
அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,
அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி
அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்
அனைத்துலகிற்கும் அதிபதியே! அல்லாஹ்வே!
உன்னைப் போற்றி வணங்குகிறேன்
வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் நீ ஒருவன் மட்டுமே என சான்று பகர்கின்றேன்
உனது இறுதித் தூதர் அகிலத்துக்கோர் அருட்கொடை அண்ணல் நபி அவர்களின் மீது உனது ஸலவாத்தைப் பொழிவாயாக!
யாஅல்லாஹ்! இவ்வுலகின் மூலம் எனது'தீனுக்கு
'உதவியளிப்பாயாக!
'தக்வா'வின் மூலம் எனதுமறுமை வாழ்விற்கு உதவிடுவாயாக!
என் கண்களுக்குப் புலப்படாதவைகளின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக!
என் முன் இருப்பவைகளை அனுபவிப்பதில் என்னை என் மன இச்சைகளின் பால் என்னை ஒப்படைத்துவிடாதே!
நாங்கள் செய்யும் பாவங்களால் உனக்கு எந்த பாதிப்பும் இல்லை
எங்களை மன்னிப்பதனால் உனக்கு எந்த இழப்பும் இல்லை
எங்களுக்கு நிஃமத்துகளை அருள்வாயாக!
அவற்றை அருளுவதால் உனக்கு எந்தக் குறையும் ஏற்படப்போவதில்லை!
மன்னிப்பதனால் உனக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தாத மஃபிரத்தால் என் பாவங்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக நீயே வாரிவழங்குபவன்.
விரைவில் கிடைக்கும் செழுமை,
அழகிய பொறுமை.
விசாலமான வாழ்வாதாரங்கள்,
துன்பங்கள் அனைத்திலிருந்தும் பாதுகாப்பு
ஆகியவற்றை உன்னிடம் கேட்கிறேன்.
பரிபூரண ஆரோக்கியத்தைக் கேட்கிறேன் .
நீடித்த சுகத்தைக் கேட்கிறேன்.
ஆரோக்கியத்தை அளித்ததற்கு நன்றி செலுத்துதலைக் கேட்கிறேன்
மக்களிடம் தேவையாகாத வாழ்வைக் கேட்கிறேன்
நலன்களை பெறும் ஆற்றலோ,தீமைகளை விட்டு விலகும் சக்தியோ, கண்ணியமும்,உயர்வும் நிறைந்த அல்லாஹ்வை கொண்டே தவிர வேறு இல்லை.
யா அல்லாஹ்!
எங்களின் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக !
உன்னையையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்
ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!
ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்