#💖நீயே என் சந்தோசம்🥰
எந்நேரமும் உதடுகளில் சிறு புன்னகையை வைத்திருங்கள்...
அது தருகின்ற தன்னம்பிக்கையை வேறு எதனாலும் தர முடியாது
பல மணி நேரம் பேசும் உதடுகளை விட சில நிமிடங்கள் நினைக்கும் இதயத்திற்கு தான் பாசம் அதிகம்.
பிடித்தவர்களிடம் பேச வார்த்தைகளை தேட வேண்டியதில்லை,
சிறு வணக்கம் கூட உணர்த்தி விடுகிறது அன்பின் ஆழத்தை.
🙏 Happy women's day 🎉 🙏
#💖நீயே என் சந்தோசம்🥰
சில நாட்கள் உணவு –
சில நாட்கள் உணர்வின் விருந்து.
சில தினங்கள் தேர் –
சில தினங்கள் தேர்வின் கனவு.
சில பொழுது நோய் –
சில பொழுது மருந்தின் மௌனம்.
சில சமயம் ஆடை –
சில சமயம் நிர்வாண மெய்ம்மை.
சில நேரம் நொடி –
சில நேரம் யுகத்தின் நிழல்.
இல்லாருக்கு மட்டுமே –
காதலர் தினம் ஒரு கனவு.
காதலருக்கு –
அனுதினமும் அதே தினம்!
அன்புடன் RJ🫰🏻
#👸மகளிர் தின நல்வாழ்த்துக்கள்💐
பெண் என்னும் மானுட சக்தி
மாற்றத்தை உருவாக்கும்
மானுட சக்தியின்
உந்துசக்தியே பெண்மை.....!
உணர்வுகளை உன்னதமாய்
உணர்த்தும் தாயின்
சிறப்பே பெண்மை.....!
முகப்பாவனையில் இணைப்பு
முழுமையாய் வடிவமைத்து
கடவுளின் சிறப்பு.....!
கூறும் தாய்மையின் பொறுப்பு....!
தானத்தின் சிறப்பு தாய்மையின் வளர்ப்பு....!
ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும்
வேண்டும்...! தாய்மையின் மதிப்பு.....!
தவிர்க்க வேண்டும் பெண்மையின்
புறகணிப்பு.....!
உயர வேண்டும் பெண்ணின் படிப்பு....!
தவறுகளைத் தடுக்க உதவும் பெண்ணின் தற்காப்பு....!
சிறக்க வேண்டும் மகளிரின் மாண்பு....!
அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்💫💫💫💫💫💫
அன்புடன் RJ
#💖நீயே என் சந்தோசம்🥰
ஒவ்வொரு முறையும்
அந்த கவிதை
என்னிடத்தில் பூவாக
பூக்கும் போது அதில்
இருந்து நான் தேன்
எடுத்தால் அதனிடத்தில்
இனிப்பை காண்கிறேன்
என்னிடத்தில் அந்த கவிதை
பூத்தும் அதில் நான் தேன்
எடுக்க முடிய வில்லை என்றால்
என்னிடத்தில் கவலை
தான் காண்கிறேன்
அதனால் தான்
என்னிடத்தில் அந்த
கவிதை பூக்கும்
போதே நான் அதனிடத்தில்
தேன் எடுக்க
முயற்ச்சிக்கிறேன்
தினம் தினம்
அந்த கவிதையின்
இடத்தில் சுவையை
காணலாம் என்று.
#💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔
கரகாட்டக்காரன் - 2 வருமா?
சினிமாவில் இதுவரை 1800 பாடல்கள் எழுதியுள்ளேன். இதற்கான புத்தகங்கள் தயாராகி வருகின்றன. இந்த புத்தகத்தை இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
கரகாட்டக்காரன்-2 படம் பண்ணுவதற்கு கவுண்டமணிக்கு உடல் நிலை சரியில்லை, செந்திலும் தற்போது படம் பண்ணுவதில்லை, ராமராஜனுக்கும் உருவம் மாறிவிட்டது, கனகாவும் குண்டாகிவிட்டார். அதனால் இவர்களை வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்காது.
- இயக்குநர் கங்கை அமரன் பேச்சு













