messi
ShareChat
click to see wallet page
@messi2923
messi2923
messi
@messi2923
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
வரலாற்றில் இன்று #மே_14, 1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். எட்வார்ட் ஜென்னர் தான் கண்டுபிடித்த பெரியம்மை தடுப்பூசியை பரிசோதிக்க ஜேம்ஸ் பிலிப்ஸ் என்ற 7 வயது சிறுவனை தேர்ந்தெடுத்தார் மே 14 ஆம் நாள் அந்த சிறுவனுக்கு பெரியம்மை தடுப்பூசியை செலுத்தினார். அவ்வாறு செலுத்திய முதல் சில நாளில் காய்ச்சல், தலைவலி, பசியின்மை போன்ற சில பிரச்சினைகள் அந்த சிறுவனுக்கு ஏற்பட்டன. என்றாலும் ஏழாம் நாள் அந்த சிறுவன் மிகவும் நலமடைந்தான். அதன் பிறகு எட்வார்ட் ஜென்னர் தன்னுடைய தடுப்பூசி மருந்தில் சிற்சில மாற்றங்கள் செய்து அதே சிறுவனுக்கு மீண்டும் மீண்டும் செலுத்தினார். அதன் பின்னரே முழுமையான வெற்றியடைந்த தடுப்பூசியை உலகுக்கு நல்கினார். #life #lifes
life - ஏலாறிறிலஇன்றுபரிபம்மைதடுப்பூசிமுதன் முதலகசனுத்தப்பதமேட1796 ஏலாறிறிலஇன்றுபரிபம்மைதடுப்பூசிமுதன் முதலகசனுத்தப்பதமேட1796 - ShareChat
வரலாற்றில் இன்று #மே_13 – 1967. சாகிர் உசேன் (Zakir Hussain) ) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆனார்.. அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார். கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண்எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன. #life #lifes
life - ShareChat
#சர்வதேச_செவிலியர்_தினம் #மே_12 பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தத் தினத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூறும் அதே நேரத்தில், உலகெங்கிலும் சேவை புரியும் செவிலியர்களின் மகத்தான பணிகளை போற்றுவது மிக அவசியம். புனிதமான தொழில்களில் முதன்மையானது செவிலியர் பணி. ஐ.சி.வார்டில், அபாயகட்டத்தில் உள்ள நோயாளிக்குக் கவனிப்பு; ஸ்பாஞ்சை வைத்து நோயாளிகளைக் குளிப்பாட்டுதல். காயங்களைச் சுத்தப்படுத்தி மருந்து போடுதல், கட்டுகள் போடுதல் அவர்களுக்கு உணவூட்டுதல் உள்பட பல வேலைகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்பவர்கள் செவிலியர்கள் என்னும் நர்ஸ்கள்!. இதுபோல் மனம் கோணாது நோயாளிகளின் சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது சரியாக இருக்கும்!இந்த கொரோனா தொற்று காலத்தில் முதலாவது முன்கள பணியாளர்களாக தங்கள் உயிரையும் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சேவை செய்துவருகிறார்கள் அத்தகைய அர்ப்பணிப்புடன் பணியாற்றும் செவிலியர்களை இன்று போற்றுவோம். #life #lifes
life - 12 MAY 90% INTERNATIONAL DAY 12 MAY 90% INTERNATIONAL DAY - ShareChat
#தேசிய_தொழில்நுட்ப_நாள் #மே_11 மே 11 இன்று இந்தியாவில் தேசிய தொழில்நுட்ப நாள் அனுசரிக்கப்படுகிறது சக்தி நடவடிக்கை (Operation Shakti) அல்லது பொக்ரான் - II (Pokharan-II) என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று மே 11, 1998ஆம் ஆண்டி ல் வெடிக்கப்பட்டது. இந்த அணுகுண்டு சோதனைகள் இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறுதரப்பட்ட வணிகத்தடைகளை விதிப்பதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அதே ஆண்டு பாகிஸ்தான் மே 28 மற்றும் மே 30ஆம் நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாக அமைந்தது. இந்த நாளை நினைவுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன #life #lifes
life - National Technology 0au National Technology 0au - ShareChat
வரலாற்றில் இன்று - #மே_10, 1857 இந்தியச் சிப்பாய்க் கலகம் (Indian Sepoy Mutiny) துவங்கியது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையிலிருந்த இந்திய சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. . ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", எனவும் அழைக்கப்படுகிறது. இந்த புரட்சிக்கு வித்திட்டது இளம் சிப்பாய் மங்கள் பாண்டேயின் வீரமாகும். அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கி தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது. #life #lifes
life - ShareChat
வரலாற்றில் இன்று - பாசிசம் வீழ்த்தப்பட்ட நாள் #மே_9, 1945, அதாவது 80 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாள் சோவியத் ஒன்றியத்தின் படைகள் ஜெர்மனியில் நுழைந்து ஹிட்லரின் நாஜி படைகளை வீழ்த்தி ஜெர்மானிய பாராளுமன்றமான ரீச்ஸ்டாக் மீது 9 மே 1945 அன்று வெற்றிக்கொடியை ஏற்றியது. #life #lifes
life - ShareChat
மே 8 வரலாற்றில் இன்று - உலகின் புகழ்பெற்ற பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் துவக்கப்பட்டது பாரமவுண்ட் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் (ஆங்கில மொழி: Paramount Pictures). இது ஒரு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வினியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1912ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் டைட்டானிக், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், தோர், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன், பரானோர்மல் ஆக்டிவிட்டி, வேர்ல்ட் வார் ஜி, நோவா, டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை வினியோகம் செய்ததன் மூலம் புகழ் பெற்ற நிறுவனமானது #life #lifes
life - Caramout VIaCOM COMPANY Caramout VIaCOM COMPANY - ShareChat
#உலக_தடகள_தினம் #மே_07 உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தடகளத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மே 7 அன்று உலக தடகள தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பு (ஐ.ஏ.ஏ.எஃப்) ஒரு சமூக பொறுப்பு திட்டமாக 'ஒரு சிறந்த உலகத்திற்கான தடகள' என அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது, இருப்பினும், இந்த ஆண்டு, COVID-19 தொற்றுநோயால் மக்கள் தங்கள் வீடுகளில் பூட்டப்பட்டிருக்கும் நாள் வித்தியாசமாக இருக்கும். உலக தடகள தினம் 2021 வரலாறு இந்த நாள் 1996 ஆம் ஆண்டில் அப்போதைய ஐ.ஏ.ஏ.எஃப் தலைவரான ப்ரிமோ நெபியோலோவால் அறிமுகப்படுத்தப்பட்டது. தடகள மற்றும் விளையாட்டுத் துறைக்கான சர்வதேச நிர்வாகக் குழுவான ஐ.ஏ.ஏ.எஃப், உலக தடகள தினத்தை ஏற்பாடு செய்து நிதியுதவி செய்கிறது. முன்னதாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது, ஆனால் COVID-19 தொற்றுநோய் காரணமாக இதுபோன்ற எதுவும் நடத்த முடியாது. இளைஞர்கள் ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஊக்குவிப்பதால் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கிறது. ஆண்டு கடந்து செல்ல, 'ஒரு சிறந்த உலகத்திற்கான தடகள' திட்டம் விரிவடைந்தது, மேலும் IAAF குழந்தைகளிடையே உடல் செயல்பாடுகளின் நன்மைகளை மேம்படுத்துவதற்காக பள்ளிகளில் நிகழ்வுகள் மற்றும் போட்டிகளை நடத்தத் தொடங்கியது. விளையாட்டுகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் நன்மைகளையும் ஊக்குவிக்க பள்ளிகள் சிறந்த இடமாக நிற்கின்றன. மேலும், இது இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் விளையாட்டை பிரபலப்படுத்த உதவும். இந்த ஆண்டு குறிப்பிட்ட கருப்பொருள் எதுவும் இல்லை, இருப்பினும், இதுபோன்ற சவாலான நேரங்களுக்கு மத்தியில், வீட்டில் சிக்கித் தவிக்கும் நபர்கள் வீட்டில் தவறாமல் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதாக உறுதிமொழி எடுக்கலாம். இது அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கும். #life #lifes
life - Day World Athletics May Zth WONDERSLATE Day World Athletics May Zth WONDERSLATE - ShareChat
#தேசிய_செவிலியர்_தினம் #மே_06 தேசிய செவிலியர் தினம் 2021 வியாழக்கிழமை, மே 6, மற்றும் நோயாளிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்யும் கடின உழைப்பிற்கு செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நாள் இது, குறிப்பாக ஒரு வருடம் மன அழுத்தம் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட நீண்ட நேரம் . உணவகச் சங்கிலிகளான டன்கின் ’மற்றும் சிபொட்டில் ஆகியவை தங்களது பாராட்டுக்களைக் காட்ட ஆர்வமாக உள்ளன, இலவசங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமே. ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பிற வணிகர்களும் நன்றியைப் பெறுகிறார்கள். தேசிய செவிலியர் தினம் தேசிய செவிலியர் வாரத்தின் ஒரு பகுதி மட்டுமே, இதில் மே 8 அன்று தேசிய பள்ளி செவிலியர் தினமும், மே 12 அன்று சர்வதேச செவிலியர் தினமும் அடங்கும். மே 12, தற்செயலாக, நவீன நர்சிங்கின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தேதி. இந்த ஆண்டு அவரது 200 வது பிறந்த நாளைக் குறிக்கிறது. கீழே, தேசிய செவிலியர் தினமான 2021 அன்று செவிலியர்களுக்கான சிறந்த சலுகைகளின் வட்டவடிவத்தைக் கண்டறியவும். எப்போதும் உங்களுடன் ஒரு வகையான மருத்துவ பணியாளர் அடையாளத்தை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் உங்கள் உள்ளூர் உரிமையை எந்த சலுகைகளிலும் பங்கேற்கிறீர்களா என்பதை சரிபார்க்க மேலே அழைக்கவும். #life #lifes
life - %% C ANAT T .NAL  Ua NIRSES  ೧೦ Ay li) (i %% C ANAT T .NAL  Ua NIRSES  ೧೦ Ay li) (i - ShareChat
#கார்ல்_மார்க்ஸ் #மே_5 #பிறந்த_தினம் #hbdmarx கார்ல் மார்க்ஸ் என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார். மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும். மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை . மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர். மார்க்சு சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவை தொகு மார்க்சின் சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. அவற்றுள் சில: ஹேகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும். ஆடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல் பொருளாதாரம். பிரெஞ்சு சோசலிச, சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின் சிந்தனைகள். முந்திய செருமானிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக் ஃபியுவெர்பக். பிரடெரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் #life #lifes
life - கற்றவர்களிடம் கற்பதைவிட . கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் [ (ಲ காரல் மார்கஸ் கற்றவர்களிடம் கற்பதைவிட . கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் [ (ಲ காரல் மார்கஸ் - ShareChat