அண்ணாமலையின் தந்தை கிட்னி பாதிப்பால் அவதிப்படுகிறார்..
அவரது தந்தைக்கு வாரம் ஒருமுறையோ இருமுறையோ Dialysis. தேவைப்படுகிறது...
அதனால் என்னால் தொகுதி பொறுப்பாளராக செயல்பட இயலாது..
தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் என்கிறார் அண்ணாமலை...
நமக்கு அவருடைய தந்தையின் உடல்நிலையும் புரியவேண்டும்,அதே நேரம் தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அவரின் சம்மதம் கேட்காமலே போட்டிருந்தால் அவர் நாசுக்காக மறுப்பதும் புரிந்திருக்க வேண்டும்.
தமிழக பாஜகவின் நட்சத்திர முகம் அண்ணாமலை....
அவருக்கு 6 தொகுதிகளை கொடுத்து பொறுப்பாளர் என அறிவித்ததை மேலிடம் தவிர்த்திருக்கலாம்...
அவர் மட்டுமல்ல தமிழிசை,பொன்னார்,எல்.முருகன், ஹெச்.ராஜா போன்ற பிரபலங்களையும் தவிர்த்து இருக்கலாம்..
இப்போது அண்ணாமலை விலகியது பேசுபொருளாகி விட்டது....
இது ஒரு சாதாரண விஷயம்...
இதை வைத்து அண்ணாமலைக்கும் நயினாருக்கும் பிரச்சனை என்பதாக பாலிமர் உட்பட பல ஊடகங்கள் வாய்க்கு வந்ததை கிளப்பிவிடுகிறார்கள்.
நயினார் நகேந்திரன் கூட இன்று பேட்டியில் பாலிமர் சேனலை திட்டிஉள்ளர்...
இருவரும் அண்ணன் தம்பிகளாக நட்போடு கட்சிப்பணி செய்கிறார்கள்...
அண்ணாமலை என்கிற அற்புதமான மனிதனின் உயரம் தெரியாதவர் அல்ல நயினார்.
ஆனால் இதை பெரிதுபடுத்துவது வேறு சிலர்....
ஒரு பக்கம் சிலதனிநபர் ஆதரவாளர்கள் ஐயோ அண்ணாமலைக்கு அநீதி,அவர் மானஸ்தன், மரியாதை இல்லாத இடத்தில் விருப்பமில்லை,அவராக விலகிவிட்டார் என்பதாக பதிவுகள்.
இன்னும் சிலரோ சவுக்கு சங்கர் முன்னரே சொல்லியது இது..(அதாவது அண்ணாமலை திமுகவின் ஆதரவாளராம்) எனவேதான் இந்த உள்ளடி வேலை என அபாண்ட புளுகுகளை நம்பி சில பதிவுகள்....
உண்மையில் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை நாமே பெரிதுபடுத்தி கதைகட்டுகிறோம்....
புதியதலைமுறை போன்ற ஊடகங்களின் சிண்டுமூட்டும் வேலையை உணர்ந்து ,
உண்மை நிலையை விளக்குவோம்...
திமுக என்ற தேசவிரோதியை வீழ்த்துவதே முதற்கடமையென செயல்படுவோம். #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴