
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
🔱🪷🔱ஓம் நமசிவாய 🔱🪷🔱
🙏இனிய சிவ இரவு வணக்கம் 🙏
🌸இஅங்கம்ஒரு ஆறுடை வேள்வி
ஆன் அருமறை நான்கும்
பங்கம்இல் பாடலோடு ஆடல்
பாணி பயின்ற படிறர்
சங்கமதுஆர் குற மாதர்
தங்கையில் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றும்
கற்குடி மாமலை யாரே.🌸
🌸பொருள் : -🌸
🌸அருமையாகப் போற்றப்படுகின்ற வேதமும், அதன் ஆறு அங்கமும், வகுத்தவாறு வேள்வியும், குறை வில்லாத பாடலும், ஆடலும், தாளமும் பயில் விளங்குபவர் ஈசன். சங்குகளால் ஆகிய வளையல் களை அணிந்துள்ள குறவர்குல மாதர்களின் கரங்களில் திகழும் மைந்தர்கள், மேகத்தில் இருக்கும் நிலவைத் தொடுவதற்குத் தாவுகின்றனர். அத்தகைய பெருமைக்குரிய கற்குடி மலையில் ஈசன் வீற்றிருக்கிறார்.🌸
🌼திருச்சிற்றம்பலம் 🌼 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
சிவனை அடைவது சித்தாந்தம்…!
நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல் சித்தாந்தமே.
விளக்கம்:-
சிவனைச் சிந்தையில் இருத்த வேண்டும். சத்தம் முதலிய ஐந்து புலன்களில் இருந்து விடுபட வேண்டும். சுத்த மாயை அசுத்த மாயைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். இங்கனம் அனைத்தையும் கடந்து தலைவனான முழு முதற் பொருளை அடைவதே சித்தாந்தம்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்
🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️
வாயில்களாற் சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமீது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ?
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - பழந்தக்கராகம். #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏கோவில்
ஒம் நமசிவாய 🙏
குறைவு இலா நிறைவே
கோது இலா அமுதே
ஈறு இலாக்
கொழுஞ் சுடர்க் குன்றே
மறையுமாய்
மறையின் பொருளுமாய்
வந்து என் மனத்திடை
மன்னிய மன்னே
சிறைபெறா நீர் போல்
சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந்துறை உறை
சிவனே
இறைவனே நீ
என் உடல் இடம் கொண்டாய்
இனி உன்னை
என் இரக்கேனே
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
ஒம் நமசிவாய 🙏
குறைவு இலா நிறைவே
கோது இலா அமுதே
ஈறு இலாக்
கொழுஞ் சுடர்க் குன்றே
மறையுமாய்
மறையின் பொருளுமாய்
வந்து என் மனத்திடை
மன்னிய மன்னே
சிறைபெறா நீர் போல்
சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந்துறை உறை
சிவனே
இறைவனே நீ
என் உடல் இடம் கொண்டாய்
இனி உன்னை
என் இரக்கேனே
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🌷நான்"என்னும் மாயை அழிந்துபோகும் சரணாகதி
உன் "திருவடியை" தேடி வருகின்றேன் அப்பா அண்ணாமலையாரே
பிறந்த ஒளி இயல்பாய் எப்பக்கமும் ஓடுதல் போல.
கற்றில்லாது அடைக்கப்பட்ட வெற்றிடம் பட்டேன்ற திறக்கப்படும் போது உள்ளே சீரினுழையும் காற்றைப்போல்.
பள்ளத்தை நோக்கி விரைந்து செல்லும் நதியைப்போல.
மலை முகட்டை அடைந்த நதி வெள்ளம் அடிவாரம் நோக்கி விழுகின்ற அருவி போல.
உன் திருவடி நோக்கி விழுந்து வழிகின்றேன் நான் என்ற அகம் திறந்து.
நான் நல்லவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், தீயவன் என்ற இறுமாப்பு வேசங்களைக் களைந்து விட்டு.
நான் எதுவாக இருக்கிறேனோ அதுவாகவே வருகின்றேன் உன் திருவடி சேர.
ஏனெனில் அந்த வேசங்களைக் கடந்து உண்மையான எனக்குள் நுழைய வலியவன் நீ அப்பா அண்ணாமலையாரே
பசித்தப் பிள்ளை தேடும் தாய் என நீ. உனக்கு முன்னால் வேசங்கள் பருதி கண்ட பனி.
நான் எனக்காய் இட்ட வேசங்கள், உலகனிக்காக இட்ட வேசங்கள் எல்லாம் களைந்து வருகின்றேன்.
நான் என ஆன என் மனம் உன் திருவடியில் விழுந்து வழிகிறது. பொய்யான மாயா பூச்சுகள் இல்லை,
அறுப்பட்ட சதை துண்டம் போல் என்னை இழந்து அதுவாய் விழுகிறது மனம் உன் பதங்களில்.
அதன் கள்ளத்தனங்களோடு, திரிபுகளோடு, அச்சங்களோடு , இச்சைகளோடு உன் திருவடியினை தழுவுகின்றது.
இன்னும் இன்னும் என்ற ஆசைகளோடு, ஒவ்வொரு ஆசையும் நீ எனக்காய் ஆக்கி தந்த பின்னும்,
இன்னும் இன்னும் என ஊரும் வற்றாத மனற்கேனியின் நீர் போல உதிக்கும் பேராசைகளோடு வருகின்றது.
அது விழுந்து வழிகையில் , நிணமும், சலமும், கழிவுமாக வழிந்து உன்திருவடியில் படுகின்றன அப்பா அண்ணாமலையாரே .
ஆயினும் உன் சேவடி, நீர் ஒட்டாத தாமரை இலை என என் நிணமும்,கழிவுமான மனம் ஒட்டாமல் மணம் கொண்ட மலர் போல மலர்கின்றது ஒவ்வொரு நொடியும்.
அந்த நின மனம் வழிந்தது உன் திருவடிக்கு மலர்கள் தழுவுதல் எனத் தோன்றுமோ?
உன் திருவடியின் ஒவ்வொரு அசைவும், இந்த பிரபஞ்சத்தின் முதல் அசைவையே எனக்கு நினைவுறுத்தும்.
இந்த நொடியில் நீ என் ஸ்தூல உடலால் தீண்ட முடியாத தூரத்தில் இருக்கிறாய்.
என் மனம் உன்னை நோக்கி வந்ததை, உன்னோடு தொடர்பு கொண்டதை நீ அறிந்திருப்பாய். ஏனென்றால், உன் மனம்,
நீ தான் பௌதீகம் அளந்தறியும் இந்த தூரங்களைக் கடந்து வந்து என் மனதை இயக்கி உனக்குள் வழியச் செய்கிறாய்.
பொறு! உன் மனம் எங்கோ என் உடலால் தொட இயலாத தூரத்தில் இருக்கின்றதா ? இல்லை.
நான் உன் மனதின் உள்தான் இருக்கிறேன் அப்பா அண்ணாமலையாரே
உன்னிடம் யாசிக்க என்னிடம் எத்தனையோ ஆசைகள் உண்டு.
அவற்றை பூர்த்தியும் நீ செய்வாய்.
செய்த பின்னும் குறைவாக கேட்டதாக தோன்றும் எனக்கு.
இல்லையன்றால், புதிது புதிதாய் ஆசைகள் பிறக்கும்.
நீ எனக்கு என்ன வேண்டும் என்று கேட்கின்றாய்.
என்னை விட உனக்குத் தெரியும் எனக்கு எது சரியென்று.
தாயிடம் கூட பசியென்று சொல்ல வேண்டும்.
நீ தாயினும் சிறந்த தயாவானவன்
நீ அறிவாய் அனைத்தும் அப்பா அண்ண்மலையாரே
🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 🦜 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🔥 மாற்றம் தவிர்க்க முடியாத சத்தியம்…
🌊 அமைதி தான் அதைக் கடந்து செல்லும் வழி…
முடிவுகள் தான் புதிய தொடக்கங்களுக்கு காரணம்.
சிவனின் நடனம் அழிவு அல்ல —
அது அநியாயத்தை அகற்றும் சக்தி,
புதிய ஒளியை உருவாக்கும் தெய்வீக செயல்.
🔥 அக்னி – கர்மங்களை சுத்திகரிக்கிறது
🌊 நீர் – மனதை அமைதிப்படுத்துகிறது
⚖️ சமநிலை – வாழ்க்கையின் உண்மை பாடம்
வாழ்க்கையில் சோதனைகள் அதிகரிக்கும் போது,
அவை தண்டனை அல்ல…
உயர்வுக்கு முன் கிடைக்கும் தயார் நிலை.
🙏 தைரியம், பொறுமை, நம்பிக்கை –
இந்த மூன்றையும் கற்றுக் கொடுப்பதே
நடராஜரின் மௌனப் போதனை.
🕉️ ஓம் நமசிவாய
அமைதி உன்னை காப்பாற்றும்…
காலம் உனக்கு பதில் சொல்லும்… ✨
#ShivaTatva
#DivineTransformation
#SpiritualPath
#InnerPeace
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
சித்தம் சிவமொடு இருக்க !! சித்திக்குமே யாவும் !! தித்திக்குமே வாழ்வும் !!
சித்தம் !! நமது எண்ணம் !! எண்ணோட்டம் !!
எதை அடக்கியாண்டாலும் எண்ணத்தை அடக்குவது கடினம் !!
இந்த எண்ணமே நீங்கள் அனுபவிக்கும் யாவுக்கும் காரணம் !!
இந்த எண்ணாட்டமே நீங்கள் விரும்பத்தை !! விரும்புவதை விட ?? உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது !!
உங்கள் எண்ணம் வேண்டாததையே நினைத்துக்கொண்டே இருக்க !! அதுவே உங்கள் விருப்பம்போல எண்ண அலைகளாக பரவி !!
நீங்கள் வேண்டாததே உங்கள் விருப்பம்போலவே வந்து அடையும் !!
உதாரணமாக
" உங்கள் உறவு ஏதாவது செய்தால் கோவப்படும் என்று வைத்துகொள்வோம் !!
நீங்கள் அதை செய்து விட்டு ?? அவர்கள் கோவப்படுவார்களே ?? என்றே எண்ணிக்கொண்டே அவர்களை அடையும் போது !!
உங்கள் எண்ண அலைகள் உங்களுக்கு முன்னே அவர்களுள் உங்கள் விருப்பமாகி கோவத்தை தூண்டி தயாராக காத்து இருக்கும் !!
ஏனென்றால் அது உங்கள் மறைமுக விருப்பம் !!
ஆதலால் ??!!
" இதே சூழலில் உங்கள் எண்ணத்தில் சிவத்தை நிறுத்தி அவர் நாமம் ஓட்டிக்கொண்டே இருந்தால் !! நீங்களே அனுபவித்து பார்த்து மெய்யை உணருங்கள் !! "
இதுபோல முடிந்த அளவு ஒவ்வொரு செயலிலும் சிவத்தையே முன்னிறுத்தி அவர் நாமமே சிந்தையை ஆளவிட்டு !!
எதையும் செய்து பாருங்கள் !! நீங்கள் அறியாத திறனும் !! நேர்த்தியும் !! ஆனந்தமும் !!
நீங்களே வியக்கும்படி வெளிப்பட்டு !! உங்களை பிற எண்ண அலைகள் பாதிக்காது ?? நீங்களும் எப்போதும் நேர்மறையாகவே செல்படுவிர்கள் !!
இறைவன் இயக்கம் !! எல்ல உயிரையும் !! எதையும் !! அதற்க்கு அருளப்பட்ட பணியை !! சரியாக செய்யவே உள்ளிருந்து உடனாய் இயக்கி அருள்கிறது !!
நாமோ எதிர்மறையாகவே சிந்தித்து !!
அந்த எதிர்மறையையே சிந்தையில் ஆளவிட்டு ??
அதையே உங்கள் எண்ண அலைகளாக பிரதிபலிக்க செய்து !!
அதையே மறைமுக விருப்பமாகவும் வெளிபடுத்தி !!
அதனால் விளையும் பயனையே அடைந்து !!
ஐயோ துன்பம் !! கஷ்டம் !! துயரம் !! என்று மீண்டும்மீண்டும் அதையே விரும்ப அதுவே விளைகிறது !!
எதையும் அதன்விருப்பமாகி அருள்பவனை சிந்தையால் பற்றி !! சிந்தையில் இருத்தி !! சித்தமே சிவமே என்று இருக்க !!
பரிபுரனத்துமான சிவம் !! உங்கள் எண்ண அலைகள் என்ற இடையுறு இன்றி உங்களை அடையும்போது !!
இறையருள் என்ற அற்புதத்தை ஒவ்வொரு நொடியும் !! அனுபவித்து ஆனந்தமாக வாழலாம் !!
அந்த ஆனந்தத்தின் துளியின் துளியை அனுபவிக்கவைத்து !! வெளிபடுத்துபவன் !! திருவருளாலேயே !! அவனே இவனுள் பதிவாகவும் வெளிப்படுகிறான் !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே
நடராஜா நடராஜா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
# ***அழைக்கிறான் இறைவன் ??!! ( கொஞ்சம் ஆழ்ந்த , அழுத்தமான பதிவு ..)***
யாரோ அழைப்பது போல !! என்னிடம் ஏமாறு ?? என்று இறைவன் ஒருபோதும் அழைப்பது இல்லை ..
எப்போதும் புலன்கள் வழியே !! சுற்றி திரிந்துகொண்டே இருக்கிறாய்யே ..
கண்ணின் காட்சி !! அதை ஒத்த சிந்தனை என்றே ஓடுகிறாய் ??
காதில் ஓசை !! அதன் இருப்பில் ஓடுகிறாய் ??
நாசியின் வாசம் !! அதை நோக்கி ஓடுகிறாய் ??
நாக்கின் சுவை !! பேச்சு !! அதை சுவைக்கும் ?? கேட்க ஆள் தேடியும் ஒட்டுகிறாய் ??
உடலின் உணர்வு !! அந்த உணர்வை அடக்க ஓடுகிறாய் ??
ஆனால் ஒன்று !!
உன்னிடம் இருக்க மட்டும் ?? உன்னால் முடியவே இல்லை என்பதே எதார்த்தம் ..
யாரோடு ஓடலாம் !!
எந்த நினைவோடு ஓடலாம் !!
யாரைப்பற்றி விமர்சிக்க !! புகழ !! ஏமாற !! ஏமாற்ற !! ஓடலாம் !! என்று இரவு பகல் பாராதே !!
நிஜமாய் ?? நினைவாய் ?? கணவாய் ?? கற்பனையாய் ?? ஓடிக்கொண்டே இருக்கும் உன்னை .........
" இறைவன் அழைக்கிறான் "
எங்கே இருந்து அழைக்கிறான் ?? என்ற கேள்வி உடனே கேள்வி எழும் ..
வேறு எங்கே இருந்து ??
உன் உள்ளே இருந்தே அழைக்கிறான் !!
என்ன சொல்லி அழைக்கிறான் ??
" உள்ளே வா !! வெளியே சுற்றி , கொடுத்த ஆற்றலை தொலைத்த வரை போதும் !! "
" உள்ளே வா !! உன்னுள்ளே வா !! " என்றே அழைக்கிறான் ..
என்னோடு இரு !! தருவதை உன்னுள்ளே , உனக்காக பெருக்கிக்கொள்ள வா !!
எதன்மீதோ பொய்யான நம்பிக்கை ?? சந்தேகம் ?? ஆறுதல் ?? அன்பு ?? என்று அலைபாய்ந்து இதுவரையில் ஏமாற்றத்தையே பெற்று !! இருப்பதை தொலைத்தவரையில் போதும் உள்ளே வா " என்ற அழைக்கிறான் இறைவன் !!
" நீ தான் இறைவன் ஆயிற்றே !! என்னை இழுத்து உள்ள போட உன்னால் முடியாதா ?? " - என்ற திமிர் கேள்வி நம்முள்ளும் எழும் ..
அதற்க்கும் இறைவன் பதிலளிக்கிறான் ..
அப்படி இழுத்து போட்டு !! உன்னை நித்தமும் புதுப்பித்து !! நீ கெடுத்துக்கொண்ட உன்னை சரிப்படுத்தி !! தினமும் கொடுக்கின்றேன் !! தூக்கம் / விழிப்பு என்றே ..
அந்த ஆற்றலை தான் வலிய போய் தொலைக்க ஓடிக்கொண்டே இருக்கின்றாய் ..
இப்படி இழுத்து போடுவதை விட ..
நீயே உவந்து உணர்ந்து உள்ள வா !! உணர்ந்து வா !! என்று தான் உன்னை அழைக்கின்றேன் ..
வருவாயோ ??
உன்னில் கலந்த கடவுளாய் என்னை உணர்வாயோ !! அனுபவிப்பதையோ !! நினைத்ததை எல்லாம் பெறுவாயோ ?? என்று உனக்கு உன்னையே மேன்மேலும் கொடுக்கவே அழைக்கிறான் இறைவன் !!
வாழ்த்துகள்
புரிந்தால் சந்தோஷம் !!
புரியாவிட்டால் புரியவைக்கவும் நானே இருக்கிறேன் என்ற சந்தோஷம் !! ஏதோ இறையின் குரலாய் இவனுள் ..
இவனோடு சேர்த்து யாருக்கோ ........................
திருச்சிற்றம்பலம்
நடராஜா நடராஜா #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்
ஒம் நமசிவாய 🙏
குறைவு இலா நிறைவே
கோது இலா அமுதே
ஈறு இலாக்
கொழுஞ் சுடர்க் குன்றே
மறையுமாய்
மறையின் பொருளுமாய்
வந்து என் மனத்திடை
மன்னிய மன்னே
சிறைபெறா நீர் போல்
சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந்துறை உறை
சிவனே
இறைவனே நீ
என் உடல் இடம் கொண்டாய்
இனி உன்னை
என் இரக்கேனே
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶


