
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகவும், இருளையும் அறியாமையையும் நீக்கி அருளைப் பெறும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த வழிபாடு தோன்றியதற்கான காரணங்களாக பிரதானமாக 5 புராண நிகழ்வுகள் கூறப்படுகின்றன.
1.அடி முடி காண முடியாத அக்னிப் பிழம்பு: பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டபோது, சிவபெருமான் ஒரு பிரம்மாண்டமான அக்னிப் பிழம்பாக (லிங்கோத்பவர்) தோன்றினார். அந்த அக்னியின் தொடக்கத்தையும் முடிவையும் காண முடியாதபடி நின்ற இந்நாள் தான் மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது.
2.சிவன் - பார்வதி திருமணம்: சிவபெருமான் அன்னை பார்வதியைத் திருமணம் செய்து கொண்ட புனிதமான இரவு இது என்றும், சிவம் (அறிவு) மற்றும் சக்தி (ஆற்றல்) ஒன்றிணைந்த நாளாகவும் இது போற்றப்படுகிறது.
3.ஆலகால விஷம் அருந்துதல்: பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த கொடிய ஆலகால விஷத்தை உண்டு, உலகைக் காக்க சிவபெருமான் நீலகண்டனாக மாறிய நிகழ்வும் இந்த நாளில் நினைவு கூறப்படுகிறது.
4.பார்வதி தேவியின் தவப்பயன்: ஒருமுறை பிரளய காலத்தின் போது உலகம் அழியாமல் காக்க, பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி இரவு முழுவதும் தவம் இருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், "இந்த சிவராத்திரி நாளில் தன்னை வணங்குபவர்களுக்கு சகல நன்மைகளையும் வழங்குவேன்" என்று அருளியதாகக் கூறப்படுகிறது.
5.வேட்டைக்காரன் கதை
ஒரு வேட்டைக்காரன், இரவு வனத்தில் சிக்கிவிடுகிறான். கொடிய விலங்களிடமிருந்து தப்பிக்க ,தன்னை அறியாமல் ஓர் வில்வ மரத்தில் ஏறிக்கொள்கிறான். தூங்காமல் இருக்க கைக்கெடுட்டும் வில்வ இலைகளை பறித்து ஓவ்வொன்றாக கீழே போடுகிறான். அவை மரத்துக்கு கிழே இருக்கும் லிங்கத்தில் விழ..அவை அர்ச்சனையாக மாறுகிறது, விடியும் போது அவனுக்கு சிவ பார்வதி தரிசனம் தருகிறார்கள்.
அதுவே சிவராத்திரி இரவானது.
இப்படியாக 5 நிகழ்வுகள் காரணமாக சொல்லபடும் நிலையில்...மகா சிவராத்திரி இரவு என்பது நான்கு யாமங்களாக பிரிக்கப்படுகின்றன.
1. முதல் யாமம் (மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை)
அபிஷேகம்: பஞ்சகவ்யம் (பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்தது).
அர்ச்சனை: வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
பலன்: இந்த யாமத்தில் வழிபடுவதால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் மற்றும் செல்வ வளம் பெருகும்.
2. இரண்டாம் யாமம் (இரவு 9:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை)
அபிஷேகம்: பால், தயிர், நெய் மற்றும் சர்க்கரை (பஞ்சாமிர்தம்).
அர்ச்சனை: தாமரைப் பூக்கள் மற்றும் வில்வத்தால் அர்ச்சனை செய்யலாம்.
பலன்: இந்த நேரத்தில் சிவனை வழிபடுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும் மற்றும் மன அமைதி கிடைக்கும்.
3. மூன்றாம் யாமம் (நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை)
இதுவே லிங்கோத்பவ காலம் எனப்படும் மிக முக்கியமான நேரமாகும்.
அபிஷேகம்: தேன் மற்றும் பழச்சாறுகள்.
அர்ச்சனை: மல்லிகைப் பூக்கள் மற்றும் வில்வ இலைகள்.
பலன்: இந்த யாம வழிபாடு சகல வினைகளையும் நீக்கி, மோட்சத்தை அடைய வழிவகுக்கும்.
4. நான்காம் யாமம் (அதிகாலை 3:00 மணி முதல் காலை 6:00 மணி வரை)
அபிஷேகம்: கரும்புச் சாறு மற்றும் சந்தனம்.
அர்ச்சனை: நீலோத்பல மலர்கள் (கருங்குவளை) அல்லது நந்தியாவட்டை மலர்கள்.
பலன்: இந்த நேரத்தில் வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
ஒவ்வொரு யாமத்தின் முடிவிலும் சிவபெருமானுக்கு உரிய ஆராதனைகளும், நைவேத்தியங்களும் படைக்கப்படும். இந்த நான்கு கால பூசைகளையும் முறையாகக் கடைபிடிப்பது முழுமையான சிவராத்திரி பலனைத் தரும் என்பது நம்பிக்கை.
அறிவியல் ரீதியான பார்வை: பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் கிரகங்களின் அமைப்பு மனித உடலின் ஆற்றலை இயற்கையாகவே மேல்நோக்கி எழச் செய்யும் வகையில் அமைந்திருக்கும் இரவு இது என்று யோக முறைகளில் கூறப்படுகிறது.
இந்த நாளில் மனதை ஒருநிலைப்படுத்தி சிவனை வழிபடுவது தீய வினைக #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் ளை நீக்கி, மோட்சத்தை அடைய வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.
ஹரி ஓம் மஹா காளி !
-யாணன்
#🫂Happy Hug Day💕 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩
வாழ்க்கை உன்னை தள்ளுவது போலத் தோன்றும் !
ஆனால் , உண்மையில்
பிரபஞ்சம் உன்னை சரியான இடத்துக்கு
நகர்த்திக்கொண்டிருக்கும்.
நீ மூடப்பட்ட கதவுகளைப் பார்த்து
“என் வாழ்க்கை முடிந்தது” என நினைப்பாய்..
ஆனால் , அதே நேரத்தில்
உன் பின்னால்
ஒரு கதவு அமைதியாக திறக்கப்பட்டிருக்கும்..
அதைப் பார்க்கும் மனநிலையில்லை
அவ்வளவுதான் !
கர்மா என்பது
பழிவாங்கும் சட்டம் அல்ல..
அது
சமநிலை ஏற்படுத்தும் விதி...
நீ அதிகமாக பொறுத்திருந்தால்
ஒரு நாள்
வாழ்க்கை உனக்கு
அதிகமாகத் தரும்.
நீ யாரையும் காயப்படுத்தாமல்
முன்னேறினால்
உன் முன்னேற்றம்
நிலைத்திருக்கும்.
இதுதான் ஆழம் !
நீ கேள்வி கேட்டபோது
பிரபஞ்சம் அமைதியாக இருந்தது.
நீ ஏற்றுக்கொண்டபோது
அது வேலை செய்யத் தொடங்கியது.
எதுவும் நடக்காத நாட்களில்
நம்பிக்கையை விடாதே.
அந்த நாட்களில்தான்
உன் கர்மாவின்
பழைய பாக்கிகள்
முடிக்கப்படுகின்றன !
ஒரு நாள்
நீ பின்னால் திரும்பிப் பார்த்தால்
உனக்கே ஆச்சரியம் வரும் !
“நான் நினைத்ததைவிட
என்னை வாழ்க்கை
நன்றாகவே நடத்தி இருக்கிறதே” என்று !
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
சனீஸ்வரர்_அருமை_இதோ...
நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர்என்று சொல்வார்கள்.
அதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கை யிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவே ண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
இதைத்தான் 'ஏழரைச்சனி' என்கிறார்கள். 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி', 'யாரை விட்டது சனி' என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.
ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து,
''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான்.
அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை.
ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.
'எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.
*நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.
''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.
''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.
''எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா, விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னை யே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.
''ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.
''ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்து கொண்டார்.
ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?
ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன்.
ஏழரை நாழிகை கடந்தது. சிவபெரு மான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார்.
சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா... உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?'' என்றார்.
''இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல் லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷ த்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்'' என்றார்.
'சனீஸ்வரனின் விதி'யை நிர்ணயித்தவ ரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டிய து அவசியம்தான் என்பதை எடுத்துக்கா ட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.
ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வர னை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.
சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத் தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பக வான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்த போது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமா னை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுட ன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண் டிருந்தார் ஸ்ரீராமன்.
இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.
ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.
அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷ ரங்களைச் செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.
'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.
உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.
''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ள லாம்'' என்றான் அனுமன்.
''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.
'என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது.
என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும்.
'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.
அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.
அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு,
மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெய ர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொ ண்டு, கடலைநோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார்.
பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண் டியதாயிற்று.
அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?' என்றுகூடச் சிந்தித்தார்.
அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.
''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன்.
அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன்.
சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றே ன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன்.
''இல்லை, இல்லை. இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான்.
அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன்,
''அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார்.
''ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன்.
சனியும் வரம் தந்து அருளினார். பொது வாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து
மங்குசனி,
தங்குசனி,
பொங்குசனி
என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியி ன் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்ப டும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைக ளைச் சமாளித்து,முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும் #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #சனி பகவான் #சனி பகவான்🙏 #சனி பகவான்🙏✨ #சனி பகவான் மந்திரம்
🌿 சிவன் முதன் முதலில் கால் பதித்த பூமி – சிவபெருமானின் உண்மையான சொந்த ஊர்!
பொதுவாக சிவபெருமானின் இருப்பிடமாக நாம் அறிந்திருப்பது கைலாசம்.
ஆனால் புராணங்கள் கூறும் இன்னொரு ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா?
உலகில் சிவபெருமான் முதன்முதலில் தோன்றிய தலம் – கைலாசம் அல்ல!
அது – தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள புனித ஸ்தலம் உத்தரகோசமங்கை.
🌟 சிவனின் ஆதித் தலம் – உத்தரகோசமங்கை
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த பண்டைய சிவஸ்தலம்.
இந்த ஆலயம் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது என புராணங்களும், வரலாற்று சான்றுகளும் தெரிவிக்கின்றன.
புராணக் குறிப்புகளின்படி,
சிவபெருமான் முதன்முதலில் பூமியில் கால் பதித்த இடம் இதுவே.
பார்வதி தேவிக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்த புனித தலமும் இதுவே.
அதனால் இந்த ஊருக்கு
“உத்தரகோசமங்கை” என்ற பெயர் வந்தது.
📖 பெயரின் அர்த்தம்
உத்திரம் – ரகசியம்
கோசம் – உபதேசம்
மங்கை – பெண் (பார்வதி தேவி)
அதாவது,
“சிவபெருமான் பார்வதிக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்த இடம்”
என்பதே உத்தரகோசமங்கையின் முழு பொருள்.
🕉️ உலகப் புகழ்பெற்ற மரகத நடராஜர்
இந்த கோவிலின் மிகப்பெரிய சிறப்பு –
உலகிலேயே அபூர்வமான மரகத நடராஜர்!
ஆறடி உயரம் கொண்ட பச்சை மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் இங்கு உள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய மரகத நடராஜர் திருவுருவம் இதுவே.
🌼 ஆண்டு முழுவதும் சந்தன காப்பு
இந்த மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தன காப்பால் மூடப்பட்டிருப்பார்.
மார்கழி மாதம் திருவாதிரை நாளில் மட்டும்
அந்த சந்தன காப்பு களையப்பட்டு,
மரகத நடராஜர் தனது இயல்பான பச்சை நிறத்தில் அருள்பாலிப்பார்.
அந்த நாளே –
ஆருத்ரா தரிசனம்!
அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த தலத்தில் கூடுவர்.
🔱 கோவிலின் ஆன்மிகப் பெருமைகள்
மூலவர் – மங்களேஸ்வரர்
அம்பாள் – மங்களேஸ்வரி
இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
இக்கோவில்,
சிவபுரம்
தட்சிண கைலாசம்
பிரம்மபுரம்
மங்களகிரி
ஆதி சிதம்பரம்
என்ற பல புனிதப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
🛕 ஆயிரம் லிங்கங்களை கொண்ட சகஸ்ர லிங்கம்
இந்த கோவிலில் உள்ள இன்னொரு அபூர்வம் –
ஆயிரம் லிங்கங்களை ஒரே திருமேனியில் கொண்ட சகஸ்ர லிங்கம்!
இது இந்தியாவில் மிக அரிய சிவ வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
🐟 திருவிளையாடல் நடந்த புனித பூமி
திருவிளையாடல் புராணத்தில் கூறப்படும்
“வலை வீசி மீன் பிடித்த படலம்”
இந்த உத்தரகோசமங்கையில் தான் நடைபெற்றதாக நம்பப்படுகிறது.
👑 வரலாற்றுச் சிறப்புகள்
பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தை திருப்பணி செய்து பாதுகாத்தனர்.
சில காலம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் உத்தரகோசமங்கை விளங்கியது.
இன்றும் இந்த கோவில் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
🛐 பல மகான்கள் வழிபட்ட தலம்
இந்த புனித ஸ்தலத்தில் வழிபட்டு அருள் பெற்ற மகான்கள்:
வேத வியாசர்
காகபுஜண்டர்
வானாசுரன்
மயன்
மாணிக்கவாசகர்
அருணகிரிநாதர்
காரைக்கால் அம்மையார்
அத்துடன்,
ராவணன் – மண்டோதரி தம்பதிகள் இங்கு குழந்தை வரம் வேண்டி தவம் இருந்ததாகவும் புராணம் கூறுகிறது.
🛕 அபூர்வ வழிபாட்டு அம்சங்கள்
இங்கு தாழம்பூ வைத்து சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படுகிறது.
இந்த தலத்தில் தாழம்பூ வைத்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள வராகியை வழிபட்டால் தீராத பிரச்சினைகள் தீரும்.
முருகனுக்கு வாகனமாக யானை இருப்பது இத்தலத்தின் இன்னொரு விசேஷம்.
இந்திரன் தன் ஐராவத யானையை இத்தலத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
🌊 அதிசயமான தீர்த்தம்
கோவில் குளத்தில் வாழும் மீன்கள் –
கடல் நீரில் வாழும் மீன்கள் என்பதும் ஒரு அதிசயம்!
தல விருட்சம் – இலந்தை மரம்
தீர்த்தம் – அக்னி தீர்த்தம்
🛡️ வரலாற்றுப் பாதுகாப்பு
மரகத நடராஜரை கொள்ளையடிக்க அலாவுதீன் கில்ஜி முயன்றபோது,
அவர் முயற்சி தோல்வியடைந்ததாக வரலாறு கூறுகிறது.
🎉 முக்கிய திருவிழாக்கள்
இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்:
சித்திரை திருக்கல்யாணம்
வைகாசி வசந்த உற்சவம்
ஆனி 10 நாள் திருவிழா
மார்கழி திருவாதிரை
மகா சிவராத்திரி
இதில் மிக முக்கியமானது –
ஆருத்ரா தரிசனம்!
🌿 மரகத நடராஜரின் சந்தன மகிமை
ஆருத்ரா தரிசன நாளில் களையப்படும் சந்தனத்தை,
வெந்நீரில் கரைத்து பருகினால்,
தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
🙏 முடிவுரை
கைலாசம் சிவனின் தெய்வீக வாசஸ்தலம் என்றாலும்,
பூமியில் சிவபெருமான் முதன்முதலில் தோன்றிய இடமாகக் கருதப்படுவது –
இந்த உத்தரகோசமங்கைதான்!
அதனால் தான் இது,
“சிவனின் உண்மையான சொந்த ஊர்” என போற்றப்படுகிறது. #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 🔱ஹர ஹர மகாதேவா 🔱
🔱ஊன்இயன்றதலை யில்பலிகொண்டு உல
கத்துள்ளவர் ஏத்தக்
கான்இயன்றகரி யின்உரிபோர்த்துஉழல்
கள்வன்சடை தன்மேல்
வான்இயன்றபிறை வைத்தஎம்ஆதி
மகிழும்வலி தாயம்
தேன்இயன்றநறு மாமலர்கொண்டுநின்று
ஏத்தத் தெளிவு ஆமே !🔱
🔱பொருள் : -🔱
🔱பிரம கபாலத்தை ஓடாகக் கொண்டு பிச்சையேற்று, உலகத்தோர் போற்றுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டு எக்காலத்திலும் சஞ்சாரம் புரிந்தும், தோற்றத்தை மறைத்து கள்வனாய்த் தனது சடைமுடியில் வெண்பிறை சூடிய எமது ஆதி மூர்த்தியாகிய ஈசன் மகிழும் திருவலிதாயம் என்னும் பதியை மாமலர் கொண்டு ஏத்தத் தெளிவு உண்டாகும்🔱
🔱திருச்சிற்றம்பலம் 🔱
கோவிட்டு 19 கட்டாயப் பரப்பூசி......
( அந்த கருமத்துல என்னென்ன சேர்க்கைன்னே
யாருக்கும் தெரியல ) ......
ரத்தத்தில் இருந்து, கெமிக்கல் மருந்துகளால் சேர்ந்த கழிவுகளை நீக்க #அகத்திகீரை --வாரம்
இரண்டு நாட்கள் (மட்டும் ).
[{அகத்திக்கீரை, பலகாலமாக மருந்து மாத்திரை எடுத்தோர் தங்களது ரத்தத்தில் /உடலில் சேர்த்து வைத்த கெமிக்கல் மருந்து/மாத்திரை கழிவுகளையும் நீக்கும் தன்மையுடையது.}]
குளறுபடியான (DNA ) மரபணு சீராக
#வில்வ_இலை
(முடிந்தால் பச்சையாக ஓரிரு இலைகள் மென்று உண்ணலாம் )
அல்லது ஒரிஜினல் தயாரிப்பு வில்வப் பொடி (சூரணம் )
48 முதல் 60 நாட்கள்
தொடர்ந்து எடுங்க.
நிச்சயம் மருந்து கழிவுகள் நீங்க
வாய்ப்பு உள்ளது
நம்புவோர் மட்டும் நம்பலாம்.....
மேலும்,.....
மாரடைப்பு சம்மந்தப்பட்ட
ஆத்திர அவசரத்திற்கு
Dr. பக்தவச்சலம் அவர்கள் சொல்லும் #Loading_dose மாத்திரைகள்
மற்றும்
அவர்கள் சொல்லும்
#Rescue_remedy ஆகியவை கைகொடுக்கும்..... நன்றி.
#udalnalam #udalnalam #udalnalam #உடல்நலம் #உடல்நலம் வாழ வழிமுறை





