
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🌺🌿தைப்பூசம்🌺🌿
🌺🌿இன்று தைப்பூச திருவிழா 1.02.2026🌺🌿
🌺🌿அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
🌺🌿தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வரலாறு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.
🌺🌿அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.
🌺🌿சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.
🌺🌿காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
🌺🌿அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
🌺🌿சர்க்கரை காவடி 🌺🌿- சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
🌺🌿தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
🌺🌿பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
🌺🌿பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
🌺🌿மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
🌺🌿மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது
🌺🌿வடலூரில் (இந்தியா) தைப்பூசம்
🌺🌿கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்.. காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
🌺🌿ஈழத்தில் தைப்பூசம்
தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.
🌺🌿அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.
🌺🌿வெளிநாடுகளில்மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.
🌺🌿பினாங்கு தைப்பூசம்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
🌺🌿ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்
மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .
🌺🌿சிங்கப்பூரில் தைப்பூசம்
சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
🌺🌿மொரீஷியசில் தைப்பூசம்
சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.
🌺🌿ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்
இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு.மிக அற்புதமான பலாபலன்களை அருளும் இந்த தைப்பூசத் திருநாளில் குமரன் அருள் பெற்று மகிழ்வோம். ஆண்டுதோறும் தை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வருகின்ற பூசம் நட்சத்திரத்தில் தைப்பூசம் கொண்டாடப்படும். இவ்வாண்டு ஜனவரி 28-ம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. இந்த திருநாளில் முருகனின் கோவிலை நாடிச் சென்று வழிபடுவோம். முருகனின் கருணையால் கவலைகளற்ற வாழ்வை வரமாக பெறுவோம். தைப்பூசத்தன்று சிவாலயங்களுக்கு சென்று அம்மையப்பனையும், கந்தப்பனையும் வணங்கி வழிபட்டு சகல தோஷங்களும் நீங்கப்பெற்று சந்தோஷ வாழ்வை பெறலாம் #தை பூசம் #தை பூசம் #தை பூசம் திருநாள் 🙏🏼🤗 #🙏தை பூசம் 🔥 #தை பூசம் #தை பூசம் ஸ்டேட்டஸ்.😉😉
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும்..! அந்த நாள் சிறப்புமிக்க விழா நாளாகவும் இருக்கும் !...
1.தை -பூசம்.
தைப்பூசம்..!
2.மாசி -மகம்.
மாசிமகம்..!
3.பங்குனி-உத்திரம். பங்குனிஉத்திரம்..!
4.சித்திரை-சித்திரை
சித்ரா பெளர்ணமி...!
5.வைகாசி-விசாகம் வைகாசிவிசாகம்..!
6.ஆனி-கேட்டை
பவித்ரோ உற்சவம்...!
7.ஆடி -உத்திராடம்
8.ஆவணி -அவிட்டம்
ஆவணி அவிட்டம்..!
9.புரட்டாசி - பூரட்டாதி
அடுத்த நாளிலிருந்து மஹாளய பட்சம் ஆரம்பம் ..!
10.ஐப்பசி -அசுவினி
ஐப்பசி அன்னாபிசேகம் ..!
11.கார்த்திகை-கார்த்திகை
கார்த்திகை தீபம்..!
12.மார்கழி -திருவாதிரை
ஆருத்ரா தரிசனம் ..! #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
அரிவையர் அருகு அமர அயிலேந்தி
அறிவைத்தர பழனி அமர் அண்ணலே
அறுகு மணி அண்ணன் அகமெச்சும் அன்பனே
அருகுவா அன்பெனன்முன் அம்மயில் அமர்ந்தே. #murugan #Muruga #thiruchentur murug
an #OM MURU🙏 #ஓம் முரு
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 நமசிவாய வாழ்க 🕉️
🙏இனிய சிவ மாலை வணக்கம் 🙏
🕉️ஊன்இயன்றதலை யில்பலிகொண்டு உல
கத்துள்ளவர் ஏத்தக்
கான்இயன்றகரி யின்உரிபோர்த்துஉழல்
கள்வன்சடை தன்மேல்
வான்இயன்றபிறை வைத்தஎம்ஆதி
மகிழும்வலி தாயம்
தேன்இயன்றநறு மாமலர்கொண்டுநின்று
ஏத்தத் தெளிவு ஆமே !🕉️
🌸பொருள் : -🌸
🕉️பிரம கபாலத்தை ஓடாகக் கொண்டு பிச்சையேற்று, உலகத்தோர் போற்றுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டு எக்காலத்திலும் சஞ்சாரம் புரிந்தும், தோற்றத்தை மறைத்து கள்வனாய்த் தனது சடைமுடியில் வெண்பிறை சூடிய எமது ஆதி மூர்த்தியாகிய ஈசன் மகிழும் திருவலிதாயம் என்னும் பதியை மாமலர் கொண்டு ஏத்தத் தெளிவு உண்டாகும்🕉️
🙏திருச்சிற்றம்பலம் 🙏
#தைப்பூசம்_பற்றிய_சில_தகவல்கள்
#தைப்பூசத்_திருவிழா 1.2.2026
1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.
4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.
7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர் கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.
9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.
10. முருகப் பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங் களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.
11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.
13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.
14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.
15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான்.
16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத் தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.
17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.
19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச் சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.
21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.
22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னியருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.
23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.
24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.
25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுவது மலேசியாவில் மட்டுமே. #murugan #Muruga #thiruchentur murug
an #முருகன் #ஓம் முரு
#🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
மனச்சோர்வை
நீக்கும் மாமருந்து...
1)சோர்வு என்பது அதிக உடல் தளர்வினால் ஏற்படுவது. மனசோர்வு என்பது
மன தளர்வினால் அதாவது அதிகமான வீண் சிந்தனையின் சுமைகளின் சூழ்நிலையால் ஏற்படும் ஒரு கவனக்குறைவு.இந்த மனச்சோர்வானது தானாகவே உடல் சோர்வையும் ஏற்படுத்திவிடும். மனம் ஏன் சோர்வடைகின்றது. உடல் ஏன் சோர்வடைகின்றது. உடல் சோர்வடைய காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவை அளிக்காததே காரணம். மனச்சோர்வுக்கு மகிழ்ச்சி நிறைந்த எண்ணங்களை நேர்மறையான குஷி நிறைந்த எண்ணங்களை மனதிற்கு வழங்காததே மனச்சோர்விற்கான காரணம். உடல் பழுதுபட்டிருக்கும் பொழுது உள்ளம் சுமை நிறைந்திருக்கும் போது எப்படி மனச்சோர்வு வராமல் இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். உடல் பழுதுபட்டிருந்தால் அதற்கு மருந்து தேவைப்படுவதைப் போல உள்ளம் பழுதுபட்டிருந்தாலும் அதற்கு மகிழ்ச்சி என்று மருந்து தேவை. இதைத்தான் நேர்மறையான எண்ணம் அதாவது பாசிட்டிவ் தாட்ஸ் என்று உலகம் சொல்கின்றது.
2) உடல் சோர்வு அடையும்போது அதை புத்துணர்ச்சி பெற வைப்பதற்காக எந்த செலவும் இல்லாத அரசாங்க ஆஸ்பத்திரி இருப்பதைப் போல மனம் சோர்வடையும் போது இருக்கவே இருக்கின்றது கோவில்கள் மற்றும் தியான நிலையங்கள். மனம் சோர்வடையும் பொழுதெல்லாம் இறைவனுடைய புகழை பாடுவது மனதை மீண்டும் புத்துணர்ச்சி பெற வைப்பதற்கான மாமருந்து ஆகும். மனதை ஒருமுகப்படுத்தும் தியானம் செய்வது மனதிற்குள் சுப எண்ணங்களை உற்பத்தி செய்யும்.
3) எல்லாவற்றையும் இங்கே தான் இழந்திருக்கின்றோம். இழந்தது திரும்ப வர வேண்டும் என்றால் நமக்குள் உறுதியான சுப எண்ணங்கள் தேவை. எப்படி துர்நாற்றம் வரும் இடத்தில் தானாகவே மூக்கை மூடி கொள்கின்றோம். அதுபோல நம்மைப் பற்றிய பலஹீனமான எண்ணங்களை மனச்சோர்வின் காரணமாக மனம் உற்பத்தி செய்தால் உடனடியாக மனதின் கதவை அங்கே மூட வேண்டும். உங்களைப் பற்றிய பலவீனமான எண்ணங்களை பிறர் உற்பத்தி செய்து அதை பிறருக்கு சொல்வதன் மூலம் உங்களை மேலும் பலவீனப்படுத்த கூடிய செயல்களை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது. எது உங்களை நிலைகுலையச் செய்கின்றதோ அதை உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள். ஒரு போதும் இறைவனைத் தவிர வேறு ஒன்றை காணாதீர்கள். ஏனென்றால் தீர்ப்பு அவர் கையில் உள்ளது எனும் பொழுது தீரப் போகும் மனிதர்களைப் பற்றி என்ன கவலை உள்ளது.
3) மனச் சோர்வுக்கு முக்கிய காரணம் தாழ்வு மனப்பான்மை. பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம். யார் உங்களைப் பற்றி என்ன நினைத்தால் என்ன? யாராவது உங்களுக்கு உணவளிக்க போகின்றார்களா? அல்லது கஷ்டத்தில் பங்கு கொள்ள போகின்றார்களா விமர்சனம் செய்ய முன்னால் வரும் மனிதன் அதற்கான தீர்வை தர ஒருபோதும் வருவதில்லை. யார் ஒரு இக்கட்டான நிலையில் தீர்வைத் தருகின்றார்களோ அவர்கள்தான் உங்களது உண்மையான நண்பர்கள். விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். அவர்கள் நெற் பயிரோடு சேர்ந்த களைகள். அறுவடையின் போது அழிக்கப்படுபவர்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் மனச்சோர்வு. அடையாதீர்கள். ஒருபோதும் நல்லவனால் கெட்ட பெயர் ஏற்படாது. கெட்டவனால் நல்ல பெயர் ஏற்படாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
4) எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் பொழுது அந்த முடிவு உங்களை மனச்சோர்விலிருந்து நிரந்தரமாக அகற்றி விடும். சிந்திக்காமல் சிக்கிக் கொள்வதன் காரணமாக மனச்சுமை ஏற்படுகின்றது. நாம் யாருக்கும் சுமையாகவோ யாரும் நமக்கு சுமையாகவோ வராமல் இருக்க வேண்டுமென்றால் நம்மை நாம் முன்னரே யோசித்து தற்காத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இதில் காலம் கடந்து விட்டால் சுப எண்ணங்கள் மூலம் இழந்த காலத்தை மீட்டெடுத்து நிலை நிற்க வேண்டும். மனச்சோர்வு அநேக வியாதிகளுக்கு காரணம். மனதை மகிழ்ச்சியாக எப்பொழுதும் வைத்திருந்தால் உடல் தானாகவே ஆரோக்கியமாக மாறிவிடும். எனவே உடற்பயிற்சி செய்வது போல மனப்பயிற்சிக்கு தியானங்களில் ஈடுபடலாம். ஒவ்வொருவரும்
அதிமேலான இராஜயோக தியானம் அவசியம் செய்ய வேண்டும். எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்று சொல்பவர்கள் கற்றுக் கொண்டு இருக்கும் இடத்திலேயே நடைமுறைப்படுத்தி அதன் லாபத்தை எடுக்கலாம்.
5) மனச்சோர்வு அகல வேண்டும் என்றால் இறைவனை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். மனிதனை நண்பன் ஆக்கினால் அவன் சூழ்நிலைக்கு ஏற்றார் போல மாறி விடுவான். அவனுடன் பழக்கம் வைத்த காரணத்திற்காக நமது மனமும் சூழ்நிலையால் மேலும் கீழுமாக மனச்சோர்வு அடைந்துவிடும். எனவே இறைவன் சிவனை நண்பனாக மாற்றி விடுங்கள். ஒரு நிரந்தர மகிழ்ச்சி அடையக்கூடிய நண்பனாக தந்தை சிவன் இருக்கும்பொழுது வேறு யார் துணை வேண்டும். அவர் எப்பொழுதும் சதாசிவனாக இருக்கின்றார். என்றும் மாறாதவராக என்றும் புன்னகை பூத்தவராக என்றும் மன மகிழ்ச்சியை தருபவராக உடன் இருக்கின்றார். நீங்கள் உங்கள் மனச்சோர்வை போக்க தைரியம் என்ற ஒரு அடி எடுத்து வைத்தால் அந்த தைரியத்திற்கு இறைவன் ஆயிரம் அடி உதவி செய்ய முன்னால் எடுத்து வைப்பார்.
6) மனம் சோர்வடைந்தால் முகம் சோர்வடையும். சோர்வடைந்த முகத்தை பார்ப்பவர்கள் அவர்களும் சோர்வடைவார்கள். மன மகிழ்ச்சியே முகமலர்ச்சி. நாம் மனிதர்களாக இந்த பூமியில் வாழும் வரை மனச் சோர்வு எனும் வியாதியை பரப்ப கூடாது. அதற்காக மனதிற்குள் ஆயிரம் சங்கடங்களை வைத்துக்கொண்டு வெளியில் சிரிப்பவராகவும் காட்டிக் கொள்ள கூடாது. உண்மையான சுப எண்ணங்களால் நாம் நிறைந்து மகிழ்ந்திருக்க வேண்டும். நமது கவலைகளை வாங்கிக் கொள்ள நம்முடன் தந்தையாகிய சிவன் இருக்கையில் நாம் எதற்காக கவலைப்பட வேண்டும். சத்தியமாக நடந்து சுத்தமாக இருந்தால் போதும் எல்லாம் வெற்றி மேல் வெற்றியாக மாறிவிடும். இதுவரை எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை. இந்த நிமிடம் முதல் இறைவன் எனக்குத் துணையாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையின் முதல் அடியை உறுதியாக எடுத்து வையுங்கள் பிறகு பாருங்கள் என்னைப் போன்ற மகிழ்ச்சியான மனிதன் உலகில் யாருமே இல்லை என்று உங்கள் மனம் பாடுவதை நீங்களும் கேட்பீர்கள் இந்த உலகமும் கேட்கும். நல்வாழ்த்துக்கள். ஓம் சாந்தி. #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️
திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன் புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன் புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - பழந்தக்கராகம். #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
சிவ சிவ
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங் கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்(டு) ஏத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே
- திருநாவுக்கரசர் தேவாரம்- #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #✨பிரதோஷம்🕉️



