
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் #ஓம் நம சிவாய
*நினைத்தது நிறைவேற.. துன்பங்கள் விலகிட சிவனை தரிசனம் செய்யுங்கள்.!!*
-------------------------------------------------------
திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபடுபவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து தான், சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி, சிவனின் தலையிலேயே இடம்பெற்றான் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சோமன் என்பது சந்திரனை குறிப்பதால், இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சந்திர பகவானின் அருளையும் பெறலாம்.
சந்திரன் மனோகாரகன் என்பதால், மனக்குழப்பம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் நீங்கி மன அமைதியைத் தரும் என்று நம்பப்படுகிறது.
இந்த விரதத்தை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் எப்பேர்ப்பட்ட தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
*சோமவார விரதம்*
சிவபெருமானுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று சோமவார விரதம்.
16 திங்கட்கிழமைகள் சிவபெருமானுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது சோமவார விரதம் எனப்படுகிறது.
இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் மட்டுமே கடைபிடிக்கின்றனர். ஆனால் இவ்விரதத்தை எல்லா திங்கட்கிழமைகளிலும் கடைபிடிக்கலாம்.
*விரத தினத்தன்று:*
அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் சிவபெருமானின் படம் அல்லது லிங்கத்திற்கு மலர்கள் சூடி விளக்கேற்ற வேண்டும்.
நெற்றியில் திருநீறு பூசி சிவனை வழிபட்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
சிவபெருமானுக்குப் பிடித்தமான சர்க்கரைப் பொங்கல், பாயாசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
சிவ மந்திரங்கள், சிவ புராணம், சிவ அஷ்டோத்திரம் போன்றவற்றை படிக்கலாம் அல்லது கேட்கலாம்.
நாள் முழுவதும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருப்பது நல்லது.
முடிந்தவர்கள் நாள் முழுவதும் உபவாசம் இருக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது வேலைக்குச் செல்பவர்கள் ஒருவேளை உணவு அருந்தலாம் அல்லது பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். ஆனால், உப்பு சேர்க்காத உணவை உண்பது சிறந்தது.
பின்பு மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
*விரத பலன்கள்:*
சிவபெருமானை மனதார வழிபட்டு, இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள்.
தாயாருக்கு ஏற்படும் தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்கும்.
ஜாதகத்தில் சந்திரனின் நிலை வலுப்பெறும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
*சர்வம் சிவார்ப்பணம்*
➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️
#ஆன்மீக #பத்தி #தெரிந்து கொள்வோம் செழிப்பையும் அருளும் நீர் தேவதை சங்க நாகர்
அஷ்ட நாகங்களில் மிகவும் தனித்துவமானவர் சங்கன். சங்கத்தைப் போன்ற தூய வெண்மை நிறம் கொண்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர் வந்தது.
தூய்மை மற்றும் செல்வத்தின் அடையாளமாக இவர் போற்றப்படுகிறார்.
சங்கன் கடல் மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிலைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். எனவே, விவசாயம் செழிக்கவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும் இவரை வழிபடுவது பழங்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது.
சங்கின் வெண்மை நிறம் அமைதியையும், தெளிந்த ஞானத்தையும் குறிக்கிறது. இவரைத் தியானிப்பதன் மூலம் குழப்பமான மனநிலை மாறி, தெளிவான சிந்தனைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.
பாற்கடலில் தோன்றிய சங்கு எப்படி மகாலட்சுமிக்கு உகந்ததோ, அதுபோலவே சங்க நாகமும் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.
இவருடைய அருள் இருந்தால் இல்லத்தில் வறுமை நீங்கி, செல்வம் நிலைத்து நிற்கும்.
பத்ம நாகத்துடனான பிணைப்பு: புராணங்களில் சங்கன் மற்றும் பத்மன் ஆகிய இருவரும் இணைந்து பேசப்படுபவர்கள். இவர்கள் இருவரும் நிதிகளின் காவலர்களாகவும், உலகிற்கு வளத்தைத் தருபவர்களாகவும் விளங்குகிறார்கள்.
வழிபாட்டுப் பலன்:
மன அமைதி வேண்டியும், தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகவும் சங்க நாகத்தை வழிபடலாம். குறிப்பாக நீர் நிலைகளின் ஓரம் நாக தேவதைகளை வழிபடும்போது சங்கனை நினைப்பது மிகுந்த பலன் தரும்.
ஓம் சங்க நாகாய நமஹ!
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் பிரதேசத்தில், *10ம் நூற்றாண்டில் போஜராஜன் *ஒரு கோவிலை எழுப்பினார்,* போஜஷாலா என்று அழைக்கப்பட்டது.*
13ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜி காலத்தில் கோவில் இடிக்கப்பட்டு, மசூதியாக மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இந்த இடம் உள்ளது.
இடம் யாருக்கு சொந்தம் என்கிற வழக்கு, பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
செவ்வாய் கிழமைகளில் ஹிந்துக்களும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களும் வழிபாடு நடத்தி வந்தனர்.
தொல்லியல்துறை ஆய்வுகளை தொடர்ந்து, இந்த இடத்தில் சரஸ்வதி கோவில் இருந்ததற்கான ஆதாரமும், கோவில் இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி எழுப்பப்பட்டதும் தெரிய வந்தது.
நீதிமன்றம் இந்த இடம் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்துள்ளது,
முஸ்லீம்கள் தொழுகை மேற்கொள்ள, அரசு ஒரு இடத்தை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
#🤣 லொள்ளு #😆சிரிப்போ சிரிப்பு😉 #🚹உளவியல் சிந்தனை










