#Trichy Dharma வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்..
ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது..
#Trichy Dharma ஆசை.!*
குடும்பம் குட்டி குடும்பி என்று ஆனபின்பு..
குழந்தையாக மாற எனக்கு ஆசை வந்தது!
இடும்பை ஏச்சு துரோகம் நேரில் காணும் போது..
சின்னப்பிள்ளையாக
எனக்கு ஏக்கம் வந்தது..!
பள்ளிக்கூட மணியின் ஓசை கேட்ட போது..
பயிற்றிருந்த காலம் எனது கண்ணில் வந்தது
பாசத்தோடு பக்கம் அமர்ந்து மகிழ்ந்துவந்த பக்ருதீன் சூசையப்பன் ஞாபகமும் வந்தது!
தீபாவளி பொங்கல் என்று வந்துவிட்டால்..
தெருவில் வெடித்த ஓலைவெடி கனவில் வந்தது!
வாத்தியாரு கையை நீட்டி அடித்த அடிகளே..
வாழ்க்கையிலே ஏற்றி வைத்தப் படிகளானது!
கணினியிலே எனது பேரன் விளையாடிய போது.. கரும்பலகை சாக்பீசு கண்ணில் நின்றது!
தோளுக்குமேல் அண்ணன் தங்கை தம்பி வளந்தனர்..
தொலைந்து போன உறவுநிலை கண்ணீர் வந்தது!
குழந்தையாக இருந்திருந்தால் குழப்பம் இல்லையே!இது.. வளரவளர யாவருக்கும் புரியவில்லையே!
சண்டைப்போட்டுச் சேத்தி விட்டப் பருவம் போனதே.. காசுப்பணம் கோர்ட் கேசு வழக்கு வந்ததே.!
ஒன்று கூடி தெருவில் ஆடி வாழ்ந்த நாட்களை.. குழந்தைகளை பார்க்கும் போது நினைவில் வந்ததே.!
அன்று போல இன்று இங்கு வாழ்க்கை இல்லையே! அன்றலர்ந்த குழந்தையாக மலர ஆசையே.!
🎪🎪
#Trichy Dharma
**************
குவலயம்
மகிழகமாக
மலர்ந்த மலர்கள்
கையில் அள்ளிக்கொஞ்ச
வீட்டில் பூத்த நட்சத்திரங்கள்
மகிழ்விக்கும்
மனோரஞ்சிதங்கள்
பிணக்குற்ற பெற்றோர்
இணக்கமுற
சேர்த்து வைக்கும்
செல்லங்கள்
பாசம்படர
பேசும் குயில்கள்
நேசந் தொடர
பெற்ற நல்வரங்கள்
கோபத்தையும்
பகையாகாமல்
பதிவு செய்யும்
ஆச்சரியங்கள்
பேரன்பை பெருக்கும்
பிரபஞ்ச அதிசயங்கள் !!!
🎪🎪
மகளைப்போல் பொழியும் மழை
*****************************
துளிகளாக விழும் மழை நீரை
பிஞ்சு விரல் கொண்டு பிடித்து
வீட்டுக்குள் சிறைப் படுத்த
எப்போதும் ஆசை கொள்வாள்.
மேகத்துக்குள் ஊடுருவி
எங்கும் மழையாகப் பொழிந்திட
அவள் எண்ணங்களுக்குள்.
தீராத ரசனையுண்டு.
வியாபித்துப் பெய்யும் மழைகளுக்குள்
இடமாறி விழுந்தேனும்
நீராகப் பொழிவதே
அவளின் இலட்சியமாகும்.
நதிகளுக்குள்ளும் , கடல்களுக்குள்ளும்
அமைதியாக விழுந்தோடுவதே
தனது கனவுயென,
ஆச்சர்யம் கொள்வாள்.
மழையை வீட்டுக்குள்
குடியமர்த்தும் வழி முறைகளை
மேகத்திடம் பேசியவாறு,
சிந்தித்துக் கொண்டேயிருப்பாள்.
ஒரு அடை மழை நாளில்
சிந்திய மழைத் துளிக்குள்
ஊடுருவி
அழகாக மாறியிருந்தாள்.
இனி உங்கள் வீடுகளில்
சிந்தும் மழைத் துளிகளை
கவனமாக உற்று நோக்குங்கள்
அவளே நீராக துள்ளி வருகிறாள். #Trichy Dharma
🌹 கனவு இல்லை!....
ஒர் கவலை இல்லை!.... கபடம் இல்லை!..... ஓர் களவு இல்லை!.... வஞ்சம் இல்லை!.... நெஞ்சில் கொஞ்சம் பாரமில்லை சிறகடித்து பறக்கும் பட்டாம் பூச்சிகளாய் வாழ்வின் வசந்தத்தின் உச்சம் தொடும் மழலைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்🌹🌹🌹🌹 #Trichy Dharma #📸குழந்தைகள் புகைப்படம்👶 #🎈இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💖 #🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧 #🐻குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன்கள்








