ulaviyal sinthanay
15 Posts • 12K views
saravanan.
1K views
#ulaviyal sinthanay ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்?!*_ _*உண்மை: 1*_ _3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்._ _*உண்மை: 2*_ _உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்._ _*உண்மை: 3*_ _ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை._ _*உண்மை: 4*_ _சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்._ _*உண்மை: 5*_ _முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே._ _*உண்மை: 6*_ _பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்._ _*உண்மை: 7*_ _இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்._ _*உண்மை: 8*_ _ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது._ _*உண்மை: 9*_ _ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?_ _*உண்மை: 10*_ _உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்.._
10 likes
20 shares
saravanan.
1K views
#ulaviyal sinthanay தெரியாததை சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா?, தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை...*_ _தெரியாது என்பது வெளியில் தெரிந்தால்,_ _*●வெட்கமாம்,*_ _*●அழகிற் கேடாம்,*_ _*●இழிவாம்,*_ _*●அவமானமாம்,*_ _*●மானக்கேடாம்...*_ _ஆனால்!, இப்படி இல்லவே இல்லை. எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாக கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர்..._ _*அறியாமை வெட்கப்பட வேண்டியதல்ல;*_ _*அதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது...*_ _பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளை வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும்..._ _*வாழ்க்கை என்பது அனுபவங்களானது. ஒவ்வொரு மணித்துளிகளும் நாம் கற்றுக் கொள்ளவும், வருவதை ஏற்றுக் கொள்ளவும், வேண்டாததை மாற்றிக் கொள்ளவும், கூடிய அறிவையும் அனுபவங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கையாகும்...*_ _ஆகவே!, உள்ள நிலையை அறிவதிலும், உணர்ந்து அனுபவங்களைப் பெறுவதிலும் உள்ள திறமையே உற்சாகத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது..._ _*எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும், எல்லாவற்றிலும் நாம் திறமை மிக்கவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை...*_ _ஆனால்!, அப்படி இருக்கத்தான் வேண்டும் என்பது அவசியமுமில்லை. அப்படி இருக்கவும் முடியாது..._ _*நமக்குத் தெரிந்ததை தெரியும் என்போம்.*_ _*தெரியாததை தெரியாது என்போம். இது தவறொன்றும் இல்லை.*_ _*அவமானமில்லை...*_ _நம்மால் செய்ய முடிகின்ற செயலை முடியும் என்போம். முடியாததை என்னால் இயலாது என்போம்..._ _*அப்படி ஒப்புக்கொள்வது என்பது மோசமான தன்மை அல்ல, நேர்மையான பண்பாகும்...*_
12 likes
9 shares