நடிகர் மயில்சாமி
5 Posts • 214K views
-
848 views
#நடிகர் மயில்சாமி இன்று பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்களின் பிறந்த நாள் இன்று 🙏 இவர் கன்னிராசி திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு விவேக், வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்களுக்கு இணையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமானவர் நடிகர் மயில்சாமி அவர்கள். நாளடைவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இவருக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். இவர் கடைசியாக நடித்து திரைப்படம் தி லெஜண்ட் திரைப்படம் தான். விஜய்யின் கில்லி, அஜித்தின் வீரம், விக்ரமுடன் தூள், எல்.கே.ஜி, கடந்த ஆண்டு வெளிவந்த நெஞ்சுக்கு நீதி என பல படங்களில் நடித்து நம் மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் மாதிரி கொடை வள்ளல் யாரும் இல்லை. எல்லாருக்கும் சாப்பாடு போடுற குணம் படைத்தவன். மழை, புயல் வந்தபோதெல்லாம் படகு எடுத்துட்டு உதவி பண்ண கிளம்பிடுவாரு. பணம் செலவாகுதுனு சொன்ன, என்னத்த கொண்டு வந்தோம், என்ன கொண்டு போக போறோம்'னு சொல்லுவார். சுனாமி பாதிப்பு ஏற்பட்டு கடலூர் பகுதியில் ஒரு கிராமத்திற்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சென்று உதவி செய்வதை அறிந்த மயில்சாமி அங்கே சென்று தான் ஆசையாக எம்ஜிஆர் பதக்கம் போட்டு அணிந்திருந்த தங்க செயினை விவேக் ஓபராய் கழுத்தில் போட்டு விட்டு ஒரு வார்த்தை கூட பேசாம வந்துட்டார். கொஞ்சம் நின்னு இருந்தா அவர் இந்தியில் பேசுவது புரியாமல் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசித்திருப்பான் என நகைச்சுவையாக விவேக் மயில்சாமியை பற்றி பேசியது ரசிகர்களை உருக வைத்துள்ளது. ஒரு நாள் பணக்காரன் ஒரு நாள் பிச்சைக்காரன் ஒரு 10 ஆயிரம் ரூபாய் வந்தா கஷ்டப்படுறங்களுக்கு எல்லாம் கொடுத்து விட்டு கடைசியில என் கிட்ட வந்து ஆட்டோக்கு போகணும் ஒரு 50 ரூபாய் கொடு மச்சான்னு கேப்பான். ஒரு நாள் பணக்காரனா இருப்பான். ஒரு நாள் பிச்சைக்காரனா இருப்பான். பாரதியார் போல வீட்டுல பாரதியாரின் மனைவி ஏதாவது சம்பாதித்து விட்டு அரிசி வாங்கிட்டு வாங்கன்னு சொல்வாங்க, அவரும் அரிசி வாங்கிட்டு வரும் போது, காக்கா, குருவிகள் பசித்து கிடப்பதை பார்த்துட்டு காக்கை குருவி எங்கள் சாதி என அந்த அரிசியை அதுங்களுக்கு போட்டுட்டு வீட்டுல வந்து வாங்கிக் கட்டிப்பாரு, மயில்சாமியும் அப்படித்தான் என்று விவேக் கூறியுள்ளார். இன்று இவர் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம். இந்த பிறந்த நாளில் இந்த மாபெரும் கலைஞனை நினைவு கூறுவோம் 🙏
5 likes
4 shares