பிக் பாஸ் சீசன் 9
9 Posts • 5K views
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 9, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது என்பதே உண்மை. ஆண்கள் 10, பெண்கள் 10 என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக களம் இறங்கினர். இதில் பாதி பேர் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள். பலூன் அக்கா அரோரா தொடங்கி வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், துஷார், சுபிக்‌ஷா, அகோரி கலை, நந்தினி என போட்டியாளர்களின் தேர்வை கண்டு ரசிகர்கள் அப்செட் ஆகினர். வந்தவர்களில் ஒரளவுக்கு கண்டெண்ட் கொடுப்பவர்கள் என்றால் அது பார்வதி, கமரூதின், திவாகர் மட்டுமே. தன்னை தானே நடிப்பு அரக்கன் என சொல்லி கொண்டு திரியும் திவாகரை கடந்த வாரம் பயங்கரமாக செஞ்சி விட்டார் விஜய் சேதுபதி. இதுவரை 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த வாரம் கேம்மை இன்னும் சுவாரசியமாக்க 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். சாண்ட்ரா, பிரஜன், அமித், திவ்யா கணேஷ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்து, தங்களது கேம்மை தொடங்கி விட்டனர். இந்நிலையில் டிஆர்பியில் படு மோசமான நிலையில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 9 ஷோவை இன்னும் சுவாரசியமாக்க பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர் மஞ்சரி, தீபக், பிக் பாஸ் 5 போட்டியாளர் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். ஹோட்டல் டாஸ்க்கை நடத்த இவர்கள் மூவரும் ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதுக் குறித்த புரமோவும் வெளியாகியுள்ளது #பிக் பாஸ் சீசன் 9 #BIGBOSS9 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
9 likes
10 shares
பிகபாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும், ரசிகர்கள் நாள்தோறும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவும், கடுமையாக விமர்சனம் செய்யவும் பிக்பாஸ் நிகழச்சியை பார்த்து வருகினறனர். முதலில் திவாகர், அகோரி கலையரசன், பிரவீன் காந்தி, சபரிநாதன். கனி உள்ளிட்ட பல 20 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில். இதில் சிலர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வைல்ட் கார்டு என்டரியாக நடிகர் பிரஜின், அமித், திவ்யா, சாண்ட்ரா உள்ளிட்ட 4 பேர் 28-வது நாளில் உள்ளே நுழைந்துள்ளனர். இவர்கள் வந்த பிறகு, பிக்பாஸ் வீடடில் மாற்றம் இருக்கிறதா? அல்லது பழைய நிலையின் தான் உள்ளதா என்பது குறித்த கேள்விகள் அதிகமாகி வரும நிலையில், இதுவரை எந்த சீசனிலும் நடக்காத அடிதடி மோதல் இந்த சீசனில் நடந்துள்ளது. இந்த மோதலில் பிரவீனை கமருதீன் அடித்த நிலையில், சாண்ட்ரா கதறி அழுதுள்ளார். இது குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், பிரஜின்க்கு சப்போர்ட் செய்ய போக, கமருதீன் - பிரவீன் இடையே மோதல் எழுந்தது அதன்பிறகு கமருதீன் கிச்சனில் இருக்க. அங்கே வரும பிரவீன். இனிமேல் இப்படி நடந்தால் நன்றாக இருக்காது சொல்லிட்டேன் என்று சொல்ல, கடுப்பான கமருதீன். வெளியில் வந்து பிரவீனிடம சண்டைக்கு போக மோதல் முற்றி இருவரும் அடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். போட்டியாளர்கள் அனைவரும் இருவரையும் தடுத்துள்ளனர். #பிக் பாஸ் சீசன் 9
10 likes
11 shares