#பலவீனம்
உன்னை நீயே பலவீனமாக்காதே
உன்னுள் உள்ள உயிர் ஆற்றலை இயக்கு
உன்னுள் புதைந்திருக்கும் திறமையைச் செயலாக்கு!
இது வெல்பவர்களின்
உலகம்.. !
இது வெல்பவர்களுக்கான
உலகம் !
இங்கே தோற்றவரைகளைக்
கண்டு கொள்வதில்லை !
இங்கே புலம்புவர்களை
யாரும் மதிப்பது இல்லை!
இங்கே அழுபவர்களை ஆறுதல்படுத்துவதில்லை !
உங்களுக்கு உதவிட எவரும் வரப் போவதில்லை.!
மனிதரைகளை நம்பி நேரத்தை வீணாக்காதே
நீயே விழுந்தாய் . .
நீயே எழுந்திரு !
நீயே தோற்றாய் . . .
நீயே வெல் !
நீயே அவமானப்பட்டாய் . .
நீயே மரியாதை அடை !
இங்கே வாழ்க்கையை
வாழச் சொல்லிக் கொடுக்க யாரும் முன் வருவதுயில்லை.
அவர்கள் வாழ்வதற்கே வழி தேடி அலைகிறார்கள்.
நீ திடம் கொள் தீர்க்கமாய் இரு..!
உனக்குள் இருக்கும் உன்னையே அறிந்து தெளிந்து செயலாக்கு.
வாழ்க்கை உன் வசம்.