udalnalam👏👏
4 Posts • 177 views
ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்.. -டாக்டர்.பிரதீப் அகர்வால் நான் ஒரு மருத்துவர். அதனால்தான் அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன். மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனில், மருத்துவர் கூறுகிறார், Streptokinase ஊசி போடுங்கள் என்று.. அதற்கு 9,000 ரூபாய் என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700 - முதல் 900/- வரை மட்டுமே ஆனால் MRP ரூ. 9,000 அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள்? டைபாய்டு வந்ததெனில், மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும். மொத்த விற்பனை விலை ரூ 25/- ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார். மக்கள் என்ன செய்வார்கள்? சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மூன்று நாளுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது. டயாலிசிஸ் முடிந்து ஒரு ஊசி போடப்படுகிறது . MRP அனேகமாக ரூ1800. அதை மொத்த சந்தையில் இருந்து எடுக்க எண்ணினால், இந்தியா முழுவதும் தேடினாலும் எங்கும் கிடைக்காது ... ஏன்? மருந்து நிறுவனம், மருத்துவருக்கு மட்டுமே சப்ளை செய்கிறது. அந்த இன்ஜெக்க்ஷனின் அசல் விலை ரூ. 500/- மட்டுமே, ஆனால் மருத்துவர், தனது மருத்துவமனையில் ரூ.1800/- க்கு தருகிறார். மக்கள் என்ன செய்வார்கள்? நோய் தொற்று ஏற்பட்டு விட்டது.. மருத்துவர் எழுதிய ஆன்டிபயாடிக் விலை ரூ540, அதே மருந்து மற்றொரு நிறுவனத்தில் ரூ 150 மற்றும் ஜெனரிக் விலை ரூ 45 . ஆனால் வேதியியலாளர் மறுக்கிறார்.., நாங்கள் ஜெனரிக் அல்லது மற்ற நிறுவனங்களைத் சார்ந்தவற்றைத் தர மாட்டோம் என்பார். மருத்துவர் எழுதிக் கொடுத்ததை மட்டும் கொடுப்பார்கள்... அதாவது 540 ரூபாய். மக்கள் என்ன செய்வார்கள்? சந்தையில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை 750/- ரூபாயில் உள்ளது. அறக்கட்டளை மருந்தகம் 240/- ரூபாயில் தருகிறது. எனவே, ரூ. 750ல், மருத்துவர் கமிஷன் 300/- ரூபாய். எம்ஆர்ஐ ஸ்கேனில், மருத்துவர்கள் கமிஷன் ரூ. 2,000/- முதல் 3,000/ வரை.. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் இந்த கொள்ளை, இந்த களியாட்டம், அச்சமின்றி, இந்நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கிறது. மருந்துக் கம்பெனிகளின் லாபி, நாட்டையே நேரடியாகப் பிணயக் கைதியாக வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானது. மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் கூட்டு கொள்ளை அடிக்கின்றன. இருவருமே அரசாங்கத்தை பிளாக் மெயில் செய்கிறார்கள். இதில், மிகப்பெரிய கேள்வி. ஊடகங்கள் இதையெல்லாம் காட்டாமல், இரவும் பகலும் வேறு என்னத்தை காட்டுகின்றனர்? குழியில் விழுந்த இளவரசன்.., டிரைவர் இல்லாத கார், ராக்கி சாவந்த், பிக்பாஸ், மாமியார் மருமகள் சூழ்ச்சி, க்ரைம் ரிப்போர்ட், கிரிக்கெட் வீரரின் கேர்ள் பிரெண்ட் என்னென்ன செய்கிறாள், இதையெல்லாம் காட்டுகிறார்கள். ஆனால்... மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்களின் வெளிப்படையான கொள்ளையை ஏன் காட்டவில்லை? ஊடகங்கள் காட்டவில்லை என்றால், வேறு யார் காட்டுவார்கள் ? பின்னர் எப்படி மருத்துவ லாபியின் கொடுமை நிறுத்தப்படும்? இந்த லாபி.... அரசாங்கத்தையே கையாலாகாத நிலையில் வைத்திருக்கிறதா? ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன்? 20 ரூபாய் கூடுதலாக கேட்டால் ஆட்டோரிக்க்ஷாகாரரிடம்மக்கள் எகிறுவார்கள் ஆனால், கொள்ளையிடும் டாக்டரை என்ன செய்வார்கள் ❓ இது உண்மை என்று நீங்கள் நினைத்தால் அனைவருக்கும் அனுப்புங்கள். விழிப்புணர்வை கொண்டு வாருங்கள்.. இது இவங்க சொல்வது. நான் என்ன சொல்கிறேன் என்றால் ஆஸ்பத்திரிக்கே போகாதிங்க. இயற்கைக்கு மாறாக ஊசி,தடுப்பூசி எதுவுமே போட்டு சாகாதிங்க. டெஸ்டே எடுக்காதிங்க. உள்ளே வேறு மர்மம் ஏற்றப்பட்டு புது நோய் வந்து சாகாதிங்க. உணவே மருந்து. அதுவே நம் வாழ்க்கை முறை. உடலின் மாறுபாடை நீங்களே கண்டறிந்து நோய் இல்லாமல் வாழுங்கள். அலோபதி போனாலே காலம் முடிய போகிறது என்று பொருள். உங்க அப்பா, அம்மா, உங்க குழந்தைகளை இப்படி ஊசி போட்டு வதைக்காதிங்க. நான் தலைவலி மாத்திரை அலோபதி தின்பது இல்லை. ஊசி,தடுப்பூசி எதையும் போடுவது இல்லை. 35 வருடமாக ஆஸ்பத்திரி வாசலுக்கும் போவது இல்லை. அதனால் ஆம்புலஸ் வண்டி வரவில்லை. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். பகிர்வோம். #udalnalam #udalnalam #udalnalam #udalnalam👏👏 #udalnalam
11 likes
10 shares
தோசை பிரியர்கள்.... இட்லியை விட தோசைக்கு ஆசைப்படுபவர்களும் அடிமையானவர்களும்தான் இங்கு அதிகம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தோசை விரும்பிகளாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் தோசையின் ருசி அதன் வாசனை அதன் வடிவம் ஆகும். தோசை இந்த அளவுக்கு பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான உணவாக இருப்பதற்கு காரணம் நம்ம ஊர்களில் பெருகிவிட்ட உணவகங்கள் தான். பல வகைகளில் தோசைகளை செய்து பொதுமக்களை வீழ்த்தி விட்டார்கள். தோசைக்கும் தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறது. தோசைக்கும் கண்ணுக்கும் கண்ணாடி போடுவதற்கும் சம்பந்தம் இருக்கிறது. சிறுவயதில் கண்ணாடி அணிபவர்களில் பெரும்பாலானவர்கள் தோசை பிரியர்களாக இருக்கிறார்கள். இரவில் தோசை சாப்பிடுவது செரிமான சிக்கலை கொடுக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கிறது. இன்னும் பெருவாரியான உடல்நல சிக்கலுக்கு இந்த தோசை காரணமாக இருக்கிறது. தோல் வியாதி, சிறுநீரக கல்,நீரிழிவு என்று சொல்லக்கூடிய சர்க்கரை வியாதி, பித்தப்பையில் வரும் பிரச்சனைகள், மலச்சிக்கல், புரோஸ்டேட் வீக்கம்,பாலிசிஸ்டிக் ஓவரி, தைராய்டு பிரச்சனை, முடி கொட்டுதல், முடி நரைத்தல் உடல் இளைத்து ஒல்லியாக இருத்தல், காலில் வரும் பிரச்சினைகள்,தலைவலி சம்பந்தமான பிரச்சனைகள் என பல வியாதிகளை சொல்லலாம். குடல் புற்று நோய்க்கும் தோசை போன்ற உணவுகள் காரணமாக இருக்கலாம். தோசையிலிருந்து கார்பன் டை ஆக்சைடு தான் வருமே தவிர ஆக்சிஜன் வராது. தோசை சாப்பிட்டவர்களுக்கு தாகம், சோர்வு,மயக்கம், அமிலத்தன்மை, நெஞ்சு கரிப்பு, பசிமந்தம், புளித்த ஏப்பம் என எல்லாமே விரைவில் வந்து விடுகிறது. அடிக்கடி தோசை சாப்பிடும் இளைஞர்கள் பலர் நோயாளிகளாக இருக்கிறார்கள். உடல் நலம் தரும் உணவுகள் எங்குமே விற்கப்படுவதில்லை. இதுதான் உலகமெங்கும் உள்ள நிலை. என்றாவது ஒருநாள் தோசை சாப்பிடுவதில் தவறில்லை. அடிக்கடி தோசை சாப்பிடுவது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நல்ல உணவுகளை நாமாகதான் தேடிப் பெற வேண்டியதிருக்கிறது. நமது வீட்டில் செய்யப்படும் உணவுகள் தான் நல்ல தரமான உணவாக இருக்க முடியும். சில நல்ல உணவகங்களும் இருக்கலாம். அவர்களுக்கு வாழ்த்துக்கள். வீட்டில் சமையல் செய்வதற்கு சமையல் செய்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்ல வேண்டும். அந்த காலத்து பாட்டிமார்கள் அதை ஒரு வேலையாக செய்யவில்லை விருப்பமாக செய்தார்கள். இன்றைக்கு இருப்பவர்கள் அதை ஒரு வேலையாக பார்ப்பதால் அதை தவிர்க்கவே நினைக்கிறார்கள்.தன்னுடைய உடல் நலனிலும் தங்களது குழந்தைகளின் உடல் நலனிலும் அக்கறை இருப்பவர்கள் தரமான உணவுகளை தேடி தேடி பெறுகிறார்கள். சுபம். #food #homemade #happylife #magalir mattum, velai matrum thagavalgalum, unavu, udalnalam, #udalnalam #udalnalam #udalnalam #udalnalam👏👏
12 likes
5 shares