geopolitics

36 Posts • 5K views
Rationalist
640 views 21 days ago
அப்பாவ காணோம் என்பதோ? கணவனை காணோம் என்பதோ அல்ல இப்போது தமிழ்நாட்டின் பிரச்சனை. நாளை தமிழ்நாட்டின் கடற்கரையை காணோம் என்று சொல்லுகிற நிலைமை வந்துவிடக்கூடாது என்பது தான் முதன்மை பிரச்சனை? இன்று தமிழ்நாட்டில் அரசியல் விவாதங்கள் எதைச் சுற்றி நடக்கின்றன? நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது? யார் கூட்டணி அமைப்பார்கள்? என்பதைத்தான் பெரும்பாலான அரசியல் விவாதங்கள் ஆக்கிரமித்துள்ளன. ஒரு தரப்பு, ஒரு கட்சியின் தோல்வியை தமிழ்நாட்டின் தோல்வியாகக் கொண்டாடுகிறது. இன்னொரு தரப்பு, ஒரு கட்சியின் வெற்றியை தமிழ்நாட்டின் வரலாற்று முன்னேற்றமாகச் சித்தரிக்கிறது. ஆனால் இந்த அரசியல் சத்தங்களுக்கு நடுவே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினை கவனத்திற்கு வராமல் திட்டமிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் 1,068 கிலோமீட்டர் நீளமான கடற்கரையும், அதனை ஒட்டியுள்ள 14 கடலோர மாவட்டங்களின் இயற்கை வளங்களும் குறித்த பிரச்சினை. இந்தியா–அமெரிக்கா இடையே 2026 மே 26 அன்று "Critical Minerals and Rare Earths Framework" என்ற மிக முக்கியமான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்ததின் முக்கிய நோக்கம் அரிய கனிமங்களான (Rare Earths) லித்தியம், கோபால்ட் போன்ற மூலப்பொருட்களின் விநியோகச் சங்கிலியை பாதுகாப்பதாகும். இவை EV பேட்டரிகள், செமிகண்டக்டர்கள், பாதுகாப்புத் துறை, ஏவுகணைகள், காற்றாலை, சோலார் தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு அவசியமானவை. ஒன்றிய அரசு இதை "இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான அவசியமான ஒப்பந்தம்" எனக் கூறுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை நீர்மூலமாக்கும். ஏனென்றால் இந்தியாவில் மோனசைட் (Monazite) உள்ளிட்ட அரிய கனிம வளங்கள் அதிகம் காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இல்மனைட், ருடைல், கார்னெட், மோனசைட் போன்ற கனிம வளங்கள் உள்ளன. இப்போது கையெழுத்தான ஒப்பந்தத்தில் "Mining, Processing, Recycling, Investments" என முழு செயல்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அல்ல; முதலீடு, அகழ்வு, சுத்திகரிப்பு அனைத்தும் இதில் அடங்குகின்றன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் ( இப்போதைக்கு) தமிழக கடற்கரையில் இருக்கும் வளங்களை தோண்டும், சுத்திகரிக்கும், எந்தவித தடங்கலும் இல்லாமல் அதானி துறைமுகம் மூலம் எடுத்துச் செல்லும். இதெல்லாம் இனி தான் நடக்கபோகின்றது என்று நினைக்க வேண்டாம். ஏற்கனவே இதற்கான வேலைகள் தொடங்கியாயிற்று. கன்னியாகுமரியை சுற்றியுள்ள கடற்கரை பகுதியில் இருக்கும் கனிமங்களை தோண்டி எடுக்கும் வேலையை இந்திய அரசின் நிறுவனமான IREL (Indian Rare Rarth Limited) தொடங்கிவிட்டது. இதில் சிறப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் தான் இந்த வேலையை ஒன்றிய அரசு செய்தது. இதற்கான சட்ட மசோதா 2025 இல் போடப்பட்டு 2026இல் சட்டமாகவே மாற்றப்பட்டுவிட்டது. இதன்படி 1. ஒரு நிறுவனத்திற்கு சுரங்க உரிமை இருந்தால், அதே அனுமதியில் லித்தியம், கிராபைட், நிக்கல், கோபால்ட் போன்ற Critical Minerals-ஐ கூடுதல் கட்டணமின்றி எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. 2. சுரங்கப்பரப்பு -ஆழமான (deep-seated) கனிமங்கள் கிடைத்தால்: Mining Lease-ஐ 10% வரை, Composite Licence-ஐ 30% வரை விரிவுபடுத்த புதிய கட்டணமின்றி அனுமதி. 3. ஒரு நிறுவனம் மாநில அரசிடம் அனுமதி கேட்டால் அதிகபட்சம் 30நாட்களுக்குள் அனுமதி கொடுப்பது கட்டாயம். 4. சுரங்கம் தோண்ட பொதுமக்களிடம் கருத்து கேட்க அவசியமில்லை. 5. சுரங்க நிறுவனத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு இழப்பீடு சம்பந்தப்பட்ட நிறுவனம் தர வேண்டியதில்லை என ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்காக பல திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டமாக்கிவிட்டார்கள். இன்று நாம் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் நாளை, நம் கடற்கரை கிராமங்கள் அழிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்க்கை சீரழிந்தால், அப்போதும் இப்படி சண்டையிட்டுகொண்டிருந்தால் எப்படி? ஒருவேளை தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கத்தான் தமிழ்நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்னவோ? ஆனால் இதுவெல்லாம் ஒருநாளும் ஒரு பயனையும் தராது. தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பது வெறும் ஆட்சிமாற்றம் அல்ல. அது நிலம், கடல், இயற்கை வளங்கள், மாநில உரிமைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது. நாளை "அப்பாவைக் காணோம்", "கணவனைக் காணோம்" என்று சண்டையிடும் நிலை மட்டுமல்ல; "தமிழ்நாட்டின் கடற்கரையைக் காணோம்" என்று தேடும் நிலை வராமல் தடுப்பதே இன்று நமக்கு முன் நிற்கும் மிகப்பெரிய அரசியல் பொறுப்பாகும். #geopolitics #புவிசார் அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு
8 likes
11 shares
Rationalist
599 views 4 months ago
ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. தலைவர்களை கொன்றழித்து விட்டால் மக்கள் குழப்பம் அடைவார்கள் அதன் மூலம் தங்களது அடிமைகளை வைத்து ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விடலாம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் முடிவு செய்து தொடங்கப்பட்ட போர் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இனி எதிர்பார்த்ததை போலவே ஈரானில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும். அமெரிக்க இஸ்ரேலின் அடிமை நாய்கள் பதவியை பிடிப்பார்கள். ஈரானின் மக்களை அமெரிக்காவுக்கும் ஜியோனிச இஸ்ரேலுக்கும் அந்த அடிமைகள் அடிமையாக்குவார்கள். உலகின் முக்கிய நீர் இணையான ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் இனி அமெரிக்கா இஸ்ரேலின் பக்கம் செல்லும். சீனாவிற்கு எரிபொருள் கிடைப்பது இனி திண்டாட்டத்தை உருவாக்கும். ஏற்கனவே சீனாவின் எரிபொருள் சப்ளையில் பெரும் பகுதியை கொடுக்கும் வெனிசுலாவை அமெரிக்கா கைப்பற்றி விட்டது. இப்போது ஈரானையும் அடிமைப்படுத்தி ஸ்ட்ரைட் ஆப் ஹோர்மோஸ் மூடினால் சீனாவிற்கு எரிபொருள் தட்டுப்பாடு வரும். இதை சீனா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதில் தான் வரும் காலங்கள் இருக்கிறது. போர் என்பது நாடு பிடிப்பதற்காக மட்டுமல்ல, யார் பெரிய நாடு என்கிற போட்டிகாக்கவும் இன்று போர்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் அப்பாவிகள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். பல தேசிய இனங்கள் கனவுகள் ஈழம் போன்ற பல தேசிய இன மக்களின் கனவுகள் முற்றும் முழுதாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. போர்கள் என்பது ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இடத்தில் நடக்கிறது என்று நீங்கள் வாய் மூடி மௌனியாக இருக்க முடியாது. எங்கு போர்கள் நடந்தாலும் உலகத்தில் இருக்கிற எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பை கொடுத்துக் கொண்டுதான் இருக்கும். ஈழத்தில் இனப்படுகொலை நடக்கும்போது இந்த அரசியல் புரிதல் நமக்கு இருந்திருந்தால் ஈழத்தையும் காத்திருக்கலாம் வல்லாதிக்கங்களின் ஊடுருவலையும் தடுத்திருக்கலாம். அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட பாசிச வல்லாதிக்கங்களின் அடுத்த குறி ஆசியா என்ன செய்யப் போகிறோம்? #✍️மே17 இயக்கக் குரல் #புவிசார் அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
12 likes
18 shares