Failed to fetch language order
புவிசார் அரசியல்
60 Posts • 4K views
Rationalist
455 views
ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. தலைவர்களை கொன்றழித்து விட்டால் மக்கள் குழப்பம் அடைவார்கள் அதன் மூலம் தங்களது அடிமைகளை வைத்து ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விடலாம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் முடிவு செய்து தொடங்கப்பட்ட போர் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இனி எதிர்பார்த்ததை போலவே ஈரானில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும். அமெரிக்க இஸ்ரேலின் அடிமை நாய்கள் பதவியை பிடிப்பார்கள். ஈரானின் மக்களை அமெரிக்காவுக்கும் ஜியோனிச இஸ்ரேலுக்கும் அந்த அடிமைகள் அடிமையாக்குவார்கள். உலகின் முக்கிய நீர் இணையான ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் இனி அமெரிக்கா இஸ்ரேலின் பக்கம் செல்லும். சீனாவிற்கு எரிபொருள் கிடைப்பது இனி திண்டாட்டத்தை உருவாக்கும். ஏற்கனவே சீனாவின் எரிபொருள் சப்ளையில் பெரும் பகுதியை கொடுக்கும் வெனிசுலாவை அமெரிக்கா கைப்பற்றி விட்டது. இப்போது ஈரானையும் அடிமைப்படுத்தி ஸ்ட்ரைட் ஆப் ஹோர்மோஸ் மூடினால் சீனாவிற்கு எரிபொருள் தட்டுப்பாடு வரும். இதை சீனா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதில் தான் வரும் காலங்கள் இருக்கிறது. போர் என்பது நாடு பிடிப்பதற்காக மட்டுமல்ல, யார் பெரிய நாடு என்கிற போட்டிகாக்கவும் இன்று போர்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் அப்பாவிகள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். பல தேசிய இனங்கள் கனவுகள் ஈழம் போன்ற பல தேசிய இன மக்களின் கனவுகள் முற்றும் முழுதாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. போர்கள் என்பது ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இடத்தில் நடக்கிறது என்று நீங்கள் வாய் மூடி மௌனியாக இருக்க முடியாது. எங்கு போர்கள் நடந்தாலும் உலகத்தில் இருக்கிற எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பை கொடுத்துக் கொண்டுதான் இருக்கும். ஈழத்தில் இனப்படுகொலை நடக்கும்போது இந்த அரசியல் புரிதல் நமக்கு இருந்திருந்தால் ஈழத்தையும் காத்திருக்கலாம் வல்லாதிக்கங்களின் ஊடுருவலையும் தடுத்திருக்கலாம். அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட பாசிச வல்லாதிக்கங்களின் அடுத்த குறி ஆசியா என்ன செய்யப் போகிறோம்? #✍️மே17 இயக்கக் குரல் #புவிசார் அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
12 likes
16 shares