periyava mahaperiyava

534 Posts • 360K views
Thyagarajan Velmurugan
1K views 1 months ago
ஒருமுறை காஞ்சி மகாபெரியவா மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தின் சாலையோரத்தில் முகாமிட்டிருந்தார்கள். மகா பெரியவா சொன்ன வேடிக்கை கலந்த ஒரு சம்பவம். அப்போது அந்த வழியாக நான்கு பேர் ஒரு யானையின் மீது ஏறி சென்று கொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள். அவர்களிடம் யார் நீங்கள் யானையின் மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் பவ்யமாக “ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம். எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய இந்த யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம் பக்திப்பாடல்கள் பாடுவோம். புராணக் கதைகளைச் சொல்லுவோம் எங்களுக்கும் பொருள் கிடைக்கும் யானைக்கும் தீனி கிடைக்கும் இப்படித்தான் எங்கள் ஜீவன்ம் செல்லுகிறது என்றார்கள். உடனே மகாபெரியவா புன்சிரிப்புடனே சொன்னார் இங்கேயும் இதான் நடக்கிறது இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள். நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன் ஸ்லோகங்களைப் பாடுகிறேன் போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது. எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்”‘ என்றார் மகா பெரியவா! கூடியிருந்த பக்தர்கள் ஸ்வாமியின் நகைச்சுவை உணர்ச்சியையும் பக்தர்களை தனக்கு சாமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #🙏ஆன்மீகம் #🙏கோவில் #jai mahaperiyava #periyava mahaperiyava
18 likes
37 shares
Thyagarajan Velmurugan
2K views 2 months ago
"கலைந்தது மவுன விரதம் பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்கள்" அவர்களுக்கு தரிசனம் என்பது என்னுடைய தோற்றமில்லையே குரல் தானே அதைக் கேட்கத் தானே தொலைதூரத்திலிருந்து ஆவலோடு வந்திருக்கிறார்கள் பார்வையற்ற அந்தக் குழந்தைகளை மகிழ்விப்பதை விட என் மவுன விரதம் ஒன்றும் முக்கியம் இல்லை. பார்வையற்ற மாணவர்களின் பாக்கியம் பெரியவா அருளினால். காஞ்சிபுரம் மடத்திற்கு பள்ளி ஆசிரியர் 50 மாணவர்களுடன் பரமாச்சாரியாரை காண வந்தார். ஆனால் அன்று பரமாச்சாரியார் மவுன விரதம் இருக்கும் நாளாக இருந்தது இறை தியானத்தில் தோய்ந்திருக்கும் அவர் இது போன்ற நாட்களில் பொதுவாக யாரையும் சந்திப்பதில்லை. சந்தித்தால் பேச நேரிடும் அதிலும் மாணவர்களிடம் கட்டாயம் பேசித்தான் ஆக வேண்டும். காஞ்சி பரமாச்சாரியார் மேற்கொண்டது சாதாரண மவுனம் அல்ல காஷ்ட மவுனம் அதாவது சைகையால் கூடப் பேசாத நாள். மடத்தின் பணியாளர் சிந்தித்தார் என்ன ஆனாலும் சரி பரமாச்சாரியாரிடம் தகவலைத் தெரிவிப்பது தான் சரி என முடிவு செய்தார். அதன் பிறகு என்ன செய்வதென்று பரமாச்சாரியாரே முடிவெடுக்கட்டும் மாணவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு பரமாச்சாரியாரிடம் சென்றார் பணியாளர். விஷயத்தை சற்றுத் தயங்கியவாறு தெரிவித்தார் பரமாச்சாரியார் கணீரென்ற குரலில் அவர்களை உடனே இங்கு அழைத்து வா என வாய் திறந்து உத்தரவிட்டார். பணியாளருக்கு வியப்பு மவுனத்தை எதன் பொருட்டும் கைவிடாத பரமாச்சாரியார் இன்று கைவிட்டு விட்டாரே இது எப்படி. மாணவர்கள் பரமாச்சாரியார் முன் ஆவலோடு வந்து நின்றார்கள் அவர்களுக்கு பத்து நிமிடம் அருளுரை வழங்கினார் அவர் பிரசாதம் கொடுத்து அனைவருக்கும் என் ஆசி என்றும் உண்டு எனக் கூறி அனுப்பி வைத்தார். மாணவர்கள் விடைபெற்றுச் சென்றதும் பணியாளர் வியப்போடும் தயக்கத்தோடும் கேட்டார். சுவாமி எவ்வளவு பெரிய பதவியில் உள்ளவர்கள் வந்தாலும் இதுபோன்ற நாளில் நீங்கள் ஒருமுறை கூடப் பேசியதே இல்லையே எதன் பொருட்டும் விரதத்தைக் கைவிடாத நீங்கள் இன்று கைவிட்ட காரணம் என்ன என்று தெரிந்துகொள்ளலாமா. பணியாளரை சற்றுநேரம் அருள்பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த பரமாச்சாரியார் புன்முறுவல் பூத்தவாறு விளக்கினார். 'வந்த குழந்தைகள் எல்லாம் எந்த ஸ்கூல்லேர்ந்து வந்திருக்கான்னு நீ சொன்னாய் அல்லவா நான் என் மவுனத்தை கைவிட்டது அதனால் தான். அவர்கள் எல்லாம் பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவர்களுக்கு தரிசனம் என்பது என்னுடைய தோற்றமில்லையே குரல் தானே. அதைக் கேட்கத் தானே தொலை தூரத்திலிருந்து ஆவலோடு வந்திருக்கிறார்கள் பார்வையற்ற அந்தக் குழந்தைகளை மகிழ்விப்பதை விட என் மவுன விரதம் ஒன்றும் முக்கியம் இல்லை. பரமாச்சாரியாரின் பதிலைக் கேட்ட பணியாளர் நெகிழ்ச்சியில் தளும்பிய விழிகளைத் துடைத்துக் கொண்டார். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
26 likes
32 shares
Thyagarajan Velmurugan
1K views 2 months ago
"இவர் தான் எனக்கு குரு ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா" ஜாதி மதம் பாராமல் தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது. காஞ்சி மஹாப்பெரியவரை தங்கள் குருவாக ஏற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு வாழும் தெய்வமான அவரை இன்றும் கூட பலரும் மானசீக குருவாக ஏற்று வருகின்றனர். ஆனால் அந்த குரு தனக்கு குரு என்று யாரைச் சொன்னார் தெரியுமா தெரிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். மஹாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பணக்கார பக்தர் அடிக்கடி காஞ்சி மடம் வந்து பெரியவரைத் தரிசித்து செல்வார். ஒருமுறை அவர் தனது குடும்பத்தாருடன் தான் வாங்கிய புதிய காரில் மடத்திற்கு வந்தார். அதுசமயம் ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் அருகிலுள்ள கலவை கிராமத்திற்கு சென்றுள்ளார் என்பதை அறிந்து இவரும் அங்கு சென்றார். கலவையில் பெரியவரைத் தரிசித்த அவர் தன் கார் சாவியை பெரியவரிடம் கொடுத்து பெரியவரே தாங்கள் தொட்டு ஆசிர்வதிக்க வேண்டும் என்றார். பெரியவர் அவரிடம் கலவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி நீ அங்கு செல் அங்குள்ள மரத்தின் அடியில் ஒரு பெரியவர் தாடி மீசையுடன் படுத்திருப்பார். அவரை உன் புதுக்காரில் அழைத்து வா என்று உத்தரவிட்டார். பெரியவர் சொன்னபடியே அவரும் அங்கு சென்று அந்த முதியவரை அழைத்து வந்தார் இருவரும் பெரியவர் முன்னால் அடக்கமாக நின்றனர். பெரியவர் பணக்காரரிடம் இவரை யாரென்று உனக்குத் தெரியாது ஏன் அழைத்து வரச்சொன்னேன் என்றும் தெரியாதல்லவா. இவர் தான் எனக்கு குரு நான் துறவுப்பட்டம் ஏற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்கு வந்தேன். அங்கிருந்து என்னை ஜட்காவில் - குதிரை வண்டி அழைத்து வந்தவர் இவர் தான். வரும் வழியில் ஸ்ரீமடம் குறித்தும் அங்குள்ள நடைமுறைகள் குறித்தும் தனக்குத் தெரிந்த மொழியில் இயல்பான பேச்சு எனக்குச் சொல்லிக்கொண்டே வந்தவர். அவர் மூலம் பல விஷயங்களை நான் அறிந்து கொண்டேன் அது மட்டுமல்ல மிகவும் ராசியானவரும் கூட. அவர் கையில் சாவியைக் கொடுத்து வாங்கிக்கொள் நலமாய் இருப்பாய் என்றார். ஆச்சரியப்பட்ட பணக்காரர் அந்த முதியவரிடம் சாவியைக் கொடுத்து வாங்கிக் கொண்டார். ஜாதி மதம் பாராமல் தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது. அந்த தெய்வத்தை நம் மானசீக குருவாக ஏற்று அவரது நல்லாசியுடன் உயர்ந்த நிலையை அடைவோம். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava​ #mahaperiyava​ #truestory​ #kanchimahaperiyava​ #kanchimahan​ #kanchipuram​ #kanchikamakshiamman​ #kamakshiamman​ #mahaperiyavamagimaigal​ #sageofkanchi​ #devotional​ #viralvideo​ #hindutamil​ #🙏ஆன்மீகம் #🙏கோவில் #jai mahaperiyava #periyava mahaperiyava
10 likes
32 shares