periyava mahaperiyava

465 Posts • 360K views
Thyagarajan Velmurugan
1K views 5 months ago
ஒருமுறை காஞ்சி மகாபெரியவா மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தின் சாலையோரத்தில் முகாமிட்டிருந்தார்கள். மகா பெரியவா சொன்ன வேடிக்கை கலந்த ஒரு சம்பவம். அப்போது அந்த வழியாக நான்கு பேர் ஒரு யானையின் மீது ஏறி சென்று கொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள். அவர்களிடம் யார் நீங்கள் யானையின் மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் பவ்யமாக “ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம். எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய இந்த யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம் பக்திப்பாடல்கள் பாடுவோம். புராணக் கதைகளைச் சொல்லுவோம் எங்களுக்கும் பொருள் கிடைக்கும் யானைக்கும் தீனி கிடைக்கும் இப்படித்தான் எங்கள் ஜீவன்ம் செல்லுகிறது என்றார்கள். உடனே மகாபெரியவா புன்சிரிப்புடனே சொன்னார் இங்கேயும் இதான் நடக்கிறது இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள். நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன் ஸ்லோகங்களைப் பாடுகிறேன் போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது. எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்”‘ என்றார் மகா பெரியவா! கூடியிருந்த பக்தர்கள் ஸ்வாமியின் நகைச்சுவை உணர்ச்சியையும் பக்தர்களை தனக்கு சாமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #🙏ஆன்மீகம் #🙏கோவில் #jai mahaperiyava #periyava mahaperiyava
37 shares
Thyagarajan Velmurugan
2K views 5 months ago
ஒரு நாள் சிறு விவாதம் வந்தது அப்போது அவர்கள் சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே சம்ஸ்க்ருதம் & தெலுங்கில் தான் பாடி இருக்கிறார்கள். எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால் சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள் கூறினார்கள். தமிழ் சுத்த waste என்றார்கள் சாதாரணமாக நான் மொழிகளுக்கிடையில் எந்த வித்யாசமும் பார்ப்பதில்லை ஆனால் அவர்கள் இப்படி சொன்னதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆகையால் நானும் பதிலுக்கு ஏன் தமிழில் தேவாரம் திருவாசகம் எல்லாம் இல்லையா பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா என்று வாதாடினேன்.அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் ஈடு படவில்லை. அதற்குள் கல்லூரி முடிந்து அன்று சோர்ந்து போய் கிட்டத்தட்ட அழுத நிலையில் வீட்டுக்குப் போனேன். என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார் என்ன விஷயம் என்று விசாரித்தார்கள் நானும் சொன்னேன் ஆனால் இதை ஒரு பொருட்டாகவே மதிக்காக என் அம்மா நாளைக்கு காஞ்சீபுரத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் பண்ணப் போறேன். நாளைக்கு காலேஜுக்கு லீவ் போட்டுவிட்டு நீயும் வா என்றார் எனக்கோ மன சங்கடம் நம் வருத்தத்தைப் பற்றி அம்மா கொஞ்சம் கூட கவலையே படவில்லையே என்று அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எனவே அடுத்த நாள் கல்லூரிக்குச் செல்லாமல் காஞ்சீபுரம் செல்வது என்று தீர்மானித்தேன். எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு எனவே நான் வரைந்த சங்கீத மும் மூர்த்திகளின் (தியாக ராஜர் முத்து சுவாமி தீட்சிதர் சியாமா சாஸ்த்ரிகள்) ஓவியங்களை மஹா சுவாமிகளுக்கும் காட்டி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். மறுநாள் நானும் என் அம்மாவும் மஹா சுவாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருந்தோம் தரிசனமும் நன்றாகக் கிடைத்தது. நான் கொண்டு சென்றிருந்த ஓவியங்களை சுவாமிகளின் அருகில் இருந்த உதவியாளர் மூலமாக சுவாமிகளிடம் கொடுத்தேன் அந்த மூன்று படங்களையும் பார்த்த பெரியவர் இதெல்லாம் யார் வரைஞ்சா என்றார். அந்த உதவியாளர் என் பெயரையும் ஊரையும் கேட்டார் சொன்னேன் அப்படியே பெரியவாளிடம் சொன்னார் உடனே பெரியவா அந்த குழந்தையை என் முன்னாடி வர சொல்லு என்றார் நானும் அம்மாவும் போனோம். எங்களை உட்கார சொன்னார். அதற்கு முன் அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததோ அவருடன் பேசியதோ இல்லை என்பதால் ஆச்சர்யம் சந்தோஷம் பயம் என பலவித உணர்சிகளுடன் எதிரே அமர்ந்திருந்தேன். என்னுடைய படிப்பு பற்றி எல்லாம் விசாரித்தார் நானும் சங்கீதக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினேன் அப்போது ஒரு க்ஷண நேரம் முதல் நாள் நடந்த வாக்கு வாதத்தைப் பற்றி பெரியவாளிடம் சொல்லி அதற்கு ஒரு தீர்வு கேட்கலாமா என்று தோன்றியது. அப்படி செய்தால் அதிகப் பிரசங்கி என்று நினைத்துவிடப் போகிறார்களே என்று என்னை நானே அடக்கிக் கொண்டு விட்டேன். ஓவியங்களைப் பார்த்த பெரியவர் சங்கீத மும் மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பாட சொன்னார் மூன்று பேருடைய கீர்த்தனைகளிலும் ஒவ்வொன்று பாடினேன். ஓவியங்களைப் பார்த்த பெரியவர் சங்கீத மும் மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பாட சொன்னார் மூன்று பேருடைய கீர்த்தனைகளிலும் ஒவ்வொன்று பாடினேன். பிறகு அந்த ஓவியங்களைப் பற்றி விசாரித்தார் அதில் முத்து சுவாமி தீட்சிதரின் கையில் உள்ள வீணையில் நான் ஒரு தவறு செய்திருந்தேன். முத்து சுவாமி தீட்சிதரின் வீணை மற்ற வீணைகளைப் போல் இல்லாமல் யாளி மேல் பக்கமாக இருக்கும் ஆனால் எவ்வளவு முயன்றும் ஏனோ அந்த இடம் மட்டும் எனக்கு சரியாகவே வரைய வரவில்லை. ஆகையால் எல்லா வீணைகளையும் போல் யாளியைக் கீழ்ப் பக்கமாகவே வரைந்திருந்தேன். அந்தத் தவறை சுட்டிக் காட்டிய பெரியவா அந்த வீணை தீட்சிதருக்கு சாக்ஷாத் கங்கா தேவியே அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்தது அதை மாத்தறது தப்பு அடுத்த தரம் வரும் போது அதை சரியா வரைந்து எடுத்துண்டு வா. என்றார். பிறகு இவளோட ஜீவிய சரித்ரம் தெரியுமோ உனக்கு என்றார் நானும் ஓரளவுக்குத் தெரியும் பெரியவா என்றேன் தெரிஞ்சமட்டும் சொல்லு என்றார். இவா மூணு பேரும் திருவாரூர்லே பிறந்ததா என்று நான் ஆரம்பித்தது தான் தாமதம் உடனே நிறுத்து என்று சைகை செய்த பெரியவர் தொடர்ந்தார் அவர் வாக்கிலேயே சொல்கிறேன். தர்சநாத் அப்ர சதஸி ஜனநாத் கமலாலையே காச்யாம் து மரணான் முக்தி: ஸ்மரணே அருணாச்சலே இதுக்கு என்ன அர்த்தம்னா. சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணினா முக்தி சிதம்பரத்தை அப்ர சதஸ்ன்னே சொல்லிலிருக்கு சபைன்னா சித் சபைதான். சபாபதின்னா நடராஜ மூர்த்திதான் ருத்ரத்துலே கூட சபாப்யோ சபாபதிப்யச்சவோ நமோ நமோன்னு நமோ நமோன்னு சொல்லி இருக்கு. இப்பேர்பட்ட மஹா சபையான பொன்னம்பலத்தை தரிசனம் பண்ணிக்கணும் அடுத்தது ஜனநாத் கமலாலையே. இதுக்கு கடைசிலே வரேன் காச்யாம்து மரணான் முக்தின்னா காசியிலே போய் ஜீவனை விட்டா மோக்ஷம் இது நம் எல்லாருமே கேள்விப் பட்டுருக்கற சமாச்சாரம்தான். ஸ்மரணே அருணாச்சலே சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணிண்ட முக்தின்னா இங்கே அருணாசலேஸ்வரரை நினைச்சுண்ட தத் க்ஷணத்திலே அந்த நிமிஷத்திலேயே முக்தி. இப்போ கமலாலயம் சமாசாரத்துக்கு வருவோம் ஜனநாத் கமலாலையேன்னா திருவாரூர்லே பிறந்தால் முக்தி அந்த ஓவியங்களைக் காட்டி இவா மூணு பேருமே திருவாரூர்லே பிறந்திருக்கா அங்கே பிறந்ததுனாலேயே ஜீவன் முக்தாள் ஆய்ட்டா. இப்போது என்னிடம் ஆமா ஆமா உனக்கு ஒரு சமாசாரம் தெரியுமோ இந்த திருவாரூர் நம்ப தஞ்சாவூர் ஜில்லாலதான் இருக்கு ஆமாம் என்பது போல் நான் தலையை ஆட்டினேன். அவா எந்த பாஷையிலே பாடி இருந்தாலும் அவா பிறந்த இடம் நம் தமிழ்நாடுதான் அப்படி பார்த்தா சங்கீதத்தினுடைய பிறப்பிடமே நம் தமிழ்நாடு தான்னு சொல்லலாம் இல்லையா. தமிழ்நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லைன்னு சொல்லிடலாமே இல்லையா பாஷைங்கறது நம் மனசுலே நினைக்கறதை வெளிப் படுத்தற ஒரு கருவிதான் அதனாலே அவா தமிழ்லே பாடலயேன்னு நாம் ஒண்ணும் வருத்தப் பட்டுக்க வேண்டாம். முதல் நாள் கல்லூரியில் நடந்த வாக்குவாதத்திற்கு ஒரு விளக்கம் கேட்காமலேயே கிடைத்தது. "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
27 shares
Thyagarajan Velmurugan
1K views 6 months ago
"இவர் தான் எனக்கு குரு ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா" ஜாதி மதம் பாராமல் தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது. காஞ்சி மஹாப்பெரியவரை தங்கள் குருவாக ஏற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு வாழும் தெய்வமான அவரை இன்றும் கூட பலரும் மானசீக குருவாக ஏற்று வருகின்றனர். ஆனால் அந்த குரு தனக்கு குரு என்று யாரைச் சொன்னார் தெரியுமா தெரிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். மஹாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பணக்கார பக்தர் அடிக்கடி காஞ்சி மடம் வந்து பெரியவரைத் தரிசித்து செல்வார். ஒருமுறை அவர் தனது குடும்பத்தாருடன் தான் வாங்கிய புதிய காரில் மடத்திற்கு வந்தார். அதுசமயம் ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் அருகிலுள்ள கலவை கிராமத்திற்கு சென்றுள்ளார் என்பதை அறிந்து இவரும் அங்கு சென்றார். கலவையில் பெரியவரைத் தரிசித்த அவர் தன் கார் சாவியை பெரியவரிடம் கொடுத்து பெரியவரே தாங்கள் தொட்டு ஆசிர்வதிக்க வேண்டும் என்றார். பெரியவர் அவரிடம் கலவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி நீ அங்கு செல் அங்குள்ள மரத்தின் அடியில் ஒரு பெரியவர் தாடி மீசையுடன் படுத்திருப்பார். அவரை உன் புதுக்காரில் அழைத்து வா என்று உத்தரவிட்டார். பெரியவர் சொன்னபடியே அவரும் அங்கு சென்று அந்த முதியவரை அழைத்து வந்தார் இருவரும் பெரியவர் முன்னால் அடக்கமாக நின்றனர். பெரியவர் பணக்காரரிடம் இவரை யாரென்று உனக்குத் தெரியாது ஏன் அழைத்து வரச்சொன்னேன் என்றும் தெரியாதல்லவா. இவர் தான் எனக்கு குரு நான் துறவுப்பட்டம் ஏற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்கு வந்தேன். அங்கிருந்து என்னை ஜட்காவில் - குதிரை வண்டி அழைத்து வந்தவர் இவர் தான். வரும் வழியில் ஸ்ரீமடம் குறித்தும் அங்குள்ள நடைமுறைகள் குறித்தும் தனக்குத் தெரிந்த மொழியில் இயல்பான பேச்சு எனக்குச் சொல்லிக்கொண்டே வந்தவர். அவர் மூலம் பல விஷயங்களை நான் அறிந்து கொண்டேன் அது மட்டுமல்ல மிகவும் ராசியானவரும் கூட. அவர் கையில் சாவியைக் கொடுத்து வாங்கிக்கொள் நலமாய் இருப்பாய் என்றார். ஆச்சரியப்பட்ட பணக்காரர் அந்த முதியவரிடம் சாவியைக் கொடுத்து வாங்கிக் கொண்டார். ஜாதி மதம் பாராமல் தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது. அந்த தெய்வத்தை நம் மானசீக குருவாக ஏற்று அவரது நல்லாசியுடன் உயர்ந்த நிலையை அடைவோம். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava​ #mahaperiyava​ #truestory​ #kanchimahaperiyava​ #kanchimahan​ #kanchipuram​ #kanchikamakshiamman​ #kamakshiamman​ #mahaperiyavamagimaigal​ #sageofkanchi​ #devotional​ #viralvideo​ #hindutamil​ #🙏ஆன்மீகம் #🙏கோவில் #jai mahaperiyava #periyava mahaperiyava
32 shares