நிம்மதியா இருக்க முடியும்

1 Post • 205 views
-
706 views 4 months ago
#நிம்மதியா இருக்க முடியும் மற்றவர்களின் வேலைகளில் தலையிடாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தால் நிம்மதி கிடைக்கும். சூழ்நிலை உங்களை பதற்றப் பட வைக்கிறதா,அல்லது சூழ்நிலையை பதற்றப் படாமல் கையாளுகின்றீர்களா என்பதைப் பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி இருக்கும். சூது ஒரு புறம்,எதையும் நம்பும் ஏமாளித் தனம் ஒரு புறம், இரண்டுக்கும் நடுவே நியாயத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. கலந்துரையாடலில் விட்டுக் கொடுக்க விரும்பும் மனம், விவாதங்களில் தோற்றுப் போக விரும்புவதில்லை. நேரடியாக பேசாத உண்மைகள், காலப்போக்கில் பொய் என நிரூபிக்கப்படும். வாழ்க்கை சில நேரம் வாழத் தெரியாதவர்களோடு சேர்த்து, வாழத் தெரிந்தவர்களையும் தண்டித்து விடுகிறது. நானும் ஒரு உதிரும் இலை தான் என அறிந்து கொள்ளும் வரை இலை நினைத்து கொண்டிருந்தது நான் தான் மரமென. எவ்வளவு பெரியது என்பது நமது எண்ணத்தின் அளவைப் பொறுத்து தான். எதிர்பார்ப்புகள் இல்லாத முகங்கள்.எப்போதுமே அழகு தான்.
8 likes
10 shares