ஆன்மீக சுற்றுலா👌👌
22 Posts • 572K views
நஜிராஅமான்
716 views 16 days ago
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகள் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்றவர் தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமணத்தின்போது உலகநிலைசமப்படுத்த அகத்தியர் தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது சிவபெருமானிடமிருந்து தமிழைப் பெற்று உலகிற்கு தந்தவர் முதல் தமிழ் இலக்கண நூல் அகத்தியம் என்று இவர் பெயராலேயே விளங்குகிறது இவர் பல இடங்கள் சென்று சிவபெருமானுக்கு லிங்க பிரதிஷ்ட செய்து வழிபட்டு இருக்கிறார் அதில் சில கோயில்களை பார்ப்போம் அருள்மிகு அசலஅம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கபாக்கம் சென்னை அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அகத்தியான்பள்ளி வேதாரண்யம் நாகை மாவட்டம் ஸ்ரீ அகஸ்தியர் கோயில் ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் ஏம்பல் ஆவுடையார் கோயில் அருகில் புதுகோட்டை மாவட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் பழையூர் பெருகமணி திருச்சி கரூர் சாலை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மேலதானம் கிராமம் திருக்கோலக்குடி அருகில் புதுக்கோட்டை ஸ்ரீ அகத்தீஸீவரர் திருக்கோயில் எட்டயதளி பேராவூரணி அருகில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கருவளர்ச்சி சேரி பிஜ புரம் கும்பகோணம் அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் மாகறல் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலை அருள்மிகு ஆனந்த வள்ளி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம் பஞ்செட்டி பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் #ஆன்மீகம்
13 likes
15 shares
நஜிராஅமான்
621 views 3 days ago
கர்ம பலனை அளிக்கும் சாயாபுத்திரன் சனி சனியால் கெட்டவர்கள் யாரும்இல்லை சனி யாரையும் கெடுப்பதில்லை செய்த செயலுக்கு தக்கபடி பாகுபாடின்றி பலனை தருவதில் சனிக்கு நிகர் சனியே அதனால்தான் சனி கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார் இப்பிறவி எடுத்ததற்கான கர்மா முழுமையாக முடியும்வரை ஆயுளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர் சனியே எங்கெல்லாம் பொதுமக்கள் கூடியிருக்கிறார்களோ அங்கெல்லாம் சனியின்ஆதிக்கம் அதிகம் பொதுமக்களின் நல் ஆதரவை பெற்று வாழ்பவர்களுக்கு சனியின் அருள் தானாககிடைக்கும் சனியை ஒரு தபால்காரருடன் ஒப்பிடலாம் அவர் தபாலை நமக்கு வழங்குவார் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவருக்கே தெரியாது அந்த தபால்தான் நம் கர்மவினை உத்தியோகம் சுய தொழில் இவைகளுக்கு காரணமாக இருப்பவர் சனி அதனால்தான் இவருக்கு ஜீவனகாரன் என்ற பெயரும் உண்டு சனியின் பரிபூரண அருளை பெற்றவர்கள் உயரிய பதவிகளையும் நிலைத்த மரியாதையுடன் வாழ்வார்கள் ஆனால் சனியின் பரிபூரண அருளை பெறாதவர்கள் உத்தியோக தடை தொழில் தடை அவமானம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் கர்மத்தை கற்றுத் தருபவர் சனி சனி பகைவர் அல்ல அவர் ஒரு ஆசான் அவர் ஒரு தந்தை சனியை வழிபடுவோம் நன்மையை அடைவோம் #ஆன்மீகம்
17 likes
11 shares