#ஓம்_சிவாய_நமஹ
#சிவ_சிவாய_நமஹ.....
1879ம் ஆண்டு டிசம்பர் 30ம் நாள் திங்கள்கிழமை திருவாதிரை நன்னாளில் சரியாக இரவு 1-17 மணிக்கு திருச்சுழியில் உதித்தது, ஒரு ஞான சூரியன் ( பெயர் வேங்கடராமன்)
"" அந்த ஞான சூரியனுக்கு தனது16ம் வயதில் மதுரையில் தமது சித்தப்பா வீட்டில் ( ரமண மந்திரம்) இயற்கை அவருக்கு மரணத்தை உணர்த்தியது ""
"" மரண பயத்தின் அதிர்ச்சி அவரை உடனே உள் முகமாக்கியது. சரி இப்பொழுது சாவு வந்து விட்டது, சாவு என்றால் என்ன ? சாவுறுவது எது ? சாகும் உடலை தத்ரூபமாக பார்க்க ஆரம்பித்தார் ... """
"" மனிதன் உயிருடனிருக்கும் பொழுதே,, உடல் செத்தது தான்,, உடல் உணர்வற்ற சடப் பொருள்,, ஆன்மா மாத்திரமே,, அதற்க்கு உயிர்ப்பு,, செய்கை இவற்றின் தோற்றத்தை தருகிறது என்றால் (( நான் யார் ? )) என்றுணர்ந்தார்,,
மரண உணர்வுக்கு பின்னால், அவரது வாழ்க்கை அடியோடு மாறிப்போனது.
திருச்சுழியில் உதித்து, மதுரையில் தன்னை உணர்ந்தவரை,, திருவண்ணாமலை அழைத்து சென்றது,, அழைத்தவர் அண்ணாமலையார்
எளிமையான ஆரவாரமற்ற, அமைதியான 70 வருட வாழ்க்கையில் "" அவருடைய மிகப்பெரிய குணம் முற்றிலும், நிராசையும், துறவுந்தான், அவருடைய மெளனம் மிகச் சக்தி வாய்ந்தது, விசாரமுறை (( நான் யார் ? )) பகவானுக்கே உரித்தான தனி முறையாகும் .
ஸ்ரீ பகவானின் உபதேசம் - ஒரு மனிதன் இவ்வுலகில் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவன் நான், எனது, என்னும் உணர்வை நீக்கினால் அவனுடைய அகங்காரம் அழிந்து ஆத்மா ஒளிரும்..
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாசல ரமணாயா
#சரணம்_சரணம்
#மகேஷ்வரா...
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #பகவான் ரமணர். #பகவான் ரமணர் #ஸ்ரீ ரமணர் #ரமணர் மகரிஷி