அடியே

6 Posts • 6K views
SHEIK 🌺KSN🌺
3K views 1 months ago
அந்த நாளில் சில முகங்கள் மகிழ்ச்சியால் பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் எனும் அல்குர்ஆனின் (75:22, 23) ஆகிய வசனங்கள். ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அந்த பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். ‘இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் மறுமையில் காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் உறக்கம் போன்ற எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் உங்களுடைய இறைவனை நீங்கள் காண்பீர்கள்’ என்றார்கள். (புகாரி: 7434) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
98 likes
1 comment 82 shares
SHEIK 🌺KSN🌺
12K views 1 months ago
ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் குறித்த தீர்ப்பு: மூன்று நாட்கள் முடிந்து #நபி_ﷺ அவர்கள் மக்காவை விட்டு வெளியேறிய போது, அவர்களின் மாமா ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் "என் சிறிய தந்தையே!" என்று அழைத்துக்கொண்டு பின்னால் ஓடிவந்தார். அப்போது அவளை வளர்க்கும் உரிமைக்காக அலி (ரலி), ஜாஃபர் (ரலி) மற்றும் ஸைத் (ரலி) ஆகிய மூவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. #நபி_ﷺ அவர்கள் அந்தச் சிறுமியை ஜாஃபர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்துத் தீர்ப்பளித்தார்கள். அதற்கான காரணம் மற்றும் #நபி_ﷺ அவர்கள் கூறிய பொன்மொழிகள்: #தீர்ப்பு: "#தாய்வழிச்_சித்தி, தாயின் அந்தஸ்தில் உள்ளவர் ஆவார்" என்று கூறி ஜாஃபர் (ரலி) அவர்களின் மனைவியே அச்சிறுமியின் சித்தி என்பதால் அவரிடம் ஒப்படைத்தார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
422 likes
178 shares