கருட வாகனம்

7 Posts • 24K views
MUTHUPANDIAN RAMKUMAR
530 views 8 days ago AI indicator
#கருட பஞ்சமி #💫காஞ்சிபுரம் கருட சேவை வைபவம்💫 #கருட வாகனம் #கருட #காஞ்சிபுரம் கருட சேவை பஞ்சமியின் சிறப்புகளும் அதன் வழிபாடு பலன்களும்!! கருட பஞ்சமி - 17-08-2026. ஆடி மாதத்தில் வருகின்ற பல்வேறு விசேஷங்களில் கருட பஞ்சமியும் ஒன்று. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், பெருமாள் வழிபாடும் சகல பாவ, தோஷங்களை போக்கி சுப யோகத்தை அமைத்து கொடுக்கும் திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை கருட பஞ்சமி என வழிபடுகிறோம். கருடனைப் போல பலசாலியும், புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக தாய்மார்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருடன் மீது வரும் சேவை மிகவும் விசேஷம். ‘ஆழ்வார்‘ என்ற சிறப்பு பெயர் கருடனுக்கு உண்டு. பெருமாளின் தலைக்கு மேலே கருடன் கொடியாகவும், பெருமாளின் காலிற்கு கீழே வாகனமாகவும் காட்சி தருகிறார். விஹாகேஸ்வரன் வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் கருடனுக்கு உண்டு. கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமான ஒன்றாகும். மேலே பறக்கும் கருடனின் நிழல் பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புகிறார்கள். கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை வெல்வதற்கும், விஷங்களை முறிக்கவும், மந்திர, தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவும் கருட மந்திரம் நல்ல பலன் தரும். கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கி பிடித்து, நாகங்களை ஆபரணமாக தரித்துள்ளதால் ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும். ஏழரை சனி, கண்ட சனி போன்ற கோச்சார சனி நடப்பவர்கள் கருட பஞ்சமியன்று வணங்கி வழிபட தோஷங்கள் நீங்கும். கருட பஞ்சமியன்று காரைக்காலில் ஏழு கோயில்களை சேர்ந்த பெருமாள்கள் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி அருள்புரிகிறார்கள். பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். மனகுழப்பம், மனசஞ்சலம், தரித்திரம் நீங்கும்.
13 likes
15 shares
JR143 💕
1K views 23 days ago
கருடாழ்வார் அவதரித்த ஆடி சுவாதி கருட ஜெயந்தி திருநாள் இன்று... ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரத்தில் கருட ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 'பெரிய திருவடி' என்று போற்றப்படும் கருட பகவானைத் தரிசிப்பது அனைத்து அசுபங்களையும் விரட்டி, நன்மைகளை அதிகரிக்கும். கருட மூல மந்திரம்: "ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்ர சர்வ தோஷ, விஷ சர்ப்ப விநாசனாய ஸ்வாஹா!" ஸ்ரீ பக்ஷி ராஜாய நமஹ... #கருட வாகனம் #கருட பஞ்சமி #💫காஞ்சிபுரம் கருட சேவை வைபவம்💫 #காஞ்சிபுரம் கருட சேவை
11 likes
8 shares