பூலோக வைகுண்டம்

1K Posts • 285K views
#பூலோக வைகுண்டம் ##ஆன்மீக தகவல்கள் 🕉️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏ஏகாதசி🕉️ #🌙சந்திர தரிசனம்🔯 திருப்பாற்கடலில் அவதாரங்களில் அர்ச்சையில் பெருமாள் திருமண் காப்பு இட்டே ஸேவை ஸாதிக்கிறார். ஆனால் அவரது நெற்றியில் உள்ளது எவருடைய திருவடிகளுமல்ல. பொதுவாகவே திருமண் காப்பு எனும் ஊர்த்வ புண்ட்ரம் வேணுபத்ராக்ருதி முகுளாக்ருதி ஶூர்பாக்ருதி தீபாக்ருதி என்றெல்லாம் முனிவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது . நமது கொள்கைகள் கொண்டு பெருமாள் திருவடிகள் அவை என்று நம் நெற்றியில் இடும்போது த்யானிக்கிறோம். அர்ச்சகர் கோரிக்கை காரணமாக பெருமாள் திருநெற்றியில் அர்ச்சையில் நம்மைப் போல் பரிவுடன் அவரும் திருமண் இட்டுக் காட்டி திருவருள் புரிகிறார். வடகலை தென்கலை பேதம் இங்கு தான் உள்ளது. வைகுண்டத்தில் எல்லாம் ஏது பேதம்? பக்தர்கள் இங்கு தான் அறிந்தவாறு ஏத்துவர். என்றும் ஊர்த்வ புண்ட்ரம் தான் பெருமாளுடைய சின்னம். திருமண் காப்பு தன்மை நாம் இடும்போது அதற்கேற்ப மாறும். அவருடைய திருவடி ப்ரஸாதமாக நாம் இடுகிறோம். நான்கு வேதங்கள் என்ற பாகுபாடே வேதவ்யாஸர் த்வாபரயுகத்தின் முடிவில் செய்வித்தது. அதற்கு முன்பு வேதங்கள் மொத்தம் ஒரே ராசியாகத் தான் இருந்தன. திருமண் காப்பு பற்றி உத்த்ருதாஸி வராஹேண என்ற மந்த்ரங்கள் வேதத்திலே உள்ளன. ருக் யஜுஸ் ஸாமம் என்று க்ரியைக்கு ஏற்ற படி பிரிந்தனவே அன்றி அவற்றில் முன்புண்டானவை பின்புண்டானவை என்ற பேதம் இல்லை. வேதங்கள் காலத்தையும் தாண்டியவை; காலத்தின் கண்ணாடியாகவும் இருப்பவை
15 likes
13 shares