*ஸ்ரீபாத ஸப்ததி*
புதிய தொடர் பதிவு!
*ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:17*
கிம் வைரிஞ்சிகரோடி கோடிநிஹதம் கிம்வா பணிக்ராமணீ நிச்வாஸாநிலகேதிதம் த்விதமிதி ப்ரேம்ணாபிஸல்லாபினா மானஸ்யோபசமே கரேண சனகைராம்ருத்னதா சம்புனா பூயஸ்சும்பிதமம்புஜத்யுதி பதம் த்யாயாமி மாயே தவ
மாயாஸ்வரூபிணியே! * உன் பிரணய கோபம் தணிந்து உன்னோடு அன்புடன் ஸல்லாபிக்க ஆசை கொண்ட ஸ்ரீபரமேஸ்வரன் உன் ஸ்ரீபாத கமலங்களை மெதுவாகத் தூக்குகிறார்.
அப்போது சிவந்திருக்கும் ஸ்ரீபாதங்களைப் பார்த்து சிவபெருமான் நினைக்கிறார்.
தன்னுடைய சிரஸின் மீதிருக்கும் பிரம்மாவினுடைய கபாலத்தின்
நுனி உன் ஸ்ரீபாதத்தில் பட்டதினாலோ அல்லது தன் சரீரத்தின் மீதிருக்கும் ஸர்ப்பராஜனான சேஷனுடைய சுவாசக் காற்றினாலோ என்று சிவன் உன் ஸ்ரீபாதங்களை மறுபடியும் முத்தமிடுகிறார்.
அதனால் அந்த ஸ்ரீபாதகமலங்கள் மேலும் சிவந்து செந்தாமரை போன்று உன் பிரகாசிக்கின்றன.
அப்பேர்ப்பட்ட ஸ்ரீபாதாரவிந்தங்களை நான் தியானிக்கிறேன்.
மாயையாகவும் மாயையைப் போக்கும் ஸ்ரீவித்யையாகவும் அம்பிகை இருப்பதனால் உன்னால் உண்டாக்கப்பட்ட இந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை கிடைக்க உன் ஸ்ரீபாத கமலங்களை தியானிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது தாத்பரியம்:
சிவபெருமான் அளவிட முடியாத ஜோதி ஸ்வரூபமாகத் தோன்றிய போது பிரம்மா அந்த ஜோதியின் முடியைக் காண்பதற்காக அன்ன வடிவம் எடுத்துத் தேடச்சென்றார்.
முடியைக் காண முடியாமல் திரும்பிய பிரம்மா தான் கண்டு விட்டதாக சிவபெருமானிடம்
பொய் சொன்ன போது பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் தன் விரல் நகத்தின் நுனியால் கொய்து விட்டார்.
பின்னர் பிரம்மா நான்முகராக ஆனார்.
கொய்த தலையின் மண்டையோட்டை தன் சிரஸின் மீது சிவன் தரித்துக் கொண்டுள்ளதை கவி இங்கு குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம்
17ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
2K views • 2 months ago • Made with AI