மந்திரங்கள்

• 129K views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
750 views 2 months ago AI indicator
*தியானம் சித்திக்க* *உதவும் மந்திரம்*! முறையான யோகப்பயிற்சி செய்துவருவதுடன் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்து நீர் அல்லது பால் அருந்தி வர மனம் அடங்கும். தீவிர காம சிந்தனைகளால் ஒழுக்கம் தவறியவர்கள் ஒழுக்கம் தவறி விடுவோமோ என அஞ்சுபவர்கள் மஞ்சள் கயிறு ஒன்று வாங்கி ஒரு வளர்பிறை வியாழக்கிழமை குரு ஹோரையில் ஸ்ரீ ஹனுமனை வணங்கி வேண்டி கீழ்க்கண்ட மந்திரத்தை ஒரு தடவை ஜெபித்து ஒரு முடிச்சு என ஒன்பது தடவை ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டு அணிந்து கொள்ள சத்வகுணம் உண்டாகும். தியானம் செய்யும் முன் இதனை 27 தடவை ஜெபித்துப் பின்னர் தியானம் செய்ய நன்கு தியானம் சித்திக்கும். அனுபவித்துப் பாருங்கள். மந்திரம்:- ஓம் நமோ பகவதே | மஹாபல பராக்ரமாய| மனோபிலஷிதாம் | மன ஸ்தம்ப குரு குரு ஸ்வாஹா || 🚩🕉🪷🙏🏼 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #தியானம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #🙏ஆன்மீகம்
14 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 2 months ago AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:18* பூர்வம் ஜஹ்னுஸுதா ஸக்ருன் முரரிபோ: ஸ்ரீபாதஸம்க்ஷாலனாத் புண்யாதீத்ருசவைபவா ஸமபவத் கோவிந்தவந்த்யே சிவே ஸேயம் ஸம்ப்ரதி சம்புமெளலிநிலயா மானப்ரஸங்கானதௌ நித்யம் த்வச்சரணாவஸேசனபுவா புண்யேன கீத்ருக்பவேத் ஸ்ரீகோவிந்தன் வணங்கும் அம்பிகையே! முன்பு ஒரு தடவை ஜஹ்னு மகரிஷியின் புத்திரியான கங்கை ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஸ்ரீபாதங்களை நனைத்த புண்ணியத்தினால் அந்த கங்கைக்கு இம்மாதிரியான (அதாவது மூன்று உலகங்களையும்) பரிசுத்தமாக்கும் வைபவம் கிடைத்தது. இப்போது ஸ்ரீபரமேஸ்வரனின் சிரஸிலிருக்கும் கங்கை பிரணய கலகத்தில் அவர் உன் ஸ்ரீபாதங்களில் நமஸ்கரிக்கும் போது உன் ஸ்ரீசரணங்களில் ஸ்பரிசித்துக் கிடைக்கும் புண்ணியத்தினால் இன்னும் எந்த வைபவத்தை அடையப் போகிறது? ஸ்ரீமகாவிஷ்ணு வாமனாவதாரத்தின் போது தன்னுடைய உயரத் தூக்கிய பாதத்தினால் விண்ணுலகை அளந்தார். பிரம்மாவின் ஸத்யலோகத்தில் வந்தடைந்த அந்த பாதத்திற்கு பிரம்மா தன் கமண்டலத்தின் தீர்த்தத்தினால் பிரக்ஷாலனம் செய்தார். அப்போது கீழே விழுந்த அந்த தீர்த்தம் தான் கங்கையாக உருவெடுத்தது. மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 18ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
16 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 2 months ago AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:17* கிம் வைரிஞ்சிகரோடி கோடிநிஹதம் கிம்வா பணிக்ராமணீ நிச்வாஸாநிலகேதிதம் த்விதமிதி ப்ரேம்ணாபிஸல்லாபினா மானஸ்யோபசமே கரேண சனகைராம்ருத்னதா சம்புனா பூயஸ்சும்பிதமம்புஜத்யுதி பதம் த்யாயாமி மாயே தவ மாயாஸ்வரூபிணியே! * உன் பிரணய கோபம் தணிந்து உன்னோடு அன்புடன் ஸல்லாபிக்க ஆசை கொண்ட ஸ்ரீபரமேஸ்வரன் உன் ஸ்ரீபாத கமலங்களை மெதுவாகத் தூக்குகிறார். அப்போது சிவந்திருக்கும் ஸ்ரீபாதங்களைப் பார்த்து சிவபெருமான் நினைக்கிறார். தன்னுடைய சிரஸின் மீதிருக்கும் பிரம்மாவினுடைய கபாலத்தின் நுனி உன் ஸ்ரீபாதத்தில் பட்டதினாலோ அல்லது தன் சரீரத்தின் மீதிருக்கும் ஸர்ப்பராஜனான சேஷனுடைய சுவாசக் காற்றினாலோ என்று சிவன் உன் ஸ்ரீபாதங்களை மறுபடியும் முத்தமிடுகிறார். அதனால் அந்த ஸ்ரீபாதகமலங்கள் மேலும் சிவந்து செந்தாமரை போன்று உன் பிரகாசிக்கின்றன. அப்பேர்ப்பட்ட ஸ்ரீபாதாரவிந்தங்களை நான் தியானிக்கிறேன். மாயையாகவும் மாயையைப் போக்கும் ஸ்ரீவித்யையாகவும் அம்பிகை இருப்பதனால் உன்னால் உண்டாக்கப்பட்ட இந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை கிடைக்க உன் ஸ்ரீபாத கமலங்களை தியானிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது தாத்பரியம்: சிவபெருமான் அளவிட முடியாத ஜோதி ஸ்வரூபமாகத் தோன்றிய போது பிரம்மா அந்த ஜோதியின் முடியைக் காண்பதற்காக அன்ன வடிவம் எடுத்துத் தேடச்சென்றார். முடியைக் காண முடியாமல் திரும்பிய பிரம்மா தான் கண்டு விட்டதாக சிவபெருமானிடம் பொய் சொன்ன போது பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் தன் விரல் நகத்தின் நுனியால் கொய்து விட்டார். பின்னர் பிரம்மா நான்முகராக ஆனார். கொய்த தலையின் மண்டையோட்டை தன் சிரஸின் மீது சிவன் தரித்துக் கொண்டுள்ளதை கவி இங்கு குறிப்பிடுகிறார். மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 17ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
17 shares