Failed to fetch language order
சுலோகம் மற்றும் மந்திரங்கள்
173 Posts • 201K views
ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்-04 ( அருளியவர் ஆதிசங்கர பகவத் பாதர்) ஞானம் பெற. ஸ்லோகம்-02. ந ஜனாமி ஸப்தம் ந ஜனாமி சார்த்தம் ந ஜனாமி பத்யம் ந ஜனாமி ஸத்யம் சிதேகா ஷடஸ்யா ஹ்ருதி த்யோத்தே மே முகான்னிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம். தமிழாக்கம். ( வரகவி யு.எம். நடராஜ ஸர்மா) கவியறியேன் வசனமோ கண்டறியேன், என் செவியறியாதொலியெதையும் - -செப்பியுமறியேன்- பொருள் புவி புகழும் ஆறுமுக; உன் புனிதமுகம்- -நோக்குங்கால் தெவிட்டாத தேன் தமிழ்ச் சொல் தெளிந்து -வரும் நெஞ்சிலிருந்து. கருத்து- எதுவும் அறியாத பாமரன் நான். எனக்கு எழுத்தும் தெரியவில்லை,அதன் சப்தமும் புரியவில்லை. எனவே கவியும், காவியமும் அறியாதவன். உலகம் போற்றும் குமரனே, உன் அழகிய ஆறு திருதிருமுகத்துடன், கூடிய, ஞானச் சுடரான உருவம் ஒன்றுதான் என் மனதில் நிற்கின்றது. ஸ்வாமி நாதனாக, தந்தைக்கு உபதேசம் செய்த உன் திருமுக தரிசனத்தால், என்னிடமிருந்து தேன் மொழியாம், 🌺 தமிழ் மொழி 🌺 அருவி போல் கொட்டுகிறது. குறிப்பு- பகவத்பாதர்-ஞானத்தின் உருவாக இருந்தாலும், தன்னை எப்போதும் ஒரு பாமரன்/ கல்வியறிவு இல்லாதவன் என்றே கூறிக் கொள்கிறார். ஸௌந்தர்ய லஹரீ- ஸ்லோகம்-98. “ கதா காலே மாத: கதய கலிதாலிக் தகரஸம்”- என்று துவங்கும் ஸ்லோகத்தில் - நான் கல்வி அறிவை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவன்- என பாடியுள்ளார். 🚩🕉🪷🙏🏻 #ஶ்ரீ ஆதிசங்கரர். #மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #சமஸ்கிருதம் பலன்
16 likes
13 shares
*தே³வீ நாராயணீயம் - த³ஶகம் 11* *ப்³ரஹ்மநாரத³ ஸம்வாத³ம் - ஸ்லோகம் 11* ந மே குருஸ்த்வச்,சரிதஸ்ய வக்தா; ந மே மதிஸ்த்வத்ஸ் மரணை க ஸக்தா; அ வா ச்யவக்தா, ஹ ம கார்ய கர்தா; நமாமி மாதச்,சரணா ம்புஜம் தே *நாரதருக்கு இதைத் தெரிந்து கொள்ள குருவாக ப்ரம்மா இருந்தார். வ்யாஸருக்கு நாரதர் குருவாகக் கிடைத்தார். ஆனால் எனக்கு குருவும் இல்லை. என்னால் தேவியைத் த்யானம் செய்யவும் முடியவில்லை. மனதை அதில் ஈடுபடுத்த முடியவில்லை. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். நல்லதைச் செய்யா விட்டாலும் தீயவைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை. செய்யக்கூடாததைச் செய்கிறேன். பேசக் கூடாததைப் பேசுகிறேன். இவைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற உன் கருணை வேண்டும் என்று இந்த கவி தேவியை நமஸ்கரிக்கிறார்.* பதினொன்றாம் தசகம் முடிந்தது 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்
13 likes
10 shares
*தே³வீ நாராயணீயம் - த³ஶகம் 11* *ப்³ரஹ்மநாரத³ ஸம்வாத³ம் - ஸ்லோகம் 9* யத் கிஞ்சித்,அஞ்ஞாயி மயா மஹத்வம் தேவ்யா ஸ்த,துக்தம், தவ ஸம்க்ரஹேண ஸர்வத்ர தத், வரணய வஸ்தரேண விதத்ஸ்வ பக்திம், ஹ்ருதயே ஜனானாம் *இந்த உலகத்திற்குக் கர்த்தா யார் என்ற நாரதரின் கேள்விக்கு, ப்ரம்மா தேவிதான் என்ற பதிலைக் கூறினார். இந்த உண்மையை நீ உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று சொன்னார். நாரதர் த்ரிலோக சஞ்சாரி அல்லவா? அவரைவிட வேறு யார் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்?* 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்
16 likes
12 shares