நன்மைக்கே" என்ற மனப்பான்மையுடன் வாழ்வோம்.
நம்மைச் சுற்றி நடக்குற எல்லா இன்ப துன்பங்களுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும். நம்ம வாழக்கையும், திட்டமிடல் எப்போதும் இருக்கணும், அதே போல ரொம்ப கவனமாகவும் இருக்கணும், அதையும் மீறி ஏதோ ஒன்னு நம்மளை இயக்குது, எப்போவும் முன்னெச்செரிக்கையா இருக்கணும்...
எதிர்பாராத விஷயங்களை கண்டிப்பா நாம எதிர்கொண்டு தான் ஆகணும்.
இப்படி நடந்து போச்சேன்னு உட்கார்ந்து வருத்தப்படுவதை விட தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு எல்லாம் நன்மைக்கென்னு நமபிக்கையோட நகர்தல் நலம்.
எதிர்பாரத விஷயங்களை எதிர்கொண்டு வாழ்ந்து தான் பார்ப்போமே. வளையும் தன்மையுள்ள ஒரு மரம் புயலில் சிக்கினாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. அதேபோல், உங்களை மீறி சில மாற்றங்கள் நடக்கும் போது உங்களாலும் அதற்கு “வளைந்து” கொடுக்க கற்றுக் கொள்ள முடியும்.
எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே கெட்டதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாம் நினைக்கும் விதத்தில் தான் நம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். ஆனால், அப்படி நடக்கவே நடக்காது.
“மன உறுதியோடு இருக்குறது நம்ம கையில தான் இருக்கு. இப்போ இருக்குற சூழ்நிலைமையில என்னென்ன நல்ல விஷயங்கள் இருக்குதுனு பாருங்க”. எது நடந்தாலும் "நடப்பதெல்லாம் நன்மைக்கே" அப்படின்னு எடுத்துக் கொள்வோம். 😊😊😊
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#