திருநீற்றுச் சுவடு
667 views
9 days ago
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #💎ராசிக்கற்கள் பரிகாரங்கள்... கோவிலில் பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் கொடுக்காதீர்கள் கோயிலில் போய் நீங்கள் சம்பாதித்து வருவது மகா புண்ணியம் அதை நீங்கள் வெளியே வந்தவுடன் சனிபகவான் அம்சத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் வாங்குவதற்கு சரியாக காத்துக் கொண்டு இருப்பார்கள் உங்களுடைய புண்ணியம் அவர்களுக்கு போய் விடும் நீங்கள் கொடுக்கும் பிச்சையினால் இது செய்ய கூடாது உணவுக்காக பிச்சை எடுத்தது தான் ஆதிகாலம் தொட்டு இருந்தது. நீங்கள் யாருக்கும் பிச்சையாக முடிந்தவரையில் பணத்தை கொடுத்து ஊக்கப்படுத்த கூடாது உண்மையிலேயே அவர்கள் உங்களுடைய பிச்சையை தொழிலாக செய்யும் பொழுது நீங்கள் ஒரு ஊதாரியை ஊக்குவிக்கின்றீர்கள் இது மகா பாவம் புண்ணியத்தில் சேராது அதே போல பணம் பிச்சை இடும் வழக்கம் நம் சோம்பேறித்தனத்தாலும் அவர்களுடைய பேராசையாலும வந்தது பணத்தை பிச்சை போடுபவர்களுக்கு அந்த பிச்சைக்காரர்கள் நிலைப்படி தரித்திரம் கூட பிடிக்கும் ஒரு பிச்சைக்காரனுக்கு தேவை உணவு இங்கே அந்த விஷயமே நிறைய பேருக்கு புரிவதில்லை கோயில் உள்ளே நுழையும் முன்பே கொடுத்து விட்டு நீங்கள் கை கால்களை கழுவி முகம் கழுவி விட்டு கோயில் உள்ளே செல்ல வேண்டும் பிச்சைக்காரர்கள் சனிபகவான் அம்சம்தான் முதலில் வருவார்கள் அதிலேயே விதவிதமான பிச்சைக்காரர்கள் இருக்கின்றார்கள் காவி உடை அணிந்து திருவோடு வைத்து பிச்சை எடுப்பவர்கள் சனி+கேது அம்சத்தில் வருவார்கள் இன்றைய காலகட்டத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்பவர்கள் அதிகம் உண்டு ஊனமாக இருப்பவர்கள் மாற்று திறனாளிகளுக்கு பிச்சை உணவுகள் கொடுங்கள் பணம் கொடுப்பதை முடிந்தளவுக்கு தவிர்க்க வேண்டும் ஒரு பிச்சைக்காரனை நீங்கள் ஊக்குவிக்கும் பொழுது உங்களுக்கும் தரித்திரத்தை பரிசளிப்பார்கள் பாத்திரம் அறிந்து பிச்சை ஈடு என்ற பழமொழி உண்டு அதாவது யாருக்கு பிச்சை அளிக்க வேண்டும் யாருக்கு அளிக்க கூடாது என்று முக்கியம் ஒரு ஏமாற்றுக்காரன் பிச்சை எடுத்து உங்களுடைய பணத்தை கொண்டு போய் டாஸ்மாக்கில் குடித்து அதனால் அவனுக்கு நோய் வந்தாலும் கூட நீங்கள் அதற்கு காரணமாக ஆகி விடுவீர்கள் தர்மம் வேறு தானம் வேறு பிச்சை வேறு இலவசம் வேறு உதவி வேறு ஓசியில் மங்களம் பாடுவது வேறு இதுவே நிறைய பேருக்கு புரியாது இந்தியர்களும் தமிழர்களும் நிறைய இந்த இலவசம் பிச்சை போன்ற விஷயங்களை அனுபவிக்க காரணம் சனிபகவான் தான். ஏனெனில் இந்தியா மகரம் இராசியில் வரும் மகரம் பத்தாம் பாவகத்தில் வரும் நீங்கள் கோயில்களுக்கு செல்வதால் புண்ணியங்கள் கிடைக்கும் புனித நதிகளில் நீராடினால் கிடைக்கும் அன்னதானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் நீங்கள் பணத்தை கொடுப்பதை காட்டிலும் ஒரு பொட்டலம் சாதம் வாங்கி கொடுங்கள் அவர்களுக்கு வயிற்றுக்கு பிச்சை எடுக்கின்றார்களா வருமானத்திற்கு எடுக்கின்றார்களா வாழ்க்கைக்கு எடுக்கின்றார்களா வசதிக்கு எடுக்கின்றார்களா பொழுதுபோக்குக்கு எடுக்கின்றார்களா இதை முதலில் தெரிந்து கொள்ளாமல் நீங்கள் பிச்சையளிக்க கூடாது ஆதிகாலத்தில் பிச்சை என்பது தானியங்கள் மட்டுமே வழங்கி வந்தனர் அதை அவர்கள் கொண்டு போய் சமைத்து சாப்பிட்டு வந்தார்கள் அதன்பிறகு அவர்களுக்கும் சோம்பேறித்தனம் மக்களும் சோறு குழம்பு போட ஆரம்பித்து அவர்களை வளர்த்து விட்டார்கள் அதன்பிறகு வீட்டில் ஏது மீதியானலும் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பது வழக்கம் நாளடைவில் காசு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் இதுதான் இன்றைய நிலைப்பாடு பணம் என்பது உங்களுடைய ஐசுவரியம் நாலு காசு சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து எத்தனை பேரிடம் என்னவெல்லாம் கேட்டு வாங்கி அதை வீட்டிற்கு கொண்டு வர பாடுபடுகின்றீர்கள் அந்த இலட்சுமியை பிச்சைக்காரனுக்கு கொடுக்க வேண்டும் என்று எந்த வேதத்தில் சாஸ்திரத்தில் விதியில் சொல்லப்படவில்லை பணக்காரர்கள் வாழும் நாடுகளை பாருங்கள் அங்கே பிச்சை எடுப்பது குற்றமாகும் சிங்கப்பூர் மாதிரியான நாடுகளில் பிச்சை எடுத்தாலும் பிச்சை போட்டாலும் சிறையில் அடைத்து விடுவார்கள் அல்லது அபராதம் விதிப்பார்கள் பரிகாரங்களுக்காக பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் கொடுத்து உதவுங்கள் ஆனாலும் அது உண்மையாக இருக்க வேண்டும் நடிப்பவர்களுக்கும் ஏமாற்றுபவர்களுக்கும் பிச்சை அளித்தல் பாவம் தான் தர்மம் என்பது நீங்களும் அந்த நபர்களிடம் எதையுமே எதிர்பார்க்காமல் செய்வது அவர்களும் உங்களை எதிர்பார்த்து காத்திருக்காமல் இரத்த சொந்தம் இல்லாதவர்களுக்கு செய்வது உங்களிடம் ஒருவர் வந்து கேட்டு பெற்றால் அது தர்மத்தில் சேராது தானம் அல்லது உதவியாகத் தான் இருக்கும் இதில் கீழ்த்தரமான செயல்பாடுகள் இலவசமாக எதையுமே பெற வேண்டும் என்று நினைப்பது தனக்கு கூட செலவுகள் செய்ய யோசிப்பது இப்படி நிறைய உள்ளது இவையெல்லாம் பிச்சைக்காரத்தனம்தான் இதனால் இப்படிப்பட்ட நபர்கள் கடைசி வரைக்கும் அப்படியேதான் இருப்பவர்கள் மாறவே மாறாது மாறவும் முடியாது பிச்சைக்காரத்தனம் இருந்தால் கண்டிப்பாக பணக்காரர்கள் ஆகவே முடியாது.

More like this