#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் பாதிப்புகள்* நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு*
ஒவ்வொருவரும் தங்களது தினசரி வாழ்வியலை திட்டமிட்டு,* அதனை பூர்த்தி செய்வதற்காக உழைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் மனநிலை - உடல்நிலை- சமூக அணுகுமுறை - ஆகியவை அவர்களின் எண்ணப்படி இயல்பாக நடைபெறும்.
இதில் ஏதேனும் குறுக்கீடுகள் ஏற்பட்டு உங்களுடைய உளவியலில் பாதிப்புகளையும்,அதிர்வுகளையும் ஏற்படுத்தி, உங்களது கவனத்தை திசை திருப்பி, செயலில் தாக்கத்தை ஏற்படுத்தினால் அவை செய்வினையின் பக்க விளைவாக இருக்கக்கூடும்.
அறிமுகமான மற்றும் அறிமுகமற்ற நபர்களின் மூலமாக செய்வினை பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால் மேலே விவரிக்கப்பட்டிருக்கும் தினசரி வாழ்வியல் பாதிப்புகள் உண்டாகும். இதனை நாள்ககை கடத்தாமல் துல்லியமாக அவதானித்து ,பிரத்யேக வழிபாட்டின் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை தேட வேண்டும் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
செய் வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் முதலில் உங்களுடைய மன நிலையிலும், எண்ணங்களிலும், மற்றவர்களை பார்க்கும் பார்வையிலும் திடீரென அசாதாரணமான நிலைப்பாடு ஏற்படும்.
இதை தவிர்த்து உங்களின் இயல்பை மீட்டெடுக்க வேண்டும் என்றால்... ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திற்கு சென்று அங்குள்ள யோக நரசிம்மரின் திரு உருவ புகைப்படத்தை வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்து, அதனை வீட்டில் வரவேற்பறையில் அதாவது அந்தப் புகைப்படத்தை நீங்கள் வைத்து பூஜித்து வலம் வரும் வகையில் வைத்திட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து அந்த யோக நரசிம்மரின் புகைப்படத்திற்கு ஆறு தீபங்களை சிவப்பு வண்ண திரிகளால் ஏற்றி, அரளி பூ சாற்றி வழிபட வேண்டும். அந்தத் தருணத்தில் பன்னிரண்டு முறை யோக நரசிம்மரை வலம் வந்து, செய்வினை பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என பிரார்த்தித்தால். உங்களுக்கு பரிபூரணமான அருள் கிடைத்து செய்வினை தோஷம் நீங்கிவிடும். இந்தப் பிரார்த்தனையை தொடர்ந்து ஒன்பது நாட்கள் மேற்கொண்டால் உரிய பலன் முழுமையாக கிடைக்கும்.