🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
2.6K views
கொண்டாட்டம்....! வாழ்வே பிரச்னை. எங்கே திரும்பினாலும் சுவர். சலித்து விட்டது. என்ன வாழ்க்கை போ ? என் நண்பர் இந்த மனநிலையோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டால், எதுவுமே சரியாக வராது...! இது நான். என்ன செய்வது? நண்பர். நான் ஒன்று சொல்கிறேன். சிரிக்காமல் திட்டாமல் செய்ய வேண்டும்" என்றேன். என்ன அது ? உங்கள் அறைக்குள் சென்று கதவை மூடி விட்டு, உங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டை போட்டு மெய்மறந்து அதனோடு ஒன்றி விடுங்கள். ஒரு நடனமும் இசைக்கேற்றவாறு தன்னை மறந்து ஆடலாம்...! என்றேன். உனக்கென்ன பைத்தியமா ? என்றார். இதன் அருமை உங்களுக்குப் புரியாது. எத்தனை துன்பமாக இருந்தாலும், நல்ல பிடித்த பாட்டை, இசையைக் கேட்கும் போது நம்மை மறந்து ரசிக்கிறோம் இல்லையா?அது போலத்தான்." என்றேன். புரியவில்லையே? என்றார். ஓஷோ தியானத்தில், தன்னை மறந்து ஆடும் இயல்பான நடனத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வாழ்வே கொண்டாட்டம்....இது தாரக மந்திரம். ஓஷோ groups Pune commune videos கிடைத்தால் பார்க்கலாம். மெல்லிய மனதை வருடும் இசை. வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் பெண் இருபாலரும் தன்னிச்சையாக, கண்ணை மூடி, பரவச நிலையோடு நடனம் ஆடுவார்கள். நடனத்திற்கு எந்த இலக்கணமும் கிடையாது. அந்த இசைக்கு ஏற்றவாறு நமக்கு என்ன தோன்றுகிறதோ, அதன்படி எந்த நிர்ப்பந்தமுமில்லாமல் நடனம் ஆடலாம். இப்படி நம்மை மறந்து ஆடுவதால், "நான் " என்ற Ego தொலைவதோடு, உடலின் ஒவ்வொரு அணுவும் Relex ஆவதோடு புத்துணர்ச்சி பெறும். வியப்போடு என்னைப் பார்த்தார். முதலில் நான் சொன்னது போல் செய். ஆரம்பத்தில் தயக்கமாக இருக்கும். உங்கள் பிரச்னைகளை எல்லாம் அறைக்கு வெளியே விட்டு விட்டு, நீங்கள்,இசை, உங்கள் நடனம் இதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் இதுவும் ஓஷோவின் தேநீர் தியானம் போலத் தான். நீங்கள்,தேநீர், அதன் சுவை. மனம் லேசாகி விடும். களைத்த உடல் அணுக்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள். புது மனிதனாக உருவெடுக்கலாம். இதனால் உங்கள் பிரச்னைகள் தீராது. ஆனால் பிரச்னைகளை எதிர்கொள்ள தெளிவு பிறக்கும். மனதில் அமைதி நிலவும். நிதர்சனம் புரியும். " என்றேன். குழப்பத்தோடு தலையசைத்தார். செய்வாரோ இல்லையோ ?அது எனக்கு தெரியாது. விதை, விதைத்தாகி விட்டது. இனி அது காலத்தால் முளை விடும்...!!! 😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு