#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 மாவட்டம் அழகர்மலை அருகில் உள்ள அருள்மிகு ஶ்ரீ நூபுரகங்கை ராக்காயி அம்மன் 🙏🙏
*பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது, வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி கோவில். இங்கு நூபுர கங்கை தீர்த்தம் விழுகிறது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது
*மதுரையின் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான,
அழகர் கோயிலின் அடிவாரத்திலிருந்து
4-k.m. தொலைவுடைய
(கடல் மட்டத்திலிருந்து
1,400-அடி உயரம்)
அழகர்மலை (பழமுதிர்ச்சோலை) உச்சியில்,
விசேஷ தீர்த்தமான
'நூபுர கங்கை' உற்பத்தியாகும்
மாதவி மண்டபத்தில்,
அழகர்மலையின்
அதிதேவதையாக,
நின்ற திருக்கோலத்தில்
அருள்பாலிக்கின்றாள்
*பார்வதி தேவியின் அம்சமானவளாகவும்,
ஸ்ரீ அழகர் பெருமாள் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியின்
அன்பு தங்கையாகவும்
போற்றப்படும் ராக்காயி அம்மன்,
(புராணங்களில்)
அங்கீர்சாச முனிவரின்
மகளாகவும்,
காஷ்யப முனிவரின் மருமகளாகவும் கருதப்படுகின்றாள்.
*ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நூபுரகங்கை புனித தீர்த்தம் அறியப்படுகிறது. இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் பல ஆராய்ச்சிகளுக்கு இடையிலும் கூட இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.
*யானையின் துதிக்கைப் போல, பருமனாக அமைந்த கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இந்த நூபுர கங்கை தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குகிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது ‘சிலம்பாறு’ என்றும் அழைக்கப்படுகிறது. சோலைமலையின் கீழ் வீற்றிருக்கும் அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசி யாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங் களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு ‘தேனாறு’ என்றும் பெயர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான ‘சம்பா தோசை’ தயார் செய்யப்படுகிறது
*அழகர் மலையின் காவல் தெய்வமாகவும், அங்குள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும்
பிரதான தெய்வமாக உள்ள
ஸ்ரீ ராக்காயி அம்மன்,
மதுரை, தேனி,
திண்டுக்கல், புதுக்கோட்டை சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வாழும் பல நூறு குடும்பங்களின்
குல தெய்வமாக போற்றி வழிபடப்படுகின்றாள்.
ஸ்ரீ ராக்காயி அம்மன்.
*இத்தலத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது, அனுமார் தீர்த்தம். இங்கே ஓர் அனுமன் கோவில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோவில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும், கோவிலும் இருக்கிறது. மலையில் வட பக்க சரிவில், பெரிய அருவி தீர்த்தம் உள்ளது. அழகர் கோவிலுக்குச் சிறிது வடக்கே உள்ளது உத்தர நாராயண வாவி தீர்த்தம். இந்த தீர்த்தத்தினால் தான் கோவில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்
*ஆறுபடை வீடுகளில், கடைசி படை வீடான பழமுதிர்சோலையில் வீற்றிருக்கும் எம்பெருமான் முருகனை தரிசனம் காணும் முன்,
முருகன் ஆலயத்திற்கு
சற்றே அருகில், 70-சிறிய படிகளே உள்ள இத்திருத்தலத்திற்குச்சென்று, முதலில் ஆதிகாலமாக
கண்ணுக்கு புலப்படாத
இடத்திலிருந்து வந்து விழுந்திடும் மூலிகை சக்தி நிறைந்த
'நூபுர கங்கை' எனும் புனித தீர்த்தத்தில் நீராடி அல்லது குறைந்தபட்சம்
அந்த தீர்த்த நீர் சிறிதளவாவது உடம்பில் தெளித்திட்ட பின்னர், ராக்காயி அம்மனை வழிபாடுசெய்து, அதன்பின்னரே பழமுதிர்சோலை
கந்தனை தரிசிக்க வேண்டும் என்பது காலம்காலமாக உள்ள முறையான வழக்கம்
*வாமன்னாக வந்து மாவலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் தானமாக பெற்று விஷ்வரூபதரிசனம் தந்து ஈரடியில் மண்ணும்,வின்னும் அளக்கும்பொழுது, வின்னுக்கு உயர்ந்த பெருமாளின் பாத்த்தை பிரமதேவன் தன் கமண்டல நீரால் கழுவி பூஜித்த நீரால் பெருக்கெடுத்தது ஆகாச கங்கை அதனை பகீரதனின் வேண்டுகோளை ஏற்று சிவன் தன் சடாமுடியில் தாங்கி பூமியில் இறக்கிவிட்டதுதான் கங்கைஆறு.
பெருமாளின் காற்சிலம்பில் பட்டு தெறித்து விழுந்த்துதான் சிலம்பாறு அதாவது நூபுர கங்கை.
*வெள்ளிக்கிழமை வழிபாடு தலவிசேஷம்.அதில் கலந்து கொண்டால் மன தைரியம் கூடிடும் என கூறப்படுகிறது
*வாழ்க்கையில் முக்கிய சடங்காக நிகழ்த்தப்படும் திருமண வைபவம் நிகழ்ச்சி ஆண்,பெண் இருவரும் இங்கு நீராடிய பின்னரே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உள்ளது
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #