திருநீற்றுச் சுவடு
551 views
#பக்தி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்னியர் நீராடிய சுனை* ..... ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன். சப்தகன்னியர் நீராடிய சுனையின் தீர்த்தம் சகல பிணிகளையும் போக்க வல்லது. சுனையின் அடியில் விநாயகப் பெருமானின் பீடம் உள்ளது. தினமும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்ட அம்மையார் இருவரின் ஜீவசமாதிகளும் சுனையின் அடியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சித்தர்கள் இன்றும் அங்கே சூட்சுமமாக உலாவருவதாகவும் அங்கே சென்று தியானம் செய்தாலே மனம் நிம்மதி அடைகிறது என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான இந்த மலைத்தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். முருகப்பெருமானின் திருவருள் ஸித்திப்பதோடு சித்தர்களின் ஆசியும் நிச்சயம் கிடைக்கும். 😯😟😯😟😯 மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியே சித்தர் பூமிதான். அகத்தியர் அங்கே வாசம் செய்து சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கி சிவத்தொண்டையும் முருக பக்தியையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிவந்தார். எனவேதான் அங்கே உள்ள பல மலைத் தலங்களில் முருகப்பெருமான் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அத்தனை முருகன் கோயில்களும் சாந்நித்தியம் நிறைந்தவை. தனித்துவம் வாய்ந்தவை. ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யும் ஆவலைத் தூண்டுபவை. அப்படிப்பட்ட ஓர் ஆலயம்தான் நாதகிரி முருகன் கோயில். ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன். இத்தலத்தை அருணகிரியார் பாடியிருக்கிறார். பக்தர்கள் இதை சித்தர் மலை, தெய்வ மலை, சஞ்சீவி மலை, முக்திமலை, முருகாசலம், தவமலை, ஞானகிரி, பிரம்மகிரி, தீர்த்தகிரி, பதுமகிரி எனப் பல திருப்பெயர்களால் புகழ்கிறார்கள். வேலேந்திய வண்ணம் கட ஹஸ்தத்துடன் திகழும் முருகப் பெருமான், இங்கே அபய - வரத ஹஸ்தத்துடன் அருள்கிறார். இந்தத் திருக்கோலம் காண்போரை வியக்க வைப்பதோடு ஆகர்ஷிக்கவும் செய்கிறது. கஷ்டத்தால் கலங்கும் பக்தர்களுக்கு அபயக் கரம் காட்டி அருளும் முருகனைக் கண்டதும் நம் கஷ்டங்கள் கலைந்தோடிப்போகின்றன. இங்கே முருகப்பெருமாள் சிவ, விஷ்ணு அம்சத்துடன் திகழ்வதாக ஐதிகம். அதனாலேயே வரத ஹஸ்தத்துடன் அமைத்தனர் என்கிறார்கள், பெரியோர்கள். இந்தப் பெருமானைத் தரிசித்த கணத்திலேயே நம் சங்கடங்கள் யாவும் விலகும் என்றும் கண்கண்ட தெய்வமாகத் திகழும் இந்த முருகனை வழிபட்டால் வேண்டுதல்கள் யாவும் விரைவில் நிறைவேறும் என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், பக்தர்கள். புராணகாலத்தில், தேவேந்திரனின் மகன் சேந்தன் அசுரர்களுக்குப் பயந்து மறைந்து வாழ்ந்தான். பிறகு சிவபெருமானின் அருளாசிப்படி, இந்த மலைக்கு வந்து கடுந்தவம் புரிந்தான். அசுரர்களை அழித்த முருகப்பெருமான், சேந்தனுக்கு இந்த மலையில் அருள் வழங்கினாராம். இங்கே முருகனின் தரிசனம் கண்ட தேவர் கூட்டம், `ஓம் நமசிவாய’ என முழங்கிட, அந்த நாதம் கயிலாயத்தை எட்டியது. அதன் காரணமாக நாதகிரி எனும் பெயர் பெற்றது என்கிறது தலபுராணம். அசுரனை அழித்த முருகன் ஆனந்தமாக இம்மலையில் எழுந்தருளினார். அகத்தியர், வசிஷ்டர், விஸ்வமித்திரர், வாமதேவன் போன்று சித்தபுருஷர்களும் மகான்களும் நாதகிரி முருகனை வழிபட்டு அருள் பெற்றனர். இங்கு தவம் செய்த முனிவர்களும் சித்தர்களுமே மலையில் மரங்களாகவும், செடிகளாகவும், மலைக் கற்களாகவும் திகழ்கிறார்கள் என்பது நம்பிக்கை. அகத்திய மாமுனிவர் தவம் செய்த இடங்களில், நாதகிரியில் திகழும் குகைக் கோயில் மிக முக்கியமானது. நாதகிரியின் மகிமையை உணர்ந்த பெரியோர்கள், இந்தத் தலத்துக்கு ஏற்ற வகையில் மிகவும் சிறப்பாக முருகனின் திருமேனியை இங்கு பிரதிஷ்டை செய்ய விரும்பினார்களாம். புளியங்குடி அருகிலுள்ள கற்பகநாச்சியார் மலையில் வெளிப்பட்ட கற்களைக் கொண்டு, சிறந்த சிற்பி ஒருவரின் மூலம் மூலவர் முருகனைச் செய்தனர். அடியார் ஒருவர் அந்த அற்புதத் திருமேனியை தலையில் சுமந்து வந்து நாதகிரியில் பிரதிஷ்டை செய்தாராம். மலையின் மீது கிழக்கு நோக்கி அருள்கிறார் முருகன். இங்கே, விநாயகர் பீடம், சப்த கன்னியர் சந்நிதி, அவர்கள் நீராடிய சுனை, ஹனுமனின் திருவுருவம், ராமரின் பாதச் சுவடு, காமதேனு லிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சிற்பக்காட்சி ஆகியவற்றை தரிசிக்கலாம். தெரிந்து கொள்வோம்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻