ல.செந்தில் ராஜ்
6.3K views
#🛕 ஜெய் ஆஞ்சநேயா #🐿️ ஜெய் அனுமான் 🙌 #anuman #ஜெய அனுமான் #jai anuman bakthi 19.12.2025 🌹🌹அனுமன் ஜெயந்தி.. 🌹அனுமனை வணங்க வேண்டிய நாள். இராவணன் கிரகங்களை எல்லாம் கட்டி வைத்து இராமனுக்கு மரணயோகத்தை தருவதற்க்கு ஏற்பாடு செய்யும்பொழுது அனுமன் தான் அத்தனை கிரகங்களையும் அவிழ்த்து விடுவான். அதனால் அனுமனை வணங்கினால் கிரகங்களின் தாக்கம் இருக்காது சின்ன சிலையாக இருந்தாலும் கரும் கற்களால் செய்யப்பட்ட அனுமனை வணங்குங்கள். உங்களுக்கு அனைத்து பாக்கியத்தையும் கொடுக்கும். முழுவதும் அனுமன் நினைப்பில் இருந்தால் போதும். 🚩சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடை யும்", "மன்" என்பதற்கு "பெரிதானதது" என்பதால், "ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. 🚩இன்னொரு வழக்கில் "ஹன்" என்பதற்கு "கொன்றவன்", "மானம்" எனபதற்கு "தற்பெருமை" என்பதல், "ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையை கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. 🚩ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பது தான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 🚩அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர். 🌹🌹இராமயணத்தில் பல இடங்களில் அனுமன் தனது உருவினை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவராக சொல்லப்படுகிறது. இராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார். பின்னர் சீதையை கண்ட பின், ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார். இது போன்று உருவினை மாற்றிக் கொள்ளும் சித்திகளை அனுமன் தனது இளமைப் பிராயத்தில் சூரியக் கடவுளிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படுகிறது. போரில் இராமனது தம்பி இலக்குவன் காயங்களு டன் மூர்ச்சை அடைய, இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுப்பப் படுகிறார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல் வேறு தடைகளை ஏற்படுத்துகிறான் அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவி மலையை அடை ந்தார். ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. அன்றைய தினம் முடிவடையும் முன் மூலிகை யினைக் கொணர்ந்தால் தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்கிற தறுவாயில், அனுமன் பெரியதோர் உருக்கொண்டு, சஞ்சீவி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து, வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்தடைகிறார். பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்பட, இலக்குவன் உயிர் பிழைக்க, இராமன் பெருமகிழ்ச்சி கொண்டு, அனுமனை கட்டித் தழுவுகிறார். 🌹அனுமனைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்பொடு அறிவிக்கிறார அனுமன் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்திவழியே வானத்தில் பறந்து வருகையில் இராமனது தம்பி பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியைத் தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமனை நோக்கி அம்பினைத் தொடுகிறார். அம்பினில் இராமன் பெயர் இருப்பதைக் கண்டு, அனுமனைச் சும்மா இருக்க, அவ் வம்பு அனுமனது காலைத் துளைக்கிறது. உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி, பரதனிடம் அவன் தமையன் இலக்குவ னைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகச் சொன்னதைக் கேட்டதும் பரதன் தன் தவற்றை நினைத்து வருந்துகிறார். பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கை யை நோக்கி செலுத்தினால் அதில் அனுமன் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார். அனுமனோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கை யை நோக்கி விரைகிறார். 🌹🌹ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகக் கொண்டாட்ட வைபவங்கள் முடிந்த பின், ஆசுவாசமாக ஸ்ரீராம பிரான்- ராவணாதியரின் பலம், தபம், வரம் முதலிய வை பற்றிய சந்தே-கங்களை அகத்திய மாமுனிவர் விளக்குவதாக, ஸ்ரீவால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் அமைந்திருக்கிறது. 🌹🌹ஸ்ரீராமர், ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார்: வாலி மிகுந்த பலசாலி தான். ராவணனையே தோற்கடித்து அவனை தனது கையில் இடுக்கிக் கொண்டு பல சமுத்திரங்களுக் கும் சென்று தனது நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து, ராவணனு க்குச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தான். இருப்பினும் ஆஞ்சநேயன் வாலி, ராவணன் இவர்களையும்விட மிகப் பலம் வாய்ந்தவர். அப்படியிருந்தும் வாலி, சுக்ரீ வனைத் துன்பு றுத்தி கிஷ்கிந்தையை விட்டுத் துரத்திய போது ஆஞ்ச நேயர் ஏன் சுக்ரீவனுக்கு உதவ வில்லை?என்று அகத்தியரிடம் கேட்கிறார். 🌹அப்போதுதான் ஸ்ரீராமருக்கு, ஆஞ்சநேயரின் வரலாற்றைக் கூறுகிறார் அகத்தியர். அஞ்சனாதேவிக்கு ஆஞ்சநேயர் பிறந்த போதே, மிகுந்த பலசாலியான குழந்தையாக விளங்கினார். அஞ்சனாதேவி, குழந்தைக்கு ஆகாரம் கொண்டு வரச் சென்றிருந்தபோது, மிகவும் பசியுடன் இருந்த குழந்தை ஆஞ்சநேயன், சூரியனை ஒரு பழம் என்று நினைத்து அதைப் பறித்து உண்ண விரும்பி சூரியனை நோக்கி வானில் பாய்ந்தார். ஆனால் சூரியன், ஸ்ரீராமபிரானுக்கு இந்த ஆஞ்சநேயன் உதவி செய்ய வேண்டுமென்ப தை உணர்ந்து, குழந்தைக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், அன்றைக்குச் சூரிய கிரகணம். ராகு, சூரியனை விழுங்குவதாக ஏற்பாடு. தனக்குப் போட்டியாக சூரியனை நெருங்கும் ஆஞ்சநே யனைப் பார்த்து வெகுண்ட ராகு, இந்திரனி டம் சென்று முறையிட்டார் (ஏனெனில், சூரிய னைப் பிடிக்க விரும்பிய அனுமன், ராகுவை யும் பிடிக்க முயன்றார்). இந்திரன், ராகுவை அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அனுமனை அணுக, அவர் ஐராவதத் தையும் ஒரு பெரிய பழமென்று நினைத்து அதை நோக்கிப் பாய்ந்தார். இதனால் இன்னும் கோபமு ற்ற இந்திரன், குழந்தை என்றும் பார்க்காமல், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடியுண்ட அனுமன் இடது தாடை உடைபட்டு விழுந்தார். இறந்தது போலவே கிடந்தார். தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்தது போல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்த குழந்தை யைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு தேவர்களும் கந்தர்வர்களும்கூட விதிவிலக்கல்ல. எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட அவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வாயு பகவானிடம் வந்தார். இறந்துகிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட பிரம்மா தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் மீண்டு எழுந்தார். பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன் மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார் என்று சொன்னார். இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள் சாஸ்திரங்கள் அனைத்து ம் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார். 🚩வருணன் - காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். 🚩யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார். 🚩குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். 🚩சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார். 🚩விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்ச நேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார். 🚩பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும், பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார். நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும் என்றும் வரமளித்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார். தனக்களிக்கப்பட்ட வரங்களால் பெருமை கொண்ட அனுமன், காட்டில் தவம், யாகம் செய்துவந்த முனிவர்களுக்கு விளையாட்டாக மிகவும் தொல்லை கொடுக்கவே . 🌹ஜெய் ஸ்ரீ ராம்... ஜெய் ஆஞ்சநேயா...